ஞாயிறு, 7 அக்டோபர், 2018

Karthic KVT:
07/10/2018
ஒட்டுமொத்த தமிழகத்துக்கும்
ரெட் அலர்ட் கொடுத்து திரும்பப் பெற்ற நாளின்
அதிகாலை நேரம் ..

ஏகோபித்த எதிர்பார்ப்புக்கிடையில் ஆதவன் மெல்ல தன் புத்தொளிகற்றைய பூமியில் பாய்ச்சிய தருணத்தில் மெய்சிலிர்த்து
அடுத்தடுத்து நிகழ்த்தும் அட்டவனை பணிகளை அசைபோட்ட படி
எனது இருசக்கர வாகனத்தின் இயந்திரத்துக்கு உயிர்கொடுத்தேன்

பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தோழனாய் வந்துசேர்ந்தான் என் தமையன் திருப்பதி தேவராஜன் ...

திட்டமிட்ட நேரத்தை விட சில மணித்துளிகள் அதிகமாக செலவானதாலும்
உயிர்த்தோழன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும்
வாலிபனாய் எனது மைந்தன்
பொன். தமிழரசன் காத்திருந்தலும்
மேலும் ஓர் பரபரப்பு மனதில் தொற்றிக்கொள்ள
நேற்று அடாத மழையிலும் சஞ்சீவி மலையடிவார சந்தையில் தேடித்தேடி தரம்பிரித்து வாங்கிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு
எனது தமையன் செந்தில்குமாரையும்
சேர்த்துக்கொண்டு
மூவராக வந்துசேர்ந்தோம்
தளி கோட்டை மரியம்மன் கோவிலுக்கு ...

மாற்றத்தையும் முன்னேற்றத்தையும்
ஒருங்கே விதைக்கும் மற்றொரு அண்ணனான ஆசிரியர் மாரிமுத்து அண்ணாவையும் சேர்ந்து
பஞ்ச பாண்டவர்களாய்
பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தை அனுக

செல்பேசி உயிர்பெற்று செல்லமாய் சினிங்கியது மறுமுனையில் ஒலித்தது தலைவரின் குரல்

நமஸ்காரம் மாப்பிள்ளை
நா கெளம்பிட்டனுங்க !!
இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பமுங்க

அட்வகேட் சாரு அக்கா எல்லோரும் சேர்ந்தே வர்றோருமுங்க என்றபடிஇனைப்பை துண்டித்தார்

அடுத்தடுத்த தேவைகளை அட்டவனை படி தயார் செய்து முடிக்கவும்
சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்

இத்தகைய பரபரப்புக்கிடையில்
உடலியக்கம் நடைபெற
உருபொருள் தேடி
உடல் தன் வேலையைச் செய்யவே
நால்வரும் இனைந்து
இட்லி மற்றும் தக்காளி தேங்காய் சட்னிகளுடன் முடித்தோம் எங்கள் காலைச்சிற்றுண்டியை ...

இத்தகு இடைவெளியில் இடம் கேட்டு தொடர்பு கொண்ட எனது அண்ணன் சண்முக சுந்தரம்

நேனு பொள்ளாட்சின உண்டி கெளம்பேனு கெடிமேடு வழியாத ஒத்து மனிசொந்தாலு எவரேசி உண்டிதே ராவச்சு என்று தொடர்புகொண்ட அசோகன் மாமா

மண்டபம் தளிய தாண்டி போகனுங்களா மாப்பிள்ளை  என்றபடி இடம் வந்த காளிமுத்துமாமா
தளில இருந்து பஸ் மாறனுமா?  என்றபடி வந்து சேர்ந்த செல்வராணி அக்கா

வரும்போதே வரவேற்பிற்கு மாதுளை திராட்சை ஆப்பிள் ஆரஞ்சு பழங்களுடன் வந்துசேர்ந்த கார்த்தி அண்ணா
செயலாளர் வந்ததும் செயல்வேகமெடுக்க
குறித்த நேரத்தில் வந்த கேப்டன் நித்தி மாமா மற்றும் மணிராஜ் சவுண்ட் சர்வீஸ் தினேஷ் மாமா
கேமரா & புரொஜெக்டருடன் நுழைந்த நண்பர் வெங்கடேஷ்
இன்னும் பல சொந்தங்கள் முன்னிலையில்
முருகராஜ் அண்ணனை தலைமேற்று வழிநடத்த முன் மொழிந்தேன்
அதை பொருளாளர் தமிழரசன் வழிமொழிய
இனிதே துவங்கியது இரண்டாமாண்டு கலந்தாய்வு

முன்னின்று வழிநடத்த மேகனந்தன் மாமா செந்தில் அண்ணா
சிறப்புரையாற்ற வருகைதந்த கல்வியாளர் சக்திவேல் மற்றும்
அனுபவ உரை வழங்க கொடிங்கியம் சீனிவாசன் மாமா
மக்கள் பாடகர் வேலுமணி ஆகியோரை மேடையேற்றி உரைபகற தொகுப்பாளர் மாரிமுத்து அண்ணன் அழைக்க

அடுத்து வந்து இணைந்து கொண்டனர் தனசேகர் மாமா
மனோகர் அண்ணா
ராஜபாண்டியன்அண்ணா

ஆகியோரை வரவேற்று வரவேற்புரை நான் முடிக்க

அடுத்து வந்து வாசித்தார் செயலாளர் ஆண்டறிக்கை அதைத்தொடர்ந்த
பொருளாளர் நிதி அறிக்கை

நா போடிபட்டி தாண்டிட்டேன் மாரியம்மன் கோவில் ஸ்டாப்புனு
முன்னாடியே மெசேஜ் போடமாட்டீங்களா என்று திட்டியபடி வந்து சேர்ந்த வழக்கறிஞர் சிவரஞ்சனி

அரசுத்தேர்வுகள் பற்றி எடுத்துரைத்த
சிறப்பு அழைப்பாளர் சக்திவேல்
அவருக்கு பொன்னாடை போர்த்தி
நினைவு பரிசை நல்கி மரியாதை செலுத்திய ஊரக வளர்ச்சித்துரை ஜெயப்பிரகாஷ்அண்ணா

அதைத்தொடர்ந்து
மக்கள் இசை பாடல் மூலம் வரலாற்றை முன்மொழிந்த மக்கள் பாடகர் வேலுமணி அண்ணா
அவருக்கு மரியாதை  செலுத்திய செந்தில்ராமன்அண்ணா

எதிர்கால திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த சிவக்குமார் மாமா

அனுபவ உரை கொடுத்த சீனிவாசன் மாமா

இனையதளம் அறிமுகம் செய்து கருத்தளித்த அசோகன் மாமா

என அடுத்தடுத்த வரிசைபடுத்தி
அடுக்குகடுக்கு மொழிபகன்று அழகுத்தமிழில் எடுத்துரைத்த மாரிமுத்து அண்ணா

இடையே உறவினர் அனைவருக்கும்
தேநீர் உபசாரம் செய்த
சண்முகவடிவேல்
காளிமுத்து
கேப்டன்
என விழா நிகழ்வுகள் சூடுபிடிக்க
சிறப்புறை ஆற்றிய
சுக்காம்பட்டி பாளையக்காரர்
ராஜேந்திர குமார பாண்டி அண்ணா
தனசேகர் மாமா
விரிவுரை கொடுத்த சாமிகுணம் சித்தப்பா
தன் கருத்தை தயக்கமின்றி எடுத்துரைத்த
அர்ஜுன் மாப்பிள்ளை

சிந்து கவி தந்தையின் சிறப்புரை வரிகளுடன் சமுகத்தை மேம்படுத்த நினைக்கும் காளிமுத்து

வீடுதோறும் ஓர் குடியுரிமை பணிபுரியும் அதிகாரியை உருவாக்க கனவு காணும் திருப்பதி தம்பி
தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் சின்னச்சாமி அண்ணா
சிறுசேமிப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்த ஜெகதீஸ்வரி அக்கா
சுய உதவிக்குழுக்கள் பற்றி உரையாடிய
செல்வராணி அக்கா

அரசுத்துறைகள் பற்றி எடுத்துரைத்து
RC வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்க என்ற சாமிகுணம் சித்தப்பா
என அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் ஆனந்தக் கூத்தாடி
அன்பளிப்புகளை அள்ளிவழங்கி விழா சிறக்க உதவி செய்த உள்ளங்களும்
ஒரு சொட்டு துளியின்றி விலக்களித்த வருணனுக்கும்
நன்றியுரை பகன்று நாட்டுப்பண் பாடி நிறைவு செய்தோம் இன்றைய கலந்தாய்வை


இனிவரும் காலம்
     இனிமேலும் தொடரும் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக