கேள்வி : புதிய பொருளாதாரத்தில் (New Economy) எந்த மாதிரி வேலைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் ?
என் பதில் :.
தற்போது ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகின்றன மார்ச் முதல் இந்த வருடம் முடியும் வரை
நாம் வரலாறு காணாத பிரச்சனைகள் உயிர் சேதங்கள் மன சேதங்கள் ஒரு பக்கம். ஆனால் தற்கொலை சதவிகிதங்கள் மிக அதிகம் ஆகி உள்ளன. இதில் இளம் பருவத்தினர் காதல் தோல்வி, வேலை இல்லை, பரீட்சை இது போல ஒரு பக்கம் என்றால். நடுத்தர மற்றும் முதியோர்களும் வேலை போவது, வேலை இல்லாமல் இருப்பது இதனால் தற்கொலை செய்து கொண்ட பங்கு சந்தை அதிகாரிகள் கூட மிக அதிகம்.
அப்படி இருக்கையில் எந்த செக்டர்ஸ் அதாவது துறைகள் ஓரளவு இருக்கின்றன அதை குறித்து நத்தை வேகத்தில் முன்னேற 2021 இல் எங்கெங்கே வாய்ப்பு பிறகு 2022 பிறகாவது ஓரளவு பழைய மாதிரி மூச்சு விடுமா பொருளாதாரம்...எல்லாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்
தினம் தினம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்கள் - அதாவது FMCG தினம் consumer என்று சொல்வோம் அது ஓரளவு பிழைத்த நிலையில் உள்ளது. காரணம் காபி டீ பல் பொடி பேஸ்ட் இல்லாமல் இல்லை. ஷாம்பு சோப்பு சீப்பு எப்படியாது இவை உபயோகித்து ஆக வேண்டும். இதில் சரிந்த சில தேயிலை நிறுவனங்கள் கூட லாபம் ஈட்டின.
அத்தனை விதமான மருந்து சம்மந்தப்பட்ட பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோ டெக் இனிமேல் இன்னும் 10 வருடங்களுக்கு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்கு சான்று சமீபத்திய ரோசரி பயோ டெக் IPO கேள்வியில் கூட வாங்குங்கள் என்றே நான் அதற்கு பதில் அளித்தேன். அது அதிக லாபங்கள் கொடுத்தது
ஆன்லைன் இல் நாட்டியமே எடுக்கின்றனர். அதாவது இணைய வழி கல்வியும் மீடியா மூலம் சம்பாதிப்பதும் லாபம் தருவதோ இல்லையோ வேறு வழி இல்லை என்பதால் இந்த தொழில் இன்னும் அதிக முன்னேற்றம் கண்டு உள்ளது. நினைத்து பாருங்கள் நாட்டியம் போன்ற கல்வி ஆன்லைன் இல் அல்லது யோக பயிற்சிகள் கூட இப்படி தான் இப்போதெலாம். இன்னும் இந்த துறை வளரும்
ஆர்கானிக் மற்றும் ரசாயனம் இல்லாத எந்த சேவையும் மக்கள் இன்னும் இன்னும் அதிகம் விரும்புகின்றனர். காரணம் கொரோன காரணமாக ஏற்பட்ட அச்சம். ஆகையால் ரசாயனம் இல்லாத உழவு செய்யும் எல்லாமும் அதிகம் லாபம் ஈட்டி உள்ளது
மக்கள் வீட்டில் இருந்து செய்யப்படும் பொருட்களை, வீட்டு அலங்கார பொருட்கள், வீட்டில் இன்னும் நல்லது தரும் இயற்கை பொருட்களை தேடி தேடி வாங்குகின்றனர். காரணம் வீட்டிலேயே இருப்பது ஒன்று. இன்னொன்று இப்படி எல்லாம் உள்ளதே தவற விட்டோமே என்ற எண்ணம். செராமிக் பானைகள், வீட்டு அலங்காரம், கருத்துரி குளோபல் போல இயற்கை பூக்களை வைத்து செய்யும் நறுமணம் இப்படி பல துறைகளில் மக்கள் தேடி வாங்குகின்றனர்
கோதுமை மற்றும் அரிசி, வீட்டு சமையலறை பொருட்கள் எல்லாமே கொரோனா நேரத்தில் நல்ல லாபம் ஈட்டி உள்ளது . உதாரணம் butterfly appliances போல. ஏனென்றால் அதே காரணம். வெளியில் செல்வதில்லை. வீட்டில் இன்னும் இன்னும் தேவைகள் அதிகம். இதே காரணத்தில் தான் AC துறை அதிக லாபம் பெற்று உள்ளது
மேலும் மீடியா சம்மந்தமான துறையில் வாய்ப்புகள் கூடும். இது நியூஸ் போன்ற மீடியா அல்லது இசை, நாட்டியம் போல கலை ஏனெனில் வெளியில் போகாமல் ஏதோ ஒரு மீடியா கேட்டு கொண்டே இருப்பதால். ஆகையால் இந்த துறையில் வேலை வாய்ப்புகள் ஏறும்
மற்றபடி இதற்கு அடுத்தது உலக அரங்கில் சண்டைகள் வர வாய்ப்பு மிக அதிகம். ஆகையால் Defence இல் எல்லா வகையிலும் வேலை / வாங்கும் உபகரணங்கள் அப்படி வாய்ப்புகள் உண்டு.
அடுத்தது pharma புதிய பரிணாமங்களை தொடும். வேலை வாய்ப்பு pharma மற்றும் ஆயுள் காப்பீடு சுகாதார காப்பீடு மருத்துவ காப்பீடு துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் எதிர்பார்க்கிறேன்.
யோகா மற்றும் ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போல alternative துறையும் கொரோன பிறகு இன்னும் அதிகம் ஆகும் இடங்கள். ரெய்கி பிரானிக், அக்குபஞ்சர் இன்னும் இவை எல்லாம் படித்தவர்களுக்கு சம்பளம் அதிகம் தான் ஆகும்
வாகன துறை, ஐடி துறை, விவசாயம், ட்ராவல், சிமெண்ட், வீடு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அதிக லாபம் ஈட்டும் துறைகள் எல்லாமே 2021 மிட் மேலே தான் படுத்த நிலையில் இருந்து நிமிர வாய்ப்பு என்பது என் கணிப்பு
மெண்டல் ஹெல்த் எனப்படும் மன நோய் உளவியல் துறைகளிலும் வேலைகள் அதிகமான அளவில் இந்த கோவிட் காலத்திற்கு பிறகு உண்டு என்பது என் கணிப்பு
நன்றி :.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக