வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தொட்டி வாய்க்கால் கல்லாபுரம்

பண்டைய தமிழர்களின் கட்டுமானத்துக்கு 300 ஆண்டுகள் பழமையான கல்லாபுரம் ‘கல் வாய்க்கால்’ சான்று


திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் பாயும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கல்லாபுரம். கி.பி. 13-ம் நூற்றாண்டில் கொங்கு மன்னன் விக்கிரமசோழன் பெயரைக் குறிக்கும் வகையில், ‘விக்கிரமசோழநல்லூர்’ என்றும் கல்லாபுரம் அழைக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டுக்கு முன்பே கல்லாபுரம் என்ற பெயரைக் கொண்ட இக்கிராமம், இன்று வரை அதே இயற்பெயரைக் கொண்டிருப்பது வியப்புக்குரியது. விக்கிரமசோழனின் ஆட்சிக்காலத்தில் ‘விக்கிரமசோழ நல்லூர்’ எனும் சிறப்புப் பெயர் பெற்றபோதும், இன்று வரை அதன் இயற்பெயரை இழக்கவில்லை.
கல்லாபுரத்தை ஒட்டி, 1957-ல் அமராவதி அணை கட்டப்பட்டது. 90 அடி ஆழம், சுமார் 10 கி.மீ. சுற்றளவு, 4 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட ராஜவாய்க்கால்கள் (பழைய வாய்க்கால்) மூலமாக நீர் பாசன வசதி நடைபெற்று வருகிறது. அமராவதி பாசனம் மூலமாக, ஆண்டுக்கு 2 முறை நெல் நடவு நடைபெற்றுவரும் கல்லாபுரம் பகுதி எப்போதும் பசுமையாக காணப்படும். இங்கு சுமார் 10 அடி உயரத்தில் தூண்களால் தாங்கியபடி செல்லும் நீண்ட பாலம் போன்ற கட்டுமானம் உள்ளது. ஆனால், அது பாலம் அல்ல, பாசனத்துக்கு நீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால். தரைமட்டத்தில் இருந்து புவிஈர்ப்பு விசைக்கேற்ப உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. கல்லாபுரத்தில் தரைவழிச் செல்லும் வாய்க்கால், தாழ்வான பகுதியைக் கடந்து செல்வதற்காக இவ்வாறு தரைமட்டத்தில் இருந்து உயரமாகவும், பின்னர் சமதளத்தில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலின் கீழும், இடது மற்றும் வலது புறமும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்களும், வானுயர்ந்த மலைகளும் தென்படுகின்றன.
இதுகுறித்து திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறும்போது, ‘300 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வாய்க்கால்கள், புகழ் பெற்ற ரோம் நகரிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முழுவதும் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரக்கணக்கான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடது, வலது கரைகள், வாய்க்காலின் கீழ் பாகம் என அனைத்தும் கற்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், இன்றளவும் நீர் கசிவு இல்லை. பண்டைய தமிழர்களின் கட்டுமானத்துக்கு சான்றாக கல்லாபுரம் கல் வாய்க்கால் உள்ளது’ என்றார்.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் இவன் ஏன் ஜெஸியை லவ் பண்ணான்? 
பத்து வருஷம் கழிச்சும் ஜெஸி ஏன் ஞாபகத்திற்கு வருகிறாள்? என்கிற கேள்விக்கு எல்லாம் எப்பவும் பதிலே இருக்காது. ஆயிரம் வருஷம் ஆனாலும் முதல் காதல் ஞாபகம் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷல் தானே? விண்ணைத்தாண்டி வருவாயா முதல் தடவை பார்க்கும் போதே நாம் கடந்த நினைவுகளை ஒரு மயில் இறகால் வருடியது போல் இருக்கும். எனக்கும் இருந்தது. VTV க்காக பத்தாண்டு பின்னோக்கி கூட வாழலாம். ஜெஸி போன்ற பெண்கள் எல்லாம் நாம் பார்க்கும் முதல் பார்வையில் காதலில் விழ வைக்கும் வம்சம். புது காட்டன் புடவை வாசத்தோட எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள் எந்நேரத்திலும் ஆண்களை காதலில் விழ வைக்க கூடிய ஆபத்தானவர்கள்.
கார்த்திக்கு ஜெஸி ஒரு அழகான ஆபத்து. நாம் நண்பர்களாக இருக்கலாம் இல்லை காதலர்களாக தொடரலாம் என்கிற குழப்பத்தை தோற்றுவிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஜெஸிதான். "என்னை ஏன் பிடிக்கும்?" என்று கேட்கும் ஆண்களிடத்தில் "உன் கண் வழியா என்னை யாரும் பார்க்கலை"ன்னு சொல்லும் ஒவ்வொருத்தியும் பசங்களுக்கு ஜெஸி தான். ரெண்டு பேர் மீட் பண்ணாங்க, பழகினாங்க, சுத்தினாங்க, காதலிச்சாங்க, ஒண்ணு சேர முடியாமல் போனாங்க. இதுவொரு சாதாரண காதல் கதைதான். தன்னுடைய லட்சியத்திற்கும் தன் காதலுக்கும் இடையே அலைகழிந்த கார்த்திக் இங்கே ஏராளம். இது சாதாரணமில்லை. கடைசியா தான் சாதிச்ச பிறகு தன்னுடைய காதலியை கூட்டிட்டு வந்து காட்டி பெருமிதம் கொள்ளும் கார்த்தியை கொண்டாடியே ஆகணும். ஒரு காதலி குட்பை சொல்லிட்டு போகும் போது அவள் மறையும் வரையில் பார்த்து ரசிக்கும் கார்த்திக் எப்போதும் வாழ்வான்.
வாழ்வான் தானே?
https://youtu.be/YFYiTS46x-8
நம்ம ஊரு விஞ்ஞானி ...வாங்க பேசலாம்..



பிப்ரவரி 28 ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம். உடுமலை பகுதிகளில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பல்வேறு அறிவியல் சார் நிகழ்வுகள் நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் வருகின்ற மார்ச் மாதம் 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலிலியோ அறிவியல் கழகம்,. உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம் , மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் இணைந்து நம்ம ஊரு விஞ்ஞானி ...வாங்க பேசலாம்.. என்ற நிகழ்வு உடுமலை ஆர்.கே.ஆர். கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

நிகழ்வுக்கு நமது கொங்கு மண்டலத்தின் விஞ்ஞானி இஸ்ரோ நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி தற்போது தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக உள்ளவரும் , பள்ளி மாணாக்கர்களிடையேயும், பொது மக்களிடையேயும் அறிவியல் சார் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொண்டு சேர்த்து வருகின்ற டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்கள் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் அறிவியல் துறையில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. அறிவியல் கண்காட்சி , அறிவியலில் நீங்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் , பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள உங்களது கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. தகுதியான மாணாக்கர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தன்னார்வலர்கள் பதிவு செய்யலாம்.ஆகவே நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி  மாணாக்கர்கள் , ஆசிரியர்கள் , அறிவியல் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம்.கண்டிப்பாக கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

. மேலும் தகவல்களுக்கு கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் 8778201926.

புதன், 26 பிப்ரவரி, 2020

திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்


ஜானகி அம்மாவின் பாடல்களிலேயே மிக உன்னதமானது இந்த பாடல். கேட்கும் ஒவ்வொரு  முறையும் மனம் நிர்மலமான நிலையை அடைந்து விடுகிறது. சோக ரசத்தை இந்த அளவு அனுபவித்து பாடிய பிறிதொரு பாடல் தமிழில் இல்லை. ராஜாவின் மேன்மையை உணர்த்திக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி.

எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார்.

"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். இந்த இரு பாடல்களும் ஒரே ராகம் .

பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து

"தூரத்தில் நான் கண்ட உன் முகம் ; நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.

பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.

"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.

இது போன்ற பாடல்களை இப்போது வரும் எந்த திரைப்படங்களிலும் காண முடியாது. இவை காலத்தை வென்ற பாடல்கள்


ஆனால் இது காலத்தால் அழிக்க முடியாத பாடல்..இந்தப பாடல் இந்தப் படத்தில் மற்றோர் கதாநாயகனான ராஜசேகரும் புதுமுக நடிகையையும் வைத்து எடுக்கப்பட்ட பாடல் பின்பு நீக்கப்பட்டது



தூரத்தில் நான் கண்ட உன் முகம் :ஒரு சோக கீதம் ;இதோ உங்களுக்காக
https://youtu.be/cxgzG2A9t8c

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கணவனை பிரிந்த பெண்
அல்லது மனைவியை பிரிந்த ஆண்..
இவர்களின் தரா தரத்தை..
இவர்கள் அடுத்த குடும்பத்தில் நுழைந்து..
நல்லா இருக்கும் குடும்பத்தை பிரிக்கிறார்களா...?
இல்லை சிறு சிறு உரசல்களுடன்
உள்ள குடும்பத்தை சேர்க்கிறார்களா ?
என்பதை பொறுத்து தெரிந்து கொள்ளலாம்..
இவர்கள் தம் துணையை..
விதி வசத்தாலோ..இல்லை சந்தர்ப்ப வசத்தாலோ
பிரிந்து இருப்பதால்..
அதன் விளைவை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில்..
இவர்களின் போக்கே அவர்களின் தரத்தை நமக்கு உணர்த்தி விடும்..
--
#TIPPUUU

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

வாழ்க்கையில் இனியும் எந்த ஊக்குவிப்பும் இல்லை என உணரும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?

சிவக்குமார் குமார் ...

நான் ஒரு விற்பனை துறையில் இருக்கிறேன்  தினமும் வாடிக்கையாளரை சந்திக்க வேண்டும்

எனக்கு வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.

உணவு, பயணங்கள் ,புது வாடிக்கையாளர் (அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் ), மற்றும் சிறு தூக்கம் இது மட்டுமே என் வாழ்க்கை.

வாரத்தில் 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரமும் வேலை செய்வது போல் இருக்கும்.

இப்படி நேரம் செலவதித்து மூளையை துருவி வேலை பார்த்தாலும் கடைசியில் பயன் இல்லாமல் போகும்.

இது அனைத்து விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு எல்லோருக்கும்  பொருந்தும்.


மனமுடைந்து சோர்வடைந்து போகும்போது எல்லாம் . அப்போது இந்த கடிதத்தை படிப்பேன்....அடுத்த பயணம் தொடங்கிவிடும் ...வாழ்க்கை வாழ்வதற்கு தானே ...

இனிமேல் தான் இளமை திரும்புதே ......

60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்...

60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...

பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!!!

வாழ்க்கையில் 60-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்...

*60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:*

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

70 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 60 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகுதான்...

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 60+ காரர்கள் தான் அதிகம்..!!!

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடி பயணம் செல்லுங்கள்...

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனிபோட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப்படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பி காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், பெருமைக் காரர்களை, பொறாமைக் காரர்களை காலவிரயம் கருதி ஒதுக்குங்கள்...

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,
சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச் சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 60+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை தோழர்களே...

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது...???


இது உங்களுக்கான ஆட்டம், அறுபதின்மரே இப்போதே துவங்குங்கள்...!!!

சனி, 22 பிப்ரவரி, 2020

என் வாழ்க்கையில் இதை பண்ணியிருக்கணும், ஆனால் பண்ண இயலாமல் போய்விட்டதென்று ஏதாவது உங்களை உறுத்துகிறதா ?

1996..கல்லூரி படிப்பு முடித்தவுடன் ..நல்ல நிறுவனத்தில் ..ஆபீஸ் ஒர்க் செய்துகொண்டு ..(குமாஸ்தா வேலை ) செட்டில் ஆகவேண்டும் என்று நினைத்தேன் ...பிடிக்காத வேலை மார்க்கெட்டிங் ..முதலில் பேசுவதற்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் ...எப்படி பேசுவது என்று ...ஆனால் வாழக்கையில் நடந்ததோ ...மார்க்கெட்டிங் வேலை ...அழகாக ..ஈடுபாட்டுடன் ...புது புது சிந்தனைகளோடு ..தினம் தோறும் புது புது வடிக்கையாளருடன் ..சந்திக்கும் வாய்ப்பு ...வாழக்கை யே ...15 ஆண்டுகளில் வாழக்கையில் வளர்ச்சி...புது உத்வேகம் ..இன்று ..ஒரு நிமிடம் கூட பேசாமல் இருக்கமுடியாது ..வாழ்க்கை வாழ்வதற்கே ..என்று தினம்தோறும் சுழலும் உலகம் ..

நிச்சயமாக! ஒரு கட்டத்தில் சொந்த தொழில் செய்ய வேண்டும் என ஆர்வத்துடன் அதைப் பற்றிய நுட்பங்களைக் கற்றும் அதை செய்ய இயலவில்லை.

பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டு எழுத்தாளனாக ஆக நினைத்து அதற்கான சிறிய சிறிய வாய்ப்புக்கள் கிடைத்தும் அதைப் பிடித்துக் கொண்டு மேலே வராமல் திறுத்தி விட்டேன்.

இப்போதுஒரு புத்தகம் எழுதி முடித்து வெளியீடு செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் அதிலும் ஒரு மனக்குறை உண்டு. அதைப் பார்த்து பெருமைப் பட தந்தை இல்லை...
வாசிப்பை நேசிப்போம் ..2020
உடுமலை கிளை நூலகம் 2.

நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி துலங்கும்!

நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.

 ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

 புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்...

இன்று கோவையிலிருந்து உடுமலை வந்த எங்கள் வீட்டு சாய் நந்தகிஷோர் தலைவருடன் ..உடுமலை கிளை நூலகம் 2...இக்கு வந்திருந்து நூலக வருகைப்பதிவேடு கையெழுத்து இட்டு ..அய்யா நல் நூலகர் கணேசன் அவர்களுடன் அறிமுக படித்திக்கொண்டார் .அவர் கோவையில் இருக்கும்பொழுது ..(கிளைநூலகம் 2 இல் ..நூலக செய்திகள் ..சிலம்பாட்டம் ..ஓவியப்போட்டி ..பேச்சு போட்டி ..ஆகிய நிகழ்வுகள் ..வாட்ஸாப்ப் ..முகநூலில் பார்த்து உள்ளார் ..மாலை நான் நூலகம் செல்லும்பொழுது நானும் வருகிறேன் பெரியப்பா என்று எனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டார் )...அவருக்கு பிடித்த குழந்தைகள் கதைகள் புத்தகத்தை வாசிப்பை படித்து நேசித்தார் ...மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
உடுமலையில் GVG கல்லூரியில் இன்று நடந்த பள்ளிக்குழந்தைகளுக்கான கலிலியோ அறிவியல் கழகம் நடத்திய அறிவியல் திருவிழா இல் --

இந்தியா கல்வியறிவு திட்டத்தால் கல்வியாளர்களுக்கான ஃபோல்ட்ஸ்கோப் பட்டறை


 இந்தியாவில் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தன்னார்வ அடிப்படையிலான இலாப நோக்கற்ற அமைப்பான இந்தியா எழுத்தறிவு திட்டம் (ஐ.எல்.பி), கலிலியோ அறிவியல் கழகம்  இணைந்து  உள்ள பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் மற்றும்  உந்துசக்திகளுக்கான பட்டறை ஒன்றை நடத்தியது. ஐ.எல்.பியின் மல்டி-டைமென்ஷனல் கற்றல் இடம் (எம்.டி.எல்.எஸ்) இலிருந்து.  இந்த பட்டறை  GVG கல்லூரியில் நடைபெற்றது. அரை நாள் பயிற்சித் திட்டத்தின் முக்கிய நோக்கம், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மடிப்புகளை அறிமுகப்படுத்துவதும், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக அவர்களை வகுப்பறை நடவடிக்கைகளில் சேர்க்கும் வாய்ப்பை வழங்குவதும் ஆகும்.

முன்னர் தயாரிக்கப்பட்ட ஸ்லைடுகளின் மடிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு சுருக்கமான அமர்வுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் மடிப்புகளின் கீழ் கண்காணிக்க சுற்றுப்புறங்களிலிருந்து வெவ்வேறு மாதிரிகளை சேகரித்து கொண்டு வரப்பட்டனர். வழக்கமான நுண்ணோக்கியில் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுவாகக் காட்டப்படும் மாதிரிகளைப் பயன்படுத்த முயற்சிக்க அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மடிப்புகளின் கீழ் அனைத்து வகையான மாதிரிகள் காணப்பட்டன- நேரடி எறும்புகள், வெவ்வேறு பூக்களிலிருந்து மகரந்தம், தாவர பாகங்கள்,

ஒரு நேரடி எறும்பின் தலை அதன் கலவை கண்களைக் காட்டும் மடிப்பின் கீழ் காணப்படுகிறது மடிப்பு ஒரு மடிப்புகளைப் பயன்படுத்தி பெரிதாக்கப்பட்டது

மகரந்தம்
ஐ.எல்.பியில் உள்ள தன்னார்வலர்கள் பல ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம், அவர்கள் பல பள்ளிகளை அடைவதற்கான திறனைக் கொண்டுள்ளனர் 

பட்டறையில் பங்கேற்பாளர்கள் தங்கள்ஃபோல்ட்ஸ்கோப்  மடிப்புகளுடன்..

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020



டேபிள் மேனர்ஸ்...
ஆம் போன வாரம் நாம் ஸ்டார்ட்டர்ஸ் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில் நிற்காமல் ஜம்ப் செய்யாதீர்கள். முதல் சூப் அல்ல்து சாலட் தனியே எடுத்து வந்து சாப்பிடுங்கள். புஃபே வைத்த காரணமே உணவை வேஸ்ட் பண்ணக்கூடது என்று தான். அதனால் சாலட், தந்தூரி, ஸ்டார்ட்டர்ஸ், நான், ரைஸ் எல்லாம் பரங்கிமலை போல் குவித்து எடுத்து வருவதை தவிர்க்கவும். முதலில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து பிறகு பிடித்த உணவை மட்டும் நிறைய எடுத்து சாப்பிடவும். நான் ரொட்டியை சின்ன பிளேட்டில் எடுத்து வரவும். கடைசியில் டெஸர்ட்ஸ் அல்ல்து ஐஸ்கிரிமை அங்குள்ள சின்ன போல் அல்ல்து கப் அல்ல்து சிறிய தட்டுகளில் எடுத்து வந்து சாப்பிடுங்கள். சாப்பாடு தட்டில் எடுக்காதீர்கள், சிலர் குடுமபத்திற்க்கும் மொத்தமாக எடுத்து வந்து பிரித்து சாப்பிடுவார்கள் அது தவறூ. ஒவ்வொரு முறையும் பிளேட் மாற்றூம் விஷயம் நீங்கள் புஃபேக்கு சென்றால் மட்டுமே. ஒரு பார்ட்டி மற்றூம் கல்யான வீடுகள் ஹோட்டலில் நட்ந்தால் ஒரே பிளேட் தான் எடுக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் மூன்று பிளேட் மாற்றீனால் மூன்ற் ஆட்களுக்குகான சார்ஜ் அவர்களுக்கு போட்டு விடுவார்கள்.
ஃபோர்க் ஸ்பூன் கீழே விழுந்தால் எடுத்து வைத்துவிட்டு வேறு ஒன்றை கேட்கவும். தயவு செய்து காலியாக இருக்கு டேபிளில் இருந்து எடுக்கக்கூடாது. அது போக கம்ஃபோர்ட் இல்லயெனில் தயவு செய்து கையில் எடுத்து சாப்பிட தயங்காதீர்கள். அதே சமயம் ஒவ்வொரு சர்விங்குக்கு செல்லும் போது இடது கையில் எடுத்து பொடுங்கள் எச்சில் கையில் கரண்டிகளை எடுக்காதீர்கள். உணவு எடுத்தவுடன் தயவு செய்து மூடியை மூடவும். சுரன்டி, வழித்து எந்த பதார்த்தையும் எடுக்காதீர்கள். கேளுங்கள் ரிபிளனிஷ் செய்வார்கள்.சாப்ஸ்டிக் மூலம் சாப்பிட தெரிந்தவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடுங்கள் நிறைய பேர் அதை வைத்து சாப்பாடுடன் கொலைவெறியோடு சன்டை போட வேண்டாம்.
நேப்கின்னில் கை துடைத்துகொண்டு ஃபிங்கர் போல் கேளுங்கள். இல்லெயனில் வாஷ் ரூம் சென்று கை கழுவுங்கள். முடிந்த வரை 1 மணீ நேரம் மினிமம் இல்லயெனில் புஃபே வேஸ்ட் தான். பிரேக்ஃபாஸ்ட் புஃபே போது தோசை, ஆம்லெட் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தால் போதும் அங்கேயே நிற்க வேண்டாம். மினரல் வாட்டர், காஃபி, டீ, குளிர்பானங்கள், ஜூஸ் வைகைகள் எக்ஸ்ட்ரா..............
கடைசி டிப்ஸ் - நான் மதுபானம் அருந்தவதில்லை. ஒவ்வொரு சமயம் நண்பர்களூடன் பாருக்கோ சென்றால் அவர்கள் ஒரு இரண்டு ஸ்மால் அடிப்பதற்க்கு முன் நான் ஒரு அரை கிலோ சைடு டிஷ் சாப்பிட்டுவிடுவேன். ஒரு சமயம் தாஜ் ஹோட்டலில் 6 பேர் போனோம். நான் வழக்கம் போல் குடிக்கமாட்டேன் என்பதால் எனக்கு பிடித்த மாக்டெயில் ஆர்டர் செய்ய சொன்னார்கள் நான் இடது மெனுவை பார்க்காமல் வலது சைடில் காஸ்ட்லியான் ஒரு ஜுஸை அர்ட்டர் செய்தேன் சுமார் 1300 ரூபாய். மொத்த பில் 2900. ஐந்து பேர் ஃபாரின் ஸ்காட்ச் மொத்தமும் சேர்த்து 1400 நான் குடித்த மாக்டெயில் 1300 டாக்ஸ் சேர்த்து 2900 வந்தவுடன் ஷாக் ஆன பிரன்ட்ஸ் அதில் இருந்து என்னை அவகள் உற்சாகபானம் அருந்தும் போது கூட்டி போவதில்லை........1300 டிரிங் மகா கேவலமாக கழுவி ஊத்தினமாதிரி இருந்தது இன்னொரு வேதனை...
கட்டபொம்மன் வரலாற்று ஆவணங்கள்

தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் 1670 ல் இருந்து 1907 வரை பல்வேறு வகையான ரெக்கார்டுகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னர், கட்டபொம்மனின் வரலாற்று ஆவணங்களை நேரடியாக பார்வையிட வேண்டும் என்ற சிறப்பு அனுமதியைப் பெற்று, அதன் பின்னர் தொடர்ச்சியாக
15  வேலை நாட்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 5.45 மணி வரை ஆவணக்காப்பக அறைக்குள் ஒரு கல்லூரி மாணவனை போல சென்று பல்வேறு பருமன்களை தேடி பார்வையிட்டதன் விளைவாக சுமார் 1353 பக்கங்களை தேடி கண்டுபிடித்தேன்.

1) Military consultation
2 )Revenue consultation
3 )Secret consultation
4 )Board of revenue
5 )Political consultation
6 )Secret sundries
7 )Revenue sundries
8 )Military Despatches to england
9 )Legal
10 )Tirunelvelli collectorate record
11 )Secret despatches to england

இது போன்ற பருமன்களில் (volume) மொத்தம் 40 பருமன்களுக்குள் வீரபாண்டியக் கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி முதல் பாளையப்போர், இரண்டாம் பாளையப்போர் என ஒவ்வொரு நாள் போர் நிகழ்வுகளையும், செய்தியையும், அவர்களின் கருத்துக்களையும், ரகசிய பரிவர்த்தனைகளையும், பிரிட்டிஷார் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.

சுமார் 26 பருமன்களில் 1353 பக்கம் முதல் கட்டமாக காப்பி ஆப் டாக்குமெண்ட் கேட்டிருந்தேன். நான் தான் ஆவணக்காப்பக வரலாற்றில் முதன் முறையாக  இவ்வளவு ஆவணங்களை மொத்தமாக கேட்டிருக்கிறேன். இதற்காக அரசு நிர்ணயித்த கட்டணமாக 5095 ரூபாய் கட்டிவிட்டேன்.

இன்னும் 15 பருமண்கள் பார்வையிடாமல் இருக்கிறது, நிச்சயமாக 90% சதவீதம் ஆங்கிலேயர்கள் எழுதிய ஆவணங்களை ஓரளவு எடுத்து விட்டேன், என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இன்னும் மிஞ்சிப் போனால் 200 பக்கங்களுக்குள்தான் தேட வேண்டியது இருக்கும்.

கட்டபொம்மன் சம்மந்தப்பட்ட வால்யூம்கள் ஸ்கேன் செய்யப்படாமல்தான் இருந்தன. சில வால்யூம்கள் நன்றாக இருக்கிறது, சில வால்யூம்களின் பேப்பர்கள் நொறுங்க ஆரம்பித்து விட்டது. கட்டபொம்மன் தூக்கில் போடப்பட்ட செய்திகள் இருக்கும் ஒரு வால்யூமை மட்டும் தனியாக கண்ணாடி பெட்டிக்குள் வைத்து முக்கியத்துவம் குடுத்து மதித்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு தனியார் நிறுவனம் ஸ்கேன் செய்கிற பணியை அங்கேயே இருந்து செய்து வருகிறார்கள், அவர்கள் அரசு வகுத்து கொடுத்த நெறிமுறையின் படி  ஸ்கேன் செய்து வருகிறார்கள், இந்த வகையில் political consultation மட்டும் அனைத்து வருட பருமன்களும் ஸ்கேன் செய்து முடித்திருக்கிறார்கள். இன்னொரு நிறுவனம் micro film முறையில் ஆவணப்படுத்துகிற பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். Micro film ஆயுட்காலம் சுமார் 100 வருடங்கள் ஆகும்.

இப்போது புதிய கோரிக்கையாக நான் எழுதிக் குடுத்த 26 பருமன்களையும் மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து இருந்தேன், இதற்கான செலவுத் தொகையை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தேன். பலகட்ட கடுமையான முயற்சிக்கு பிறகு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு நமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு நான் குறித்துக் கொடுத்த 1353 பக்கங்களும் ஸ்கேன் செய்தாகி விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

ஆவணங்கள் இரண்டு தளங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது, மேல்தளத்தில் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது, அங்கு தான் பிரிட்டிஷார் கைப்பட எழுதிய உண்மையான பருமன்கள் இருக்கிறது, இவை நொறுங்கிய நிலையில் இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர், நீதிமன்ற வழக்குகளுக்காக மட்டுமே அந்த ஆவணங்களை பார்வையிட முடியும் மற்றபடி பார்வையிட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

கீழ்தளத்தில் உள்ள பருமன்களை வைத்து தான் நமக்கு ஜெராக்ஸ் போட்டு தருகிறார்கள், இவை ஏற்கனவே உள்ள ஓரிஜினல் பருமன்களின் நகல்கள்தான், இந்த பருமன்களில் ரேபான் என்ற துணி ஒவ்வொரு பக்கங்களிலும் ஒட்டப்பட்டிருக்கிறது, இந்த துணி அந்தப் பருமன்களை நன்றாக பாதுகாக்கிறது, ஒரு பருமனின் ஆயுள்காலம் சுமார் 30 ஆண்டுகள் ஆகும், 30 ஆண்டுகளுக்கு பிறகு இதே போல் ஜெராக்ஸ் தயார் செய்து மீண்டும்  புதிய பருமனை உருவாக்குகிறார்கள். ஜெராக்ஸ் போடும் போது அதிகமாக கருப்பு அடிக்கிறது, இனிமேல் அந்தக் கவலை நமக்கு இல்லை.

இந்த ஆண்டு 70 ஸ்காலர்கள் ஆய்வுக்காக அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்காலர்களுக்கான அறையில் காத்திருந்து பருமன்களை பார்வையிடுவதுதான் நடைமுறை மரபு, ஆனால் நமக்கு ஒரு சிறப்புச் சலுகையாக நேரடியாக ஆவண அறைக்குள்ளே என்னை அனுமதித்தார்கள்,     அதனால்தான் என்னால் விரைந்து தேட முடிந்தது, இதில் முக்கியமாக ஸ்கேன் செய்வதற்கு சிறப்பு அனுமதி வழங்கிய கண்காணிப்பாளர் திருமதி.அபூர்வா ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

கட்டபொம்மனுக்கு எங்குமே முதலிடம்தான், ஆவணக் காப்பகத்தில் முழுமையாக  ஸ்கேன் செய்யப்பட்டது கட்டபொம்மன் வரலாற்று ஆவணங்கள் மட்டும் தான், என்ற பெருமையும் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.

நன்றி

பெ.செந்தில்குமார்
7299940159

பாஞ்சை போர்முழக்கம்
நிதிநிலை அறிக்கை 2020

வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். பெருக்குவோம் என்பது வெறும் கோஷமா? தேர்தல் அறிக்கையில் இட்டு நிரப்ப வேண்டிய வார்த்தைகளா? இனி இங்கே வாய்ப்பு உள்ளதா? என்ன பிரச்சனை?

மூன்று துறைகளின் வாயிலாக மட்டுமே இங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

1. சுரங்கத்துறை.

(வட மாநிலங்களில் தனியார் கையில் இருந்தாலும் இது இன்று வரையிலும் மாஃபியா பிடியில் தான் உள்ளது) காமதேனு பசு போலக் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்திற்கு வருவதில்லை. அதிகாரிகள், இடைத்தரகர்கள், அந்தந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களைக்கடந்து முதலீடு செய்த நிறுவனம் காசு பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களும் வாழ்நாள் முழுக்க தங்களது பசியின் ரொட்டிக்காக உழைத்து மடிய வேண்டியது தான்.

இன்று வரையிலும் மாற்றமில்லை. எந்த அரசாங்கமும் இதில் கை வைப்பதே இல்லை. லிக்னைட் தொழிலில் என்எல்சி மட்டுமே ஏகபோகமாக உள்ளது. சீனாதானா இதில் கை வைக்க முயன்றார். பின்வாங்கி விட்டார்.

இந்தத் தொழில் இந்தியா முழுக்க பரவலாக்கம் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் சுற்றுச்சூழல் என்ற பெரிய ஆயுதம் கொண்டு அவவ்வபோது சொருகப்படுகின்றது. குற்றுயிரும் குலையிருமாகவே இந்தத் துறை உள்ளது.

இந்தத் துறையில் இருக்கும் அமைச்சர் மட்டும் ஏழெழு ஜென்மங்களுக்குத் தேவைப்படும் வசதிகளை அடைந்து விடுகின்றார்கள்.

2. கட்டுமானத்துறை.

கடந்த ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட 60 சதவிகித வீடுகள் விற்கப்படாமல் அப்படியே உள்ளது. பல ஆயிரம் கோடிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றது. கள்ளப் பொருளாதாரம் பெருக்கெடுத்து ஓடிய போது மொத்த முதலும் இந்தத்துறையில் கொண்டு போய் கொட்டப்பட்டு பூம் ஆக்கப்பட்டு வளர்ச்சி என்கிற ரீதியில் ஊதிப் பெருக்கப்பட்டுக் காட்டப்பட்டது.

வரியில்லா சொர்க்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த பணத்தையும் நிறுத்தியாகி விட்டது. எதற்காக வருகின்றது? யாருக்கு வருகின்றது? என்ற கேள்வி மூலம் இப்போது நான்கு பக்கமும் கம்பி வேலி போடப்பட்டுள்ளதால் இந்தத்துறை மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றது.

வசூலாக வேண்டிய வங்கிகளின் பணமும் பயம் கொள்ள வைத்துள்ளது.

3. உற்பத்தித்துறை.

உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி இன்னமும் மாறுதலாகிக் கொண்டேயிருக்கிறது. முடிவாக இன்னமும் இது தான் சரி. இது தான் வழிமுறை என்று சொல்லும் அளவிற்கு உருவாகவில்லை. அவசர கதியாக அள்ளித் தெளித்த கோலம் போல இருப்பதால் அலங்கோலமாகவே இன்னமும் உள்ளது. 90 நாட்களில் கட்டிய பணம் திரும்பி வரும் என்றார்கள்.

மாயமான் போலவே கண்ணாமூச்சி காட்டிக் கொண்டேயிருக்கிறது. கள்ளப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு ஓட்டைகளை அடைத்து விட்டார்கள். வரிசையில் நின்று வரவும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி இறந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லை. எவன் செத்தால் எங்களுக்கென்ன? என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

எவரும் புதிய முதலீடு செய்யத் தயாராக இல்லை. செய்த முதலீடுகளையும் வரி என்ற குழப்பமான நடைமுறைகள் (இணையச் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை இன்று வரையிலும் களையப்படவே இல்லை) இன்னமும் மாறவில்லை.

வெளிப்படையாகத் தேசிய நெடுஞ்சாலைகள் மூலமாக நடக்கும் ஊழல் குறித்து மொத்த ஊடகமும் அலறிய போதும் கூட எவரும் இன்னமும் அசைந்து கூடக் கொடுக்கவில்லை என்பதிலிருந்து நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

சரஸ்வதி முக்கியமா? சங்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை முக்கியமா? என்பது கூடத் தெரியாமல் எங்கக்கா 150 நிமிடங்கள் கடந்த போது தடுமாறிவிட்டார்.

எப்படிடா பட்ஜெட்? என்று மகனிடம் டம் கேட்டேன்.
அவர் கட்டியிருந்த சேலை நிறத்தில் கோட் சூட் வாங்க வேண்டும் அப்பா?" என்றார்.

மனைவியிடம் கேட்டேன்.

"அந்தப் புடவை ஆன்லைனில் கிடைக்கிறதா? என்று பாருங்கள்" என்றார்.

அம்புட்டுத்தான் பட்ஜெட் தாக்கம்.


#Budget2020
யாருமே கூட இருக்கும்போது அவங்க மதிப்பு தெரியாது! - ஓ மை கடவுளே 
படம் பார்த்து இரண்டு நாள்கள் கழித்து எழுதுகிறேன். தியேட்டரில் உட்கார்ந்து பார்த்தபோது எவ்வளவு ஜாலியாக இருந்தேனோ அதே அளவுக்கு வீட்டுக்குப் போனதும் தேம்பித் தேம்பி அழ வைக்கவும் செய்தது படம்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் கிடைப்பது ஒரு சான்ஸ் தான். அதை நம்முடைய அலட்சியத்தாலும் தேவையற்ற பயத்தாலும் சந்தேகத்தாலும் இன்னபிற காரணங்களாலும் இழந்துவிடுகிறோம்.
ஒருவேளை முன்பே அந்தத் தவறைச் செய்யாதிருந்தால்..ஒருவேளை முன்பே கொஞ்சம் தைரியமாகப் பேசியிருந்தால் என நாம் எடுத்த முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்யலாமே தவிர இழந்த வாழ்வை மீண்டும் மீட்டெடுத்து முதலில் இருந்து தொடங்குவது கஷ்டம் தான் ... எதையும் டீப்பா யோசிங்க. அதுக்கப்புறம் தப்பு நடந்தா பொறுப்பெடுத்துக்கலாம். ஆனா அவசரப்பட்டு எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம் என கடவுளாக அவதாரம் எடுத்து அருள்புரிந்துவிட்டுப் போகிறார் விஜய் சேதுபதி.
அதென்னவோ இந்த விசே, இந்த படத்தில் மட்டும் லைட்டாக சைட் அடிக்கும் அளவுக்கு பலம்பொருந்தியிருக்கிறார்.
மற்றபடி, அதுல ஒரு வசனம் ரொம்ப எதார்த்தமாக இருந்தது.
அடச்சீ...போடா...போய் பொண்டாட்டி கால்ல விழுடா!
நூடுல்ஸ்மண்டை
https://youtu.be/rOw8fKZ2rps

வியாழன், 20 பிப்ரவரி, 2020

எனக்கு இந்த பாடல் கேட்டாலே ஏதோ மனசுக்குள் ஒரே சந்தோஷம்


தாள சந்தத்திற்கான பாடல் வரிகள் ...
இந்த பாடலின் சரணத்தை இழுத்து செல்வது அது தான்...
 முல்லைச்சரம் சூடிய வள்ளியை தேடிவந்த வடிவேலன் ...

 அதற்கு தங்கள் குரல் நயத்தில் புள்ளி கோலம் போட்ட இளையராஜா.. ஜானகி அருமை.. சரணங்கள் முடிந்தவுடன் தொடரும் அந்த சுருதி சேர்ப்பது போன்ற குழலோசை .. ஆஹா ... அற்புதமான இனிமை ....
 
 நெற்றியில் குங்கும பொட்டு .. மூக்குத்தி என்ற தோற்றத்தில் மகிழ்வுடன் நாணம் காட்டி திரும்பும் கன்னி தேவதையாக  ரேவதி அழகு...     வேஷ்டி சட்டை என்ற எளிய தோற்றத்தில் கார்த்திக் .
 
தாளத்தை தொட்ட ராகம் அதனால் இனிமை அதிகம் போலும் ... இசை அனுபவம் ஆவது இசைஞானியின் இசைக்கற்பனையில் தான் ...

https://youtu.be/3HZwdtpYaAQ
கட்டுச்சொல்லிகளின் கதை
---------------
எழுதப்பட்ட எழுத்துகள் சரியாகத் தெரிவதற்காக ஒவ்வொரு ஓலையின் இருபுறமும் மஞ்சளை நன்றாக அரைத்து குழம்பாக்கி அதோடு வேப்பெண்ணெயையும் கலந்து பூசி காயவைக்க வேண்டும்.. பின்னர் வசம்பு, மணித்தக்காளி இலை, கோவை இலை, ஊமத்தை இலை சாறுகள் தடவி, மாவிலை, அறுகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவுவர். இதனால் சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியும். இதற்கு ‘மையாடல்’ என்று பெயர்.
‘மஞ்சற் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய - என்கிறது தமிழ் விடுதூது.
இதனால் ஓலையில் உள்ள எழுத்து தெளிவாகத் தெரிவதோடு கண்ணிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, ஓலைகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். ஓகே ! வெறும் சுவடி ஓலைசுவடியான பிறகு, மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், மடங்கள் ஆகியவற்றில் பார்வைக்கு வைத்து பாதுகாக்கப்படும்.
நல்ல நிலையில் பராமரிக்கப்படும் ஓலைச்சுவடியின் வாழ்நாள் சுமார் 200 முதல் 300 ஆண்டுகள். நன்றாகப் புழக்கத்தில் ஓலைச்சுவடிகள் 100 அல்லது 150 ஆண்டுகள்தான் நீடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் ஆடி மாதத்தில் புதிய பனை ஓலைகளை சேகரித்து சுவடிகள் தயாரித்து பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை புதிய சுவடிகளில் பிரதி எடுப்பார்.
அது படி எடுத்தல் எனப்படும்.
இன்று ஒரு நூல் பல பிரதிகளாக அச்சடிப்பது போல அன்று மூல ஓலைகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதுவதற்கென்றே தனியாக கட்டுச்சொல்லிகள் – ஓலை நாயகங்கள் இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டிற்கு பாடி வீடு என்று பெயர். ஒருவர் மூல ஓலையை படிக்க சீடர்கள் அதைக் கேட்டு எழுதிப் படியெடுப்பர். இவ்வாறு பாடும் போதும் எழுதும்போதும் சிற்சில பிழைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.பாட பேதம்’ எனும் இதையொட்டி தான்
‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் ; படித்தவன் பாட்டைக் கெடுத்தான். - என்ற பழமொழியும் வழக்குக்கு வந்தது.
அப்புறம் படி எடுத்தவன் யார்? எந்த ஊர்? என்பதை அறிந்துக்கொள்ள சுவடியின் கடைசிவரியின் கீழ் கையெழுத்திட்டு, இப்படிக்கு.. என்றெழுதி தனது பெயரையும், ஊரையும் தெரிவிப்பார். இவர்களால் தான் ஒரு மூல ஓலை பல படிகளாக / சுவடிகளாக உருவானது.
கண்ணகி மதுரையை எரித்த கலவரத்தின் போது மதுரை முழுக்க இருந்த கட்டுச்சொல்லிகள் / ஓலை நாயகங்கள் அத்துனை பேரும் திட்டமிட்டு வெட்டிக்கொல்லப்பட்டனர். அவரது பாடி வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன என்பதெல்லாம் தமிழ் ஓலைச்சுவடிகளை குறிவைத்து அழிக்கப்பட்ட சோக வரலாறு.
இதற்காக தான் மதுரை எரிந்ததா..?
எத்தனை தமிழ் இலக்கிய பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டிருக்கும்
கேட்கவே நெஞ்சு கனக்கிறதே.
இருங்க குறையும் சொல்லிடுறேன்.
இதுப்போல பிரதி எடுக்கப்பட்ட பின் பழைய சுவடிகளை மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைத்து எடுத்துச் சென்று , ஆடி 18 அன்று ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வரையினானே " என்றது இதைத்தான்.
அச்சுக்கலை வந்த பிறகு பிரிண்டிங் புத்தகங்கள் வாசக சாலைகளில் இடம்பெற ஆரம்பித்தன. அயலானை வியக்கும் தமிழன் பிரிண்டிங் பின்னால் போனான். ஓலைச் சுவடி படிப்பவர்களும் அதை எழுதும் ஆட்களும் அருகிப்போயினர்.
எனவே ஓலைச்சுவடி படி எடுக்காமலேயே , அதை அப்படியே சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக இழுத்து சென்று ஆற்றில் இட்டனர் . அதன்பின் பழைய சுவடிகள் இல்லாமல் போனதால்
வெறும் சப்பரத்தை மட்டும் ஆடி 18 அன்று ஆற்றில் இறக்குகின்ற சடங்கு உருவானது.
இப்படி வெறும் சப்பரத்தை மட்டும் இழுத்து செல்கிறீர்களே..! என்னவொரு பைத்தியக்கார தனம்? சப்பரத்தில் ஒரு சாமியை வையுங்கடா முட்டாள் பசங்களா.. என்று யாரோ அறிவாளி புத்தி சொல்ல, தமிழன் வரலாறு மதச்சடங்காக மடைமாற்றப் பட்டன.
அச்சு இயந்திரம் கண்டுபிடித்து இப்போது சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே படி எடுத்து ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. எழுத்தப்பட்ட பனை ஓலைகளின் வயதும் இப்போது 150-200 ஆண்டுகள் ஆகிவிட்டன .
அவையெல்லாம் பொடிப் பொடியாக பயனற்றுப் போக இன்னமும் அதிகப்படியான ஆண்டுகள் இல்லை. தேடுவாரற்று பரண்களில் தூங்கிக்கிடக்கின்ற /ஒளிந்துக்கிடகின்ற தமிழர்களின் அத்தனை ஞானமும் அறிவும் கொண்ட சுவடிகள் வெகு விரைவில் மொத்தமாக அழிந்து போகும் அபாயம் உள்ளது.
படிஎடுப்பது என்பது ஏதோ வெறும் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது என்பதாகாது. நமது பரம்பரியத்தை பண்பாட்டை பாதுகாக்க வாழ்வியல் முறைகளை மெய்யியல் கோட்பாடுகளை தமிழ் சிந்தனை மரபை படியெடுக்கின்ற பெரும் வேலைத்திட்டம் என்பதை உணர்தல் வேண்டும்.
சரி பனையோலைக்கு ஏன் சுவடி என்று பெயர் வந்தது ?
ஓலைகளில் பதியுமாறு ஆணிகளைக் கொண்டு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பு சுவடியாகின்றது.
தமிழன் தன் கருத்துச் சுவடு / எழுத்துச் சுவடு பதித்த பொருளை முதலில் ‘சுவடி’ என்றே அழைத்திருக்கவேண்டும்.
பாட்டுப்புறம் எழுதிய கட்டமைச் சுவடி’’
என்கிறது பெருங்கதை.
பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், தாழிப் பனை, கூந்தல் பனை, லாந்தர் பனை போன்றவை மிகவும் அரிதான வகைகள். இப்பனைகளின் ஓலைகளையே சுவடிகள் செய்ய பயன்படுத்தினார்கள், என்றாலும் கூட கொஞ்சம் அகல நீளம் அதிகமாக இருக்கும் என்பதால் கூந்தல் பனைக்கு கூடுதல் மவுசு.

ஆடி தான் ஓலைகள் சேகரிக்கப்பிற்கு உகந்த மாதம்.

குருத்தோலைகளை ஒரே அளவில் சீராக நறுக்கி அவற்றின் நரம்புகளை நீக்கி நிழலில் உலர்த்திய பிறகு அதனை இளஞ்சூட்டு வெந்நீரிலோ பாலிலோ வெதுப்புவர். அதன்பின் மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ அல்லது நல்லெண்ணெய் பூசியோ ஊற வைக்கப்படும்.

இதற்கு ஓலை வாருதல் என்று பெயர்.

இவ்வாறு பாடம் செய்யப்பட்ட ஓலைகளை ஒரு மாதம் நிழலில் காய வைத்து வேண்டும். பின்னர், பதப்படுத்திய ஓலைகளை ஓன்று சேர்த்து வளைந்து விடாமல் இருக்க புத்தகங்ககளுக்கு பைண்டிங் பண்ணுவது போன்று ஓலைகளுக்கு தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள்.

சில வாரங்கள் கழித்து அவற்றை எடுத்து சங்கு அல்லது கல்லைக்கொண்டு ஒருமுறைக்கு பலமுறை ஓலையை அழுத்தி தேய்த்து அழகுற செய்தால் அவை பளபளப்பாக தகடு போல் நேராகி விடும். பின் இடதுபக்கம் கயிறு கட்டுவதற்காக துளை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து முனையில் துளையிட்ட செப்புக்காசு அல்லது சொலி வைத்து முடிப்பார். இவ்வாறு துளையிட்டு கயிறு கோத்துகட்டுவதற்கு பொத்தகம் என்று பெயர். ஓலைச்சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த துளையில் இரும்பினால் ஆனா கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதற்கு பெயர் ‘நாராசம்’.

சரி ஓலைச்சுவடி ரெடியாகிடுச்சு..!

பிறகு..

குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, கிளிமூக்கு எழுத்தாணி என பல வகையான எழுத்தாணிகள் பயன் படுத்தப்படும். அரசர்களாகவோ வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் அவர்களது மதிப்பிற்கு ஏற்ப தந்தம், தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்புகளில் எழுத்தாணிகள் இருக்கும்.

எல்லோரும் ஓலை எழுதிட முடியாது,. அதை எழுதுவதற்கென்றே அரசவைகளில், அரண்மனைகளில் வாசக சாலைகளில் ‘ஓலை நாயகம்’ என்று ஒருவர் இருப்பார். அவர்தாம் அத்தனையும் எழுதுவார்.

அதான் எல்லாம் முடிந்ததே, எழுத ஆரம்பிக்கலாமா..? -
என்றால், அதுதான் இல்ல..

எழுதுவதற்கு முன் ஓலையின் நெற்றியில் ஒரு வட்டமும் அதன் கீழ் சின்னதா ஒரு கோடும் போட்டு ஓலை எழுதுவதற்கு ஏற்றதாக இருக்கானு ஒரு முறை செக் பண்ணிக்குவாங்க. இதுதான் பின்னாளில் பிள்ளையார் சுழி என்றானது.

எழுத்தாணி கொண்டுபனையோலையில் எழுதும்போது, ஓலையில் ஓட்டை விழுந்து கிழிந்து விடும் என்பதால், மெய் எழுத்துக்கு புள்ளி வைக்க மாட்டார்கள். புள்ளிக்குப் பதிலாக சிறிய வட்டமிடுவார்கள்.

ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலாகும்மே –

அதாகப்பட்டது,
ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது யார் யாருக்கு என்னென்ன சைஸ்ல ஓலை இருக்கணும்ற விவரத்தை விலாவரியா சொல்லி வச்சிருக்கான் நம்ம முப்பாட்டன்.

நான்மறைகளை படித்தவர்களுக்கு 24 விரற்கட்டை
அரசருக்கு 20 விரற்கட்டை, வணிகருக்கு 18 விரற்கட்டை, வேளாளர்க்கு 12 விரற்கட்டையும் ஓலை அளவு இருக்க
வேண்டுமாம்.

ஓலைகளில் பல வெரைட்டிகள் உண்டு.

அரசாணை தாங்கியது ‘கோனோலை’
ஆணைகள் எழுதப்பட்ட ‘திருமந்திர ஓலை’.
திருமணம் செய்திகளுக்கு ‘நீட்டோலை’
இறப்புகள் ஏந்தி சென்ற ‘சாவோல’
குடும்ப சுப நிகழ்வுகளுக்கு மனைவினவோலை
கோவில் நிகழ்வுகள் சொல்லும் ‘நாளோலை’

என எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டு அவை பல தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.

எழுதிக் கையொப்பமிடுவதை இன்றும் நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். படிப்பறிவற்றவர்களோ கையொப்பத்திற்கு பதிலாக கைநாட்டு வைப்பதும் இன்றைய நடைமுறை. படிப்பறிவு இல்லாத ஒருத்தருக்கு எழுதணும்னா என்ன செய்வது, ஓலைகளில் கைநாட்டு வைக்க முடியாதே?

அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. பெயரெழுதிக் கையொப்பமிடுவதற்குப் பதிலாக, ஒரு கீற்றலை தனது அடையாளமாகக் குறியிடலாம். இவர்களுக்கு பெயர்தான் - 'தற்குறி'.✒📚📚👍

புதன், 19 பிப்ரவரி, 2020

உடுமலைப்பேட்டை ...கல்லாபுரம் பகுதியில் ..நெற்பயிர்கள் ..

நெல் சாகுபடி தொடங்கப்பட்ட வரலாறு !!!
உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இருவகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.
ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.
இந்தியாவில் அவ்வையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில் , விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.
ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.
ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது .
ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது.
1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள்,மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர்.
முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.
அன்பான பெற்றோர்களே

வாழ்த்துக்கள்!

உங்கள் குழந்தை அவரது/அவள் அரசின் பொதுத் தேர்வுக்குச் செல்லப் போகின்றார்.

9வது / 10வது / 12வது வரை உங்கள் குழந்தை தனது / அவள் பயணத்தில் அழகாகச் சிறந்து விளங்குவார் என்பது ஒரு பெருமையான தருணம்.

ஆனால் அன்புள்ள பெற்றோர்களே, இப்போது தான் அவர்கள் தங்கள் தேர்வுகளைத் தொடங்க ஆயத்தப் பணியில் ஈடுபடப் போகின்றார்கள். அடுத்த 20 நாட்கள் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

மனநிலை மாற்றங்கள், சோகம், உற்சாகம், நிதானமான நடத்தை, முரட்டுத்தனம் போன்றவற்றைக் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

தேர்வுகளுக்கு வரும்போது, ​​தேவையற்ற மன அழுத்தங்கள் நமது கல்வி முறையால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.




நாம் நம் குழந்தைகளுக்கு ஆதரவளிப்போம். ..
நீங்கள் அதை எப்படிச் செய்ய முடியும்?

உங்கள் பிள்ளை மன அழுத்தத்தைச் சமாளிக்க உதவும் சில எளிய உதவிக்குறிப்புகள் உங்கள் முடிவிலிருந்து செயல்படுத்தப்படலாம்.

1 .. தயவுசெய்து ஒரு குழந்தை தனது பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு நேர்மறையான ஒரு தொடுதல் / கட்டிப்பிடிப்பால் காலையில் அவர்களை எழுப்புங்கள்.

2 .. உங்கள் குழந்தையின் நாளை ஒரு நேர்மறையான அறிக்கையுடன் தொடங்குங்கள் - நான் உன்னை நேசிக்கிறேன், வாருங்கள் இந்த அழகான நாளை ஒன்றாக ஆரம்பிக்கலாம்.

3 .அவர்கள் தங்களது தேர்வுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு, உங்கள் குழந்தையுடன் நீங்கள் வைத்திருக்கும் தொடர்பு குறித்து கவனமாக இருங்கள். நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன், உன்னுடைய சிறந்த உழைப்புக்கு உனக்கு எல்லா அதிர்ஷ்டத்தையும் தருமென்று நான் நம்புகிறேன், நான் காத்திருப்பேன் ....

4 .. உங்கள் கவலைகளை உங்கள் பிள்ளைக்கு அனுப்ப வேண்டாம். நிலைமை என்னவாக இருந்தாலும், கடைசி நேரத்தில் உங்கள் முடிவிலிருந்து நேர்மறையான ஆதரவு உங்கள் குழந்தையின் நம்பிக்கையை அதிகரிக்கும்

5 .. குழந்தை திரும்பி வரும்போது, ​​தயவுசெய்து பரீட்சை எப்படி இருந்தது என்று மட்டும் கேட்பதைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாகக் கேளுங்கள் ....

அனுபவம் எப்படி இருந்தது ..

நாள் முழுவதும் பிரிப்போம், சிறிது நேரம் வெளியே செல்வோம் / ஒன்றாக ஒரு கப் காபி சாப்பிடுவோம்

எழுதிய தேர்வுகள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும்.

போய்விட்டது ... உங்களால் அதை மாற்ற முடியாது,

6 .. தயவுசெய்து குழந்தையின் பரீட்சைகளின் போது வீட்டிலுள்ள குழந்தைக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சூழல் வழங்கப்படுவதை உறுதிசெய்க.

குடும்பத்திற்குள் தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கவும், வேறுபாடுகள் பின்னர் தீர்க்கப்படலாம்;

மறந்துவிடாதீர்கள்- அது உங்கள் குழந்தையைப் பாதிக்கும், அது அவருடைய மன அழுத்தத்தை அதிகரிக்கும்

7 .. குழந்தை தனது காலை உணவைச் சாப்பிடும்போது அல்லது உங்களுடன் ஓய்வெடுக்கும்போது மென்மையான வாத்திய இசையை ஒலிக்கவிடுங்கள்.

8 .. குழந்தைக்கு மதிப்பெண்களைக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.அவரது இலக்குகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் விவேகமானவர் என்பதனை நீங்கள் முதலில் நம்புங்கள்.

9 .. வீட்டில் புதிய பூக்களை வைத்துக் கொள்ளுங்கள், அது வீட்டில் நிறைய நேர்மறைகளைக் கொண்டுவரும்.

10..எந்தக் காரணங்களுக்காகவும் குழந்தைகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும்

11..ஒரு நேர்மறையான எண்ணத்துடன் உங்கள் குழந்தையைத் தூங்கச் செய்யுங்கள்.. உங்களின் அன்பான ஒத்துழைப்பு அவருக்கு சில மணிநேரங்களுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும், இது குழந்தைகளுக்கு அன்றாட அழுத்தங்களை அது சார்ந்த சூழலை எதிர்த்துப் போராட உதவும்

12 ...தொடர்ந்து ஆலோசனை கொடுப்பதை ஐ தவிர்க்கவும், குழந்தைக்கு அவரது இடத்தை கொடுங்கள் அவருக்கான இடத்தை அவர் அடைந்தே தீருவார் என்று நம்பிக்கை வைக்கவும்.

13..உங்கள் அல்லது அவரது எதிர்பார்ப்புகளின்படி பரீட்சை போகாவிட்டாலும், வெல்ல முடியாமல் போனாலும் அவர்கள் உங்கள் குழந்தைகள் என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும். .

14.. மிக முக்கியமானது:

இன்று முதல், குழந்தை உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க விடாதீர்கள், கடைசி நேரத்தில் எதிர்மறை அறிக்கைகள் அல்லது எதிர்பார்ப்புகள் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும்.

உங்கள் பிள்ளைக்கு நிறையத் தேவை அன்பு மற்றும் பொறுமை

ஆம் - நீங்கள் தயவுசெய்து அமைதியாக இருங்கள், பொறுமையாக இருங்கள், உங்களுக்கும் எல்லா அதிர்ஷ்டங்களும் உங்கள் குழந்தைகள் மூலம் வரும்..

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

உடுமலை பகுதியில் ஆடு வளர்ப்பு ...
இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. நமது பகுதிக்கு தகுந்த கிழ்கண்ட இனங்களையே வளர்த்து பயன் அடைவோம்.
மோளை ஆடு அல்லது மேகரை ஆடு:
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம்
இது தமிழகத்தின் மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல்,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம்,பவானி,அந்தியூர் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு காணப்படுகிறது .
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம். நோய் எதிர்ப்பு சக்தியில் முதல்தரம். கிடாய்க்கு மட்டும் கொம்புகள் இருக்கும்.நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும்.உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும். இறப்பு விகிதம் மிக மிக குறைவு.
வளர்ப்புக்கு மிகவும் எற்ற ஆடுகள்.
கறிக்கு மிகவும் ஏற்ற ரகம். இறைச்சி மிகுந்த சுவை உடையது. இதன் தோளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
கன்னி ஆடு:
சிப்பாய் நடை போடும் கன்னி!
கன்னி ரக ஆடு… கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா… பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா போற மாதிரி இருக்கும். இந்த இனத்தை ‘பால் கன்னி’னு சொல்வாங்க. வெள்ளை நிறத்துக்குப் பதிலா… செந்நிறம் அதிகமா இருந்தா ‘செங்கன்னி’னு சொல்லுவாங்க. கன்னி ஆடுகள் ஒரு ஈத்துல ரெண்டு குட்டியிலிருந்து நாலு குட்டிகள் வரை ஈனும்.
காணப்படும் இடங்கள்:
விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்:
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை “பால்கன்னி’ என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் “செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.
குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு “ராணுவ அணிவகுப்பு’ போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு.

பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும்.
கொடி ஆடுகள்:
கடலோரத்துக்கு ஏத்த கொடி!
இதை ‘போரை ஆடு’னும் சொல்வாங்க. இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன.மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன. கடலோர மாவட்டங்களுக்கு ஏத்த இனம்!
நல்ல உயரம், நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு இதுதான் கொடி ஆட்டோட அடையாளம். கொடி ஆட்டுக்குக் காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும்.
இந்த ஆடுகள் ரெண்டு நிறத்துல இருக்கும். வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, ‘கரும்போரை’ அல்லது ‘புல்லைபோரை’னும்… வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா ‘செம்போரை’னும் சொல்வாங்க. 100 செ.மீ உயரம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரைக்கும் கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். கிடா 47 கிலோவிலிருந்து 70 கிலோ வரையும் இருக்கும். பெட்டை 32 கிலோ வரை இருக்கும்.

பிறந்த கிடா குட்டிகள் : 1.5-2.1 கிலோ எடை,பெட்டை குட்டிகள் : 1.5-2.05 கிலோ எடை
சேலம் கருப்பு அல்லது கீகரை ஆடு அல்லது கருப்பாடு:
இது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், ஓமலூர், மேச்சேரி,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
பஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம்.அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை.
நல்ல குட்டிகள் ஈனும் திறன் உடையவை.
பள்ளை ஆடு!
இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். ‘குள்ள ஆடு’, ‘சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. இந்த ஆடுகளும் ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். இவை பலவகையான நிறத்துடன் காண்டுல இருக்கும்....

உடுமலையில் ஒரு பழம் பெரும்  நாடகக் கலைஞர் ...

நலிந்து வரும் கலைகளைக்காப்பாற்றி வரும் நாடகக்கலைஞர், எழுத்தாளர், கருத்தாளர், படைப்பாளர் எனப் பன்முகத்தன்மையோடு உடுமலை காந்தி சவுக் பகுதியில்  வசித்து வருகிறார் நாடக இயக்குநர், நடிகர் எம்.கே.முத்து.இவருக்கு வயது 83 சுமார் 20 க்கும் மேற்பட்ட சமூக நாடகங்களை இவரே எழுதியுள்ளார். 

இவரது எழுத்தில் வீரப்பெண், நண்பனைப்பார், தீக்கண்ணன், பூதம் காத்த புதையல், நீயின்றி நானேது, அன்பே அமுதா, அமர ஓவியம், ஆசையும் அழிவும், போன்ற நாடகங்களும் 1969 ல்  அமைச்சர் சாதிக்பாட்சாவின் எதிர்பாராத முடிவு எனும் நாடகத்திற்கு அணிந்துரையும் வழங்கியுள்ளார்.


1970 ல் அரங்கேற்றப்பட்ட தங்கதுரை எனும் நாடகத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அணிந்துரை வழங்கியுள்ளார். உடுமலையில் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி நாடகக் கலாமன்றத்தில்  நூற்றுக்கணக்கான நாடகங்கள் நடந்துள்ளது.  1949 முதல் 1953 வரை கிருஷ்ணா டாக்கீஸில் ஜோதி நாடக சபா முகாமிட்டது.  


நாடகக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்ய வந்தவர்தான் இந்த எம்.கே. முத்து. அப்பொழுது ஒப்பனை செய்தால்  உடனே காசு தரமாட்டார்கள். அந்தக்காட்சியில் நடித்து வரும் காசிலேயே இவருக்கு ஊதியம் தருவார்கள். அவ்வாறு ஊதியம் வாங்குவதற்காக  காத்துக்கொண்டிருக்கும் போது நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தவர். பிற்பாடு இந்த நாடகக் கலை ஏற்படுத்திய தாக்கம் அவரை நாடகக்கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இன்றளவும் நாடகத்துறையில் தீராத ஈடுபாடு கொண்டு  இயங்கிவருகிறார். 


இவரது முதல் நாடகம் நண்பனைப்பார் ப்ரோவோ திரையரங்கில்  அரங்கேற்றம் செய்துள்ளார்.
இவரது தொலைபேசி எண் : 9976054967

திங்கள், 17 பிப்ரவரி, 2020

கோவை மலரும் நினைவுகள் ...


வாழ்க்கையில் உட்படுத்திக்கொள்ளாத ஒரு விசயம் ‘வாக்கிங்’...
ஆனால் தினமும் ஒரு மகா கலைஞனோடு நடந்தால்.... இயக்குநர் ராம் பானியில் சொன்னால் அவன் பாக்கியசாலி....அந்த பாக்கியசாலி நான் தான்.... அந்த மபெரும் கலைஞன் இயக்குநர் பாலுமகேந்திரா... ஒரு மாதகாலம்.. சட்டக்கல்லூரி பயிலும் போது அவருடன் வாழும் வாய்ப்பை பெற்றேன்... அவரை ஹேண்டில் வித் கேர் என ஸ்டிக்கர் ஒட்டாத குறையாக கோவைக்கு அனுப்பி வைத்தார் இயக்குநர் பாலா... எங்கள் நண்பர்களிடையேயே அவர் வந்தது ரகசியம் காக்கப்பட .... எங்கள் கேப்டன் பாமரனுக்கும் அவசர வெளியூர் வேலை வர... அவரும் பத்திரமா பாத்துக்கங்க பாலுமகேந்திராவை என சொல்லிச் செல்ல.... அந்த ஆனந்த உச்சத்தில் ஒரு மாதம் வாழ்ந்தேன்.... வாழ்க்கை... இளமை... தனிமை...காதல்... சினிமா... முதுமை... என தினசரி அவரளித்த பாடம் வாழ்வில் என்றென்றும் பயணமிக்கும்...சக தோழனாக பேசாத விசயமில்லை.... மாலையில் செல்போன் ஒலிக்கும்... எடுத்தால்... சிவா... வந்துட்டு இருக்கீங்களா.. சார் 5நிமிடம்.... போனில் அவரின் அந்த குரல் கம்பீரமாக இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது... கோவை இராமநாதபுரத்தில் தொடங்கி அரசு மருத்துவமணை வரை.... அந்த மாலை பொழுதுகளை மறக்க முடியுமா... சார தொப்பிய கலட்டி பார்திருக்கியா... இது தான் இண்டஸ்ட்ரி டாக் காக இருக்கும்... நாங்க.. ஒரு மாதம் அப்படித்தான் வாழ்ந்தோம் என்ற கர்வத்துடன் வாழ்ந்து வருகிறோம்.... எல்லா நாளும் அவரை நினக்கும் நாளே….

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020






இலந்தை முள் கோட்டை ... 

சுமார் 100 அடி சுற்றளவு 25 அடி உயரம், 10 அடி அகலம் வட்ட வடிவமான கோயிலில் இலந்தை முள் கொண்டு கோட்டை

ஆதியில் ஜெகன் மாதா ஜெயதுர்கா என்றழைக்கப்பட்ட அன்னையின் அம்சமாக கருதப்டும் ஆதிசக்க தேவியின் திருக்கோவில் அமைந்த இடங்களில் அந்நியர் நடமாட்டங்களை குறைக்கவும் சில நேரங்களில் மனித நடமாட்டமே இல்லாமல் அவ்விடங்களின் புனிதங்கள் களங்கப்படமால் இவ்வித இலந்தை முள் கூடாரங்கள் அமைக்கப்படுகிறது ... 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற இடங்களில் வாழும் கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்களின் ஆதிகுலதெய்வமாக வழிபடும் சக்கதேவியின்  ஆலயங்களை சுற்றி இவ்வகையிலான முள்கோட்டைகளை அமைத்து வழிபடுகின்றனர் 

குறிப்பிட்ட நாள் இடை வெளியில் மீண்டும் புணரமைக்கப்படும் இத்தகைய முள்கோட்டைகளில் தவறாது வீட்டிற்கு ஓர் ஆண்மகன் கலந்துகொள்ளவேண்டும் என்ற சட்டதிட்டங்களையும் சில சம்பிரதாய நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர் 

ஜக்கதேவியின் அவதாரமான வீரசின்னம்மாள் அம்மனுக்கு உருவ வழிபாடு கிடையாது. கோயிலின் மத்தியில் மண்பானையில் நிறைகுடம் தண்ணீர் வைத்து சித்தாடை கட்டி, காதோலை கறுகுமணி பாசி அணிவித்து அம்மனாக அலங்கரித்து தீபம் ஏற்றி பூஜைகள் நடக்கும். பூசாரி பிச்சைவேல் பூஜைகளை நடத்துவார்.

முதலில் ஊர் பொதுப்பொங்கல் வைக்கப்படும். அதையடுத்து வீடுதோறும் ஒரு பொங்கல் வீதம் வைத்து வழிபடுவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தை வரம் நேர்த்திகை கடனாக கரும்பு தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபடுவார்கள்.

 தேவதந்துமி ஆகிய மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தெய்வீக கலையான தேவராட்டம் ஆடிக்கொண்டே ஊர் மந்தையிலிருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து கோயிலை வந்தடைவர்.

கம்பளவிருட்சம் அறக்கட்டளை 
வரலாற்று தகவல் பிரிவு 
உடுமலைப்பேட்டை ...

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

எங்கேயோ பார்த்த மயக்கம்.. கேட்கக் கேட்க சலிக்காத ஒரு பாட்டு. யுவன் இசையமைத்ததில் ஆகச்சிறந்த பத்து பாடல்களில் அதிலும் டாப் 3ல் இதுதான் முதன்மையாக வரும்.
யுவன், நா முத்துக்குமார், உதித் நாராயண் ஆகிய மூன்று முரட்டு ஆண்களால் உருவாக்கப்பட்ட சாகாவரம் பெற்ற காலத்திற்கும் நிற்கக்கூடிய காதல் படைப்பு இது. யுவன் சோறு போட, முத்துக்குமார் குழம்பூற்ற உதித் நெய் கலந்து நமக்குக் கொடுத்த பம்பாட் சாப்பாடு. தட்டு வைத்த செல்வராகவனையும் மறக்கமாட்டேன் கவலைவேண்டாம்.
இசையமைத்தது மட்டுமல்ல, யுவன் இதை உதித் நாராயணைக் கூப்பிட்டு பாடவைத்ததுதான் இதன் சிறப்பம்சம். அவரது குரல் இதே வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.
இதைக் கேட்கும்போதெல்லாம் தமிழ் சரியாக அறியாத ஒரு சௌகார்பேட்டை சேட்டு ஒரு தமிழ்ப்பெண்ணிடம் காதல் வயப்பட்டு இன்னஸண்டாக கன்னாபின்னாவென்று பாடுவதாகத் தோன்றும். இதுவே இந்தப்பாடலின் முதன்மையான அழகியல்
மழையடித்து ஓய்ந்த ஒரு மாலைநேரத்தில் தனது காதலி சல்வார்கமீஸில் ஒரு தேர்போல தார்ச்சாலையில் இறங்கி நடக்கிறாள். காதலன் பார்த்த மறுகணம் நெஞ்சைப்பிடித்துச் சாய்கிறான். இடி விழுந்த வீட்டில் அவள் பூச்செடியாய் பூக்க ஆரம்பிக்கிறாள். இதற்குமேல் போனால் நான் உளற ஆரம்பித்துவிடுவேன்.
https://youtu.be/m55z41QWyyY
கடந்த ஒருவாரமாக  அருமையான சொந்தங்கள்  தொலைபேசியில்  அழைத்து ..பேசிக்கொண்டு இருக்கிறார்கள்  மிக்க மகிழ்ச்சி ..அதில் அதிகம் ஏன் யாரையாவது புதிய இளைய சொந்தங்களை அறிமுக படுத்தி கொண்டே இருப்பீர்கள் ..கடந்த 6 மாதமாக .இது நின்றுவிட்டதே ..யாரையும் பார்க்கவில்லையா என்று கேட்கிறார்கள் ...உங்களின் பதிவுகளில் கம்பள சமுதாய நிகழ்வுகள் குறைந்து கொண்டே வருகிறது ஏன் என்று கேட்கிறார்கள் ..முதல்மாதிரி ..நீங்கள் அறிமுக படுத்துங்கள் ..தெரிந்து கொள்கிறோம் என்கிறார்கள் ..உங்களின் பொது தளத்தில் அதிகம் கலந்து கொள்கிறீர்கள் பதிவுகள் அதிகம் வருகிறது ..ஏன் ..என்கிறார்கள் ...

எப்படி பதில் அளிப்பது என்று .எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது ..மறுபடியும் முயற்சிக்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறேன் ..மீண்டும் சமுதாய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முயற்சிக்கிறேன் என்று சொந்தங்களுக்கு பதில் அளித்து இருக்கிறேன் ..பார்ப்போம் ...
நன்றி என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

மிக அதிகமான வயது வித்தியாசம் உள்ள காதல், கணவன்- மனைவி உறவுகளில் புரிதல் மிக அதிகம் உண்டா? ஏன்? (உதாரணம் முப்பதுகளில் பெண் என்றால் 40-50 களில் ஆண்..)?

நான் பொதுவாக என்னைப் பற்றியோ, என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களைப் பற்றியோ எழுதுவது தான் வழக்கம்.

நான் கோவையில் வசித்த பொழுது நடந்த நிகழ்வு . இந்தக் கேள்விக்குப் பொருத்தமாக ஒரு சம்பவம் என் பக்கத்து வீட்டில்  நடந்தது…

அவர் ஒரு PhD ஹோல்டர். தவிர ஒரு ஸ்கூல் நடத்துகிறார். விவாகரத்தானவர். ஒரு முப்பத்தைந்துக்கு மேல் வயதிருக்கும். முதலிரண்டு வருடங்கள் தனியாக வசித்திருந்தார். யாரிடமும் பேச மாட்டார். ஃபிட்னஸ் ஃப்ரீக்.

அவரிடம் மாணவியாக ஒரு பெண் வந்தாள். நல்ல அழகி. ஒரு இருபத்திரண்டு/மூன்று வயதிருக்கும். முதல் வருடம் மாணவியாக மட்டும் இருந்தாள். ஓரிரு மணி நேரம் மட்டும் வருவாள் . புத்தகங்களுடன் போய்விடுவாள். இரண்டாம் வருடம் காதலியாக ஆனாள். நான்காம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 10/12 வருட வயது விததியாசம். ஆனால் அவ்வளவு அன்யோன்யமாக இருப்பார்கள்.

எங்கள் கிச்சன் பக்கம் அவர்களின் வாசல். காலையும் மாலையும் தவிர்க்க முடியாமல் அங்கேதான் இருக்க வேண்டும் நாங்கள். பேசிச் சிரிப்பதும், அவரை வழியனுப்புவதும், சிணுங்குவதும் ஒரே ரொமான்ஸ் தான். சில சமயம் லிப்ட் வரையும் நடக்கும். (என் மனைவி தலையில் அடித்துக் கொள்வார் , உள்ளேயே கொஞ்சிட்டு வரப்படாதோ என) எனக்குச் சிரிப்பாக வரும்.

அவருடைய முகத்தில் அவ்வளவு சந்தோஷம் , பெருமிதம் தெரியும். நாங்கள் உள்ளே இருப்பது தெரிந்தால் இன்னும் சத்தமாகப் பேசிச் சிரிப்பார்கள். பார்க்க எனக்கு மனநிறைவாக இருக்கும்.

மனம் ஒத்துப் போய்விட்டால் வயது ஒரு கணக்கேயில்லை. சரியான துணை அமைந்து விட்டால் எல்லா வயதிலும் வாழ்க்கை சந்தோஷமாகவே அமையும்.

புதன், 5 பிப்ரவரி, 2020

கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

Sivakumar Kumar........

ஒன்றிரண்டல்ல… நிறையவே கொடுத்திருக்கிறார்…

ஊனமற்ற உடல்

குறைவற்ற கல்வி

மனம் புத்தி இரண்டிற்குமான சமநிலையை பேணும் திறன்

பல சமூகத்தவரோடு பல அலுவலக பணிகாரணமாக வாழ்ந்த/வாழும் சந்தர்ப்பங்கள்

எந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் யாரோ ஒருவர் மூலமாகவேனும் கிடைக்கும் உதவி

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்

ஞாபக மறதி (எதையும் மனதில் மறைக்கத் தேவையில்லை என்பதால்)

கண்ணை மூடி சில நிமிடங்களிலேயே வரும் தூக்கம்

நகைச்சுவை உணர்வு (ஒரு மணிநேரத்தில் குறைந்தது ஒரு காமெடி காட்சியாவது நினைவுக்கு வரும்)

கணணியைத் தவிர வேறெந்த விடயத்திற்கும் அடிமைப்படாத நிலை

சொல்லிக்கொண்டே போகலாம்…
இன்று ஒரு மாப்பிள்ளையிடம் ஒரு கேள்வி கேட்டேன் ..அளித்த பதில் ..

யாரும் செய்ய முன்வராத அதே நேரத்தில் சிறந்த சிறுதொழில்கள் எவை? அதற்கு முதலீடு எவ்வளவு?

பெட்டிக்கடை

உடனே பீடி,சிகரெட் தானா விப்பாங்க…அதுல என்ன லாபம் வரும் ன்னு நினைக்க வேண்டாம்…

2 லட்சம் முதலீடு,

4 பெட்டிக்கடை 4 முக்கியமான இடங்களில் வைக்க வேண்டும்

4 கடையும் பாக்க ஆள் வேண்டுமே…அதுக்கு தான் எப்படியும் உங்களுக்கு தெரிஞ்ச வயசான ஆளுங்க, சும்மா இருக்குற பெண்கள் அவங்களுக்கு அந்த கடைய பாத்துகிற பொறுப்பை கொடுங்க செய்வாங்க

Next புதுசா ஏதாவது பண்ணினாதான் ஜனங்க கடைய எட்டி பாப்பாங்க…so

மக்கள் மறந்து போன பலகாரங்களை உங்க கடைக்கு கொண்டு வாங்க…

உதாரணமாக

சுசியம்

குழா புட்டு

ராகி கேசரி

உங்களுக்கு தெரிஞ்ச இயற்கை உணவுகள்.

Ok இத செய்ய எனக்கு தெரியாதே…னு நினைக்கிறீங்க

No problem அதுக்கும் உங்க area ல இருக்குற பெண்களுக்கு இது செய்ய தெரியும் so அவங்க கிட்ட போய் எனக்கு 100 வடை சுட்டு தாங்க. .ஒரு சம்பளம் வாங்கிகொங்கன்னு சொல்றிங்க..

இப்படி புதுசா கொண்டு வாங்க…எனக்கு 4 கடை வச்சி மேய்க்க முடியாது ன்னு நினைச்சா

No problem

ஒரு கடைய open பண்ணி நீங்க உக்காந்து xerox, lamination, online service பண்ணி கொடுங்க ..


கண்டிப்பா pickup ஆகும்…இது முழுக்க முழுக்க எனது கருத்து இதை try பண்ணி பாக்கலாம் ன்னு ஒரு ஐடியா

திங்கள், 3 பிப்ரவரி, 2020

வங்கி,தனியார்வங்கி  பணிகளில் சந்திக்க கூடிய சவால்கள் என்னென்ன?

முதலில் இந்த வேலை கிடைப்பதே மிகப்பெரிய சவால். மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது இந்த பணிக்கு.


சரி வேலை கிடைத்த பிறகு இந்தப் பணியில் என்னென்ன சவால்கள் உள்ளது என்று வங்கிக் கிளைகளில் அடிக்கடி நடக்கும் சந்திப்பு (meeting) போல மிகச்சுருக்கமாக சொல்கிறேன். வங்கிப் பணியாளர்கள் போல பொறுமை இருப்பவர்கள் மட்டும் படிக்கவும்.


முதல் சவால்- புவியியல் என்றால் கிலோ என்ன விலை என்றும் மனிதவள மேலாண்மை எனக்கு ரெண்டு தட்டு(பிளேட்) கிடைக்குமா என்றும் கேட்பவர்கள் நமக்கு என்ன கிளை என்ற கடிதத்தை வழங்குவார்கள். அது நிச்சயமாக சென்னைக்கு மிக அருகில் கன்னியாகுமரியில் நிலம் என்று சொல்லப்படும் விளம்பரங்கள் போல இருக்கும். அதிலும் அதிகாரி நிலையில் சேரும் பெரும்பாலானோர் மொழி புரியாத மாநிலத்தில் சுகமான பணி செய்யும் வாய்ப்பினை பெறலாம்.


அடுத்த சவாலானது கிளைக்குள் நடக்கும் அரசியலை சமாளிப்பது. ஆளுக்கு ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருப்பார்கள் நம் கீழுள்ள குமாஸ்தாக்கள். நம் மேலாளர் நம்மை மிகச்சுலபமாக மானங்கெட திட்டிவிடுவார். நாமோ மேலாளரிடமும் திட்டு வாங்கி நம் கீழுள்ள குமாஸ்தாக்களின் இடியையும் தாங்கி மத்தளமாய் மேளம் இசைக்க வேண்டி வரும். நாக்கை அடக்கி மேலாளர் மனம் குளிர குமாஸ்தாக்கள் இருக்கை குளிர நாதஸ்வரம் அல்ல பீப்பீ வாசிக்க தெரிந்தால் சற்று பிழைக்கலாம்.


அடுத்த சவால் நம் நிறுவனத்தின் மூலாதாரமான வாடிக்கையாளர்கள். மகாத்மா காந்தி சொல்லியுள்ளது போல, வாடிக்கையாளர்கள் நம்மை நம்பி அல்ல நாம் தான் அவர்களை அண்டிப் பிழைக்க வேண்டும். இன்முகத்துடன் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தத் தெரிந்தால் இந்த சவாலை மிக எளிதாக கடந்து விடலாம்.


அடுத்த சவால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர இலக்கை அடைதல். நல்லவேளை நம் முன்னோர்கள் காலத்தை கம்மியாக பிரித்து வைத்துள்ளார்கள். இல்லையென்றால் இலக்கு இலக்கு என்று சொல்லி நம்மைப் பிரியோ பிரி என்று பிரித்து இருப்பார்கள் தலைமை அலுவலகத்துக்காரர்கள். இந்த சவாலை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. எப்படியும் அடையமுடியாத இலக்காகத்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.


அடுத்த சவால் விடுமுறை தினத்தில் விடுமுறையில் இருப்பது. இது என்னடா புதுசா இருக்கு வேலை நாளில் விடுமுறை எடுப்பது தானே கஷ்டம் விடுமுறை தினத்தில் விடுமுறை தானே நமக்கு என்று நினைத்தால் உங்கள் கனவில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மண் ஒரு லோடு அள்ளிப் போட்டுக் கொள்ளவும். அது எப்படி இப்படி சொல்லலாம் இந்த வேலை எவ்வளவு உயர்வானது விலைமதிப்பில்லாதது தெரியுமா என்று என்னை கேட்க நினைப்பவர்கள் கோலார் தங்க வயலில் மண்ணை அள்ளி தலையில் போட்டுக் கொள்ளவும்.


இந்த பணியில் சேர்வதற்கு முன்பு வரை நானும் சாதாரண மக்களைப் போல நினைத்துக் கொண்டிருந்தேன் சாயங்காலம் 3.30 மணி ஆகிவிட்டால் கதவினை இழுத்துப் பூட்டி விடுவார்கள் நாமும் வீட்டிற்கு சென்று விடலாம் என்று. பணியில் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. ஷட்டரை பூட்டி விடுவார்கள் ஆனால் பூட்டிய ஷட்டருக்குள் அமர்ந்து நம் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருப்பின் நீங்கள் 8.30 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு சென்று விடலாம்.


இதுபோக திருமணமாகாதவராக இருப்பின் அடிக்கடி நடக்கும் இடம் மாறுதல், திருமணமானவராக இருப்பின் துரத்தி அடிக்கும் இடமாறுதல் என்று வாழ்க்கையின் தத்துவமான மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையை புரியவைக்க ஒரு சவால்.


அடுத்த சவால் வாராக்கடன்.. இல்லை இல்லை வரவே வராத கடன்.. கொடுத்தது யார் என்று தெரியாது.. அவர் இடமாறுதலாகிச் சென்றிருப்பார்.. வாங்கியவரும் யார் என்று தெரியாது. அவர் இடத்தையே மாற்றிச் சென்றிருப்பார். இவர்கள் இருவருக்கும் இடையில் இப்பொழுது நம் விழிபிதுங்கும். ஆயினும் ஆடை கசங்காத ஒயிட் காலர் ஜாப் என்று பெருமை பீற்றிக் கொள்ளத் தெரிய வேண்டும்.


சரி நான் பெருமை பீற்றிக் கொண்டது போதும் என்று நினைக்கிறேன். பாவம் கேள்வி கேட்டவர் என்ன நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் நான் எழுதிய பதிலை படித்தபின் அவர் தலைதெறிக்க தூத்துக்குடி சுரேஷ் அகாடமியை விட்டோ அல்லது ரேஸ் போன்ற பயிற்சி மையங்களை விட்டோ இந்நேரம் ஓட்டம் எடுத்திருப்பார்.


சரி நகைச்சுவை போதும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேலை இல்லா திண்டாட்டமிக்க நம் நாட்டில் வங்கிப் பணியில் சேர்தல் என்பது ஒரு குடும்பத்தையே நிர்வகிக்க போதுமான அளவு ஊதியம் அளிக்கும் மற்றும் சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்து அளிக்கும் பணியாகும். இன்றைய சூழ்நிலையில் எந்தப் பணியில் இருப்பவரை கேட்டாலும் அந்தப் பணியின் நிறைகளை விட குறைகளேயே அதிகம் சொல்வர். ஆகையால் எந்த வேலையும் கடினமானது அல்ல. எல்லா வேலைகளிலும் ஒரு நிறை இருந்தால் ஒரு குறை இருக்கும். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா பிடிக்கலையா, தற்போதைய உங்களின் குடும்ப சூழ்நிலை என்ன என்பதை மட்டுமே பாருங்கள். அதன் பிறகு தானாகவே அந்த வேலை பிடித்துவிடும்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி..

சனி, 1 பிப்ரவரி, 2020

காணாமல் போன சக்கரகிரி தாலுகா

 Added : பிப் 18, 2017 


'சக்கரகிரி தாலுகா' இந்த பெயர் உடுமலை பகுதியை சேர்ந்த பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை; ஆனால், முந்தைய ஆவணங்களில், நமது பகுதி, இப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. தாலுகா பெயர் மாற்றம் எவ்வாறு வந்தது; எப்போது வந்தது என்பது குறித்த வரலாற்றை தேடிய ஆய்வு தீவிரமடைந்துள்ளது.உடுமலை என்ற பெயருக்கு, பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன; உடும்புகள் நிறைந்த பகுதி, இரு மலைகளுக்கு ஊடே இருந்த பகுதி என பெயருக்கு விளக்கங்கள் வரிசை கட்டுகின்றன.தாலுகாவாக இருந்து, வருவாய் கோட்டமாக தரம் உயர்ந்துள்ள உடுமலை முன்பு சக்கரகிரி தாலுகா எனவே ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.கொங்கு மண்டலத்தில், நல்லுாருக்கா நாடு, சக்கரகிரி தாலுகா என உடுமலை பகுதி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. தளி, மைவாடி உட்பட பாளையங்களின் ஆய்வில், இந்த தாலுகா பெயர் தெரிய வந்தது.இந்த ஆட்சியாளர்கள், பல்வேறு கோவில்களுக்கு அளித்த தானத்தில், சக்கரகிரி எனவே, இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இடம் பெற்ற பெயர்கள், காலப்போக்கில் மறைவது வழக்கம்.ஆனால், பெயரே காணாமல் போன விந்தை உடுமலைக்கு ஏற்பட்டது ஏன் என்பதற்கான தேடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு துவங்கியுள்ளது.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், உடுமலை பகுதி வரலாற்றை கண்டறிந்து, தொகுத்து வெளியிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட, தளி பாளையக்காரர் எத்தலப்பன், வரலாறு குறித்த ஆய்வுகளில், பல்வேறு தகவல்கள், கண்டறியப்பட்டுள்ளன.துாது வந்த ஆங்கிலேயே வீரனை எத்தலப்பர் துாக்கிலிட்ட இடமும், அங்குள்ள கல்லறை கல்வெட்டுமே வரலாற்றின் துவக்கமாக அமைந்துள்ளது.மேலும், திருமூர்த்தி அணை கட்டப்படும் முன், தளி பாளையக்காரர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து வெளியேறும் தண்ணீரை தடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்த தடுப்பணைகள் கட்டியுள்ளனர். இதற்கான பாறை கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளது.முதன்முதலாக, இப்பகுதியில், முதல் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை தளியிலேயே துவக்கப்பட்டுள்ளன.கோவிலுக்கு தானம் அளிக்கப்பட்ட ஆவணங்களில், சக்கரகிரி தாலுகா என தெரிவிக்கப்பட்டுள்ளதே, இந்த வரலாற்று தேடலுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள, வரலாற்று ஆய்வு நடுவத்தினர். இப்பகுதியின் முழு வரலாற்றையும் வெளிக்கொணர்வார்கள் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -நமது நிருபர்-தினமலர்