சனி, 28 ஏப்ரல், 2018



கம்பளத்து மஞ்சள் துண்டு 


மஞ்சள் மகிமை ....(மஞ்சள் நிற ஆடையும் ,மஞ்சள் நிற தலைப்பாகையும்)
மஞ்சள் நிறத்தின் மகிமை அல்லது மஞ்சள் துண்டின் மாட்சினம் .
நிறங்களில் சிறப்பும் மன அமைதியும் கொண்டது .அனைத்து சுபகாரியங்களுக்கும் மஞ்சள் பயன்படும் .திருமணப் பத்திரிகை ,மாங்கல்யதிக்கும் உபயோகம் செய்வர் .மஞ்சள் நிறப் பூக்கள் மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
ஆவாரயின் மஞ்சள் நிற பூ நீரிலுவு நோயிணை நீக்கும் தன்மையுடையது .தங்கத்தின் நிறம் மஞ்சள்,மஞ்சள் நிறம் மாட்சிமை உடையது .
யோகத்தில் சிறந்தது ராஜயோகம் நிறங்களில் சிறந்தது மஞ்சள் நிறம் உயர்ந்த உலோகம் தங்கத்தின் பசும்பொன்னின்நிறம் மஞ்சள் ,அதனால்தான் பெரியோர்கள் சுப நிகழ்சிகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து சிறபடைந்தனர்.மஞ்சள் நிறம் மன மாசுகளை படி படி யாக நீக்கும் .
ராஜகம்பளதார் முதல் சுதந்திர போர் துவக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அணிந்தது மஞ்சள் நிற ஆடைகள் .
ஆன்மிக மேலோர்கள் அணிந்து சிறப்படைந்த மஞ்சள் நிற ஆடையும் ,மஞ்சள் நிற தலைப்பாகையுமாகும் .இன்றய வீரபாண்டிய கட்டபொம்மன் இன இளைஞர்கள் சுதந்திரமாக என்றும் இருக்க
இந்தியா என்றும் சுதந்திர நாடக இருக்க சேவை செய்வதும்,தேவராட்டம் ,கும்மியாட்டம் ,ஒயிலாட்டம் ,ஆடுவது மஞ்சள் நிற உடையணிந்துதான் .
மஞ்சள் நிற துண்டும் மாட்சிமை நிறைந்தது தன் மனதை ஆட்சி செயயவும்,நாடு நலம் பெறவும் ,இன புகழ் பெற்று சேவை செயவும் கம்பளத்து இளைஞர்கள் அணிந்து தேச சேவை செய்வதும் மஞ்சள் துண்டு என்று சொன்னால் மிகையாகது .மனம் ஒரு நிலைப்பட்டு சேவை செய்திட உதவவுதும் ,மஞ்சள் நிற துண்டுதான் என்பது அன்று முதல் இன்று வரை சீரும் சிறப்புமாகும் என்பது அனுபவம் ....
என்றும் அன்புடன் ஷியாம் சுதிர் சிவக்குமார் ..
9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக