ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கேள்வி :வீட்டுக்கடனில் வீடு வாங்கி அதனை வாடகைக்கு விடலாமா?


என் பதில் :


சரியான நிதி மேலாண்மை திட்டமிடுதல் உங்களிடம் இருந்தால் நீங்கள் வீட்டுக் கடனில் வீடு வாங்கி அதை வாடகைக்கு விடலாம் .


இதன் மூலம் வாடகை எனும் வருவாயை பெருக்கிக் கொள்வதோடு ( 30% வாடகையை பராமரிப்பு செலவாக காட்டலாம் ) வருமான வரி கணக்கில் வீட்டுக் கடனுக்கு செலுத்திய வட்டி தொகையை ரூபாய் 2 லட்சம் வரை கழித்துக் கொள்ளலாம்.


மேலும் பிரிவு 80 C ல் வீட்டுக் கடனுக்கு செலுத்திய அசல் தொகையையும் ₹1.5 இலட்சம் வரை கழித்துக் கொள்ளலாம்.


ஒருவருக்கு ஒரு வீடு கடனில் வாங்கி இருந்தாலும் இன்னொரு வீட்டையும் வீட்டுக் கடனில் வாங்கலாம் .


மேலும் வாங்கிய வீடு குடி இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. வீடு வாங்கிய இடத்தில் வசிக்க வில்லை என்றாலும் வருமானவரிச் சலுகைகள் உண்டு .


மேலும் வேறு இடத்தில் பணிபுரிந்து வாழ்ந்து வருவதால் வாடகையாக பெறப்படும் தொகையையும் வருமான வரியில் கழித்துக் கொள்ளலாம்.


பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் செலுத்திய வட்டியில் ரூபாய் விண்ணப்பித்து கடனில் தள்ளுபடியும் பெறலாம்.


எல்லாவற்றையும்விட நீங்கள் வாங்கும் வீடு வருங்காலத்தில் நல்ல விலைக்கு போகும் என்ற பட்சத்தில் கடனும் எளிதாக கிடைக்கும் எனில் அதை ஒரு முதலீடாக நினைத்து வாங்கி வருங்காலத்தில் நல்ல விலைக்கு விற்று சட்டப்படி இலாபம் பார்க்கலாம்.


பயப்பட வேண்டாம். சரியாக திட்டமிடுங்கள். கடன் பெற்றதை ஒரு சுமையாக பார்க்காமல் முதலீட்டுல் அருமையான சொத்து பலநேரங்களில் கைகொடுக்கும் ..


சிவக்குமார்.
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக