பெரியகடைவீதி-ஒப்பணக்காரவீதி
ஜவுளிக்கடைகளில் ஜனங்களின் நெரிசலில் குடும்பத்துக்கு புத்தாடைகள், இனிப்புகள் வாங்க கூடிய மக்களின் உள்ளம் நிரம்பிய பாசம் . . .
நாள்முழுதும் அன்ன ஆகாரம் அருந்தாமல் கால்நோக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் பணியாளர்களின் உபசரிப்பு...
கூட்டத்தில் கையேந்தி யாசகம் கேட்கும் ஏழையின் விழிகள்,
காகித எண் பதித்த ரூபாய் நோட்டுகள் கைவசம் இல்லாமல் பண்டிகை கனவுகளை தியாகம் செய்த சக ஜீவன்கள், லாபம் இவிக்கும் பெரிய நிறுவன முதலாலிகள் சிலருக்கு அருகே சிறு வியாபாரிகளின் அவள நிலை...
தேர்ந்தெடுத்த ஆடை மானம் மறைக்க தான் என உணர்ந்தவன் மனிதன்- ஆடம்பரம் செய்ய ஒஸ்தி வீண் கவுரவ செலவு செய்பவன் இயல்புகளுக்கு பொருந்தாதவன் ஆகிறான்..
காவல் காக்கும் காவியுடை காவலனுக்கு புத்தாடை அணிய காலம் ஏது?
போர்க்கால தரைவழி வான்வழி தாக்குதல் போல விழாக்கால பட்டாசு சப்தத்தில் கடைவீதியில் சைக்கிளில் உலா வரும் இவனின்...
மாநகரத்துச் சாலைகளில் என் பயணங்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக