எதிர்வரும் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை
உடுமலை உழவர் சந்தை எதிர் அருகில் உள்ள
கிளை எண் 2 நூலகத்தில்
சாகித்ய அகாடமி விருது பெற்ற
‘சாதனை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்பாளுமை”
எனும் தலைப்பில் கருத்தரங்கம் பிற்பகல் 4. -6 மணி வரை நடைபெற உள்ளது.
இதற்கு நூலக வாசகர் வட்டத்தின்
தலைவர் து.இளமுருகு தலைமை வகிக்கிறார்.
நூலக வாசகர் வட்டத்தின் ஆலோசகர் திரு.எம்.பி.அய்யப்பன்,
திரு.வி.கே.சிவகுமார்,
திரு.ராமதாஸ்,
திரு.சிவகுமார் மற்றும்
நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
‘சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம்” நூல் குறித்து முனைவர் ஜெ.மஞ்சுளாதேவி அவர்களும்,
‘எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்கள்” எனும் தலைப்பில் பத்திரிகையாளர் கணியூர் பருக் அவர்களும்
‘எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து” எனும் தலைப்பில் முனைவர் மதியழகன் அவர்களும்,
‘எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு”எனும் தலைப்பில் முனைவர் ஜெயசிங் அவர்களும்,
‘எஸ்.ராமகிருஷ்ணனின் கவிதை”எனும் தலைப்பில் கவிஞர் அப்துல் சமது அவர்களும்,
கருத்துரை வழங்க உள்ளனர்.
கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்வின் இறுதியாக நூலகர் திரு.வீ.கணேசன் அவர்கள் நன்றி உரை கூறுகிறார்.
இந்த நிகழ்வை நூலக வாசகர் வட்டத்தோடு தமிழர் கலை இலக்கியப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
உடுமலையின் இலக்கிய ஆர்வலர்கள் , வாசிப்பை நேசிக்கும் அன்புள்ளங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக