கேள்வி : உறவுகளுக்கு நடுவே பஞ்சாயத்து வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?
என் பதில் :
உறவினர்களிடம் கடன் வாங்காதீர்கள்..
அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்…
ஒரு சின்ன சண்டை வந்தாலும் அதனை பேசிப் பேசிப் பெரிது ஆக்காதீர்கள்.
உறவினர்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுங்கள் .அது சரியா தவறா என்று வாதம் செய்யாதீர்கள்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
யார் எதை சொல்லும்போதும் பொறுமையாக கேட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் நீங்கள் அது சரியா ?தவறா ?..உங்களுக்கு ஏற்றதா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் .அந்த இடத்திலேயே வாக்கு வாதங்கள் வேண்டாம்..
ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லி உள்ளேன்…
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக