வெள்ளி, 12 ஜனவரி, 2018

Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

அந்நிய ஏகாதிபத்தியம் மற்றும் உலகமயமாக்கள் கொள்கைகளால் உருத்தெறியாமல் சிதைக்கப்பட்டு எச்சங்களாய் மீண்டிருக்கும் உள்ளூர் வரலாறுகளை மீட்டெடுக்கும் முயற்ச்சியின் முதற்படியாக

1.தளி பாளையத்தை ஆண்ட மக்கள் மன்னர் கீர்த்தி வீரர் எத்தலப்பர் நினைவாக நினைவுத்தூன் அமைக்கவேண்டியும்

2. அவர் தொடர்பான ஆவணங்களை அரசு வருவாய்துறை பதிவேடுகளில் பதிவுகள் ஏற்படுத்தவும்

3. அவர் தொடர்பான செய்திகளை மாவட்ட பாடத்திட்டத்தில் கொண்டுவரவும்

4. மக்கள் மற்றும் செய்தித்தொடர்புத்துறையின் கீழ் எத்தலப்பர் தொடர்பான ஆவணங்கள் பதிவிடவும்

5. எத்தலப்ப மன்னர் மற்றும் அவர் வம்சாவளியினரின் கற்சிலைகளை பாதுகாத்து பராமரிக்கவும்

மாவட்ட வருவாய் அலுவலரை சந்திந்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களாக

1. திரு. லெனின் பாரதி
2. திரு.  சிவக்குமார்
3. திரு. அருட்செல்வன்
4. திரு. கொழுமம் ஆதி
5. திரு. கார்த்திக்குமார்

ஆகியோரால் மனு அளிக்கப்பட்டு மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்க எடுக்க ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலரான திரு. பிரசன்ன ராமசாமி அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தார்

இன்று இளைஞர்களின் வழிகாட்டி விவேகானந்தர் பிறந்த நாள் நிகழ்வாக  .....இன்று சிறிய சமுதாய பணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக