வியாழன், 8 ஏப்ரல், 2021

எங்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 


 யார் சொன்னது குறிஞ்சி மலர் ஒரு முறை பூக்க பண்ணிரண்டு வருடம் ஆகும் என்று? 


வருடம் ஒரு முறை குறிஞ்சி மலராய் உங்கள்  பிறந்த நாளில் நீங்கள் பூக்றீர்களே  !!!


பிறந்த நாள்  உன்னை படைத்ததற்காக அந்த பிரம்மனே பெருமைப்படும் மகத்தான நாள்.

பூக்களெல்லாம் பெருமை கொள்ளும் நாள் இன்று. மலரொன்று புதிதாய் பூக்கும் நாள் இன்று. வான் நிலவு ஒன்று மண்ணில் தோன்றிய அதிசய நிகழ்வு இன்று

காண கிடைக்காத  மனித பிறவியில் பூமியில் பிறப்பது அழகானது. அந்த பிறந்த நாளை சிறப்பூட்டும் விதமாய் நாம் வாழ்ந்து காட்டுவது அதை விட அழகானது.

வருடத்தில் பல நாட்கள் வரும் போகும். ஆனால் உங்களுடைய  பிறந்த நாள்  போல எந்நாளும் எனக்கு சிறப்பு வாய்ந்ததாய் அமைந்தது இல்லை. தித்திக்கும் இந்நாள் போல் எந்நாளும் உங்களுக்கு   சிறப்பாய் அமையட்டும்.

ஏன் இன்று நிலவில் ஒளி இல்லை? உன் பிறந்த நாளை கொண்டாட ஒரு வேளை  நிலவு விடுமுறை எடுத்து கொண்டதோ?

கடவுள் கருணையினால் இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க, நேசமான நண்பர்களுடனும் பிரியமான உறவுகளுடனும் என்றும் குதூகலுடத்துடன் உன் புன்முறுவலோடு நீடூடி வாழ இறைவனிடம் உனக்காக பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் ஒரு முறை இந்த பிறவியில் நீங்கள்  குழந்தையாக பிறக்க முடியாது நீங்கள்  பிறந்த திருநாளை உங்களின்  வாழ்க்கையிலும் மறக்க இயலாது.

அனைவரும் இங்கு பிறக்கிறோம் எதோ ஓர் நாள் இறக்க போகிறோம் இதில் இல்லை சிறப்பு. நீ பிறந்த நாளை இந்த வரலாறு சொன்னால் அதுவே உங்கள்  சிறப்பு

எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் . நீங்கள்  பிறக்கும்  முன்னரே பத்து மாதம் போராடி இந்த அகிலத்தில் உதித்தவன் என்று.


எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய பிறந்த வாழ்த்துக்கள் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக