செவ்வாய், 27 அக்டோபர், 2020

அன்பு உறவுகளே... சக உறவினர் ஒருவர் சிவகுமார் சார் குறித்து

அன்பு உறவுகளே...

சக உறவினர் ஒருவர்

சிவகுமார் சார் குறித்து

எழுதிய பதிவு என்னை

அதிர்வுக்குள்ளாக்கியது

நாங்கள் வேறு ஒரு

அமைப்பை நடத்தி

வந்தாலும் மனப்பூர்வமான  இதய

சுத்தியோடு சொல்கிறேன் நம் சமுதாய உணர்வோடு

வலம் வரும் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமையும் அக்கறையும் கொண்ட

மிகச் சில தலைவர்களில் திரு.

சிவகுமார் சார் அவர்களும் உண்டு.

KVE குழுமத்தில் நம்

சமுதாய மக்களின் நலனுக்காக தானே

ஒவ்வொரு விடயத்தையும் தேடித்

தேடி எழுதி வருகிறார்.

நூலகர் வட்டம் அகழாய்வு பாரம்பரிய

கோவில்கள் நம்மவர்களின் திருமண

விழாக்கள் குழுவினரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம் இனத்தின் பூர்விக

வரலாறு பூர்விக பாடல்கள் சடங்கு

சம்பிரதாயங்கள் இவையெல்லாம் சமுதாய விஷயங்கள்

தானே? இது போக

தன்னம்பிக்கை தரும்

செய்திகள் அன்றாடம்

வாழ்வில் எதிர்கொள்ளும் கடன்

முதலீடு காப்பீடு மற்றும்

வீட்டுக்கடன் போன்ற

பதிவுகள் நம் சமுதாய

மக்களுக்கு பயன்படாதா?

நண்பரே எது உங்களுக்கு வேண்டாம்

என்று எனக்கு புரியவில்லை.

எல்லாம் சரியாவே

இருக்கின்றது.

சமுதாய செய்திகளோடு

நாட்டு நடப்புகளையும்

விவாதித்து செய்திகள்

அளிப்பது தவறா?

வேண்டாம் தோழரே

கண்ணியம் மிக்க

ஒருவரை காயப்படுத்த

வேண்டாம்.

திரு சிவகுமார் அவர்களின் ஆத்மார்த்தமான பணியில் நம்மையும்

இணைத்துக் கொண்டு

ஒற்றுமையுடன் ‌நம்

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக

மட்டுமே பாடுபட

உறுதி ஏற்போம்



அன்புடன்

சௌந்தரபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக