கேள்வி : வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?
என் பதில் :..இதற்கு பதில் .என் நண்பரின் தம்பியிடம் பேசிய போது கிடைத்த
போட்டி தேர்வுகள்...நம்பிக்கையூட்டும் பதிவு...💯
நன்றி: பிரசன்னா ச... அவர்களே!!!வங்கி துணை மேலாளர்
March 31 2018... IBPS PO result நாளை என அறிவித்தது.... அன்று இரவு முழுக்க அண்ணனிடம் இருந்து "டேய் Exam நல்லா தான பண்ணிருக்க? interview ல சொதப்பலயே?" என phone callகள்...இந்த சமூகம் ஜெய்கிறவன தான் நியாபகம் வச்சிக்கும் னு நல்லா தெரியும் அவனுக்கு..அந்த பயத்தின் வெளிப்பாடே இந்த அழைப்புகள்.. என்ன விட அவனுக்கு பதட்டம் அதிகமா இருந்தது....அன்று இரவு
கீழ்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.... ஆனாலும் மனசு முழுக்க result பத்தின யோசனை தான்...
"உன்னால முடியாது டா இதெல்லாம்..."
"பேசாம IT லயே இரு இப்பல்லாம் வேலை கிடைக்கிறதே கஷ்டம் ..."
"Bank exam க்கு அவனவன் 3,4 வருஷம் படிச்சிட்டி இருக்கான்... அவங்களே இன்னும் செலக்ட் ஆகல"... என என்னை சுற்றி எல்லாரும் பேசியது repeat mode இல் ஓடிக்கொண்டிருக்கிறது... எல்லாரும் சொல்ற மாறி இவன்ஆயுடுவானோ னு அம்மாக்கு கவலை.. ஆனால் அந்த நேரத்திலும் ஒரு மனுஷன் "தம்பி நீ கண்டிப்பா select ஆவ...நிம்மதியா தூங்கு"னு சொன்னாரு... அவரு தான் என் அப்பா😘
அடுத்தநாள் April 1... காலை 11.30 மணிக்கு result என link update ஆனது... நேற்று வரை நிதானமாக இருந்த மனசு ஒருகணம் தடுமாறியது... மச்சா இங்க உப்புமா டா வா சாப்டலாம் என கூப்பிட... அப்போது மணி 9.45... அடுத்த அரை மணி நேரம் நண்பர்களுடன் கல்லூரி நாட்களை பற்றி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம்...
திடீரென whatsapp group இல் அழைப்பு
Result came என்று ஆனால் அப்போது மணி 10.30 ..அடுத்த 5 நிமிடத்தில்
" மச்சா Bank of India ல selected டா..."
நா Allahabad bank நா corporation bank என message கள் பறந்தன...எல்லாரும் 4 to 5 வருடம் bank exam try பண்ணியவர்கள்...
என்னுடைய batch mates யாருடைய msg ம் அதில் இல்லை ... சற்றே நம்பிக்கை இழந்து போனேன்... ரூமில் ஒரு cot இல் ஓரமாக 5 நிமிஷம் யாரிடமும் சொல்லாமல் பொறுமையா website page இல் reg number ஐ பயத்துடன் type செய்தேன்..
கீழே Submit பட்டனை நோக்கி விரல் போக... ஒரு வருடம் சரியான தூக்கம் இல்லாம...நேரத்துக்கு சாப்பிடாம உக்காந்து கஷ்டப்பட்டது எல்லாம் கண் முன் rewind ஆகிறது... Rural bank interview யில் சொதப்பி merit list இல் என் பெயரை தவறவிட்ட நொடிகள் என் முன் நகர்கிறது..
7 முறை final list இல் பெயர் இடம் பெறாத வலி banking படித்தவனுக்கு மட்டும்தான் தெரியும்... அது 8வது முறை... கனத்த இதயத்துடன் விரல்கள் பட்டனை அழுத்தியது... Page ஓபன் ஆனது...
மூன்று வினாடிகள் "உனக்கு எதுக்குடா இந்த risk லாம் " "இதெல்லாம் கஷ்டம் டா பேசாம IT லயே இரு" என திரும்ப திரும்ப ஓட ஒருகட்டத்தில் இதுக்கு மேல எப்டி தான் டா படிக்கிறது என கண்கள் கலங்கியது... இன்னமும் result என்னவென பாக்க மனசு வரல... ஒரு கட்டத்தில் கண்களை திறந்து பார்க்க....🎉🎉🎉 CANARA BANK 🎉🎉🎉
என்பது மட்டும் தெரிந்தது... அவ்வளவு தான்.. பக்கத்தில் இருந்த செவுற்றில் ஓங்கி அடிக்க ஆரமித்தேன்...ஒவ்வொரு அடிக்கும் "இனிமேல் என்னால முடியாதுன்னு சொல்லுவீங்களா டா ..எனக்கு maths வராதுன்னு சொல்லுவீங்களடா" னு மனதில் ஓடிக்கொண்டிருந்தது... சத்தத்தைகேட்டு எல்லாரும் டேய் என்னடா ஆச்சி என சற்று பயந்தே போனார்கள்...
முதலில் அம்மாக்கு phone செய்தேன்.. ம்மா Canara bank மா என்றேன்..." டேய் result 11.30 க்கு தான் னு அண்ணா சொல்லிட்டான் april fool பண்ற நேரமாடா இது... நானே result என்ன ஆகுமோ னு பயந்துட்டு இருக்கேன் என்றவளிடம் நா என்னத்த சொல்ல😋😋...ஒரு கட்டத்தில் result தெரிந்ததும் அம்மக்களுக்கே உரிதான ஆனந்த கண்ணீர் தான்... சிறிது நேரத்தில் அப்பா விடம் இருந்து கால்...
அப்பா....
அவர் தம்பி என்றதும் தேம்பி தேம்பி அழ ஆரமித்தேன்...எப்போதும் உனக்கு merit list ல தான் கிடைக்கும் னு சொல்லிட்டே இருப்பாரு... இப்ப அவருக்கு ரொம்ப சந்தோஷம்...
" வாழ்க்கைல ஜெய்கனும்'னா கொஞ்ச காலம் செவுடனா இருக்கனும்"
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக