கேள்வி : சும்மா நச்சுனு ...நாலு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம் ...
என் பதில் :..
45 வயசுக்கு மேல் ஜீன்ஸ் போட்டு நடமாடினால் கிழத்துக்கு பார் சோக்கு என்று நக்கல் நய்யாண்டி செய்யும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு ஸ்பூன் சர்க்கரை போடும்போது - பார்த்து சுகர் வந்திற போவுது என்பார்கள். வாக்கிங் போக இறங்கினால் - சுகர் வந்திருச்சா என்பார்கள்.
எந்த நேரத்தில் தூங்கி எழுந்தாலும் என்ன இந்த நேரத்தில் தூங்குறே என்பார்கள்?
தூக்கம் வருவது போல இருக்கிறதே என்று சொன்னால் ஒரு நல்ல டாக்டரை பார்த்து செக் பண்ணிக்கோ என்பார்கள்.
அது அவர்களது பார்வை.
வாழ்வது ஒருமுறை. அதில் நம் பங்களிப்பு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்து முடிக்க வேண்டும்.
இனிமேல் படிச்சி என்ன செய்ய போறே என்பதெல்லாம் உங்களை காணும்போது மட்டும் பேசப்போகிற வார்த்தைகள். நீங்கள் அந்தப்பக்கம் போய்விட்டால் அதை மறந்துவிட்டு இந்த பக்கம் போய்விடுவார்கள்
இலக்கை அடைந்து தான் மரணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இலக்கை நோக்கிய பயணத்தில் மரணித்தால் வாழ்ந்த பலனை அடைவோம்.
சோம்பி சுருண்டு கிடப்பதை விட நாலு அடி நகர்ந்து செல்வது மேல்..
நன்றி :.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக