கேள்வி : தமிழ்ப்பெண்கள் தனது கணவர் இருக்கும் போது அவர் கட்டிய தாலியை கழற்றி வைக்க முடியுமா? பண்டைய நாட்களில் அது தவறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வளவு தூரம் உண்மையானது?
என் பதில் :
இது ஒவ்வொருத்தர் மனசுக்கு தோன்றும் விதம் நடந்து கொள்வது உத்தமம்! திருமாங்கல்யம் அணிவித்தல் நல்ல நாளில் தேவர்களும் மனிதர்களும் புடை சூழ நடக்கும் புனித தினத்திற்கு முக்கிய நிகழ்வு!
கூரை புடவையை முகூர்த்த நேரத்தில், சரியாக கட்டி விடவேண்டுமே, என்று சில பெரியோர்களுக்கு டென்சன் இருக்கும். மெட்டியை கழட்டும் பெண்களால் கூட மாங்கல்யத்தை எடுத்து வைக்க தோணாது சிலருக்கு.
சிலருக்கு முக்கிய நாட்களில் அணிய பிடிக்கும்! சிலருக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் / செய்தி வாசிப்பாளர் போன்று இருந்தால் அணிய மாட்டார்கள்!
சிலர் விவாகரத்து ஆனாலும் தாலிக்கொடிக்கு கோவிலில் தரும் குங்குமமும் வைப்பார்கள்!
சிலர் கணவரின் ஆணை ”நீ பூ பொட்டு வெச்சுக்கணும் எப்போதும்” என்று சொன்னதை, எப்போதும் பின்பற்றுகின்றனர் பேராசிரியை சாரதா நம்பியாரூரான் போல. அவர்கள் சொற்பொழிவில் இதனை கேட்ட ஞாபகம்.
ஆக ஒவ்வோர் பெண்ணின் விருப்பம் மற்றும் உரிமை மற்றும் அன்பின் சின்னம் மாங்கல்யம்👍
பலர் பவளம் கருகு மணி சிறிய சின்னங்கள் சேர்த்து அணிவார்கள்!
பவளம் இன்றைய தினமான செவ்வாய் என்னும் மங்களனுக்கு உரியது! ஆகவே “மாங்கல்யம்” என்ற பெயர் வந்தது !
நன்றி ...
சிறுகுறிப்பு :தற்காலத்தில் பெண்செல்வங்கள் .. ஏதாவது விழாக்களுக்கு,வீட்டுக்கு நண்பர்கள் ,சொந்தங்கள் வரும்பொழுது , செல்லும்பொழுது ..எங்கடா ..என் தாலிக்கயிறு ..கொஞ்சம் தேடிக்கொடேன் ...எங்க வைச்சேன் தெரியல ...தேடிக்கொண்டு இருப்பார்கள் ..தேடியெடுப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆகும் ..அதனால் விழாக்களுக்கு வருவது ,செல்வது தாமதமாகும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக