ஞாயிறு, 7 ஜனவரி, 2018

தேனிக்கார பொண்ணு .....

இன்று ஞாயிறு சந்திப்பு .,...தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில்  நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம்  செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி  அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு  இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார் ..அவர் நம்மிடம் தெரிவித்த தகவல்களை ..நம் சமுதாய மக்கள் இவரிடம் தகவல்களை பெற்று ..பயனடைவதுக்கு இந்த பதிவு ...அவர் பொறுப்பு வகிக்கும் குழுவிற்கு ..திருப்பூர் மாவட்டத்தில்
பெண் தொழில் முனைவோர்களை கண்டறிந்து பெண்கள் 12 பேர்கள் கொண்ட குழுக்களை அமைத்து ..அவர்களுக்கு அரசு அளிக்கும் ,சிறு சேமிப்பு வங்கி கணக்கு மாதம் 100 ரூபாய் செலுத்தி அதன் மூலம் தேவைப்படும் பெண்களுக்கு அதை உதவி தொகையாக தரப்படும் ,அக்குழுக்களில் அதன் செயல்களை தீர்மானமாக  நிறைவேற்றப்பட்டு.அரசு துறைமூலம் வங்கிகளில்  தையல் பயிற்சி ,காளான் வளர்ப்பு ,கால்நடை வளர்ப்பு ,சிறுதொழில் தொடங்குவதற்கு மானியத்தோடு கடனுதவி அளிக்கப்டுகிறது.. இவரின் செயல்படும் விதம் ...நம் சமுதாய மக்கள் வேலைவாய்ப்பு இன்று இருக்கும் இத்தருணத்தில் இவரின் மூலம் அக்குழுக்களில் சேர்ந்து ஒரு சிறந்த சிறுதொழில் முனைவோராக வளர அனைத்து உதவிகளை செய்து தருவதாக சொல்லி உள்ளார் ..இவர் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளது ..நம் அறக்கட்டளைக்கு பெருமை ...இன்னும் புது தொழில் வாய்ப்புகளை நம் அறக்கட்டளைக்கு அளித்த நம் சமுதாயமக்களுக்கு உதவுவதாக கூறியுள்ளார் ..அவரின் கணவர் செந்தில்குமார் அவர்கள் ஜில்லெபநாயக்கன்பாளையம் ஊரில் பொறியியல் துறையில் கட்டமைப்பு வல்லுனராக உள்ளார் .இரண்டு பெண்குழந்தைச்செல்வங்களுடன் ..அழகான நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னுதாரணமாக வழிகாட்டியாக உள்ளார்,திருமதி செல்வராணி அவர்களுக்கு ஊக்கம் ,ஆக்கமும் தந்து நம் மக்களுக்கு முன்னேற அனைத்து உதவிகளையும் செய்துகொண்டு உள்ளனர் ..தேனீ காரா பொண்ணு வீரம் மிகுந்த பெண் என்பதை இன்று நேர்முக உரையாடலில் தெரிந்தது .. ..நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள்...


இன்று காலை நேரம் ஆனைமலை சாலையில் உள்ள எரிசனம்பட்டி என்னும் கிராமம் ..இனிமேல் கிராமம் என்று சொல்லவேண்டியது இல்லை பஞ்சயாத்து யூனியன் கா ..விரைவில் வளர்ந்து வரும் ஊர் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக