ஞாயிறு, 8 ஜூலை, 2018


எதிர்காலம் ...அருமையான தலைப்பை கம்பள விருட்சம் கார்த்தி மாப்பிளை கொடுத்தது மிக்க மகிழ்ச்சி ....

எதிர்கால கம்பள விருட்சம் சமுதாயமாக .....  2027
‘இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை மாறி – நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, உடைய நல்ல இளைஞர்கள் நம் கம்பள சமுதாயத்திற்கு  தேவை. இதற்குச் சந்தர்ப்பங்கள் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இளைய சமுதாயம், எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைய சமுதாயம் – நம் கம்பள சமுதாயத்திற்கு  ஓர் அரும் பெரும் செல்வமாகும்.

எழ்ச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதுதான் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பணியாக இருக்கும் 

1 . கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும்,சமூக – பொருளாதார இடைவெளி குறைந்த கம்பள விருட்சம் சமுதாயமாக  மாற்ற வேண்டும்.

2 . சுத்தமான தண்ணீரும், அனைவருக்கும் தேவையான எரிசக்தியும் – எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும்  கம்பள விருட்சம்  சமுதாயமாக மாற்ற வேண்டும்.

3. விவசாயம், தொழில்கள், சேவைத்துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் கம்பள விருட்சம் சமுதாயமாக மாற்ற வேண்டும்.

4. சமூக பொருளாதார வேறுபாடுகளை மீறி – பண்பாடு நிறைந்த ஒரு தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் கம்பள விருட்சம் சமுதாயமாக    மாற்ற வேண்டும்.

5. வேறுபாடு இல்லாமல், தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய கம்பள விருட்சம் சமுதாயமாக   மாற்ற வேண்டும்.

6. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு,கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும் குழைந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதயத்தில் இருக்கும் யாரும், ‘நாம் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டோம்’ என்ற எண்ணம் இல்லாதகம்பள விருட்சம் சமுதாயமாக   மாற்ற வேண்டும்.

7. ஓர் இனிமையான வளமான பாதுகாப்பு மிகுந்த அமைதியான சுகாதாரமான வளமிக்க வளர்ச்சி பாதையை நோக்கிப் பீடு நடை போடக் கூடிய கம்பள விருட்சம் சமுதாயமாக    மாற்ற வேண்டும்.

கம்பள விருட்சம் குழுமம் ....
என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ...9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக