யாருமே கூட இருக்கும்போது அவங்க மதிப்பு தெரியாது! - ஓ மை கடவுளே ❤
படம் பார்த்து இரண்டு நாள்கள் கழித்து எழுதுகிறேன். தியேட்டரில் உட்கார்ந்து பார்த்தபோது எவ்வளவு ஜாலியாக இருந்தேனோ அதே அளவுக்கு வீட்டுக்குப் போனதும் தேம்பித் தேம்பி அழ வைக்கவும் செய்தது படம்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் கிடைப்பது ஒரு சான்ஸ் தான். அதை நம்முடைய அலட்சியத்தாலும் தேவையற்ற பயத்தாலும் சந்தேகத்தாலும் இன்னபிற காரணங்களாலும் இழந்துவிடுகிறோம்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் கிடைப்பது ஒரு சான்ஸ் தான். அதை நம்முடைய அலட்சியத்தாலும் தேவையற்ற பயத்தாலும் சந்தேகத்தாலும் இன்னபிற காரணங்களாலும் இழந்துவிடுகிறோம்.
ஒருவேளை முன்பே அந்தத் தவறைச் செய்யாதிருந்தால்..ஒருவேளை முன்பே கொஞ்சம் தைரியமாகப் பேசியிருந்தால் என நாம் எடுத்த முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்யலாமே தவிர இழந்த வாழ்வை மீண்டும் மீட்டெடுத்து முதலில் இருந்து தொடங்குவது கஷ்டம் தான் ... எதையும் டீப்பா யோசிங்க. அதுக்கப்புறம் தப்பு நடந்தா பொறுப்பெடுத்துக்கலாம். ஆனா அவசரப்பட்டு எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம் என கடவுளாக அவதாரம் எடுத்து அருள்புரிந்துவிட்டுப் போகிறார் விஜய் சேதுபதி.
அதென்னவோ இந்த விசே, இந்த படத்தில் மட்டும் லைட்டாக சைட் அடிக்கும் அளவுக்கு பலம்பொருந்தியிருக்கிறார்.
மற்றபடி, அதுல ஒரு வசனம் ரொம்ப எதார்த்தமாக இருந்தது.
அடச்சீ...போடா...போய் பொண்டாட்டி கால்ல விழுடா!
நூடுல்ஸ்மண்டை
https://youtu.be/rOw8fKZ2rps
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக