வியாழன், 8 ஏப்ரல், 2021

கேள்வி : புதிதாக கட்டும் வீட்டிற்கு  

மர சன்னல்கள் சிறந்ததா? 

யு.பி.வி.சி சன்னல்கள் சிறந்ததா?


என் பதில் : 



மர சன்னல்கள் பாரம்பரியமானவை. வீட்டின் தோற்றத்தில் மிக முக்கிய பங்கு மரத்திலான வேலைபாட்டில் தான் உள்ளது. மரத்தில் செய்யப்பட்டதற்கு தனி அழகு உண்டு. மர சன்னலை பொருத்தவரை காலநிலைக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மை கொண்டது. 


சில நேரங்களில் மழைநீரால் மரம் சற்று வளையலாம். அதனால்(தாழ்பாழ், கைப்பிடி)தேவைப்படும் சமயத்தில் பராமரிப்பு வேண்டும். மர சன்னல்கள் பல ஆண்டுகள் உழைக்கும், மரத்தினால் ஆன சன்னல்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது, 


மேலும் வேம்பு,தேக்கு மேலும் ஏனைய மரங்களால் நன்மைதான் உண்டாகும். வீட்டில் மாசு தடுக்கப்படுகிறது,பினி, நோய்களை முடிந்தவரை குறைக்கிறது.மர சன்னல்களில் வேலைப்பாடுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. வர்ணம், செதுகுதல்,முதலியவை.


யுபிவிசி, சில விதமான ப்ளாஸ்டிக்,வேதி பொருட்களால்செய்யப்பட்டவை. எல்லா காலநிலையிலும் ஒரே போலவே இருக்கும். ஒரு முறை பொருத்திவிட்டால் பல ஆண்டுகள் வரை உழைக்கும். பராமரிப்பும் குறைவு. 


வெளிபுற ஒலியை பெரும்பாலும் தடுக்கும்.யுபிவிசி பல நிறத்திலும், பல மாடல்களிலும் உண்டு, பல விதமான தரத்திலும் உண்டு. அதைப்போல் வேலைப்பாடுகள் செய்ய வாய்ப்புகள் குறைவு, அது பெரிய அழகியிலும் தருவதில்லை மற்றும் மரத்தின் அழகையும் அது தருவதில்லை.


விலையை பொருத்தவரை இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆதலால் எல்லா அம்சங்களையும் கொண்டு கருத்தில் கொண்டு எது சிறந்தது, எது வேண்டும் என்று தேர்வு செய்யலாம்.


நன்றி ...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக