திங்கள், 17 பிப்ரவரி, 2020

கோவை மலரும் நினைவுகள் ...


வாழ்க்கையில் உட்படுத்திக்கொள்ளாத ஒரு விசயம் ‘வாக்கிங்’...
ஆனால் தினமும் ஒரு மகா கலைஞனோடு நடந்தால்.... இயக்குநர் ராம் பானியில் சொன்னால் அவன் பாக்கியசாலி....அந்த பாக்கியசாலி நான் தான்.... அந்த மபெரும் கலைஞன் இயக்குநர் பாலுமகேந்திரா... ஒரு மாதகாலம்.. சட்டக்கல்லூரி பயிலும் போது அவருடன் வாழும் வாய்ப்பை பெற்றேன்... அவரை ஹேண்டில் வித் கேர் என ஸ்டிக்கர் ஒட்டாத குறையாக கோவைக்கு அனுப்பி வைத்தார் இயக்குநர் பாலா... எங்கள் நண்பர்களிடையேயே அவர் வந்தது ரகசியம் காக்கப்பட .... எங்கள் கேப்டன் பாமரனுக்கும் அவசர வெளியூர் வேலை வர... அவரும் பத்திரமா பாத்துக்கங்க பாலுமகேந்திராவை என சொல்லிச் செல்ல.... அந்த ஆனந்த உச்சத்தில் ஒரு மாதம் வாழ்ந்தேன்.... வாழ்க்கை... இளமை... தனிமை...காதல்... சினிமா... முதுமை... என தினசரி அவரளித்த பாடம் வாழ்வில் என்றென்றும் பயணமிக்கும்...சக தோழனாக பேசாத விசயமில்லை.... மாலையில் செல்போன் ஒலிக்கும்... எடுத்தால்... சிவா... வந்துட்டு இருக்கீங்களா.. சார் 5நிமிடம்.... போனில் அவரின் அந்த குரல் கம்பீரமாக இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது... கோவை இராமநாதபுரத்தில் தொடங்கி அரசு மருத்துவமணை வரை.... அந்த மாலை பொழுதுகளை மறக்க முடியுமா... சார தொப்பிய கலட்டி பார்திருக்கியா... இது தான் இண்டஸ்ட்ரி டாக் காக இருக்கும்... நாங்க.. ஒரு மாதம் அப்படித்தான் வாழ்ந்தோம் என்ற கர்வத்துடன் வாழ்ந்து வருகிறோம்.... எல்லா நாளும் அவரை நினக்கும் நாளே….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக