உடுமலை வரலாறு is with கார்த்திக் நாயக்கர் in Udumalaippettai.
வரலாற்றுக்கு ஒரு வரலாற்றுப்பரிசு..
உடுமலையின் கல்வியாளர், கல்வி வள்ளல், தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விக் கண் திறந்திட்ட காமராசரின் மருவுருவாய் வாழ்ந்திட்ட வள்ளல் கெங்குசாமி நாயுடுவை வாழும்போதிருந்தே ஆவணப்படுத்திட்ட எழுத்தாளர்,
தளிபாளையப்பட்டு ராஜ்யத்தின் குமாரர் மண்ணின் மைந்தர் ஜிலேபநாயக்கன்பாளையம் அய்யா குமாரராசாவிற்கு
இன்று உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தால் வெளியிடப்பட்ட தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூலை இன்று பரிசளிக்கப்பட்டது.
இத்துடன் அய்யா அவர்கள் விரும்பிக்கேட்ட ஆய்வு நடுவத்தால் வெளியிடப்பட்ட தளி எத்தலப்பரின் திருமூர்த்தி மலை மண்ணு பாடலின் குறுந்தகடையும் விரும்பிப் பெற்றுக் கொண்டார்.
உடுமலைப்பேட்டை வரலாற்றின் தேவையையும் திருமூர்த்தி மலை மண்ணின் மகத்துவத்தையும், கடந்த காலங்களில் உடுமலையைச் சுற்றி நடந்த சம்பவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தலைமைச் செயலகத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தையும், தி.மு.க தலைவர் கலைஞருடான தம் அனுபவத்தையும்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தலைமை அலுவலகத்தில் பணியாற்றியபோது திரு.ஆற்காடு வீராசாமியுடன் பணியாற்றிய அனுபவத்தையும்,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் அலுவலகத்தில் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களையும் தம்முடன் பகிர்ந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக