சனி, 28 ஏப்ரல், 2018



கம்பளத்து மஞ்சள் துண்டு 


மஞ்சள் மகிமை ....(மஞ்சள் நிற ஆடையும் ,மஞ்சள் நிற தலைப்பாகையும்)
மஞ்சள் நிறத்தின் மகிமை அல்லது மஞ்சள் துண்டின் மாட்சினம் .
நிறங்களில் சிறப்பும் மன அமைதியும் கொண்டது .அனைத்து சுபகாரியங்களுக்கும் மஞ்சள் பயன்படும் .திருமணப் பத்திரிகை ,மாங்கல்யதிக்கும் உபயோகம் செய்வர் .மஞ்சள் நிறப் பூக்கள் மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
ஆவாரயின் மஞ்சள் நிற பூ நீரிலுவு நோயிணை நீக்கும் தன்மையுடையது .தங்கத்தின் நிறம் மஞ்சள்,மஞ்சள் நிறம் மாட்சிமை உடையது .
யோகத்தில் சிறந்தது ராஜயோகம் நிறங்களில் சிறந்தது மஞ்சள் நிறம் உயர்ந்த உலோகம் தங்கத்தின் பசும்பொன்னின்நிறம் மஞ்சள் ,அதனால்தான் பெரியோர்கள் சுப நிகழ்சிகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து சிறபடைந்தனர்.மஞ்சள் நிறம் மன மாசுகளை படி படி யாக நீக்கும் .
ராஜகம்பளதார் முதல் சுதந்திர போர் துவக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அணிந்தது மஞ்சள் நிற ஆடைகள் .
ஆன்மிக மேலோர்கள் அணிந்து சிறப்படைந்த மஞ்சள் நிற ஆடையும் ,மஞ்சள் நிற தலைப்பாகையுமாகும் .இன்றய வீரபாண்டிய கட்டபொம்மன் இன இளைஞர்கள் சுதந்திரமாக என்றும் இருக்க
இந்தியா என்றும் சுதந்திர நாடக இருக்க சேவை செய்வதும்,தேவராட்டம் ,கும்மியாட்டம் ,ஒயிலாட்டம் ,ஆடுவது மஞ்சள் நிற உடையணிந்துதான் .
மஞ்சள் நிற துண்டும் மாட்சிமை நிறைந்தது தன் மனதை ஆட்சி செயயவும்,நாடு நலம் பெறவும் ,இன புகழ் பெற்று சேவை செயவும் கம்பளத்து இளைஞர்கள் அணிந்து தேச சேவை செய்வதும் மஞ்சள் துண்டு என்று சொன்னால் மிகையாகது .மனம் ஒரு நிலைப்பட்டு சேவை செய்திட உதவவுதும் ,மஞ்சள் நிற துண்டுதான் என்பது அன்று முதல் இன்று வரை சீரும் சிறப்புமாகும் என்பது அனுபவம் ....
என்றும் அன்புடன் ஷியாம் சுதிர் சிவக்குமார் ..
9944066681....

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

வழக்கறிஞர் .ச .முருகராஜ் அவர்கள் (9894202111)....கம்பள விருட்சம் அறக்கட்டளையின் ...கௌரவ தலைவர் ..ஆலோசகர் ...அறக்கட்டளையின் செயல்பாடுகளை செம்மை படுத்தி ,சட்ட நுணுக்கங்களை  நமது சமுதாய வளர்ச்சிக்கும் ,முன்னேற்றத்திற்கும் ,நமது சொந்தங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் ,செயல் குழு உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தி அதை நடைமுறைப்படுத்தி ..எங்களுக்கு வழிகாட்டிவரும் முருகராஜ் அவர்களுக்கு  எங்களின் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
அம்மா .....
வாழ்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் அம்மாவின் தன்னம்பிக்கை வார்த்தைகள் ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்புடன் இருக்கசெய்யும்....என் அப்பாவின் ..இறுதி உயிர்மூச்சு என் அம்மாவின் மடியில் தலைவைத்து உயிர்பிரிந்தது ...அப்பொழுது அம்மாவின் தன்னம்பிக்கை ,தைரியம் ..நான் தெரிந்துகொண்டேன் ..ஏன் என்றால் ..என் அம்மாவின் அம்மா ...அப்பா ...இறந்தபொழுதும் ..என் தாயின் மடியில் உயிர் பிரிந்தது நினைவு கூர்ந்தார் ...இறப்பு பற்றி பய உணர்வு பற்றி எனக்கு வாழ்க்கையில் தெளிவு படுத்தியது ...வரம் ...தாய் என்பவள் தன்னம்பிக்கை மனுசி ...நான் வாழ்க்கையில் கற்று கொண்ட பாடம் ...

எனது உலகம்.......என் அகவை 45... பிறந்த நாள் பதிவு ..


ஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா? உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்டும் வெளியுலகத் தொடர்பின்றி உணர்வின்றி உள்ளும் புறமும் ஒன்றும் அறியாது ஓய்வெடுக்க முடிகின்றதா? ஆழ்ந்த உறக்கத்தின் முடிவில் அதிகாலையில் இயல்பாகவே குறிப்பிட்ட நேரத்தில் எழ முடிகின்றதா? உங்களின் உண்மையான ஆரோக்கியத்தை உடல் கழிவுகள் சிக்கலின்றி நகர்வதை வைத்து கண்டு கொள்ள முடிகின்றதா?.

அதிகாலை வேளையில் ஆள் ஆரவமில்லா சாலையில் சிங்கம் போலக் கம்பீரமாக நடக்க முடிகின்றதா? கை வீசி நடக்கும் போது உடல் பாகங்கள் வலியில்லாமல் இருக்கின்றதா? நடக்கும் போது உங்களால் சுற்றியுள்ளதை ரசிக்க முடிந்துள்ளதா? இரை தேடிச் செல்லும் பறவைகளைப் பார்த்து உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதா? சாலையோர மரங்களில் கூட்டமாக வசிக்கும் பறவைகளின் இரைச்சலை ரசனையுடன் நின்று கவனித்ததுண்டா? பார்க்கும் ஒவ்வொன்றையும் விலகி நின்று பார்க்கும் பழக்கம் உருவாகியுள்ளதா? சாலையில் பார்க்கும் வீடுகள், வாகனங்கள் என் ஒவ்வொன்றும் உங்களுக்குள் உணர்த்தும் ஏற்றத்தாழ்வுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் உருவாகியுள்ளதா?

பார்வையில் படுகின்ற ஒவ்வொன்றும் எந்தப் பாதிப்பையும் உங்களுக்குள் உருவாக்காமல் இருக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையின் நிலை குறித்த உண்மையான புரிதலை மனம் பெற்றுள்ளதா? நாள் தோறும் உழைக்கும் உழைப்பிற்கும் கிடைக்காத பலனுக்கும் உண்டான சமூக விதிகள் சொல்லும் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைந்துள்ளீர்களா?

தொழில் உலகத்திற்குத் தேவைப்படாத நேர்மையைக் கட்டிக் கொண்டு வாழும் போது உருவாகும், உருவாக்கப்படும் அரசியலை அங்குலம் அங்குலமாகப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு நீங்களே குருவாக மாறியிருக்கின்றீர்களா?

நடைபயிற்சி முடிந்து வீட்டுக்குள் உள்ளே நுழையும் போது நேரம் மறந்து தூங்கும் மனைவி, குழந்தைகளை அவர்கள் நிலையில் நின்று ரசிக்க முடிந்துள்ளதா? முதல் நாள் இரவு குழந்தைகள் படித்த புத்தகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்க அதைத் தாண்டிச் சென்று கோபப்படாமல் சிதறிக்கிடக்கும் மற்றவற்றையும் குறிப்பிட்ட இடங்களில் அமைதியாய் அடுக்கி வைத்து விட்டு வாய் விட்டுச் சிரிக்க முடிந்துள்ளதா?

அலுவலகத்திற்குச் செல்லும் அவசரத்தில் மனைவி சொல்லும் முதல் நாள் பிரச்சனைகளைத் தொடரும் போட்டுத் தொடங்கும் சமயத்தில் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசனைத் தலைவனையாய் வாழ்ந்ததுண்டா? அலுவலக அரசியலை அங்கேயே விட்டு விட்டுப் பிடித்த பாடலை உரக்கச் சொல்லிக் கொண்டே உலகம் பிறந்தது எனக்காக? என்று வீட்டுக்கு வரும் பழக்கம் உண்டா? அன்றாடம் உருவாகும் அழுத்தங்கள் அனைத்தையும் பிரித்து வைத்து மழுங்காத சிந்தனையைப் பெற்றதுண்டா?

வாழ்க்கையில் வாசிப்பைத் தொலைக்காமல் இருந்ததுண்டா? வாசிக்கும் ஒவ்வொன்றிலும் எழுதியவரின் பெயரைத் தாண்டி எழுதிய விதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு உள்ளே ஆராய்ந்து பார்த்ததுண்டா? போக்குவரத்து நெரிசலில் நசுங்கிச் சென்றாலும் அமைதியான காட்டில் இருக்கும் அமைதியை மனம் பெற்று அவசர மனிதர்களை ஆச்சரியமாகப் பார்க்கும் மனோநிலையைப் பெற்றதுண்டா? சுற்றியுள்ள அனைவரும் மோசம். இதுவொரு குப்பை வாழ்க்கை என்ற உணர்தலை விட்டு வெளியே வந்ததுண்டா?

இவையெல்லாம் உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் பக்குவம் என்ற நிலையை எட்டியிருப்பீர்கள். பணம் தேவை என்பதற்கும் பணம் மட்டும் தான் தேவை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்று அர்த்தம். உங்கள் ஆரோக்கியத்திற்கு வெளியே உள்ள எந்த மருந்துகளும் தேவையில்லை. நீங்களே மருத்துவராக இருக்கக்கூடிய வாய்ப்புள்ளவராக இருப்பீர்கள்.

நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். பணத்தைத்தாண்டி உங்களுக்கான உலகத்தில் நீங்கள் உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம். கடவுள் என்ற வார்த்தையைத் தூர வைத்து உங்கள் உள்ளத்தையே கோவிலாக மாற்றியுள்ளீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் வயது ஐம்பதாக இருக்கலாம். இதனையும் தாண்டி கடந்து வந்து கொண்டு இருப்பவராக இருக்கலாம். ஆன்மீக எண்ணங்கள் என்னை வழி நடத்துகின்றது என்ற நம்பிக்கையுள்ளவராக இருக்கலாம். இல்லை அதையும் மீறி நான் வளர்த்துக் கொண்டுள்ள எண்ணங்களின் வலிமையே என்னை வழிகாட்டும் குருவாக உள்ளது என்று யோசிக்கத் தெரிந்தவராகவும் இருக்கலாம். இங்கு எல்லாமே முக்கியம். ஆனால் எல்லாவற்றையும் விட எண்ணங்கள் முக்கியம். நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கை என்று உணர்வது மிக முக்கியம்.

எண்ணங்களுக்குத் தனிக்குணம் உண்டு. எந்நாளும் நடித்துக் கொண்டேயிருக்க முடியாது. நடித்தாலும் ஏதோவொரு சமயத்தில் காட்டிக் கொடுத்து விடும். எதன் அடிப்படையில் நம்மைக் கவனிக்கின்றார்கள் என்பதனை அவர்களை அறியாமல் காட்டிக் கொடுத்து விடும். நம்மிடம் அளவு கடந்த பணம் இருக்கின்றது என்பதைக் கௌரவமாக எடுத்துக் கொண்டு வாழ்பவர்களும் தங்களைத் தனித்தீவாக மாற்றிக் கொள்கின்றார்கள். தாம் சேர்க்க முடியாத பணத்தை நினைத்துக் கொண்டே பலரிடமிருந்து ஒதுங்கி வாழ நினைப்பவர்களும் தீவு போலத்தான் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கின்றார்கள். இரண்டு பேர்களும் தங்களுக்கான வாழ்க்கையைக் கடைசி வரைக்கும் வாழ முடியாதவர்கள்.

மற்ற அனைத்தையும் விடப் பணம் அளவு கடந்த தன்னம்பிக்கையைத் தரவல்லது. அந்த நம்பிக்கை செலுத்தும் பாதை தான் கேள்விக்குரியது. பணத்தை மட்டுமே தகுதியாக நினைத்துக் கொள்பவர்களின் மனவலிமை என்பது ஏதோவொரு சமயத்தில் இறக்கப் பாதையில் இறக்கி விடும். அது பணம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அவர்களின் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கக்கூடும். இதனை உணர்பவர்கள் குறைவு. இவற்றை உணர்ந்தவர்களுக்கு இங்கே எல்லாமே வேடிக்கையாக மாறிவிடும். வேடிக்கையாளனாக வாழத் தெரிந்தவனுக்கு வெயில், மழைக் காலம் என்பது எல்லாமே ஒன்று தான்.

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளப் பழகியிருப்பின் நிச்சயம் எந்தக் கதவும் முடியிருக்காது. ஏதோவொரு வகையில் திறந்தே தான் தீரும். சூழ்நிலையும் மாறலாம். பொறுத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம். அதுவரையிலும் வாங்கிய கடனும், இனி வாங்க வேண்டிய கடனும் பாடங்கள் நடத்தலாம்.

அடுத்த மாதம் வேலையில்லையே? மாத சம்பளம் இல்லாவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என்ற அழுத்தம் உங்கள் அசைத்துப் பார்த்தாலும் இவைகள் எதுவும் உங்கள் உள்ளுறுப்புகளைப் பாதிக்காது என்று நிச்சயம் சொல்ல முடியும். கவலைகள் என்பது கற்றுக் கொடுக்கும். தெளிவான பாதையை அடையாளம் காட்டும். ஆனால் அதுவே உங்களை உடல் ரீதியாகப் பாதிப்படையச் செய்தால் அதற்குப் பெயர் உங்கள் திறமையை இதுநாள் வரைக்கும் உணராமல் வாழ்ந்து இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இருபது வயது வரைக்கும் உண்டான வளர்ச்சியென்பது வேறு. நாற்பது வயதுக்கு மேலே நாம் காணும் வளர்ச்சியென்பது வேறுவிதமானது. முதலில் உடல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதற்குப் பின்னால் வருவதெல்லாம் உள்ளம் சார்ந்ததாகவே இருக்கும். அதுவே இறக்கும் வரையிலும் தொடர்கின்றது.

உள்ளத்தை அடக்கத் தெரிந்தவனின் உடல் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. ஆரோக்கியம் உள்ளவனுக்குக் காலம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த கூடியதாகவே இருக்கும். அது எழுபது வயதாக இருந்த போதிலும். இதைப் பற்றிச் சொன்னாலே கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா? என்று நம்மவர்கள் நம் எண்ணத்தை அசைத்துப் பார்க்கக்கூடும்?

ஐம்பதுக்கு முன்னால் அனுபவிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் உடலை சுகப்படுத்துவதாக இருக்கும். ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் பாதிக்கு மேல் வரும் வசதிகளும் வாய்ப்புகளும் உண்டான குணம் வேறு விதமானது. நாம் இறக்கும் வரையிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நம்மைச் சார்ந்துள்ள மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் அடுத்த கட்ட அமைதியான வாழ்க்கைக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

இளமையில் வறுமை என்பதனை விட முதுமையில் வறுமை என்பது தான் கொடூரமாக இருக்கும். உதவி செய்ய ஆட்கள் இல்லாத போது நம்மிடம் இருக்கும் செல்வம் உதவி செய்ய ஆட்களைக் கொண்டு வந்து நிறுத்தும். ஆனால் பக்குவம் இல்லாத நிலையில் வந்து சேர்ந்த செல்வம் நம்மைச் செல்லாக்காசாகத்தான் மாற்றுகின்றது என்பதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ள முடியுமே?

புரிந்தவர்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தப் புத்திசாலிகளுக்குத் தற்காலச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன். அதனால் என்ன? பிழைப்புவாதிகள் உருவாக்கிய சமூகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய போட்டி, பொறாமை, வன்முறையைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். உருவாக்கிய ஒவ்வொருவரும் கடைசியில் ஏதோவொரு பெரிய மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்து இந்த உடலில் இருந்து என் உயிரைப் பிரித்து விடு இறைவா? என்று கெஞ்சுவதையும் பத்திரிக்கையில் படிக்கத்தானே செய்கின்றோம்.

நம் வாழ்க்கையின் தீர்மானங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொழிலில் வெற்றி, வசதியுடன் கூடிய வாழ்கையில் அனுபவித்தே தீர வேண்டிய வீடு, வாகனங்கள், செல்வாக்கு, அந்தஸ்து, அதிகாரம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். எல்லாமே இருந்தாலும் இவற்றைக் கடைசி வரைக்கும் அனுபவிக்க நம் ஆரோக்கியம் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது.

இல்லாவிட்டால் எல்லாமே இருக்கும். ஆனால் அவையனைத்தும் நம் அருகே இருப்பவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கை பார்ப்பவர்களாகக் காலம் மாற்றும். அப்போது உருவாகும் மன அழுத்தம் வேறொரு பாடத்தை நடத்தத் தொடங்கும்.

"நீ வாழ்ந்த வாழ்க்கையென்பது உனக்காக வாழவில்லை. உன்னைச் சார்ந்து இருந்தவர்களுக்காகவே வாழ்ந்து இருக்கின்றாய்?" என்று கண் எதிரே நடக்கும் வித்தியாசமான வாழ்க்கையின் அலோங்கலங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் உருவாகும் மன அழுத்தமென்பது மரணப் பாதையை விரைவு படுத்தும். வெற்றி ராஜ்யத்தை உருவாக்கிய அனைவரும் இந்த இடத்தில் தான் பூஜ்யமாக மாறத் தொடங்குகின்றார்கள்.

பணத்தை மனதோடு சேர்த்து யோசிப்போம். மனம் தான் உடலை இயக்குகின்றது. இயக்குநர் சரியான நபராக இல்லாவிடின் நடிகரின் நடிப்பு நன்றாக இருக்குமா?


தொடர்வோம்.......

வியாழன், 26 ஏப்ரல், 2018

கையிக் எட்டிய தூரம் தான்....கடந்த வருடம் இதே நாள் ஷ்யாமின் நடைபயணம் மேற்கொண்டிருந்[போது ...இந்த முறை நடைபயணம் மேற்கொண்டிருந்தால் ...தன் ஆசை ஸ்கூல் தாத்தாவின் புன்னகை மலர்ந்த முகத்தை இறுதி ஊர்வலத்தை பார்த்து இருக்கலாம் .....எப்பொழுதும் ஷ்யாமின் நினைவுகள் தாத்தாவிற்கு இருந்துகொண்டே இருந்தது ..ஷ்யாமிற்கு தாத்தாவின் ஆசிர்வாதம் இருந்தெகொண்டே இருக்கும் வாழ்நாள்முடிய ....ஷியாம் தன் தாத்தாவின் இறுதி ஊர்வலத்தை பார்க்கமுடியாது ..மனதில் கொஞ்சம் வருத்தம் தான் ...விவரம் தெரியும் வயதாக இருந்தால் தன் தாத்தாவை இறுதி மூச்சு அடங்குவதற்கு முன் காண வந்திருப்பான் ..வாழக்கை சக்கரம் எப்பொழுதும் போல் இருப்பதில்லை ...

நாடி ....

எனது உயிர் மூச்சு தந்தையின் இறப்பு ...திங்களன்று இரவு 11.00 மணி ...நான் காலையில் பணியின் காரணமாக கோவைக்கு கிளம்பும் போது எப்பொழுதும் அப்பா போய்ட்டுவந்துருவேன் என்று முகத்தை பார்த்து செல்வேன் ..ஏனோ தெரியவில்லை ..அப்பாவின் கைபிடித்து பக்கத்தில் உட்கார்ந்து அப்பாவின் தலையை தடவி ..கைபிடித்து ..சீக்கரம் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு கோவை கிளம்பினேன் ...மதியம் 3 மணியளவில் வீடு வந்து அப்பாவின் முகத்தை பார்க்கும்பொழுது தன் இறுதிப்பயணத்திற்கு தயாராகவிட்டார் என்று தோன்றியது ..உடனே நம் தினமலர் செந்தில் மாப்பிளையை தான் முதலில் அழைத்தேன் ..மாப்பிள ..டாக்டர் யாரவது இருக்கிறார்களா என்று விசாரத்திவிட்டு ..வழக்கறிஞர் முருகராஜ் அவர்களை தொடர்பு கொண்டேன் ..நாடி பாருங்கள் என்று சொன்னார் ...தம்பி போட்டோ ராஜேந்திரன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு அப்பாவிற்கு என்ன ஆச்சு என்று கேட்டு நமது சொந்தம் பழனிசாமி மருத்துவரிடம் பணிபுரிகிறார் ..அவரை அழைக்கலாம் என்று அவரை அழைத்து வந்து ..அப்பாவின் நாடி பார்த்த பொழுது ..நாடி துடிப்பு ..விட்டு விட்டு துடிக்கிறது என்றார் ....6 மணியளவில் எங்கள் குடும்ப டாக்டர் நிலைமையை சொன்னேன் ..அவரும் இனி மருந்துகள் தரவேண்டாம் ...தண்ணீர் மட்டும் கொஞ்சம் கொடுங்கள் ...அம்மாவிடம் சொல்லிவிட்டேன் ...மூன்று அல்லது நான்கு நாள் தான் அப்பாவின் இறுதி மூச்சு ...நாடி துடுப்பு அப்படி தான் இருந்தது ...அம்மா உங்களிடம் சொல்லவில்லையா என்று கேட்டார் ..என்னிடம் சொன்னால் மகன் அழுது விடுவான் ..என்று அம்மா என்னிடம் சொல்லிக்கொண்டு தான் வந்தார்கள் என்றார் ..அம்மாவின் மனதைரியம் ...எப்படி இருந்துருக்கும் ..இரவு 8 மணி ..எங்கள் பக்கத்து வீட்டு ராணி அக்கா ..20 செவிலியர் ..அவரும் ஓடுஓடி வந்து அப்பாவின் நாடி பிடித்து பார்த்தார்கள் ..அவரும் இன்னும் ஒருமணிநேரம் தான் ..இப்பொழுது இருப்பது மூளை மட்டும் இயங்குகிறது ..என்றார் ....நானும் ,வழக்கறிஞர் ,எனது தம்பி ..எனது நண்பர் ஜேபி என்று அழைக்கும் மருத்துவரிடம் சென்றோம் ..அப்பா இப்பொழுது இந்த நிலையில் உள்ளார் ..மறுபடியும் திரும்ப கொண்டு வந்துவிடலாமா ..கேட்டுக்கொண்டிருக்கும் போதே ...தம்பியின் செல் ..முருகராஜ் அவர்களின் செல் ..அப்பாவின் வாழ்க்கை பயணம் முடிந்தது என்று சொன்னவுடன் ...எனது கண்கள் கொஞ்சம் சில மணித்துளிகள் இருண்டு திரும்பியது ....


அப்பாவிற்கு என் நினைவுகள் அதிகம் இருந்தது ...அப்பா சிறு வயதிலேயே ..தாய் ,தந்தை இழந்து ..தன் தன்னம்பிக்கையில் சொந்தங்கள் துணையின்றி விட முயற்சியில் வளர்ந்தவர் .....என் அம்மாவிடம் ..பையனை ...என்னை மாதிரி ..அனாதையாக விட்டு வந்துவிடாதே என்று சொல்லிக்கொண்டே இருப்பார் ...









வியாழன், 19 ஏப்ரல், 2018

தேவராட்ட பெருவிழா ..உடுமலைப்பேட்டை ..
தேதி .29 ..ஞாயிறு ...மாலை .3.30 அளவில் 
உடுமலை குட்டை திடல் ...
இங்கே வந்து எட்டிப்பார்க்கக்கூட நேரமில்லாமல் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கவேண்டி உள்ளது.
தேவராட்ட பெருவிழா ..விழாவிற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ தயார் நிலையில்.
பொதுவாக வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். ஆனால் அதைவிட மிகவும் சிரமமான பணி எதுவென்றால் ஒரு பொது விழாவினை நடத்த எடுத்துக்கொள்ளும் சிரமங்கள். ஊர்கூடி தேர் இழுக்கவேண்டும். ஆனால் ஓரிருவர் மட்டுமே அந்த தேரை இழுக்க முயற்சி செய்து அது சாத்தியம் என்றால் அதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டுமோ அந்த நிலை தான் தற்போது இங்கே எங்களுக்கு. நானும் எனது நண்பர்களும் ..நமது மாப்பிள்ளைகளும் ..தம்பிகளும் ...நான் வணங்கும் ..எனக்கு வழிகாட்டும்  பேராசிரியர்கள் ,தலைவர்கள்...கூட்டு முயற்சி ...
.சொந்த வீடு என்பது ஒரு கனவு.......

ஒருவருடைய வீட்டுக் கடன் தகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நம்மில் பலருக்கும் சொந்த வீடு என்பது ஒரு கனவு. நம்முடைய கனவை நனவாக்க தற்பொழுது ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. அதில் மிக முக்கியமனது வீட்டுக்கடன். தற்பொழுது வங்கிகள் வீட்டுக்கடன் நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தி விட்டன. எனினும் நாம் சில விதிமுறைகளை நிறைவேற்றத் தவறினால், வங்கிகளால் நம்முடைய வீட்டு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இந்நிலையில் வங்கிளில் வீட்டு கடன் பெறுவதற்கான தகுதிகளை பற்றி தெரிந்துக் கொண்டு சரியான முறையில் விண்ணப்பம் சமர்பித்து உங்கள் கனவு வீட்டை கட்டுங்கள்.

அங்கிகாரம் :
முதலில் வங்கிகள் உங்களுடைய கடன் திரும்பச் செலுத்தும் திறன், உங்களுடைய நிகர வருமானம், மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் மொத்த கடன் தொகை ஆகிவற்றை பொருத்தே வங்கிகள் உங்களது கடன் விண்ணப்பத்தை அங்கிகரிக்கும்.

அடிப்படை தகுதிகள் :
வீட்டு கடன் பெற வங்கிகள் மிக முக்கியமாக 5 தகுதிகளை நிர்ணயித்துள்ளன.
1. ஒரு மாதத்தின் நிகர வருமானத்தை போன்று 60 மடங்கு வரை கடன் பெற உங்களுக்கு தகுதி உள்ளது.
2. வங்கிகள் உங்களுகடைய பிற கடன்கள், மற்றும் உங்களுடைய மாதந்திர தவணைகள் போன்றவற்றை கழித்து விட்டே உங்களுடைய நிகர வருமானத்தை கணக்கிடும்.
3. உங்களுடைய மோசமான கடன் (சிபில் ) மதிப்பெண் அல்லது நீங்கள் சில முறை கடன் தவணைகளை கட்டத் தவறியிருத்தல் போன்றவை உங்களுடைய கடன் பெரும் முயற்ச்சியை சிரமப்படுத்தும்.
4. நீங்கள் நீண்ட கால கடன் திருப்பிச் செலுத்தும் காலத்ததை தேர்ந்தேடுத்தால், அது உங்களுடைய கடன் தகுதியை அதிகரிக்கும்.
5. கடன் தகுதி என்பது ஊதியம் பெறுபவர்களுக்கும்கும் இடையே வேறுபடுகின்றன.

வீட்டுக் கடன் தகுதி:

வீட்டுக் கடன் தகுதி = ஒரு லட்சத்திற்கான மாதாந்திர சேமிப்பு அல்லது மாதாந்திர தவணை (இஎம்ஐ) X 1 லட்சம் உதாரணமாக ஒருவர் 10 சதவீதம் வட்டி விகிதத்தில் சுமார் 20 ஆண்டுகள் தவணையில் ரூ ஒரு லட்சம் கடன் வாங்குகின்றார் எனில் அவருடைய மாதத்தவணை என்பது ரூ 965 ஆக இருக்கும். மேலே கூறிய உதரணத்திற்கு, நம்முடைய சூத்திரம் பயன்படுத்தப்படுத்தினால் அவாருடைய மொத்த வீட்டுக் தகுதியானது ( 15,000 / 965 X ரூ 1 லட்சம் = ரூ 15.54 லட்சம்) ரூ 15.54 லட்சமாக இருக்கும்.

இதர கட்டணங்கள் :

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் அந்த வங்கியினுடைய செயலாக்க கட்டணம், வட்டி விகிதங்கள், கடனை அனுமதிக்கும் கால அளவு போன்ற விஷயங்களை சரிபார்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இவைகளெல்லாம் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே வேறுபடுகின்றன என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.

ஈஎம்ஐ:
மாதாந்திர தவணை கட்டத் தவறினால் அது அதிக வட்டி விகிதத்திற்கு வழி வகுக்கும். அது வருடத்திற்கு மிக அதிகமாக 24 சதவீதமாகக் கூட இருக்கலாம்.

முக்கிய ஆவணங்கள்:

மாத ஊதியம் பெறும் தனிநபர்கள் வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய மிக முக்கிய ஆவணங்கள்:

1) விண்ணப்பித்தவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம்.
2) கடந்த மூன்று மாதங்களுக்கான சம்பள அறிக்கை. இதுவங்கிகளுக்கு இடையே வேறுபடலாம். சில வங்கிகள் ஆறு மாத சம்பள அறிக்கையை கேட்கலாம்.
3. படிவம் 16 அல்லது வருமான வரி தாக்கல் செய்த அறிக்கை. இது கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். 4. வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் உங்களுடைய கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி நிதி நிலை அறிக்கையை கேட்கும்.
5. உங்களுடைய அடையாள, வயது மற்றும் குடியிருப்பு சான்று. 6. நடைமுறைப்படுத்துவதற்காண கட்டணம் அல்லது காசோலை.

ஏன் வீட்டுக் கடன்..?

நீங்கள் வீட்டு கடன் முலமாக மிகப்பெரிய வருமான வரி சேமிப்பு நன்மைகளைப் பெற முடியும். வருமான வரியில் வீட்டுக் கடனுக்கான அசல் தொகையின் மீது ரூ 1.2 லட்சம் வரை சேமிக்க முடியும். இது தவிர, பணம் வீட்டுக் கடன் வட்டியின் மீது ரூ 2 லட்சம் வரை சேமிக்க முடியும். எனவே, வீட்டுக் கடன் என்பது ஒரு பெரிய வருமான வரி சேமிப்பு வழி.

முடிவு:

நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்ததால் வீட்டுக் கடன் என்பது உங்களுக்கு நன்மையே தரும். மேலும், தற்பொழுது குறைந்து வரும் வட்டி விகிதங்கள், வீட்டுக் கடன்களை சாதகமானதாக மாற்றி இருக்கின்றன. முன்பு கூறியது போல, நீங்கள் இந்தியாவில் ஒரு வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுடைய தகுதியை சரிபார்க்க வேண்டும்.

சொந்த வீட்டு கனவை நிறைவேற்றிட ......உங்களின் கனவு இல்லத்திற்கு ..உங்களின் பொன்னான நேரத்தை கொஞ்சம் ஒதுக்கலாமே ...

V.K.சிவக்குமார்
(வீட்டு கடன் பிரிவு )
கோயம்புத்தூர் ,பொள்ளாச்சி ,உடுமலைபேட்டை ..
செல் ;9944066681

புதன், 18 ஏப்ரல், 2018

என் ...வாழ்வியலை .சங்கரவேலு அய்யா ...வீ .எஸ் .ராஜா அய்யா ...முருகவேல் அய்யா .இவர்களின் வழிகாட்டல்கள் மூலம் ...என் செம்மைப்படுத்திக்கொண்டுள்ளேன் ...சங்காரவேல் அய்யாவின் வரலாற்றை கண்டிப்பாக எழுதலாம் ...எதுலப்ப மன்னருக்கு அடுத்தது ..நம் கடவூர் மக்களின் மன்னர் ...வரலாற்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்  மூலம் எழுதுவதற்கு ...சுமதி மோகன் முத்தையா அவர்களின் அனுமதி அளித்து விட்டார்கள் ...அதற்கான பணிகள் 20% முடிந்துவிட்டது ....உங்களின் பார்வைக்கு ..இதை பதிவிடுகிறேன் ..நன்றி ..


செவ்வாய், 17 ஏப்ரல், 2018

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்  நடத்தும்
இருபெரும் வரலாற்று திருவிழா ..
பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவியின்
பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் ,
1801 ஏப்ரல் 23 ல் ஆண்ட்ரோ  கேதீசு  எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட தமிழ் மன்னன் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க கோரியும் ஏப்ரல் 29 ஞாயிறு அன்று உடுமலை குட்டை திடலில் ,

தலைமை :
மாண்புமிகு .உடுமலை .கே .ராதாகிருஷ்ணன் .பி .காம்
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

சிறப்பு விருந்தினர் :
மாண்புமிகு .கடம்பூர் .ராஜு அவர்கள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

மதிப்பு மிகு சி.மகேந்திரன் .எம் .ஏ
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .இரா .ஜெயராமகிருஷ்ணன் .பி .எஸ் .சி .பி .எல்
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .நீதி அரசர் .வி .தங்கராஜ் .எம் .ஏ .,எம் .எல்

மதிப்பு மிகு .கே கே .எம் .மோகன் குமார் .
கடவூர் .ஜமீன்தார்

ஆகியோர் பங்கேற்க ..உடுமலை வரலாற்றில் முதன் முறையாக ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ஓரணியாய் நின்று எத்தலப்பர் புகழ் பாடும் போர் பரணி ..மாபெரும் தேவராட்ட பெருவிழா



நாள் :ஏப்ரல் 29 ,ஞாயிற்றுக்கிழமை ..மாலை 3.30 மணி முதல்


அமைச்சர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள் ,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம் ..

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்
271,தளி சாலை ,உடுமலைப்பேட்டை
பேசி .9842091244,9944066681,9698082028,9171801212,9150056970.








ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

இன்றைய ஞாயிறு ...

நேற்றும் ..இன்றும் ...நாள் போனதே தெரியவில்லை ..வெள்ளி இரவு  கோவையில் இருந்து சாய் நந்தா கிஷோர் (வயது -4 )அவர்கள் வந்தார்கள் ..வந்ததும் ..பெரியப்பா ..பெரியப்பா ..என்று போனில் பேசியே கேட்டுக்கொண்டு இருந்தாலும் ..நேரில் வந்தவுடன் ..பள்ளியில் நடந்த நிகழ்வுகள் ..பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் அவரின் நடனம்...நாடகங்கள் ...அவரின் நண்பர்கள் ..வகுப்பு தோழிகள் ,வகுப்பு ஆசிரியர்கள் ..ஒன்று விடாமல் கலந்துரையாடியது  .இரவு நேரம் போனதே தெரியவில்லை .....தமிழ் புத்தாண்டு காலை நேரத்தில் கிளம்பி பழனி எம்பெருமான் தமிழ்  முருக கடவுளை பார்க்க சென்றுவிட்டார் ...பழனியில் நடந்த நிகழ்வுகள் ...குதிரை வண்டியில் சென்றது ..ரோப் காரில் சென்றது ...மலையில் இருந்த கோவில் சிற்பங்களில் இருக்கும் ..சிங்கம் ..மயில் ,குரங்கு ..மாடுகள் ,,அவர் பார்த்த சிலைகளை அவர்கள் மொழியில் இனிக்க ..இனிக்க சொன்னது ..அதை ஆர்வத்துடன் நான் கேட்டது ...அவருக்கு மற்றட்ட மகிழ்ச்சி ..தன் தாத்தாவுடன் ,பாட்டியுடன் ,,மழலை மொழியில் கலந்துரையாடியது இரண்டு நாள் போனது தெரியவில்லை ...வீட்டில் இருந்த நேரத்தில் ..அலமாரியில் இருக்கும் ..புத்தகங்களை ஒன்று விடாமல் எடுத்து பார்த்து ..அவரின் தகந்த மழலை மொழி கிடைத்ததா என்று பார்த்தார் ...அதில் அறிவியல் அறிஞரின் படம் போட்ட புத்தகத்தை திரும்ப ..திரும்ப பார்த்துக்கொண்டிருந்தார் ...என்ன புரிந்தது என்று நான் கேட்கவில்லை ...பழனியில் வாங்கி வந்த ..லாரி ,ஜேசிபி ..வாகனங்களை அக்கு வேறாக ..பிரித்து மறுபடியும் இணைத்துக்கொண்டிருந்தார் ...அதற்குள் அவர்கள் அம்மா வேறு ..ஏன்டா வாகனங்களை பிரிச்சு மேஞ்சுட்டு இருக்க என்று கேட்டார்கள் ..எப்படி ஒரு வாகனத்தை எப்படி தயார் செய்வது என்று எப்படி என்று கற்றுக்கொள்கிறேன் என்றார் ...அம்மா மறுபேச்சு பேசவில்லை ...அவரிடம் ..
..அவர் வாங்கிவந்த பிள்ளங்ககுழல் மூலம் அவருக்கு தெரிந்த பாடலை வாசித்து கொண்டும் தன நண்பர்கள் வட்டத்தில் திறமையை காண்பித்து கொண்டிருந்தார் ..ஒரு வேலை இசை ஞானி போல் வருவாரோ ..சாய் நந்த கிஷோர் தேனீ காரா மண்ணில் பிறந்தவர் ..இயற்கையிலே  இசை ஆர்வம் இருக்கும்போல ..இன்று மாலை கோவை செல்வதற்கு கிளம்பும்போது செல்வதற்கு மனது இல்லை ..இருந்தாலும் அவரின் குரல் ஓசை கொஞ்சம் தடுமாறத்தான் செய்தது ..எனக்கும் கூட ....மழலைகளின் கூட இருப்பது வாழ்வின் வரம் ..
.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681...



சனி, 14 ஏப்ரல், 2018

நித்தி மாப்பிள  ...நீங்கள் கேட்கும் கேள்வி  சரிதான் ...இன்னும் நோட்டீஸ் அழைப்பிதழ் வந்து சேரவில்லை ..என்கிறார்கள் ...இதற்கும் நோட்டீஸ் குடுத்து வாட்ஸாப்பில் ..,முகநூலில் ...போன் செய்து ..சொல்லிவிட்டோம் ...தற்பொழுது 22 தேதி இருந்து தேதி ..மாற்றம் 29 ...அமைச்சர் விழா நடக்கும் தேதியில் வெளியூர்  செல்வதால் ..நமது வரலாற்று சிறப்புமிக்க விழாவில் கலந்து கொள்ளவேண்டும் ...என்று கூறியதால் ..விழா நிகழ்வு தேதி ..29 தேதி மாற்றி அமைக்கப்பட்டது ...தினம் தோறும் ..விழா குறித்து செய்தி அப்டேட் செய்து கொண்டே இருக்கவேண்டும்...அதனால் பதிவிடுகிறேன் ..இதை புரிந்து கொள்ளாதவர்கள் ...கிண்டலும் ..கேலியும் செய்திகொண்டுதான் இருப்பார்கள் ..சமுதாய சேவை ..என்று வந்துவிட்டால் ...காறித்துப்பினாலும் ..துடைத்து எறிந்துவிட்டு ..விழாவை நல்லபடியாக முடித்து தரவேண்டும் ..இந்த விழா ..நமது மாப்பிள்ளைகள் ..தம்பிகளின் ...உழைப்பு .எண்ணிலடங்காது ....எதிர்கால சந்ததிகளுக்கு தெரிந்த கொள்ள செய்யும் மதிப்பு மிக்க வரலாற்று செய்தி ...பகிர்வது என் கடமை ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் ...9944066681....
என் இனிய நண்பர் ...ஜீவா அவர்கள் ...

எத்திசைக்கும் புகழ் மணக்கும் ..எத்தலப்பர்  தேவராட்ட கலையை ...உலகம் முழுவதும் தனது புகைப்பட கலையின் மூலம் 

கொண்டு செல்லப்போகிறார் ...எங்களின்  அழைப்பின் பேரில் விழாவிற்கு வருகை தருவது எங்களுக்கு பெருமையே ...

வருக ..வருக ..

உறுமி' இசை கலைஞர்கள்...... 

உருமி இசை, "தேவராட்டம்' , சலங்கை மாடு மறித்தல்(சளகெருது ஆட்டம்), கும்மி ஆட்டம் ,கோவில் திருவிழா,திருமண விழாக்களில் இந்த இசை கருவி பயன் படுகிறது ....
இதை அழகா படம் பிடித்த திரு .ஜீவா அவர்களுக்கு நன்றிகள் ...



Intro

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

எனது நண்பர் ...நீண்ட வருடம் அமெரிக்காவில் வசித்துவரும் திருமதி .கீதா சந்திரா அக்காவின்  சிறு கிறுக்கல்கள் ...உங்களுக்கும் பிடிக்கும் ....

சந்திப்போம் பிரிவோம்
=========================
சற்றே நீளமான கதை . பாத்ரூமில் உட்கார்ந்து போனில் facebook பார்ப்பவரென்றால் piles வரும் அபாயம் உண்டு. அதனால் சாயங்காலம் படித்துக் கொள்ளுங்கள்.
எனது #Trainல்கிறுக்கியது#7 உப்பா சர்க்கரையா கதையில் சண்டை போட்டு தொலைத்த ரவியை சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடித்தேன். 27 வருடங்கள் கழித்துக் கண்டுபிடித்த அவனை , இந்த கதையின் முடிவில் கட்டையால் நாலு சாத்து சாத்த முற்பட்டதும் உண்மையே…
இத்தனை நாள் நைஜிரியாவில் வேலை பார்த்து இந்தியா திரும்பி மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சொன்னான். நான் வேலை விஷயமாக இந்தியா வரும்போது மும்பையில் ஒரு நாள் இறங்கி தன்னைப் பார்த்துவிட்டு போகுமாறு சொன்னான்
Flight இல் கண்ணை மூடியதும் நான் , ரவி , நாய்க்கடி ஜனா மூவரும் அடித்த கூத்துக்கள் நினைவுக்கு வந்து தூக்கத்தில் முறுவலிக்க வைத்தது….ரவி அப்போதே பிரம்மாண்டமாக இருப்பான் அதற்கு மேல் வளர வாய்ப்பில்லை தான்…
எந்த கவலையுமின்றி நான் ,அவன் ,ஜனா , மூவரும் ரசீதுகளில் இருந்து தடிமனான லெட்ஜர்களுக்கு vouching பார்த்தபடி , ,ஒன் பை த்ரீ டீ குடித்துக் கொண்டு , ஆடிட்டர் அமாவாசை தர்ப்பணம் முடிந்து full மீல்ஸ் சாப்பிட்டு நேரே ஆபிஸ் வருவாரா ? இல்லை குட்டி தூக்கம் போட்டு வருவாரா போன்ற மாபெரும் விஷயங்களுக்கு பெட் கட்டி பொழுதை ஓட்டிய பொற்காலம் அது.
எங்களுடைய பெரிய பொழுதுபோக்கே ரவி எந்த பெண்ணை மடக்க நினைக்கிறான், அதற்கான SWOT analysis பற்றி அவனது அரிய கருத்துக்களை கேட்பது தான். முதலில் என்னுள் இருந்த பெண்ணியம் கொதித்துப் போய் “அதெப்படி மடக்கறதுங்கற வார்த்தையை யூஸ் பண்ணுவ….நாங்க என்ன புடவையா?” என்று குதித்தேன். பின்னர் இவன் வெறும் வெத்து வாய் சவடால்….பொண்ண மடக்கறதாவது பொண்ணு போட்டோவை கூட மடக்க முடியாது என்று தெரிந்து சிரித்தபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்
ஆபீஸ் எதிர்த்தாற்போல் ஒரு டைப் இன்ஸ்டிடியூட் உண்டு. ஒவ்வொரு கிளாஸ் முடியும் போதும் இவனும் ஜனாவும் வாசலில் நின்று அத்தனை அம்மணிகளையும் நோட்டம் விடுவார்கள். நான் அவனிடம்..” பாவம் ஒண்ணு கூட உன்னை திரும்பி பாக்க மாட்டேங்குதே “ என்பேன். “இப்ப பாரு இப்ப பாரு தெரு முனைக்கு போனதும் ஒரு square drive அடிப்பா பாரு “ என்பான்… அப்படி அவனை திரும்பி பார்த்தவள் தான் கிருஷ்ணன் குட்டி , “கி குட்டி” என்பது ரவி அவளுக்கு வைத்த பெயர். அப்போது அவள் இயற் பெயர் தெரியாது.
ரவி “கி குட்டி”யை விடாமல் பஸ் ஸ்டாப் , அவள் வீடு , காலேஜ் என்று துரத்திக் கொண்டிருந்தான். அவள் சேர்ந்த டைப்பிங் கிளாசில் இவனும் சேர்ந்து டைப் அடிக்கயில் , மொத்த ASDFGF கீக்களும் கொத்தாய் பேப்பரை கவ்வ ……வாங்கி பார்த்த மாஸ்டர் , ரவியின் விரலைப் பரிசோதித்து “அடேய் இந்த விரலை வெச்சுகிட்டு நீ தவில் தான் வாசிக்கணும் டைபிங்க்லாம் வரக்கூடாது “ என்று கண்டித்து விரட்டியதாய் ஜனா சொன்னான்.
அவள் வருகிறாள் என்று , என்னையும் ஜனாவையும் வேறு அவ்வப்போது துணைக்குக் கூட்டிக்கொண்டு போய் கோவிலைச் சுற்றுவான். இப்போது யோசித்தால் நாங்கள் இருவரும் எதற்காக இவனோடு எடுபிடி மாதிரி சுற்றினோம் என்று புரியவில்லை. அவளுக்கு லெட்டர் குடுக்க என்னை கோவிலுக்குள் இருக்கும் அகோர வீரபத்திரர் சிலைக்கருகில் காக்க வைத்ததில் ஒரு முறை என் மேல் நாலு பேர் வெண்ணெய் பந்தை சாத்தும்ஆபத்து இருந்தது.
.
அவ ளிடம் கொடுப்பதற்க்காக என்னிடம் கவிதைகள் வேறு கடன் வாங்கிப் போவான்…நானும் உருகி….”மண்ணாய் மாற வேண்டுமென்று மானிடன் நான் விரும்புகின்றேன்……மருதோன்றி சிவப்பொளிரும் உன் மாசறு பாதத்தை முத்தமிட” என்றெல்லாம் தாறுமாறாக எழுதிக் கொடுப்பேன். அவனும் கிறுகிறுத்துப் போய்…”ஏய் நீயேவா எழுதின? இல்ல வைரமுத்துட்ட சுட்டியா?” என்று கேட்டு வாங்கிப் போவான். அவள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு ….”மருதோன்றின்னா என்ன?” என்று கேட்டு விட மறுமுறை மறக்காமல் பொழிப்புரை வாங்கிப் போனான்
“பேங்க் ல போட்டா அந்த செக் தாவுதாம்…ஏன்னா அது பௌண்ஸ் ஆன செக்காம்” போன்ற அந்துருண்டை ஜோக்குகளையெல்லாம் சொல்லி கடைசியில் “கி குட்டி” (இப்போது இவள் பெயர் வினோதா என்று தெரிந்து கொண்டேன்) இவனிடம் மயங்கித்தான் போனது….ஒரு மாதிரி அவள் அம்மாவிற்கு ரேஷன் வாங்கிக்கொடுத்து , அப்பாவிற்கு சைக்கிள் துடைத்துக் கொடுத்து , குடும்ப நண்பன் ஆகி விட்டான்.
நான் கூட “அடடா இந்த யானையும் பால் குடிக்குமா ங்கிற மாதிரி இருந்து இப்படி சாதிச்சிட்டயே” என்று அந்த ஆன்மீக காதலை சிலாகித்தேன்.
சுமுகமாய் போய்க்கொண்டிருந்த அந்த மரோசரித்ராவில் திருப்பம் , வினோதாவின் அப்பா வீடியோவில் ஆங்கிலதிரில்லர் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுதான். ரவியிடம் வீடியோ VCR இருந்தது. அதை அவன் வீட்டில் இருந்து வினோதா வீட்டுக்கு எடுத்துக் போய் சுபயோக சுபதினத்தில்…..படம் பெயர் சரிவர நினைவில்லை “Day of the Jackal” என்று நினைக்கிறேன் ….படம் பார்க்க ஏற்பாடாயிற்று….ஆங்கிலப் படங்களை முழுதும் நம்ப முடியாதாகையால் ..ஜனா முன்னாடி டிவி அருகில் தயார் நிலையில் உட்கார்ந்து இருந்தான். பின்னால் சேரில் வினோதா, நான், அவள் அம்மா, பாட்டி, தாத்தா, அப்பா, கொள்ளுத்தாத்தா மற்றும் ரவி.. படம் விறுவிறுப்பாகவே போனது…திடீரென்று சற்றும் எதிர்பாராமல் ஹீரோ குளித்து விட்டு பப்பி ஷேமாய் வெளியே வந்தான். ரவி திகைத்து….”ஜனா” என்று பதற, தயாராய் இல்லாத ஜனா பதட்டத்தில் “Pause” பட்டனை அழுத்தினான். திரையில் பிம்பம் உறைந்து திகம்பர சாமியாராக ஹீரோ நிற்க, .ரவி மேலும் அலற ஜனா இன்னும் பதட்டத்தில் volume ஐ குறைக்க,,, கொள்ளுத்தாத்தா ஒன்றும் புரியாமல் கண்ணாடியைத் துடைத்து மாட்ட…அந்த களேபரத்தில் நான் எஸ்கேப்…..
அதன் பின்னர் எனக்கும் ரவிக்கும் ஏதோ அற்ப புத்தக விவகாரத்தில் சண்டை வந்து, பிரிந்து , பேச்சு வார்த்தை இல்லாமல் , இதோ இப்போது தான் ஏர்போர்ட்டில் சந்தித்து உருகி அவனுடன் வீட்டிற்கு போகிறேன்
அவன் மனைவி…..நீங்கள் நினைத்தது சரி தான்…வினோதா சிரித்தபடி வரவேற்றாள்
“ உங்கள பத்தி நாங்க நினைக்காத நாள் இல்ல” என்றாள். இது ஒரு வரம் ,...மனைவியின் நட்புக்களை கணவனும் கணவனின் நட்புக்களை மனைவியும் அன்புடன் அங்கீகரிப்பது நெகிழ்ச்சி.
மனம் நெகிழ்ந்து சிரித்தபோது ரவியின் பெண் உள்ளே வந்தாள்…..அசர வைக்கும் அழகு அம்மாவைப்போல்,
அறிமுகம் முடிந்ததும் ரவி அவளிடம் சிடுசிடுப்புடன் குரல் தாழ்த்தி….”யார் கொண்டு வந்து drop பண்ணினான்” என்று ஏதேதோ அதட்டியபடி உள்ளே போனான்--------
சிறிது நிமிடத்தில் வெளியே வந்து என்னிடம்….”இந்த காலத்து பசங்கள நம்ப முடியாது,,, வயசுப் பொண்ண வளக்கறதுக்குள்ள போதும் போதும்னு இருக்கு கண்டவனும் பின்னாடி சுத்தறான்” என்று சலித்துக் கொண்டான்
நான் வியப்போடு அவனைப் பார்த்தேன்…
சுற்றுமுற்றும் தேடினேன்
அவன்..” என்ன தேடறே ?” என்றான்
“உன் மண்டைல அடிக்க ஒரு கட்டைய” என்றேன்
வினோதா சிரித்தபடி என்கிட்டே குடு என்றாள்..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....

வடம் பிடித்த தேர்
என்றும் தடம் மாறாது ...



சித்திரை வருட வாழ்த்துக்கள் 
*******************************
புதிய ஊர் ..
புதிய முகங்கள் ...
புதிய வாழ்கை ...
புதிய சித்திரை பூக்கள் ...
புதிய சித்திரை திருநாள் ...

பூத்த பூக்கள் எல்லாம் புது வாசம் 
வீசி வர !!
புள்ளினங்கள் மெல்லிசையில் புது ராகம் 
பாடி வர !!!
புதுப் புனலும் புவி எல்லாம் புது வேகமுடன் 
மேவி வர !!!
தெள்ளு தமிழ் பாவலரும் தீந் தமிழில் 
பா மொழிய !!!
செங்கதிரோன் கிரணமது திக்கெட்டும் 
பரவி வர !!!
சித்திரை மகளாரை இத்தினத்தில் எதிர் 
பார்த்து ..
இத்தரணி தமிழர் எல்லாம் 
மஞ்சளொடு குங்குமமும் ,
மாவிலை தோரணமும் 
நெல்மணியின் பொங்கலுடன் 
விஜய வருடத்தினை வருக!! வருக !!!
என்றே வரவேற்க காத்து நிற்கும் 
எம் அனைத்து சொந்தங்களுக்கும் 
அன்பு கனிந்த புது வருட வாழ்த்துக்கள் !!
அனைவருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு 

வாழ்த்துக்கள் 

ஷ்யாம் சுதிர் சிவக்குமார் ..

பகிரளி எண் ...9944066681....

சித்திரை அடை மழையால் கோடைகாலத்தில் பூக்கும் மரங்களின் பூக்கள் வெகுவாக அழிந்துவிட்டது . வேம்பு,புங்கண் மற்றும் இலுப்பை மரங்கள் ... சித்திரை மழை சிவன் சொத்து நாசம் என்பார்கள்.. நமக்கு வியர்க்கவில்லை ஆனால் இந்த அடைமழை இயற்கைக்கு இடைச்சல் தான்..மேற்குத்தொடர்ச்சி மலையில் முன்பு கிடைத்த தேனின் அளவு ஆண்டுக்கு எட்டு டன் ஆனால் இப்போது மூன்றரை டன்னாக குறைந்ததிருக்கிறது. இதற்கு காரணம் பருவம்தவறிப் பெய்யும் மழையால் பூக்கள் பூக்கும் காலம் மாறுவது தான் .தேனீக்கள் மறைந்து விட்டால் மனிதர்க்களுக்கு மிச்சம் இருப்பது நான்காண்டு வாழ்க்கை தான் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்...


நம் கம்பள சொந்தங்கள் அதிகம் இருக்கும் ஊர் ..நம் கம்பள குழந்தைச்செல்வங்கள் படிக்கும் பள்ளி ...ஏதோ உரையை கேட்டு ...ஒரு ips ..ஒரு ias ..ஆகா வாய்ப்பு உள்ளது ...சிறு நம்பிக்கை ..தான் 

வியாழன், 12 ஏப்ரல், 2018

என் இனிய நண்பர் ...உடுமலை Rtn.முருகநாதன் ராஜரத்தினம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...👍💐💐💐💐🌹🌹🌹🌿🌿🌿🌷🌷🌷 — celebrating a birthday with R Muruganathan Rajarathnam in Udumalaippettai.


104 டிகிரி வெயில் ....யம்மாடியோ அடிக்கற வெயிலுக்கு இப்படிதான் இருக்கணும்போல ...ஷ்யாமுடன் திருமூர்த்தி அணை நீச்சல் குளத்தில் — at Thirumoorthy Hills.

திங்கள், 9 ஏப்ரல், 2018

ஏப்ரல் 29...2018...உடுமலையில் தேவராட்டம்
குட்டைத்திடலில் கூடிடுவோம்
ஆயிரம் பேர் அற்புதமாக ஆடக்கூடிய
அற்புதப் பெருவிழா
அனைவரும் வாருங்கள்
பகுத்தறிவுக் கவிராயரையும்
தளி எதுலப்ப மன்னரையும்
நினைவு கூர்வோம் .
வாருங்கள் ஏப்ரல் 29 உடுமலை குட்டைதிடலுக்கு ...
மதியம் ...3.30 மணி அளவில் ...
தொடர்பு எண்கள் ..
கார்த்தி ..SR ..9698082028
அருட்செல்வம் ....9842091244
சிவக்குமார் ...9944066681


அருமை ..மாம்ஸ் ..நீங்கள் சொல்லவில்லையென்றாலும் ...நான் கேட்டு இருக்கிறேன் ...உங்களின் அளப்பறியா சமுதாய சேவையை ...முன்னுதாரணமாக கொண்டு தான் ...நாங்கள் இயங்கி கொண்டு இருக்கிறோம் ...யாருக்கும் சொல்வதில்லை என்று நிறைய பேர் வருத்தப்படுகிறார்கள் ...அவர்களாகவே தன்னிச்சையாக முடிவு செய்கிறார்கள் ...புளிதி வாரி தூற்றி வார்கள் ...அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எங்களின் பணிகளை இளைய சொந்தங்கள் மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ளோம் .....உங்களின் ஆலோசனைகள் ..வழிகாட்டல்கள் ...கடந்த 5 வருடங்களுக்கு மேல் ..உங்களை சந்திக்காமல் ..ஓரிருமுறை தொலைபேசியில் பேசி இருக்கிறேன் உங்களுடன் ....என்றும் உங்கள் ஆசியுடன் தொடர்கிறோம் ...

கண்டிப்பாக தெரிவிக்கலாம் ...தெரிவிப்பது நம் கடமை ...

இந்த வருடம் நம் சொந்தம்..தாய் தந்தை இழந்த மாணவருக்கு கல்வி தொகை ஒரு வருட செமஸ்டர் தொகை ஏற்பாடு செய்துள்ளளோம் ...கல்வி திட்டங்கள் இந்த மாத கம்பள விருட்சம் அறக்கட்டளை தீர்மானத்தில் நிறைவேற்றி செயல்படுத்த உள்ளோம் ..

நம் தம்பிகள் ..அருமை ...திறமையான மாப்பிள்ளைகளை  வைத்துக்கொண்டு ..ஆண்ட்ராயிடு மொபைல் வைத்துக்கொண்டு ...ஜாலியாக ஊர் சுற்றமால் ...வேலைவாய்ப்பை ஏற்படுத்துக்கொண்டு தங்களையும் பாதுகாத்துக்கொண்டு ...நம் வரலாற்றை யம் ,,அரசு துறைகளை தொடர்பு கொண்டு ..ஆவணங்களையும் அள்ளிக்கொண்டு நம்ம வீரத்தின் விளைநிலை பாளையக்காரர் வரலாறுகளை ...நம் சமுதாய தலைவர்களின் வழிகாட்டல்களின்படி ..முன்னேறி கொண்டு உள்ளோம் ...இதில் புதிய தொழில் தொடங்க ஆர்வம் ,அதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டும் ..நல்ல நிறுவனங்களில் சில வருடம் பயிற்சி எடுத்துக்கொண்டு ..அதை மூலதனமாக கொண்டு செயல்பாடுகள் மூலம் செய்துகொண்டு உள்ளோம் ..அதற்கு முழு ஒத்துழைப்பும் ..வழிகாட்டல்கள் கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் செய்துகொண்டுள்ளோம் ...விளம்பரம் இல்லாமல் ...


வேலை யில் இருக்கும் தம்பிகள் ...மாப்பிள்ளைகள் ...தயவு செய்து சொல்லவேண்டாம் என்று என்னிடம் வாக்கு வாங்கி இருக்கிறார்கள் ...ஏன் என்று கேட்டேன் ...உடனே கல்யாண பேச்சு எடுவிடுவார்கள் ..நம் சொந்தங்களின் தூண்டுதல் மூலம் ...ரெண்டு மூணு வருடம் சம்பாதித்து விட்டு ..சொல்கிறோம் ..அது முடிய சொல்லவேண்டாம் என்கிறார்கள் ..நான் என்ன செய்வது மாப்பிள்ளைகள் ,தம்பிகள் வயது 21 டு 24 வயது தான் ஆகிறது ...


கண்டிப்பாக பதிவிடுகிறேன் ...இது என் சமுதாய கடமையும் கூட ...

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நேற்றும் இன்றும் ...கடுமையான சமுதாய பணிகள்..

இன்று காலை தேவராட்ட திருவிழா அழைப்பிதழ் கொடுத்து வரவேண்டிய வேலை (கடமை )..கொடுங்கியதிலிருந்து  இருந்து நானும் ..நம்ம மாப்பிள்ளைகள் ..கார்த்தி SR ..கொடுங்கியம் செந்தில் ..நம்ம jms travels சேகர் அண்ணனுடன்  ,சேர்ந்து பயணத்தை ஆரம்பித்தோம் ...முதலில் நம்ம அருமையா தம்பி கொடுங்கியம் மேகானந்தன் வீட்டுக்கு சென்றோம் ..தம்பி ஆன்மீக பயணம் சென்றுள்ளார்கள் என்றனர் ..அதை தொடர்ந்து தளி ஜல்லிபட்டியில் நூலகர் லக்ஷ்மணசாமி அவர்களை சந்தித்து அழைப்பிதழ் தந்துவிட்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ..இவர் நம் சமுதாய மக்கள் மீது பற்றுகொண்டவர் ..அடுத்தது நம் வைகோ என்று செல்லமாக அழைக்கும் ..கோபால் மாமாவை சந்தித்து அழைப்பிதழ் அளித்து ...அவர்களிடம் விழாவிற்கு  தகந்த ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம் ..
தளிவழியாக பொன்னலம்மன் சோலையில் உள்ள நமது பண்பாட்டுக்களாக பொருளாளர் வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் அளித்தோம் ..அவரும் வெளியே சென்றுவிட்டார் ..வல்லகொண்டபுரம் ...JN பாளையம் ..கோபால் அவர்களிடம் அளித்துவிட்டு ..நம்ம மாப்பிள JN பாளையத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் ஷண்முகம் மாப்பிளையை அழைத்தால் ..மாப்பிளையும்  ஆன்மீக பயணம் சென்றுவிட்டார் ..நம்ம வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் சபரி முத்துவேல் அவர்களை சந்தித்துவிட்டு அழைப்பிதழ் அளித்தது மிக்க மகிழ்ச்சி ..பூவலபருத்தியில் இருக்கும் நம் சொந்தங்கள் ..மோகன் ,விஜய் அவர்களை சந்திக்கலாம் என்றால் அவர்களும் பக்கத்தில் நடக்கும் ரேக்ளா ரேஸுக்கு சென்றுவிட்டார்கள் என்றார்கள் ..கம்பாலப்பட்டி இருக்கும் சொந்தக்களிடம் அழைப்பிதழ் அளித்திவிட்டு ...உப்பிலியனூர் சென்று நம் சொந்தம் வைத்திருக்கும் தேநீர் அருந்திவிட்டு ..அழைப்பிதழ் அளித்து வந்தோம் ..மாமரத்துப்பட்டி ,சின்ன பாப்பனூத்து ,பெரிய பாப்பனூத்து ,விளாமரத்துப்பட்டி ,கொடிங்கியம் வந்துஅடைந்தோம் ...அதற்குள் நம்ம வரலாற்று நடுவம் திடீர் அழைப்பு ..மந்திரி அழைக்கிறார் என்று ...உடனே ..நம் பண்பாட்டு மாநிலசெயல் தலைவர் அய்யா அவர்களையும் அழைத்துக்கொண்டு ...ராமு அவர்களையும் ,பெரியகோட்டை ப்ரெசிடெண்ட் முருகேசன் ,தம்பி தமிழரசன் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்களையும் அழைத்துக்கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்த பொழுது இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் ..தேதி மாற்றமுடியுமா என்று கேட்டு அவரின் ஒப்புதலுடன் வருகிற 29 ஞாயிறு மாலை குட்டை திடலில் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார் ...ஒப்புதல் கிடைத்த உடன் காவல் துறை அதிகாரிகளுடன் சென்று அனுமதி கடிதம் கொடுத்துவிட்டு வந்தவுடன் தான் ஒரு மனநிறைவு எங்களுக்கு ஏற்பட்டது ...இது ஒரு கூட்டு முயற்சி ...பல நெருக்கடிகளை சந்தித்து ..சவால்களையும் மீட்டுஎடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது ...மிக்க மகிழ்ச்சி ...


உடுமலைவாழ் மக்களுக்கும் மற்றுமுள்ள சொந்தங்கள் மற்றும் தமிழக தேவராட்ட கலைஞர்கள் அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

 எதிர்வரும் ஏப்ரல் 22 ல் நடைபெறவிருந்த தேவராட்டப் பெருவிழா
தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு  வாரம் தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 29 ல்

தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.  உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும்

தமிழக செய்தி மற்றும் விளம்பரங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கடம்பூர் இராஜீ முன்னிலையிலும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..பகிரளி எண் ..9944066681...

சனி, 7 ஏப்ரல், 2018

காலத்தால் கரையாத கீதம் ....மக்கள் மனதில் மாமன்னர் ..

நேற்று அய்யா ..கடவூர் மாமன்னர் K K G .முத்தையா அவர்களின் இறப்பு செய்த கேட்டபின் ...கால்கள் நிலையில் இல்ல ...மனதில் ஒரு பாரம் ..கண்களில் கொஞ்சம் நீர்கோர்த்துக்கொண்டது ...நானும் ,பண்பாட்டு கழக மாநில செயல் தலைவர் .அய்யா .முருகவேல் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் .அருட்செல்வம் ..காலையில் கடவூரை நோக்கி பயணித்தோம் ....

கடவூர் மக்கள் மனதில் ,மாசற்ற பொன்னே ,
அள்ளிக்கொடுத்த வள்ளலே ,
எங்கு காண்போம் ...உந்தன் திருமுகத்தை
எப்படி ஆற்றுப்படுத்துவோம் ..
கண்ணீரால் நனைகின்றோம் ..
காமராஜரின் அருமை நண்பரே ..
காமராசரால் கடவூரின் முத்தே என்றைழைக்கப்பட்ட எங்கள் சொத்தே
கக்கனின் உற்ற தோழரே ..சமூகத்திற்காக  உழைத்திட்ட பெரியாரால்
உச்சரிப்பில் மகனே என்றழைக்கப்பட்ட மாந்தரே
எத்தனையோ பணிகள்
எங்கள் நெஞ்சக் கண்ணில் சொல்லி அழுகிறது ..
கடவூர் சட்டமன்றத்தின் நாயகராகவும்
மருங்காபுரி மாசற்ற மனிதப் புனிதராகவும்
ஐந்து முறை இருந்தீர்கள் ..ஐயமாக இருக்கிறது ...
ஈடில்லாப் பணிகள் ...
இலங்கையிலும் உந்தன் கால்கள் பதித்துவிட்டாய்
ஆரம்பபள்ளிக்காக ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்தாய்
அது மட்டுமல்ல
உயர்நிலைப்பள்ளிக்காக ஏழு ஏக்கர் நிலம் கொடுத்தாய்
உங்களது உயரிய குணத்தால்
பொன்னணி நீர்தேக்கத்திற்காக
270 ஏக்கர் நிலம் அள்ளிக்கொடுத்தாய்
நாங்கள் தண்ணீரை குடிக்கிறோம் ..
அப்பொழுதும் உந்தன் மனம் அடங்கவில்லை
360 ஏக்கரை முழுசாக கொடுத்திட்ட
ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராகவும்
முத்தே ..எங்கள் கடவூரின் சொத்தோ
தண்ணீரை கொடுத்து கண்ணீரை வரவழைத்த
இருபத்தைந்தாண்டு நாயகரே ..
இன்னும் ஒரு முறை வாராதோ ...
எங்களது நெஞ்சில் ஈரம் ..இன்னும் மறையவில்லை ..
எத்தனையோ நேரங்கள் எத்தனையோ காலங்கள் ..
இறப்பே ..உனக்கு இறப்பு வராதோ ..மரணமே ..
எங்களது மண்ணின் மைந்தனை கொண்டு செல்ல மரணமே ..
எப்படி துணிவு வந்தது ..கே கே ஜி ..தனிமனிதரல்ல ..
எங்களது மனதில் குடிகொண்டுள்ள கடவுள் ..
எங்களது மக்களின் நெஞ்சத்தில் மறையா உருவம் ..மறைந்த விட்டது  உருவம் ..மறையாது அவரின் நினைவு கீதம் ..கடவூர் நெஞ்சங்களின் சோகம் ..கடந்துவிட்டது கடவூர் ..
மக்களின் மனதில் கரைந்து விட்டது ......




ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் கே.கே.ஜி.முத்தையா காலமானார்..!
Saturday, 07 Apr, 8.39 am
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் ஜமீன் கே.கே.ஜி.முத்தையா இயற்கை எய்தினார். ஏராளமானோர் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1957-ம் ஆண்டு பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ-வானார் முத்தையா. கடவூர் ஜமீனான அவர், அதன்பிறகு 1962-ம் பீரியடிலும் அதே பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் நிற்க வைக்கப்பட்டு வெற்றிவாகை சூடினார். அதன்பிறகு,1967-ம் சட்டமன்றத் தேர்தலில் கடவூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அப்போது தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் தி.மு.க கட்சி ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான அன்பில் தர்மலிங்கம்.
அதன்பிறகு,1971-ம் ஆண்டில் அதே கடவூர் தொகுதியில் நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல்,1977-ம் ஆண்டில் கடவூரில் இவரைத் தோற்கடிக்க, அப்போதைய ஆளுங்கட்சியினரால் கடவூர் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருந்தாலும், அருகாமை தொகுதியான மருங்காபுரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களம் கண்டு ஐந்தாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார்.
அதன்பிறகு, பல்வேறு உள்ளாட்சி மன்ற பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். மூப்பனார் காங்கிரஸிலிருந்து பிரிந்து த.மா.கா கட்சியை ஆரம்பித்தபோது, கருப்பையா அந்தக் கட்சியில் ஐக்கியமானார்.
இவர் தந்தை பெரியார், காமராஜர், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர், கலைஞர், மூப்பனார், மா.பொ.சி, சிவாஜி கணேசன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரோடு நெருங்கிப் பழகியர். இவர் கரூர் மாவட்டத்தில் அசைக்க முடியாத தனி செல்வாக்கு உடையவராக இருந்து வந்தார். இவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அந்தத் தொகுதிவாசிகள் யாரும் இவரை எதிர்த்துப் போட்டியிட அஞ்சுவார்கள்.
அதனால், அவரை எதிர்த்து வேட்பாளர்களை வெளி மாவட்டங்களிலிருந்துதான் மாற்றுக்கட்சியினர் தேடிப் பிடித்து நிறுத்துவார்கள். அந்த அளவுக்குச் செல்வாக்கானவர். கடவூர் ஜமீன் என்றாலும், எல்லோரிடமும் இறங்கிப் பழகுவார். அதனாலேயே, அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்" என்கிறார்கள் கடவூர்வாசிகள். வயோதிகம் காரணமாக அவர் இயற்கை எய்தினார். இவருக்கு கார்த்திக், தொண்டைமான் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


நன்றி ...தகவல் ..திருப்பதி தேவராஜன் ...மாவத்தூர் ..கடவூர் ...



மன்னரின் அரசியல் வாழ்க்கை பற்றி கேட்டவர்களுக்காக இதை பதிவு செய்கிறோம்.

#கடவூர்  ஜமின்தார் ஐயாகே.கே.ஜி முத்தையா அவர்களின் அரசியிலில் அனுபவம் பல வற்றில் இன்று உங்களுக்காக ஒன்று

ஜமின் ஐயா.அவரகள் #நான்காம்முறையாக சட்சபை தேர்தலில் திரு #அன்பில்தர்மலிங்கம் (அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாட்டனார்)அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்..

யராலும் வெல்லமுடியாத காரணத்தினால் கிருஷ்ணராயபுரம் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது சில காரணங்களைக் காட்டி...

நான் எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன் என்பதைக் காட்ட மக்கள் மன்னர் மருங்காபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அப்போது #மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அப்போதைய முதல்வர #எம்.ஜி.ஆர் அவர்கள் மருங்காபுரி தொகுதி எல்லைஆரம்பிக்குமிடத்திலிருந்து தொகுதியின் எல்லை முடியும் வரை தன் காரிலிருக்கும் கட்சி கொடியை கழட்டிவிட சொன்னாராம்.

மருங்காபுரியில் கடவூராருக்கு எதிராக நான் பிரச்சாரம் பண்ணியதாக இருக்ககூடாது
அதனால் கொடியை கழட்டிவிடுங்கள் என்று சொல்லி மருங்காபுரி தொகுதியைத்தாண்டி செனறுவிட்டாராம்.

அந்த தேர்தலில் ஐயா.முத்தையா  அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.

அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டார்கள்.

மாற்றுக் கட்சிகாரர்கள் மதிக்கும்அளவிற்கு அரசியலில் இடம் பெற்றவர் தான் நம் மன்னர்..

நன்றி ...தகவல் ..செல்வம் திண்டுக்கல் ...





















வெள்ளி, 6 ஏப்ரல், 2018

Thiruppathi  devarajan
கம்பள விருட்ச குழுமம் :

இன்று கடவூர் சமஸ்தானத்தின் இமயம் சரிந்தது இதயம் இடிந்தது
இமைகள் இருண்டது
உள்ளம் உருகியது
கண்ணீர் துளியும்
உதிர்ந்தது

ஆழந்த அனுதாபங்களுடன்
 ஐயாவை பற்றிய  மறக்க முடிய  செய்திகள்

நாயக்கர் கால வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவை பாளையபட்டுக்களும் குறுநில மன்னர்களாட்சிகளும் அவர்களால் நிறுவ பட்ட கோவில்களுமே தான் இவை ...

பிரிசித்தி பெற்ற பாளைங்கள் மட்டுமே அனைவரும் அறிந்ததாகா உள்ளன  மித  மிஞ்சிய பாளையங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமலே போய் விட்டது நெடுநாட்களாக தேடி திரிந்து கிடைத்த சில வற்றை இங்கு பகிர்ந்துகொள்ள கடமை பட்டு உள்ளேன்

பழமை வாய்ந்த மன்னர்களாக வாழ்ந்த இடம் பல்லேரி தேசமது நகர்ந்த காலத்தில் (தற்போது உள்ள கடவூர் ஜமீன் )
அங்கு அங்கு இருப்பிடம் கண்டு ஒரு தலைமுறை காலம் வாழ்ந்து பின்பு தென்னகம் நோக்கியா பயணங்களில் முதலில் கோட்டை அமைத்து ஆண்டு வந்த புலி குத்தி குறி கண்ட முத்தா நாயக்கராவார் ...


இவர் மழசை எனும் இடத்தில் முதன் முதலாக தன் பாளையத்தினை நிலை நாட்டி குறு நில மன்னராக ஆண்டு வந்தவர்
அங்கு வாழ்ந்த காலத்தில் அவ்வழியாக வந்த ரிஷிமார் ஒருவர் ஒரு பெட்டியை குடுத்து இந்த பெட்டியுடன் நீர் செல்லாலாயின் இந்த பெட்டி எங்கு நிலை கொள்கிறதோ அங்கு நீர் கோட்டை கட்டி ஆளலாம் என்று கூறி அந்த பெட்டியை புலி குத்தி முத்தநாயக்கரிடம் குடுக்க அதை வாங்கி கையில் வைத்து கொண்டு அங்கு வறட்சி அதிகமாகவே கம்பளத்துடன் அங்கு இருந்து தென்னோக்கி நகர்ந்து உள்ளார்கள்


 இரவு பகல் என பல ஆனது நகர்ந்த வண்ணம் இருந்து இறுதியில் ஒரு இடத்தில் இரவு தங்கி உள்ளார்கள் மக்களுடன் மன்னரும் அன்று காலை பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு அழகிய கற்சிலை இருந்துள்ளது இது தான் நமக்கு சிறந்த இடம் என்று எண்ணி அங்கு கோட்டை கட்டளானார் புலி குத்தி முத்தாநாய்க்கர் அங்கு கம்பளத்து மக்களும் மன்னரும் சேர்ந்து கோட்டை மதில் சுவர்களை எழுப்பி நிலை நாட்டிய இடம் தான் தேவர்மலை...


தேவர் மூவர் முப்பத்தி முக்கோடி தேவர்கள் சங்கமித்த முக்கூடல் நடந்தது நகர்ந்த இடமாம் தேவர் மலை இங்கு தான் இரண்டாவது கோட்டையயை கட்டி ஆண்டு வந்து உள்ளார்கள் அப்பொழுது அங்கு இருந்து கிழக்கே வடக்கே மேற்கு தெற்கில் என்று பகுதிகள் பல ஆயிற்று மன்னரின் கட்டு பாட்டில் இருந்தாயிற்று
 அப்பொழுது வடக்கே காவேரி ஆற்றங்கரை வரை எல்லைகளை கொண்டு உள்ளது என்பதற்கு தற்போது உள்ள குளித்தலை கடம்பனேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த எடுத்து காட்டு.


 இன்றும் அங்கு கல் தூண்களில் ஜமீன் மன்னரின் திருஉருவ சிலை உள்ளது சிறப்பே. அங்கும் ஐயர்மலை ரத்தினாகிரீஸ்வரர் கோவில் மலை இடுக்குகளில் உள்ள ஒரு சிறப்பிடம் இவையும் இந்த மன்னரின் கட்டு பாட்டில் இருந்த ஒன்றாகும் இந்த மலை மேல் காக்கைகள் பறப்பதில்லை என்பது இதன் சிறப்பாகிறது
அப்பொழுது முதல் தற்போது வரை கம்பளத்தார்கள் முன்னுரிமை கொண்டாடும் ஒரு இடமானது

இன்றளவும் வருடத்தில் ஒரு முறை தேர் திருவிழா நடக்கும் இதில் ஒரு பகுதி நம்மவர்கள் இழுக்கும் உரிமையை பெற்று உள்ளார்கள் என்பது


தேவகிரி தேவர்மலை பகுதியில் வாழ்ந்த காலத்தில் புலி குத்தி குறி கண்ட முத்தநாயக்கர் அவர்கள் தன் மகன் கருணைராகவ முத்தையா நாயக்கருக்கு தலைமலையை ஆண்ட ராமச்சந்திரா நாயக்கரின் மகள்களை மனம் முடித்து வைத்து உள்ளார் அவர்க்கு நான்கு மகன்கள்...
கருணை கிரி முத்தையா நாயக்கர் (முள்ளிபாடி )
சாமாநாயக்கர்(ராமகிரி ஜமீன்)
கண்டமநாயக்கர்( கண்டமனூர் ஜமீன்)
தொட்டப்ப நாயக்கர் ... (உசலம்பட்டி தோட்டப்பநாயக்கனூர் ஜமீன்)
தற்போது நான்கு ஜாமின்களாயாற்று ..

 தேவர்மலையில் இருந்த போது அங்கு கோவில் அமைக்கப்பட்டு வணங்கி வந்துஉள்ளனர் அந்த கோவில் தான் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலாகும்.இங்கு பலமை வாய்ந்த கல் வெட்டுக்களில் இவற்றை பற்றி தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது.
இங்கு தீர தொட்டி அமைத்து அதில் ராமர் லட்சமரும் சீதை அனுமன் ஆவர்கள் வானவசம் சென்ற போது இங்கு இருந்தமையால் தண்ணீர் தானாக ஊற்று எடுத்து ஓடியமையால் இங்கு ஒரு தீர தொட்டி அமைத்து அதனுள் புலி குத்தி குறி கண்ட முத்தாநாயக்கர் சிலையும் அமைத்து உள்ளனர்


 தொட்டியினுள் அங்கு இருந்து சுற்று புற கோவில்களையும் நிறுவி உள்ளார்கள் அப்படி நிறுவ பட்ட ஒன்று மேட்டுபட்டி துர்கை அம்மன் கோயிலாகும் இங்கு ஏழு வருடங்களிற்கு ஒரு முறை விலங்கினம் எருமைகள் வெட்ட பட்டு சுத்து பதினெட்டு பட்டு கிராமங்கள் சேர்ந்து ஒரு வார காலம் கொண்டாடும் ஒரு திருவிழாவாகும் . இவை ஜமீன் காலத்தில் கட்டப்பட்டது.
பின்பு அங்கு இருந்து நகர்ந்து முள்ளிபாடி என்ற இடத்துக்கு வரவே அங்கு கருணைராகவ முத்தையா அவர்கள் கோட்டை அமைத்து அங்கு வாழ்ந்து உள்ளாராகள் மீதம் உள்ளவர்கள் தெற்கில் நோக்கி பயணத்தில் சென்று ஜமின்களில் கோட்டைகள் நிறுவி ஆண்டுள்ளார்கள்...

 முள்ளிப்பாடியில் இருந்து கடவூர் மலைக்கு வேட்டை செல்வது வழக்கமாக கொண்ட முத்த நாயாக்கர் மலையினுள் ஒரு கோவிலை கண்டு வணங்கி விட்டு சென்றுள்ளார்
அன்று வேட்டை சிறப்பாக அமையவே அன்றுலிருந்து வணங்கி விட்டு செல்வது வழக்கமாகவே...

 நாளடைவில் அங்கு கோவிலை எழுப்ப வேண்டும் என்று கனவில் கூறவே அந்த மலையில் கருணை கிரி பெருமாள் கோவிலை எழுப்பினாராம் பின்பு அதன் அருகிலே கோட்டையும் அமைக்க வேண்டும் என்று கனவில் கூறியதால் அந்த இடத்திற்கு பசு மாட்டினால் உனக்கு இடம் தேர்வாகும் என்று கூறியதை போல் அங்கு கோட்டையும் ஆனது கோவிலை சுற்றி மலையாக இருந்த காலம் போய் தற்போது மக்களாக ஜமினும் வாழ்ந்து வருகிறார்கள் ..


 இன்றளவும் கடவுர் ஜமீன் என்றாலே அப்பகுதி மக்கள் வணங்கி செல்லும் அளவிற்கு மதிப்பு மிக்க ஜமீனானவர் ஐயா கருணை கிரி முத்தையா நாயக்கர் ...

இவர் வாழ்க்கையில் அரசியல் துறையிலும் ஓங்கிய நிலையில் காமராஜர் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் ஆனா முதல் கம்பளத்து நாயக்கர் ஆவர்...

அய்யா அவர்களின் இழப்பு ...கம்பள சமுதாய மக்களுக்கு ஈடு செய்யமுடியாத

இழப்பு ...கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் ....