செவ்வாய், 20 ஏப்ரல், 2021

 கேள்வி : அமெரிக்க வங்கிகளில் வாராக்கடன் தொகைக்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்?


என் பதில் : 


அமெரிக்க வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகள்:


சமரச தீர்வு (Compromise settlement or One-time settlement): கடன் தொகையில் குறிப்பிட்ட கழிவைக் கொடுத்து மீதியைக் கட்டச் சொல்லி கடனாளியுடன் வங்கி சமரச தீர்வு செய்து கொள்ளலாம்.

கடனாளியின் பிணையச் சொத்து விற்பனை (Sale of collateral): பிணையச் சொத்தை விற்று முடிந்த அளவுக்கு கடனை வசூலிப்பார்கள். பெரும்பாலும் நீதிமன்ற வழக்கு (Litigation) மூலமாக செய்யலாம்.

கடன் மறுசீரமைப்பு (Loan restructuring): கடனாளியின் கடன் தொகையைக் குறைத்து அதைக் கட்ட வேண்டிய காலக்கெடுவை நீட்டுவார்கள். அந்தந்த கடனாளியின் வணிகச் செயல்பாடு மற்றும் அதன் மூலம் வரும் பணப் பாய்வைப் (Cashflows) பொறுத்து கடன் மறுசீரமைப்பு அமையும்.

கடனை விற்று விடுதல் (Sale of NPAs): வசூல் செய்யும் நிறுவனங்களுக்கு கடனை வந்த விலைக்கு விற்று விடலாம்.

(கடனாளி பெரிய நிறுவனமாக இருந்தால்) கடனாளி மீது திவால் அறிவிப்பு (Bankruptcy notice) கொடுத்தல்: அந்நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கச் சொல்லி அதன் சொத்துக்களையும் பொறுப்புகளையும் நீதிமன்றம் நியமிக்கும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கக் கேட்கலாம். சொத்துக்களை விற்று வரும் பணத்திலிருந்து நிர்வாகிகள் கொடுக்கும் தொகையை வங்கி ஏற்றுக் கொள்ளலாம்.


நன்றி ...


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக