சர்வேதேச புலிகள் தினம் ..ஷியாம் சுதிர் ..
புலிகள் அரிதான விலங்குகளின் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட நிலையில் நம் நாட்டின் தேசிய விலங்கான புலியை பாதுகாப்போம் என்ற சூளுரையுடன் சர்வதேச புலிகள் தினத்தை நினைவூட்டும்..
ஜிம் கார்பெட்டின் ''ருத்ரப்பிரயாகையில் ஆட்கொல்லி சிறுத்தை'' (காலச்சுவடு பதிப்பகம்) புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறந்த அட்வென்சர் படம் பார்ப்பது போல உள்ளது. இதற்கு இணையாக நான் பார்த்த ஹாலிவுட் திரைப்படம் ''The Ghost and the Darkness''. சிங்க வேட்டை குறித்த படம். இந்த புத்தகத்தை நண்பர்கள் தவறவிடாதீர்கள் !
புலிகள் அரிதான விலங்குகளின் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட நிலையில் நம் நாட்டின் தேசிய விலங்கான புலியை பாதுகாப்போம் என்ற சூளுரையுடன் சர்வதேச புலிகள் தினத்தை நினைவூட்டும்..
ஜிம் கார்பெட்டின் ''ருத்ரப்பிரயாகையில் ஆட்கொல்லி சிறுத்தை'' (காலச்சுவடு பதிப்பகம்) புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறந்த அட்வென்சர் படம் பார்ப்பது போல உள்ளது. இதற்கு இணையாக நான் பார்த்த ஹாலிவுட் திரைப்படம் ''The Ghost and the Darkness''. சிங்க வேட்டை குறித்த படம். இந்த புத்தகத்தை நண்பர்கள் தவறவிடாதீர்கள் !
ஜிம் கார்பெட்டின் ‘ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை’ நூல் வாசித்தேன். இது இரண்டாம் முறை.
ஜிம் கார்பெட் ஒரு பிரிட்டிஷ் வேட்டைக்காரர். இந்தியாவில் பிறந்தவர். கேதார்நாத் எனும் இந்தியப் பிரதேசத்தை பல வருடங்களாக கதிகலங்க வைத்திருந்த, முடக்கிப்போட்டிருந்த ஓர் ஆட்கொல்லிச் சிறுத்தையை அவர் வேட்டையாடப் போன அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல்.
வேட்டைக்காரர்களுக்கே இருக்க வேண்டிய அசாதாரணமான பொறுமையோடுதான் இந்த நூலை வாசிக்க வேண்டியிருக்கிறது. ஆம். சிறுத்தை ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாகவும் தற்செயல்களாலும் தப்பிச் செல்வதை வாசிக்கும் போது நமக்கு எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாகிறது. இதுவே ஒரு சினிமாவாக இருந்தால் அது ஐந்து நிமிடங்களில் பரபரப்பாக காட்சிப்படுத்துல்களுடன் நாயகனின் சாகசங்களின் மூலமாகவும் அது கொல்லப்பட்டிருக்கும். ஆனால் யதார்த்தம் என்பது வேறல்லவா? காட்சி ஊடகங்களின் பரபரப்பு நம் ஆதாரமான மனஅமைப்பை மெல்ல மாற்றிக் கொண்டு வருகின்றன என்று தோன்றுகிறது.
படைப்புகளில் மனிதன்தான் உயர்ந்தவன், சிந்திக்கத்தெரிந்தவன் என்கிற தற்பெருமை நம்மிடம் உண்டு. ஏனெனில் அது நம்மால்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு சிறுத்தை மனிதனை விட மேலாக எத்தனை மதியூகமாக சிந்தித்து செயல்படுகிறது என்பதை இந்த நூலில் விவரிக்கப்படும் பல சம்பவங்களின் வழியாக அறியும் போது பிரமிப்பாகவே இருக்கிறது. இதர உயிரினங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது ஒருதுளி கூட இல்லை என்பதை நிரூபிக்கிறது.
ஒருவகையில் இயற்கை ஆதாரங்களின் அழிவிற்கும் மனிதப் பேராசைக்கும் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நெடுங்காலப் போரின் ஒரு வரலாற்றுத் துளி என இந்த நூலைச் சொல்லலாம். எத்தனையோ காரணங்களுக்காக இயற்கையின் வளங்கள், உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. மனிதனின் இருப்பிற்காகவும். பாதுகாப்பிற்காகவும்.
இத்தனை சக்தி வாய்ந்த மனிதனை, ஒரேயொரு சிறுத்தை பல காலமாக பயமுறுத்திக் கொண்டிருந்தது. . ‘பில்டிங் ஸ்டிராங்கு, ஃபேஸ்மெண்ட் வீக்கு’ என்பது போல மனிதகுல அகங்காரத்தின் முன் ஒரு சவாலாக.
இயற்கையை விட மனிதன் நிச்சயம் பெரியவன் அல்ல. அதனுடைய ஒரு துளி அங்கம்தான் அவன்.
தஞ்சாவூர் கவிராயரின் சரளமான மொழிபெயர்ப்பு இந்த நூலின் வாசிப்பனுவத்தை இனிமையாக்குகிறது. (காலச்சுவடு பதிப்பகம்)
நேரம் கிடைக்கும்போது நீங்களும் வசித்துப்பாருங்கள் ..வாசிப்பை நேசிப்போம் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக