சனி, 27 அக்டோபர், 2018

திரு .அருண்ராஜ் -மாலதி -மணமக்கள் திருமண வரவேற்பு நிகழ்வு
உடுமலைப்பேட்டை ..

இன்று மாலை எனது நண்பர் கேரள தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் ..மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்றிருந்தது மிக்க மகிழ்ச்சி ..
என் ஆசிரியர் நண்பர்கள் குமரலிங்கம் ஆசிரியர் திருநீலகண்டன் ,ஓவிய ஆசிரியர் மதன்குமார் ,
பெதப்பம்பட்டி என் .வீ .பள்ளி ஆசிரியர் நண்பர்கள் சக்திவேல் ,ஆசிரியர் முருகேஷ் அவர்கள் ,
பொட்டிநாயக்கனூர் தலைமை ஆசிரியர் சீத்தாராமன் அவர்கள் ,
ஓட்டுநர் ஆண்ட்ரு அவர்கள் ,எனது பள்ளி தோழர் கண்ணன் அவர்கள் ,
A .நாகூர் பள்ளி ஆசிரியர் செல்வகுமார் ..ஆகியோருடன் சந்தித்து கலந்துரையாடியது பயனுள்ள திருமணவிழாவாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி

ஆசிரியர் நண்பர் முருகேஷ் அவர்கள் திருமண வரவேற்பு விழாவில் பாடல்கள் பாடியது மிக அருமை ..ஆசிரியர் நண்பரின் வகுப்பில் பாடம் எடுத்து தான் பார்த்துஇருக்கிறேன் ..பக்கத்தில் உக்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் ..அவரது தொலைபேசியில் இருந்த பாடல் ஒலித்தது ..பாடல் அருமை என்று பாராட்டினேன் ..நானும் ஓரளவுக்கு பாடுவேன் என்றார் ..பாடுங்களேன் ஆசிரியர் நண்பர் திடீர் என்று அழைத்து மைக் கொடுத்து எங்களுக்காக பாடுங்களேன் என்று கேட்டுக்கொண்டோம் ..அருமையான குரல்வளம் ஒரு மணிநேரம் அழகான பாடல்கள் பாடி திருமண சொந்தங்களை மகிழ்வித்தது அருமை ..ஆசிரியருக்குள்  இப்படி ஒரு திறமை என்று நேரில் பார்த்து பாடிய பாடல்கள் அருமை ..உங்கள் குரல் வளத்திற்கு பாராட்டுக்கள் ...

திரு .அருண்ராஜ் -மாலதி -மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக