திங்கள், 5 ஏப்ரல், 2021

ரெங்கமலை மல்லீஸ்வரன் கோவில்


பாப்பநாயக்கன்பட்டி மலையின் பெயர் ரெங்கமலை மல்லீஸ்வரன் கோவில் உச்சிக்கு கீழே உள்ளது  கோவிலுக்கு தென்புரம் வற்றாத பாறை கிணறு சிறியதாக உள்ளது அந்த தண்ணீரும் சிறுவாணி தண்ணீரும் ஒரேமாதிரியாண சுவை கொண்டது அங்கு தங்கிக்கொள்ளலாம் கோவில் முன் மண்டபம் உள்ளது கோவிலின் கிழக்குப்பகுதியில் சமமான பாறை ஐம்பது நபர்கள் தூங்கும் அளவுக்கு ☝️உள்ளது கீரணூர் கொண்டரிங்கிமலையும் பாப்பநாயக்கன்பட்டி ரெங்கமலையும் அண்ணன் தம்பி என்று பெரியவர்கள் கூற கேட்டிருக்கேன் ரெங்கமலை தொடர்ச்சியின் கிழக்குபகுதியில் கணவாய் என்று சொல்லக்கூடிய நேசனல் சாலை எண் 7 செல்கிறது அதேபோல கணவாய் ஒட்டியதுபோல வடபுரம் சக்திவாய்ந்த கணவாய் ஜக்கம்மாகோவில் உள்ளது.

 இந்த ரெங்கமலை மல்லீஸ்வரன் கோவிலுக்கு திங்கள் வெள்ளி.இரண்டுநாளைக்கு பூசாரி பூஜை செய்ய வருவார் ஒரு இரவு தங்குவார் இக்கோவிலுக்கு செல்ல விரும்புவோர் அரிசி ,சமையலுக்கு  தேவையான மளிகை  மட்டும் கொண்டு சென்றால் போதும் மேலை கோவிலில் பாத்திரங்கள் உள்ளது சமைத்து சாப்பிடலாம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள் அன்று ரெங்கமலை மலை உச்சியில் பெரிய கொப்பரை உள்ளது அதில்  விறகு நிறைய நிரப்பி எண்ணைய் ஊற்றி  தீபம் ஏற்றினால் வேடசந்தூர் வரை தெரியும் நாங்கள் அந்த தீபத்தை வணங்கிவிட்டு பிறகு சாப்பிடுவோம் அத்தகைய சக்தி வாய்ந்த மல்லீஸ்வரன்கோவில் இக்கோவிலில் நமது குறையை முழுமனதோடு மனதில் நிருத்தி பூ கேட்டால் என்ன பூ வருகிறதோ அதுவே நடக்கும்.


ரெங்கமலை கோவிலுக்கு செல்வதாக இருந்தால் தண்ணீர் பாட்டில் அவசியம்  ஆண்டிபட்டிகோட்டைக்கு முன்னரே ரெங்கமலௌக்கு செல்லும் சாலை பெயர் இருக்கும் சுமார் 400 படிக்கட்டுகள் இருக்கலாம் செங்குத்தாக பல படிக்கட்டுகளும் சமமாக சில படிக்கட்டுகளும் இருக்கும் புதுமையான இரவில் தங்கும்போது கிடைக்கும்.ஆணந்தம் சுகமாக இருக்கும் இரவு நேரத்தில் அங்கேயிருந்து சுற்றி பார்த்தால் ஊர்களில்.தெரியும் மின் விளக்குகள் நம்மை ஆகாயத்தில் கொண்டு சேர்த்த உணர்வு உண்டாகும்


தகவல் : தங்கராஜ் -உடுமலைப்பேட்டை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக