ஞாயிறு, 21 ஜனவரி, 2018

நம் கம்பள சமுதாயத்தில் ....ஒரு மைல்கல் ....
THE TAMIL NADU COMMERCE INSTITUTES ASSOCIATION..)
Coimbatore ...Tripur ..district .
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் கோவை -திருப்பூர் மாவட்ட சங்க கிளையில் பொன்விழா ஆண்டு கூட்டம் கோவை குஜராத் சமாஜம் உள் அரங்கில் 21-01-2018 -ம் நாள் ஞாயிற்று கிழமை காலை 9.00 மணியளவில் துவங்கியது .
கூட்டத்திற்கு கோவை திருப்பூர் மாவட்டங்களின் தலைவர் திரு .முருகவேலு தலைமை வகித்தார் ..பொன்விழா ஆண்டு சங்க கூட்டத்திற்கு நீதியரசர் திரு வீ .தங்கராஜ்  M .A .M .L .,அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஒரு எழுச்சி உரையாற்றினார் .நீதியரசரின்  பேச்சு  அனைவரின் கவனைத்தயும் ஈர்த்தது .தட்டச்சு கல்வி கல்வித்துறையிலும் வேலைவாய்ப்பு துறையிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பேசினார் ..
நீதி துறையிலும் ,கல்வி துறையிலும்  மற்றும் வேலைவாய்ப்புத்துறையிலும்
தட்டச்சர் ,மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியின் முக்கியத்துவத்தையும் பயிலாக உரிமையாளர்கள் மாணவ ,மாணவிகளுக்கு எவ்வாறு இந்த பாடங்களை கற்பிக்கவேண்டும் என்றும் ,தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சுருக்கெழுத்தாளர் பணி எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து அதனால் அவருக்கு தேடி வந்த பதவி உயர்வுக்கும் பற்றி பேசியது கூட்டத்தினர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது .குறுகிய நேரமே பேச ஒதுக்கப்பட்டதால் ஒரு சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் பேசிவிட்டு தன உரையை முடிக்கும் தருவாயில் நீதியரசர் திரு .வீ .தங்கராஜ் அவர்கள் தன் கூட்டு குடும்பத்தில் சுமார் 150 பேர்இன்னமும் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர் .அனைவர்க்கும் ஒரே சமையல்தான் என்று கூறியதும் கூட்டம் நெகிழ்ச்சியில் ,மகிழ்ச்சியில் ,வியப்பில் ஆழ்ந்தது கூட்டத்தில் அனைவரும் பாராட்டி வியந்தனர் ...ஒரு சிறிய செய்தியை பேசி நீதி யரசர் தன் உரையை முடித்தார் ...

கூட்டத்தின் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் தலைவர் திரு .T .ரவிச்சந்திரன் கலந்துகொண்டார் .மற்றும் ஒரு சிறப்பு விருந்தினராக கோவை பண்டிட் நேரு வித்யாலத்தின் தாளாளர் .திரு .மாரியப்பன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் .
பொன்விழா ஆண்டு மலரை வணிகவியல் பள்ளிகளின் மாநில தலைவர் வெளியிட சிறப்பு விருந்தினர் நீதியரசர் திரு .வீ .தங்கராஜ் அவர்கள் ,பண்டிட் நேரு வித்தியாலயத்தின் தாளாளர் .திரு .மாரியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டனர் .

இந்த பொன்விழா ஆண்டு கூட்டத்தில் உடுமலைப்பேட்டை திரு .K .முருகவேல் அவர்கள் ,கோவை திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களின்  தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் .பொள்ளாச்சி திரு .கே.ஸ் .ராமன்  நன்றிகூற கூட்டம் இனிதே முடிவுற்றது ..

இன்று நடந்தவணிகவியல் பள்ளிகளின் விழாவில்  நமதுகம்பள பண்பாட்டு கழக  சமுதாய இரு பெரும் தலைவர்கள்..கலந்துகொண்டு சிறப்பித்தது ..நம் சமுதாய வளர்ச்சிக்கு ..முன்னேற்றத்திற்கும் ..ஒரு மைல்கல் ...நம் வருங்கால எதிர்கால கம்பளக்குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெருதும் உதவும் ..நம் சமுதாய சொந்தங்கள் ..இது மாதிரி முன்னோடி நிகழ்வுகள் கலந்துகொண்டால் ..நம் குழுவுக்கு பகிருங்கள் ..வாழ்த்துக்களுடன் .உங்களின் .சிவக்குமார் உடுமலைப்பேட்டையிலிருந்து ....

மன்னிக்கவும் ...இனி வரும் காலங்களில் ...இது மாதிரி விழாக்கள் என்றால் முன்னரே அறிவித்து விடுகிறேன் சார் ...நமது நீதியரசர் கேட்டார் ..நம் சொந்தங்கள் யாரவது உள்ளார்களா ..என்று கேட்டார் ..உங்களின் பெயரைத்தான் சொன்னேன் ..நீங்கள் இருப்பது காளப்பட்டி அருகில் ..விழா சிறப்புரை உரை முடிந்து ..அவருடன் மருதமலை அழைத்துச்சென்று முருக கடவுளின் தரிசனம் செய்துவிட்டு ...மதியம் சிறப்பு விருந்தினருக்கு விழக்கமிட்டியினர் அன்பு கட்டளை செய்து இருந்தனர் ..மதியவிருந்து எங்களுடன் தான் என்று ...நேரம் குறைவாக இருந்ததால் ..preplan செய்யமுடியவில்லை சர்ர் ...












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக