திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கேள்வி : ஒரு பெட்ரோல் பங்க் வைப்பதற்கான செலவு எவ்வளவு? அதன் மூலம் கிடைக்கும் லாபம் எவ்வளவு?


என் பதில் :

சற்று பெரிய பதில். பொறுமையாக காணவும்.

முதலில் இந்த கேள்விக்கான பதிலை எழுத விபரங்களை தந்த என் நண்பரின் தம்பிக்கு நன்றி. அவர் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணி புரிந்தவர். மிக்க அனுபவம் வாய்ந்தவர். அவருடன் கலந்து ஆலோசித்து எழுதிய பதில் இது.

பெட்ரோல் பங்க் வைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதற்கு முன், அந்த தொழிலை தொடங்குவதைப் பற்றி சற்று அறிவது அவசியம்.

முதலாவதாக பெட்ரோல் பங்க் எந்த ஊரில் அமைக்க திட்டம் உள்ளதோ அங்கு அதற்கு தகுந்த சொந்த நிலம் தேவை. நிலம் உள்ளவர்கள் எல்லா விபரங்களுடன் ஒரு எண்ணெய் நிறுவனத்திற்கு டீலர்ஷிப்க்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நிலத்தை பார்வையிட்டு அது அமைந்துள்ள இடம், அங்குள்ள விற்பனை வாய்ப்புகள் போன்ற பலவற்றை பரிசீலனை செய்து நிறுவனத்திற்கு தங்கள் பரிந்துரைகளை அனுப்புவர்.

அப்படி சொந்த நிலம் இல்லாதவர்கள் விண்ணப்பித்தால், இதை அமைப்பதற்கான நிலத்தை நிறுவனம் அடையாளம் காட்டும் ஏரியாவில் வாடகைக்கு ஏற்பாடு செய்வதாக முறைப்படி உறுதி அளிக்க வேண்டும். பின்பு ஆய்வுகுழு ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பர். அதற்கு அருகாமையில் கிடைக்கும் நிலத்தை பரிசீலித்து, பரிந்துரைக்கு பிறகு விண்ணப்பதாரர் நேராகவோ அல்லது நிறுவனம் மூலமாக குத்தகைக்கு (Lease) எடுத்து அமைப்பது. ஒரு நல்ல இடம் அமைவதுதான் இந்த தொழிலுக்கு மிக முக்கியமான அம்சம்.

பங்க் அமைக்க இடம் முடிவாகி டீவர்ஷிப் கிடைத்த பிறகு அதற்கு தேவையான சேமிப்பு வசதிகள் போன்றவற்றை அமைப்பதற்கு பத்து முதல் பதினைந்து இலட்சம் வரை செலவாகலாம். அதற்கு மேல் தொழில் நடத்த மூலதனம் சேர்த்து இருபத்தைந்து இலட்சம் தேவைப்படும். பணவசதி உள்ளவர்கள் விற்பனையை பொறுத்து மொத்தத்தில் நாற்பது இலட்சம் வரைகூட செல்லலாம்.

எண்ணெய் நிறுவனம் அளிக்கும் கமிஷன் தான் இலாபம். இது வியாபாரம் சூடு பிடித்து, அக்கம்பக்கத்தில் மற்ற நிறுவனங்களின் போட்டி இல்லை என்றால் போட்ட முதலீட்டை திரும்பப்பெற மூன்று ஆண்டுகள் வரை தேவை. அதன்பிறகு நேர்மையாக தொழில் செய்தால் இருபது சதவிகிதம் வரை இலாபம் இருக்கும். இடம், விற்பனை, போட்டி போன்ற பலவற்றால் நட்டம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

முன்பெல்லாம் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள்கள் விற்பனை மட்டுமே செய்தனர். அதில் கிடைத்த வருமானம் மிக அளவாகவே இருந்தது.

ஆனால் தற் போதெல்லாம் ஒரு ஒரு பெட்ரோல் பங்கிலும் வரும் வாடிக்கையாளர்களுக்கு உபயோகமாக பல வசதிகளை செய்து தருவதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுகிறார்கள். உதாரணமாக போதிய இடமிருப்பதை பொறுத்து பயணிகள் இளைப்பாற, உண்ண தேவையான வசதிகள், பல்வேறு பொருள் விற்பனை, போன்றவை. அளவில்லாத வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். எனவே, இலாபம் ஈட்டுவது என்பது அவரவருடைய தொழில் செய்யும் திறமையை பொறுத்தது.

மேலே கூறப்பட்டவை எல்லாம் ஒரு வழிகாட்டி போன்றது. இதில் இன்னும் நிறைய தொழில் நுணுக்கங்கள் இரகசியங்கள் இருக்கலாம். அவை தொழிலில் இறங்குபவர்கள் அனுபவத்தில் கற்க வேண்டியவையாகும்.

நன்றி ...

சிவக்குமார்.V.K 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக