சனி, 14 செப்டம்பர், 2019

இன்று பொறியாளர் தினம் ,


இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல். அத்தகைய சிறப்பு பெற்ற பொறியாளர்களுக்கான "பொறியாளர்கள் தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.
கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.
இவரின் பெருமையைப் போற்றும் விதமாக, இந்திய அரசு 1955 ஆம் ஆண்டு, இந்திய நாட்டின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்கி, அவரைக் கௌரவித்தது. அவரின் பிறந்தநாளான செப்டம்பர் 15 தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் முதன்மைப் பொறியாளரை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள இந்தத் தினம், பொறியியல் துறையின் மகத்துவத்தையும் பறைசாற்றுகிறது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. 
அப்படிப்பட்ட நம்ம மாப்பிள்ளை  மற்றும் தம்பிகளுக்கும்  இனிய பொறியாளர் தின வாழ்த்துகள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக