திருமணத்திற்கு பிறகு ஆண்கள் மிக மகிழ்ச்சியானவர்களாகி விடுகிறார்கள். காரணம், அவர்களுக்கு ஒரு சமையல்காரி கிடைத்து விடுகிறாள். ஒரு சலவைத் தொழிலாளி கிடைத்து விடுகிறாள். ஒரு செவிலி கிடைத்து விடுகிறாள். ஒரு துப்புரவுத் தொழிலாளி கிடைத்துவிடுகிறாள். குடும்ப நிறுவனத்திற்கான ஒரு ஊதியமற்ற மனேஜர், அக்கவுண்டன்ட் கிடைத்து விடுகிறாள். இவை அனைத்திற்கும் மேலாக "கண்ணியமான" ஒரு தாசி கிடைத்து விடுகிறாள்.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் மகா நடிகைகளாகி விடுகிறார்கள். அவர்கள் தாங்கள்தான் உலகிலேயே மகிழ்ச்சியானவர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவது மட்டுமல்ல, அப்படியே நம்பி நடித்தபடியே வாழ்ந்து முடிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக