கேள்வி : உங்கள் எதிரியின் வெகுளித்தனத்தை எப்பொழுதாவது உணர்ந்தது உண்டா?
என் பதில் :. என் மதிப்புமிக்க அதிக வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பெரும்பாலும் பணிபுரிவதால் ..இத்தகைய கேள்விகளை பேசும் பகிர்ந்த கொண்ட சில நிகழ்வுகள் ..என் மதிப்பு மிக்க onsite வாடிக்கையாளர் நித்ய கோபாலன் அவர்களின் அவர்குஏற்பட்ட நிகழ்வுகள் ..
கார்ப்பரேட் அலுவலகத்தில் நாம் வேலை செய்யும் போது நட்பா? எதிரியா? மறைமுக துரோகியா? என்று கண்டுபிடிப்பது கடினம் ஆகி விடும் அதாவது சில நாட்கள், 1 மாதம் கூட ஆகும் புது ப்ரொஜெக்ட் என்றால்.
வெகுளி எனும் வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு. அதிக கோபம் ஒண்ணு மற்றும் அப்பாவித்தனம்
அதிக கோபம் உள்ள மேலதிகாரிகள் பார்த்திருக்கிறேன். அந்த கோபத்தோடு அழுக்காறு, தற்பெருமை இப்படி பல சேர்ந்து வரும். ஒரு பேக்கேஜ் மாதிரி
கோபம் கொள்ளும் போது கொஞ்ச நாளில் அவர்களே விழுவது மாட்டிக்கொள்வது உறுதி.
வெறுப்பினால் ஏதாவது தேவை இல்லாத நடவடிக்கை எடுப்பார்கள்.
நான் மிக கடினமான ப்ரொஜக்ட்டில் வேலை செய்த போ, எனக்கு கிளைன்ட் நன்றாக வேலை செய்தாய் போன்ற மின் அஞ்சல் அனுப்புவாங்க. இதனை பார்த்து ஆத்திரம் உற்ற மேலதிகாரி வேறு யாரோ இன்னோர் கிளைண்ட் கிட்ட தானே கேட்டு..விஷயம் எப்படியோ மிக உயர் அதிகாரிக்கு தெரிய வந்து அசிங்கமா போய் விட்டது அவங்களுக்கு.
மேலும் நான் அழகான ஸ்கிர்ட் (லாங் முழங்கால் தாண்டி தான் இருக்கும் ) அதனை அணிந்து சென்றேன். அதனை பார்த்து அவர்கள் அசூயை பொறாமை பட்டு திரும்பவும் கோபப்பட்டதை மொத்த குழுவும் கவனித்து விட்டார்கள்.
பசங்கள் இது போன்ற விஷயத்தில் ஷார்ப் என்பதால் "இவர்கள் ஏன் சம்மந்தம் இல்லாமல் மின் அஞ்சல் அனுப்புகிறார் ட்ரெஸ் code பற்றி. நீங்கள் சரியாக தானே அணிந்து உள்ளீர்கள் ..?இதனால் இவர்கள் பொறாமை தான் வெட்ட வெளிச்சம் ஆனது" என்றனர் . இது போன்ற கோபம் கொண்டால் அவர்களே தப்பு செய்து மாட்டி கொள்வார்கள்.
அடுத்தது எதிரி இடத்தில் அப்பாவித்தனம்...ஹ்ம்ம்ம் இது யோசிக்க வேண்டிய விஷயம்,
ஆம் ஞாபகம் வந்தது. அது மிக பெரிய ப்ரொஜெக்ட்..ஆனால் என் பாஸ் அவர்கள் திடீர்னு கொஞ்சம் பிடிக்காமல் நடந்து கொள்ள தொடங்கினார் என்னிடம்.
ஏனெனில் எங்க இருவருக்கு அடுத்த லெவல் VP அவருக்கு என்னை பிடிக்கும். நல்லா வேலை செய்வேன்...presales என்பதால். மற்றும் கிரெடிட் கார்டு வேலைகளில் ஒவ்வோர் ஜாப் எடுத்து கொள்ளும் நேரத்தை நான் குறைத்து கொடுத்துவிட்டேன்.
மற்றும் என் குழுவுக்கு அதற்கு முன் இருந்த பாஸ் micromanage செய்ததால் குழு மிகவும் நொடிந்த நிலைமையில் இருந்தார்கள் போலும். நான் வந்த 2 மாதத்தில் குழு சந்தோஷத்தோடு காணப்பட்டதையும் அவர் அறிவர். ஏனனில் நான் இல்லாத நேரத்தில் ஒவ்வொருத்தரிடம் புது பாஸ் எப்படி என்ற feedback வாங்கி வைத்து இருந்தார்.
இப்போது..இந்த எங்கள் நடு நிலைமையில் உள்ளவர்க்கு இதெல்லாம் பிரச்சனை. அவர் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவும் நானே...வேற வேலை பார்க்கும் முடிவில் resignation கொடுத்து விட்டேன்.
வேற வழி இல்லை. இவர் என் பாஸ் அவர்களும் சென்னை region ஹெட். ஆனால் இப்படி நடந்து கொள்கிறார்.
இஷ்டத்துக்கு மின் அஞ்சல் போடுகிறார் HR எல்லோருக்கும் "இவள் இப்போது வந்தாள் இப்போது கிளம்பினாள்" போல அதெல்லாம் பார்த்து VP அவர்களுக்கும் கிண்டல்! HR எல்லோருக்கும் தெரியும் யார் மீது பிரச்சனை என்பதும்....என்னை இருக்க சொன்னனாலும், நான் வேற முடிவு செய்து விட்டு பிறகு வேற நாட்டுக்கு போய் விட்டேன்....!
அந்த 3 மாசம் என் immediate boss செய்த அனைத்துமே அவருடைய அதிகாரிக்கு, எனக்கு மற்றும் எங்கள் region HR எல்லோருக்குமே கொஞ்சம் வெகுளியாக தான் இருந்தது....
"என்னடா இந்த மனுஷர் இப்படி நடந்து கொள்கிறாரே?" என்றும்....இடையில் என் தந்தையும் மறைந்து போக..நானும் பணியை முடித்து கொடுத்துவிட்டு கிளம்ப...அந்த மனுஷருக்கு மன சாட்சி உருத்தி இருக்கலாம்..!!.
ஆனால் கார்ப்பரேட் வாழ்க்கையில் எல்லா மாதிரி முதலாளிகள் நமக்கு வருவாங்க. நம்முடைய அப்போதைய அதிர்ஷ்டம் தான் எல்லாமே.
நன்றி !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக