திங்கள், 31 ஆகஸ்ட், 2020

வருமானவரி பாதிப்பு யாருக்கு அதிகமாகும்.

 கேள்வி :  நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்கை சரியா? இதானால் வருமானவரி பாதிப்பு யாருக்கு அதிகமாகும்.

என் பதில் :

பதினெட்டு வயது நிரம்பிய சொத்துக்குரியவர் யார் ஒருவரும் யாருக்கு வேண்டுமானாலும் தகுதியின் அடிப்படையில் எந்தவித பிரதிபலனும் பெறாமல், தானம் கொடுக்கலாம். தந்தை மகன் இவர்களுக்கிடையில் நடந்த தனமாக இருந்தாலும் தானம் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்போதே தானம் பெற்றவர் மேற்கண்ட சொத்தைப்பெற சம்மதம் தெரிவிக்க வேண்டும். மாறாக, தானம் பெற்றவர் அந்த தானத்தை ஏற்க மறுத்தால், பதியப்பட்ட தானப்பத்திரம் செல்லத்தக்கதல்ல. மேலும் இந்த தனபாத்திரம் முந்தய சட்டப் படி தானம் ஏற்பவர் சம்மதமின்றி பதியப்பட்டுவிட்டாலும் மகனானவர் தான ஏற்புப்பத்திரம் தயார் செய்து தானம் கொடுத்தவர் உயிருடன் இருக்கும் போதே பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இதனால் வருமானவரி பாதிப்பு இருவருக்குமே கிடையாது. ஆனால், தானப்பத்திரம் பதிவதற்கான 8 % முத்திரைத்தாள் கட்டணம், 4 % பதிவுக் கட்டணம் மற்றும் செலவுத்தொகை முழுவதும் திரும்பப்பெற இயலாது. சொத்து கைமாறியதும் செல்லாது. முந்தைய நிலையிலே சொத்து தந்தையிடமே இருக்கும்.

சிவக்குமார்..V .K  
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக