கேள்வி : உங்கள் மனதை கவர்ந்த ஒன்றை கூறமுடியுமா?
என் பதில் :
நிறைய பேர் இந்த படத்தை கடந்து வந்திருப்பீர்கள் என்று நெனைக்கிறேன்…
இந்த புகை படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரிகிறது..?
ஆனால் எனக்கு அந்த மிதிவண்டியை ஓட்டும் ஆண்மகனின் வியர்வை படிந்த சட்டை தான் தெரிகிறது..
இன்று நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு பேர் மோட்டார் சைக்கிள், கார்,ஏரோபிளேன் ,நகை, வீடு, அமெரிக்கா,ஐரோப்பா குடியுரிமை வேணும் என்று கேட்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன், காதால் கேட்டு இருக்கேன்.அந்த பெண்களை விட இவள் உயர்ந்தவளா..?உண்மையானவளா..?இல்லையா?என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.ஆனால் ஒரு ஒரு விடயம் மட்டும் சொல்கிறேன்.. அம்பானி,பில் கேட்ஸ்க்கு மகளாய் பிறந்தவளை விட இவள் பாக்கியசாலி..
இயந்திரம் இழுத்து செல்லுகையில் இருக்கும் காதல் உயிரோட்டத்தை விட,இவர்கள் செல்லும் மிதிவண்டியில்,போகும் காதல் பயணம் உயிரோட்டமானது..
அவன் வேர்த்து இருக்கிறான், அவளுக்கு வியர்க்காத படி.
அவன் உடலில் இருந்து வேர்வை நாற்றம் வர போகிறது…ஆனால் அவள் உடலில் வாசனை குறையவில்லை.
அவனுடைய வேர்வை நாற்றத்தை பார்த்து முகம் சுழிக்கமாட்டாள், ஏனென்றால் அவளுக்காக அவன் பட்டு இருக்கும் பாட்டை பார்த்து வந்த வேர்வை அவளுக்கு நறுமணம் தான்…
கடைசியா அவன் அவளை இறக்கி விடும் தருவாயில் அவள் அவனுக்கு கொடுக்க போகும் முத்தம் இந்த உலகத்தில் தன்னுடைய காதலிக்காக தாஜ்மஹால் கட்டினானே அந்த ஷாஜகான், அவனை காட்டிலும் இவன் வாங்க போகும் அந்த முத்தம் 1000 தாஜ்மஹாலை விட சிறந்தது..
காதலி கிடைப்பது வரமல்ல ஆனாலும் உன் ஏழ்மையிலும் இன்பமாய் வாழத் தெரிந்தவளே காதலியாக கிடைப்பது வரம்..
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக