ஞாயிறு, 16 டிசம்பர், 2018

உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்படைப்பாளுமை கருத்தரங்கம் நடந்தது.

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்  படைப்பாளுமை க கருத்தரங்கம்  கிளை நூலகம் எண் இரண்டில் நடந்தது. நூலக வாசகர் வட்டம் உடுமலை தமிழர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய கருத்தரங்கிங்கில்  உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பொருப்பாளர் அருட்செல்வன் வரவேற்றார்.

நூலக வாசகர் வட்ட தலைவர் இ.இளமுருகு தலைமை வகித்தார்.
வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி அய்யப்பன்
துணைத்தலைவர் வி.கே சிவக்குமார்
பொருளாளர் சிவக்குமார்
ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

முனைவர் மஞ்சுளாதேவி சஞ்சாரம் நூல் குறித்து மதிப்புரை வழங்கினார்.

எஸ் இராம கிருஷ்ணன் நாவல்கள்பற்றி கணியூர்பருக்
.
இராமகிருஷ்ணன் எழுத்துஎன்ற தலைப்பில்அரசு கலைக்கல்லூரி வரலாற்றுதுறை உதவி பேராசிரியர்.முனைவர் மதியழகன்.

இராம கிருஷ்ணன் பேச்சு என்ற தலைப்பில்ஊட்டி அரசு கலைக்கல்லூரிதமிழ்த்துறை உதவிபேராசிரியமுனைவர் ஜெயசிங்

இராமகிருஷ்ணணன் இலக்கியம் என்ற தலைப்பில் அப்துல் சமது

ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கம் நடத்தினர்.
எழுத்தாளர் சீனிமோகன் பேராசிரியர் கண்டிமுத்துஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக நூலகர் கணேசன் நன்றி கூறினார்.

கருத்தரங்க ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன்செல்வராணி
அருள்மொழிமற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள்தமிழர் கலை இலக்கியப் பேரவையினர்செய்திருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக