செவ்வாய், 3 ஜூலை, 2018

எனக்கு நாம் ஒரு சின்ன முகநூல் வருடம் ..(2008)..மற்றும் வாட்சப் (2015)வட்டத்தில் இருப்பது போல அடிக்கடி தோன்றும்.. இதில் உள்ள அனுபவங்கள்..
இந்த வட்டத்தில், முதன் முதலில் ஆந்தை ரிபோர்ட்டர் Aanthai Kumar ..என் குரு நாதர் .ஷாஜி என்று அழைக்கும் ஷாஜஹான் சார் ..புதியவன் பக்கம்  எழுத்துக்களை எடுத்து 
இணைய தளத்தில் வெளியிட்டார்கள் 
பிறகு இன் அண்ட் அவுட் என்ற ஏரியா பத்திரிக்கை வாங்கி பிரசுரித்தது..
பேஸ்புக் பரண் பதிவுகள் நல்ல பதிவுகள் என்றும் பரண் ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆகவும் மாறியது.
பல பக்கங்கள் ஆரம்பித்த வேகத்தில் முடங்கியது போல இல்லாமல் பெரு வளர்ச்சி அடைந்தது ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம். நல்ல பதிவுகளையும், விஷயமுள்ள எழுத்துக்களையும் எடுத்து பகிர்ந்து கொள்வார்.
குங்குமம் வலைப்பேச்சு..அப்ப ரொம்ப பேசப்பட்டது.. அதில் வரணும் என்றே பலர் சிறு பதிவுகள் போட ஆரம்பித்தனர்..
அப்படியே இப்ப வளர்ந்து பதிவாளர்கள் எல்லா பத்திரிக்கைகளிலும் வர ஆரம்பித்து விட்டனர்.
நல்ல திறமையாளர்கள் இந்த தளத்தில் உள்ள வாய்ப்பை உபயோகித்தால் தொடர் கூட பத்திரிக்கைகளில் எழுத முடிகிறது.. சிலர் எழுத்தாளர்களாக மாறினார்கள்.
ஆனால் முகநூல் எழுத்துக்கள் என்று இல்லாமல்..ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும்..பல விதங்களில் வெளிப்பட வேண்டும்..
கொஞ்ச நாளில் சரக்கு காலி என்று அவர்கள் இடம் பெயராமல் இருக்க..இன்னும் புது, புது முயற்சிகளில் அழகாக வெளிப்படுவது நம் கையில் இருக்கு..
உழைத்து, யோசித்து நல்ல பதிவுகள் போடுபவர்களை அதிக நாள் மறைத்து வைக்க முடியாது. ஒரு நாள் கண்டுக்கொள்ளப்படுவார்கள்..
விஷயம் இல்லாமல் தொடர்ந்து இங்கு ஜல்லி அடிக்க முடியாது என்பதையும் சொல்கிறேன் (இது லைக் விஷயங்களில் பொறுமுவர்களுக்கு)
லைக் மட்டும் தேவை என்றால் போட்டோ, வணக்க பதிவுகள் போதும்..
கற்றுக்கொள்ள, எழுத்தை வாசிக்க கொஞ்சம் ஜாலியாகவும் மொக்கை போட சிறந்த தளம்.
நம்மை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்பு.
இப்படித்தான் நான் இந்த தளத்தை பார்க்கிறேன். மாற்று கருத்துக்கள் இருக்கலாம்..
விவாதங்கள் மூலமும் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
கற்றுக்கொள்வோம் அழகாக, இனிமையாக, அன்பாக.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக