பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், தாழிப் பனை, கூந்தல் பனை, லாந்தர் பனை போன்றவை மிகவும் அரிதான வகைகள். இப்பனைகளின் ஓலைகளையே சுவடிகள் செய்ய பயன்படுத்தினார்கள், என்றாலும் கூட கொஞ்சம் அகல நீளம் அதிகமாக இருக்கும் என்பதால் கூந்தல் பனைக்கு கூடுதல் மவுசு.
ஆடி தான் ஓலைகள் சேகரிக்கப்பிற்கு உகந்த மாதம்.
குருத்தோலைகளை ஒரே அளவில் சீராக நறுக்கி அவற்றின் நரம்புகளை நீக்கி நிழலில் உலர்த்திய பிறகு அதனை இளஞ்சூட்டு வெந்நீரிலோ பாலிலோ வெதுப்புவர். அதன்பின் மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ அல்லது நல்லெண்ணெய் பூசியோ ஊற வைக்கப்படும்.
இதற்கு ஓலை வாருதல் என்று பெயர்.
இவ்வாறு பாடம் செய்யப்பட்ட ஓலைகளை ஒரு மாதம் நிழலில் காய வைத்து வேண்டும். பின்னர், பதப்படுத்திய ஓலைகளை ஓன்று சேர்த்து வளைந்து விடாமல் இருக்க புத்தகங்ககளுக்கு பைண்டிங் பண்ணுவது போன்று ஓலைகளுக்கு தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள்.
சில வாரங்கள் கழித்து அவற்றை எடுத்து சங்கு அல்லது கல்லைக்கொண்டு ஒருமுறைக்கு பலமுறை ஓலையை அழுத்தி தேய்த்து அழகுற செய்தால் அவை பளபளப்பாக தகடு போல் நேராகி விடும். பின் இடதுபக்கம் கயிறு கட்டுவதற்காக துளை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து முனையில் துளையிட்ட செப்புக்காசு அல்லது சொலி வைத்து முடிப்பார். இவ்வாறு துளையிட்டு கயிறு கோத்துகட்டுவதற்கு பொத்தகம் என்று பெயர். ஓலைச்சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த துளையில் இரும்பினால் ஆனா கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதற்கு பெயர் ‘நாராசம்’.
சரி ஓலைச்சுவடி ரெடியாகிடுச்சு..!
பிறகு..
குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, கிளிமூக்கு எழுத்தாணி என பல வகையான எழுத்தாணிகள் பயன் படுத்தப்படும். அரசர்களாகவோ வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் அவர்களது மதிப்பிற்கு ஏற்ப தந்தம், தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்புகளில் எழுத்தாணிகள் இருக்கும்.
எல்லோரும் ஓலை எழுதிட முடியாது,. அதை எழுதுவதற்கென்றே அரசவைகளில், அரண்மனைகளில் வாசக சாலைகளில் ‘ஓலை நாயகம்’ என்று ஒருவர் இருப்பார். அவர்தாம் அத்தனையும் எழுதுவார்.
அதான் எல்லாம் முடிந்ததே, எழுத ஆரம்பிக்கலாமா..? -
என்றால், அதுதான் இல்ல..
எழுதுவதற்கு முன் ஓலையின் நெற்றியில் ஒரு வட்டமும் அதன் கீழ் சின்னதா ஒரு கோடும் போட்டு ஓலை எழுதுவதற்கு ஏற்றதாக இருக்கானு ஒரு முறை செக் பண்ணிக்குவாங்க. இதுதான் பின்னாளில் பிள்ளையார் சுழி என்றானது.
எழுத்தாணி கொண்டுபனையோலையில் எழுதும்போது, ஓலையில் ஓட்டை விழுந்து கிழிந்து விடும் என்பதால், மெய் எழுத்துக்கு புள்ளி வைக்க மாட்டார்கள். புள்ளிக்குப் பதிலாக சிறிய வட்டமிடுவார்கள்.
ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலாகும்மே –
அதாகப்பட்டது,
ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது யார் யாருக்கு என்னென்ன சைஸ்ல ஓலை இருக்கணும்ற விவரத்தை விலாவரியா சொல்லி வச்சிருக்கான் நம்ம முப்பாட்டன்.
நான்மறைகளை படித்தவர்களுக்கு 24 விரற்கட்டை
அரசருக்கு 20 விரற்கட்டை, வணிகருக்கு 18 விரற்கட்டை, வேளாளர்க்கு 12 விரற்கட்டையும் ஓலை அளவு இருக்க
வேண்டுமாம்.
ஓலைகளில் பல வெரைட்டிகள் உண்டு.
அரசாணை தாங்கியது ‘கோனோலை’
ஆணைகள் எழுதப்பட்ட ‘திருமந்திர ஓலை’.
திருமணம் செய்திகளுக்கு ‘நீட்டோலை’
இறப்புகள் ஏந்தி சென்ற ‘சாவோல’
குடும்ப சுப நிகழ்வுகளுக்கு மனைவினவோலை
கோவில் நிகழ்வுகள் சொல்லும் ‘நாளோலை’
என எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டு அவை பல தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.
எழுதிக் கையொப்பமிடுவதை இன்றும் நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். படிப்பறிவற்றவர்களோ கையொப்பத்திற்கு பதிலாக கைநாட்டு வைப்பதும் இன்றைய நடைமுறை. படிப்பறிவு இல்லாத ஒருத்தருக்கு எழுதணும்னா என்ன செய்வது, ஓலைகளில் கைநாட்டு வைக்க முடியாதே?
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. பெயரெழுதிக் கையொப்பமிடுவதற்குப் பதிலாக, ஒரு கீற்றலை தனது அடையாளமாகக் குறியிடலாம். இவர்களுக்கு பெயர்தான் - 'தற்குறி'.✒📚📚👍
ஆடி தான் ஓலைகள் சேகரிக்கப்பிற்கு உகந்த மாதம்.
குருத்தோலைகளை ஒரே அளவில் சீராக நறுக்கி அவற்றின் நரம்புகளை நீக்கி நிழலில் உலர்த்திய பிறகு அதனை இளஞ்சூட்டு வெந்நீரிலோ பாலிலோ வெதுப்புவர். அதன்பின் மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ அல்லது நல்லெண்ணெய் பூசியோ ஊற வைக்கப்படும்.
இதற்கு ஓலை வாருதல் என்று பெயர்.
இவ்வாறு பாடம் செய்யப்பட்ட ஓலைகளை ஒரு மாதம் நிழலில் காய வைத்து வேண்டும். பின்னர், பதப்படுத்திய ஓலைகளை ஓன்று சேர்த்து வளைந்து விடாமல் இருக்க புத்தகங்ககளுக்கு பைண்டிங் பண்ணுவது போன்று ஓலைகளுக்கு தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள்.
சில வாரங்கள் கழித்து அவற்றை எடுத்து சங்கு அல்லது கல்லைக்கொண்டு ஒருமுறைக்கு பலமுறை ஓலையை அழுத்தி தேய்த்து அழகுற செய்தால் அவை பளபளப்பாக தகடு போல் நேராகி விடும். பின் இடதுபக்கம் கயிறு கட்டுவதற்காக துளை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து முனையில் துளையிட்ட செப்புக்காசு அல்லது சொலி வைத்து முடிப்பார். இவ்வாறு துளையிட்டு கயிறு கோத்துகட்டுவதற்கு பொத்தகம் என்று பெயர். ஓலைச்சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த துளையில் இரும்பினால் ஆனா கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதற்கு பெயர் ‘நாராசம்’.
சரி ஓலைச்சுவடி ரெடியாகிடுச்சு..!
பிறகு..
குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, கிளிமூக்கு எழுத்தாணி என பல வகையான எழுத்தாணிகள் பயன் படுத்தப்படும். அரசர்களாகவோ வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் அவர்களது மதிப்பிற்கு ஏற்ப தந்தம், தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்புகளில் எழுத்தாணிகள் இருக்கும்.
எல்லோரும் ஓலை எழுதிட முடியாது,. அதை எழுதுவதற்கென்றே அரசவைகளில், அரண்மனைகளில் வாசக சாலைகளில் ‘ஓலை நாயகம்’ என்று ஒருவர் இருப்பார். அவர்தாம் அத்தனையும் எழுதுவார்.
அதான் எல்லாம் முடிந்ததே, எழுத ஆரம்பிக்கலாமா..? -
என்றால், அதுதான் இல்ல..
எழுதுவதற்கு முன் ஓலையின் நெற்றியில் ஒரு வட்டமும் அதன் கீழ் சின்னதா ஒரு கோடும் போட்டு ஓலை எழுதுவதற்கு ஏற்றதாக இருக்கானு ஒரு முறை செக் பண்ணிக்குவாங்க. இதுதான் பின்னாளில் பிள்ளையார் சுழி என்றானது.
எழுத்தாணி கொண்டுபனையோலையில் எழுதும்போது, ஓலையில் ஓட்டை விழுந்து கிழிந்து விடும் என்பதால், மெய் எழுத்துக்கு புள்ளி வைக்க மாட்டார்கள். புள்ளிக்குப் பதிலாக சிறிய வட்டமிடுவார்கள்.
ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலாகும்மே –
அதாகப்பட்டது,
ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது யார் யாருக்கு என்னென்ன சைஸ்ல ஓலை இருக்கணும்ற விவரத்தை விலாவரியா சொல்லி வச்சிருக்கான் நம்ம முப்பாட்டன்.
நான்மறைகளை படித்தவர்களுக்கு 24 விரற்கட்டை
அரசருக்கு 20 விரற்கட்டை, வணிகருக்கு 18 விரற்கட்டை, வேளாளர்க்கு 12 விரற்கட்டையும் ஓலை அளவு இருக்க
வேண்டுமாம்.
ஓலைகளில் பல வெரைட்டிகள் உண்டு.
அரசாணை தாங்கியது ‘கோனோலை’
ஆணைகள் எழுதப்பட்ட ‘திருமந்திர ஓலை’.
திருமணம் செய்திகளுக்கு ‘நீட்டோலை’
இறப்புகள் ஏந்தி சென்ற ‘சாவோல’
குடும்ப சுப நிகழ்வுகளுக்கு மனைவினவோலை
கோவில் நிகழ்வுகள் சொல்லும் ‘நாளோலை’
என எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டு அவை பல தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.
எழுதிக் கையொப்பமிடுவதை இன்றும் நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். படிப்பறிவற்றவர்களோ கையொப்பத்திற்கு பதிலாக கைநாட்டு வைப்பதும் இன்றைய நடைமுறை. படிப்பறிவு இல்லாத ஒருத்தருக்கு எழுதணும்னா என்ன செய்வது, ஓலைகளில் கைநாட்டு வைக்க முடியாதே?
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. பெயரெழுதிக் கையொப்பமிடுவதற்குப் பதிலாக, ஒரு கீற்றலை தனது அடையாளமாகக் குறியிடலாம். இவர்களுக்கு பெயர்தான் - 'தற்குறி'.✒📚📚👍

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக