செவ்வாய், 3 ஏப்ரல், 2018

உடுமலைப்பேட்டை மக்களின் மனம் கவரும் திருவிழா
ஆண்டாண்டு காலமாக நடக்கும்
ஆண்டுக்கொரு  நாள் திருவிழா
ஆண்டு முழுவதும் மழலைகள் ஆர்ப்பரித்து
ஆரவாரிக்கும் மாரியம்மன் தேர்த் திருவிழா
தேர் திருவிழா ...
லட்சக் கணக்கில் மனித மனங்கள் ஒன்று கூடும்
இதில் சாதியில்லை ,பேதமில்லை ,மதமில்லை
கள்ளமில்லா உள்ளங்கள் கொண்டாடும் திருவிழா
இது மாரியம்மன் திருவிழா
திருவிழா நாட்கள் முழுவதும் ஒவ்வொரு திருவிழா
முளைப்பாரி திருவிழா ,தேவராட்ட பெருவிழா
கரகாட்டத திருவிழா ,காவடியாட்டப் பெருவிழா
பறவைக்கு காவடி ,பால் காவடி ,
புலியாட்டம் ,சிலம்பாட்டம் ,
எத்தனையோ ஆட்டங்கள்
அத்தனையும் காணக்
கண் கோடி வேண்டும்
இவை அனைத்தையும்  குழந்தைகளோடும் ,
உற்றார் உறவினர்களோடும் ,
துள்ளும் மனங்களோடு
கடைக்கண் பார்வையிலே
காணாமல் போன காதலிகளை
கண் முன் நிறுத்தும் குடை ராட்டினங்கள்
கர்ச்சீப் வைத்தெடுத்த கட்டை ராட்டினங்கள்
மனங்கள் நினைக்காமல் இருக்குமோ
நாற்பது வயதுக்குமேல் இருக்கும்
அனைவருக்கும் மனம் ஆர்ப்பரிக்கும்
இப்பொழுதோ கையிலே ..விரல் நுனியிலே
ஆண்டராயிடு போனிலும் ,ஆப்பிள் போனிலும் "சைகையிலே சரிசெய்வதை "
என்னென்று சொல்வது ....
தேர் த் திருவிழாவை  மகிழ்வுடன்
வரவேற்போம் ...வாருங்கள் ..
தேரை நகர்த்துவோம்
ஓடுவது தேரல்ல ....
அனைத்து சமூக மக்களின் வாழ்நிலையும் தான் ......

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக