சனி, 22 பிப்ரவரி, 2020

வாசிப்பை நேசிப்போம் ..2020
உடுமலை கிளை நூலகம் 2.

நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி துலங்கும்!

நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.

 ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

 புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்...

இன்று கோவையிலிருந்து உடுமலை வந்த எங்கள் வீட்டு சாய் நந்தகிஷோர் தலைவருடன் ..உடுமலை கிளை நூலகம் 2...இக்கு வந்திருந்து நூலக வருகைப்பதிவேடு கையெழுத்து இட்டு ..அய்யா நல் நூலகர் கணேசன் அவர்களுடன் அறிமுக படித்திக்கொண்டார் .அவர் கோவையில் இருக்கும்பொழுது ..(கிளைநூலகம் 2 இல் ..நூலக செய்திகள் ..சிலம்பாட்டம் ..ஓவியப்போட்டி ..பேச்சு போட்டி ..ஆகிய நிகழ்வுகள் ..வாட்ஸாப்ப் ..முகநூலில் பார்த்து உள்ளார் ..மாலை நான் நூலகம் செல்லும்பொழுது நானும் வருகிறேன் பெரியப்பா என்று எனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டார் )...அவருக்கு பிடித்த குழந்தைகள் கதைகள் புத்தகத்தை வாசிப்பை படித்து நேசித்தார் ...மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக