செவ்வாய், 22 டிசம்பர், 2020


கேள்வி : நமது ஆவணங்களை டிஜிட்டல் லாக் மூலம் எப்படி பாதுகாப்பது ..?,

ஆதார், பான்கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எப்படி பாதுகாப்பது ?


என் பதில் :..


டிஜிட்டல் லாக்கர் என்பது இந்திய குடிமக்கள் அனைவரம் அவர்களது தகவல்களை, சொந்த விபரங்களை, முக்கிய கோப்புகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஒன்றாகும். ஆதார் உதவியின் மூலம் இதை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒரு அரசாங்கள் செயல்களுக்கும் குடிமக்களின் ஆதாரத்தை எளிதாக சரி பார்த்துவிட முடியும்.


டிஜிட்டல் லாக்கர் உபயோகப்படுத்த என்ன வேண்டும்?


இந்த டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்த உங்களது ஆதார் என்னும், அலைபேசி என்னும் மட்டுமே போதும்.


இன்றைய காலகட்டத்தில் ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்கள் அவசிய தேவைகளாக மாறியுள்ளது. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவருக்கும் மிக அவசியம்.


டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் (DigiLocker) என்பது ஒரு வகையான மெய்நிகர் லாக்கர் ஆகும். 


டிஜி லாக்கரை உபயோகிப்பது எப்படி?


இதில் கணக்கை தொடக்க, முதலில் digilocker.gov.in அல்லது Digitallocker.gov.in என்ற வலைதளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் தளத்தின் வலது பக்கத்தில் சைன் அப் (Sign Up) என்பதைக் கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு ஒரு புதிய பக்கம் தோன்றும். நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு டிஜிலாக்கர் ஒரு OTPஐ அனுப்பும். பிறகு யூஸர் நேம் மற்றும்பாஸ்வேர்டை அமைக்க வேண்டும். பின்னர் டிஜிலாக்கரைப் பயன்படுத்தலாம்.


ஆவணத்தை எவ்வாறு சேமிப்பது?


தளத்தின் இடது பக்கத்தில் Uploaded Documents-க்கு சென்று அப்லோட் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்கள் ஆவணத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை எழுத வேண்டும். பிறகு அப்லோட் என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்கள் ஆவணங்கள் இப்போது டிஜி லாக்கரில் பாதுகாப்பாக இருக்கும்.


உங்கள் ஆவணத்தை டிஜிலாக்கரில் சேமித்து வைக்க உங்களின் ஆவணங்களையும் ஸ்கேன் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் ஆவணங்களின் தெளிவான புகைப்படத்தையும் கிளிக் செய்யலாம். அதன் பிறகு நீங்கள் அதை டி.ஜி. லாக்கரில் சேமித்துக் கொள்ளலாம்.


நன்றி ....📚📚✍️✍️🥰🥰


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

 கேள்வி : வாழ்க்கையில் ஏமாற்றியவர்களை மறப்பது எப்படி?


என் பதில் :...

இருப்பதிலேயே சுலபமான ஒன்று ஏமாற்றியவர்களை மறப்பது தான் என நான் நினைக்கின்றேன்.


என்னை ஏமாளி ஆக்கியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


எனக்கு மனவலியையும் மனதளர்ச்சியும் ஏற்படும் அளவிற்கு ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


என் தேவைக்கு அதிகமானதாக இருந்ததை ஏமாற்றாமல் என் இக்கட்டான சூழ்நிலையை அறிந்தும் ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


அடுத்தவர்களை அடுத்தடுத்து ஏமாற்றிக்கொண்டே இருப்பவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


நான் மேற்குறிப்பிட்டபடி தன்னைத்தானே கேள்விக்கேட்டு அவர்களின் மீதுள்ள வெறுப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி மறப்பது எளிது.


ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றியதைவிட இந்த வகையான வெறுப்புணரச்சி அதிகப்படியான மன உளைச்சலை நமக்கு ஏற்படுத்திவிடும்.


ஏமாற்றுபவர்களின் திறமை அதாவது மனிதர்களை கையாளும் முறைகளும் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் முன்னெச்செரிக்கை வழிகளும் நமக்கு தெரிந்திருந்தால் நாமும் ஏமாந்திருக்க மாட்டோம். அதனால் இந்த ஏமாற்றம் ஒரு படிப்பினை என எடுத்துக்கொண்டு அவர்களை விட்டு சற்று விளகி இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் நலம் சேர்க்கும்.


தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சின்னு இந்த ஏமாற்றத்திற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு நம்முடைய வேலையை பார்ப்பது சிறந்தது.


தன்வினை தன்னை சுடும் என்பார்கள் அதனால் அவர்களின் வினை அவர்களையே சுடும் அதனால் அவர்களை நாம் மறக்கனும்ன்னு அவசியமில்லை அவர்களே நம் பார்வைகளிலிருந்து மறைந்துவிடுவார்கள்.


நம்மை புத்திசாலி என்று தெரிந்ததுமே அல்லது நம்மை ஏமாற்றியதுமே அவர்களாகவே காணாமல் போய்விடுவார்கள்.


நாம் ஏமாறுபவர்களாகவும் இருக்கவேண்டாம்,ஏமாற்றுபவர்களாகவும் இருக்கவேண்டாம்,மறப்பவர்களாக இருப்பதைவிட மன்னிப்பவர்களாகவும் அதனால் கிடைக்கும் அமைதியான மனநிலையில் வாழ்ந்துவிட்டு போகலாம் என நான் நினைக்கின்றேன்.


நன்றி

வியாழன், 17 டிசம்பர், 2020

 கேள்வி : வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?


என் பதில் :.

வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வகைக் கடன்களில் கடனைத் திருப்பி செலுத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன. 

மொத்த கடன் தொகையும் பெறப்பட்ட பின் திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும். 

உதாரணமாக கல்விக் கடனில், ஐந்து ஆண்டு படிப்பு எனில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கடன் வழங்கப்படும். ஐந்து ஆண்டுக் கல்வி முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பெற்ற தொகைக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மற்றொரு முறையில் கடனின் முதல் பகுதியைப் பெற்றவுடன் ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். 

உதாரணமாக, வீடு கட்ட வழங்கப்படும் கடனில், அடித்தளம் போட முதல் பகுதி கடன் பெற்றவுடன் முழுக் கடன் தொகைக்குமான வட்டியுடன் சேர்த்து ஈஎம்ஐ-யை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். இதுவே முன் ஈஎம்ஐ வட்டி எனப்படுகிறது. 

வீட்டுக் கடன்: வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மேற்கண்ட இரண்டு முறைகளுமே அனுமதிக்கப்படுகின்றன. முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் வசதி, கடன்தொகை பிரித்து வழங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வீடு கட்டக் கடன் தரும் பெரும்பாலான நிதி நிறுவனங்களில் முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் முறை அனுமதிக்கப்படுகிறது. முதலிலிருந்தே ஈஎம்ஐ செலுத்தத் தொடங்கி விடுவது அல்லது முழுக்கடனும் பெற்று முடியும் வரை வட்டி மட்டும் செலுத்தி விட்டு அதன் பிறகு ஈஎம்ஐ கட்டத் தொடங்குவது, இரண்டில் எது சிறந்தது? முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்துவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் லாபகரமானது. ஏனெனில் முதல் நாளிலிருந்தே கடனின் அசல் தொகை குறைய ஆரம்பித்துவிடுகிறது. வீடு கட்டி முடிக்கும் தருணத்தில் கடனின் பெரும்பகுதி கழிந்திருக்கும். ஆனாலும் கட்டிடம் கட்டி முடிக்கத் தாமதம் ஆகும் பட்சத்தில், கடன் பெறுபவர், இன்னும் வாங்காத கடன் தொகைக்கும் சேர்த்து வட்டியை செலுத்தும்படி ஆகிவிடும். வீடு கட்டி முடித்தவுடன் விற்கப் போவதாக இருந்தால் இந்த முறை லாபகரமானதாக இருக்கும். 

முன் ஈஎம்ஐ கடன் செலுத்தும் முறையின் மற்ற குறைபாடுகள்: கடைசி கட்டத் தொகையை பெறும்வரை வட்டி மட்டும் செலுத்தும் முறையில் தொகை சிறிதாக இருந்தாலும் கடன் செலுத்தும் கால அளவு மிக நீண்டதாக இருக்கும். மாறாக, முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்தும் முறையில் கடன் செலுத்தும் காலம் குறைவதோடு கடன் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. வட்டி மட்டும் செலுத்தும் முறையில் கட்டடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. இருப்பினும் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஏனெனில் வரிவிலக்கைக் கணக்கிடுவதில் இரண்டு முறைகளிலும் அதிக வித்தியாசமில்லை. அதாவது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டுள்ளதோ அது மட்டுமே ஐந்து சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

சனி, 12 டிசம்பர், 2020

 காற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது? ஓர் அறிவியல் விளக்கம்..


உலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி உள்பட பல முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் அனைத்து முறைகளிலும் ஆற்றலை உருவாக்கி அதை மின்சக்தியாக மாற்றப்படுகிறது.


அவ்வாறு தான் காற்றாலைகளும் செயல்படுகின்றன. உலகில் சீனாவில் தான் அதிக காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியா உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது.


காற்றாலை என்பது..


தற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீரை நிலத்தடியில் இருந்து மேலே கொண்டுவரவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.


மின் உற்பத்தியில் காற்றாலையின் அமைப்பு..


மின் உற்பத்திக்கு உருவாக்கப்படும் காற்றாலைகள், 200 லிருந்து 350 அடி உயரத்தில் அமைக்கப்படுகின்றது. காரணம் பிளேடுகள் சுழலும் போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அத்துடன், உயரம் அதிகமாக இருந்தால் காற்றும் இடையூறு இல்லாமல் வந்து சேரும். காற்றாலையில் மூன்று அல்லது இரண்டு பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பிளேடுகள் 120 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டிருக்கும். இந்த பிளேடுகள் பைபர் கிளாஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றது.


காற்றாலையில் தூண்கள், ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும். இந்த அமைப்பு முழுவதும், ஒவ்வொரு காலநிலையையும் எதிர் கொள்ளும் வகையில் பவுடர் கோட்டிங் மூலம் சாயம்  பூசப்பட்டிருக்கும். அதை 20 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட கான்கிரீட்டால் நிலையான அமைப்பை உருவாக்கி நிறுவுகின்றனர். நிறுவும் போது மூன்று துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அமைப்பர். அந்த அமைப்பினுள் ஏணி போன்ற அமைப்பு இருக்கும் அந்த ஏணி போன்ற அமைப்பு தொழில் நுட்ப கோளாறை நிவர்த்தி செய்யும் போது அதன் மேல் ஏறிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த அமைப்பிற்கு மேல் ஜெனரேட்டர் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஜெனரேட்டர் அமைப்பில், மூன்று பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மொத்த அமைப்பும் செய்து முடிக்க மூன்று வாரக்காலம் வரை செலவாகும்.


செயல்முறை..


காற்றின் வேகத்தை பொறுத்து பிளேடுகள் சுழல்கின்றது. இந்த பிளேடுகள் சுழலும் போது அதனுள் அமைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் சுழலும். நேரடியாக ஜெனரேட்டரால் பிளேடின்

வேகத்தில் மின் உற்பத்தி செய்ய இயலாது. எனவே அத்துடன் கியர் பாக்ஸ் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அந்த பிளேடும் ஜெனரேட்டரும் 1:90 என்ற விகித்தில் செயல்படும். அதாவது, பிளேடு 1 முறை சுற்றும் போது ஜெனரேட்டர் 90 முறை சுழல்கிறது. அவ்வாறு அந்த ஜெனரேட்டர் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றது.


அந்த மின் சக்தியை, காற்றாலையின் கீழே கொண்டு வரப்பட்டு கீழே ஒரு ஸ்டெப்பப் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்டெப்பப் மின்சக்தியாக மாற்றி, நமது பயன்பாட்டிற்கு கொண்டு

செல்லலாம். காற்றாலை இவ்வாறு செயல்பட்டாலும், அதில் ஒரு சிறிய சிக்கலும் உள்ளது. காரணம் காற்று எப்போதும் ஒரே பக்கத்தில் வீசுவதில்லை. அதற்கும் ஒரு அமைப்பு காற்றாலையினுள் அமைந்துள்ளது.


டர்பைனின் பின்புறம் velocity sensor பொருத்தப்பட்டிருக்கும். அது காற்றின் திசை அறிந்து yawing machine மூலம் டர்பேனின் திசையை மாற்றுகின்றது. அதேபோல் காற்றின்

வேகத்தை பொருத்தும் அதன் பிளேடின் வேகத்தையும் கட்டுப்படுத்தி சமநிலையில் சுழல செய்கின்றது. இத்தகைய அமைப்பிலும், சில வேளைகளில் இயற்கை சீற்றத்தால் காற்றாடி ஆபத்தை சந்திக்கலாம். எனவே இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் காற்றாடி இயங்காமல் இருக்க உள்ளே ஒரு பிரேக் அமைப்பும் உள்ளது.


இந்தியாவின் முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்..


இந்தியா காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அதில் 29% மின் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் உள்ள முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்.


* முப்பந்தல் கன்னியாகுமரி,உடுமலைப்பேட்டை ... தமிழ்நாடு

* ஜெய்சால்மர் விண்ட் பார்க், ராஜஸ்தான்

* பிரம்மன்வெல் காற்றாலை, மகாராஷ்டிரா

* தமன்ஜோடி விண்ட் ஃபார்ம், ஒடிசா

* துப்பதஹள்ளி காற்றாலை, கர்நாடகா


இந்தியா போன்ற பல நாடுகளில் மின்சக்தியை பெற காற்றாலை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. அதில், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 அமுதே! தமிழே! அழகிய மொழியே எனதுயிரே.....என்ற பாடல் ஆசிரியர் யார் ..


பதில் :..தாமரைக்கோன் (Aravind Raja), RKMVC கல்லூரி, மயிலாப்பூர்.- இக்கேள்வியைக் கேட்ட ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இதற்கு தமிழரின் வரலாற்றையும், தமிழிசையின் வரலாற்றையும் குறிப்பிடுவது இன்றியமையாதது. இசையை வளர்த்த சங்க இலக்கியங்கள்: தமிழ் மொழி இலக்கியங்களுக்கு அடிப்படையாக விளங்ககூடியவை, நாற்பத்து ஒன்று செவ்வியல் நூல்கள். அவை : தொல்காப்பியம் (1) பத்துப்பாட்டு (10) எட்டுத்தொகை (8) பதினெண்கீழ்க்கணக்கு (18) சிலப்பதிகாரம் (1) மணிமேகலை (1) முத்தொள்ளாயிரம் (1) இறையனார் அகப்பொருள் உரை (1) ஆக, மொத்தம் நாற்பத்து ஒன்று. தமிழரின் இசை மற்றும் நாட்டியக் கலை பற்றி கூறும் நூல் சிலப்பதிகாரம் . சங்க இலக்கியங்களிலேயே, பண்ணோடு பாடக் கூடிய ஒரே இலக்கியம், பரிபாடல் ஆகும். தமிழிசையைப் பாதுகாத்த காரைக்கால் அம்மையார் : சங்க காலத்திற்குப் பிறகு, தமிழர்களின் இருண்டகாலம் என்று சொல்லப்படும் களப்பிரர்களின் ஆட்சிக் காலம் வந்தது. அக்காலத்தின் துவக்கத்தில் காரைக்கால் அம்மையார் தோன்றி தமிழரின் இசையையும், நூல்களையும் மீட்க, பண்ணோடு கூடிய தமிழ்ப் பாடல்களைப் பாடினார். இவ்வாறே, சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் கிடைத்தது. ஆதலால், காரைக்கால் அம்மையார், தமிழிசையின் தாய் என்று போற்றப்பட்டார். ஆதலால் தான், அவர் பாடிய முதல் பதிகத்தை, மூத்த திருப்பதிகம் என்று அழைத்தனர். அவர் தமிழிசையை வளர்த்தார் என்பதற்கு அவருடைய இந்த பாடலே சான்று. துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம் உழை, இளி, ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித்(து) அத்தனை விரவினோ(டு) ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. இப்பாடலில் : துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம் உழை இளி ஓசை (குரல்) என்ற ஏழு பதங்களை (சப்தச் சுரம்) குறிப்பிட்டுள்ளார். இஃது, பின்வரும் சம்பந்தரின் தேவார பாடலின் மூலமும் நன்கு புலப்படும். பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. இப்பாடல்களின் மூலம், கர்நாடக இசையானது தமிழிசையை அடிப்படையாகக் கொண்டது என்பது திண்ணம். மேலும், சச்சரி கொக்கரை தக்கை தகுணிச்சரம் தந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் குடமுழா தமருகம் மொந்தை போன்ற இசைக்கருவிகளைக் குறிப்பிட்டதன் மூலமும் இவர் பண்ணோடு கூடிய தமிழை வளர்த்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும், சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் ஒரு பெண்ணால் கிடைத்தது என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்று ! சங்க இலக்கியங்களைப் பார்த்து வருந்திய அம்மையார் : தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வரலாற்றையும் மற்றும் பல அரிய செய்திகளைத் தரும் சங்க இலக்கியங்களில், பெரும்பாலான பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமையைப் பார்த்தும், பல பாடல்கள் சிதைவுற்றதைப் பார்த்தும் வருந்தினார் காரைக்கால் அம்மையார். ஆதலால் இனி வரும் இலக்கியங்களாவது பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும், எழுதியவர் யார் ? எங்கு எழுதினார் ? என்பதை அறியும் வகையிலும் ஒரு உத்தியைக் கையாண்டார். அதுவே, திருக்கடைக்காப்பு . ஒரு பதிகத்தைப் யார், எங்கு, எப்போது பாடினார் என்பதை அப்பதிகத்தின் இறுதியில் பாடலின் வடிவிலேயே பாடப்படுவது தான், திருக்கடைக்காப்பு . இதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும். இவரைப் பின்பற்றியே தேவார மூவரும், பிற நாயன்மார்களும், ஆழ்வார்களும் இவ்வுத்தியைக் கையாண்டனர். பல்லவர்களாலும், களப்பிரர்களாலும் வந்த வினை: களப்பிரர்கள் ஆட்சியிலும், பின்னர் வந்த பல்லவர்கள் ஆட்சியிலும் தமிழ் தாழ்வுற்று, வடமொழி பெரும்பான்மை பெற்றது. இதற்கு பல்லவர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகளாக இருப்பதே சான்று. ஆகையால், தமிழையும் சைவத்தையும் தமிழிசையையும் மீண்டும் புத்துயிர்ப் பெற திருஞானசம்பந்தர் பிறந்தார். இது சேக்கிழாரின் பின்வரும் பாடலின் மூலம் விளங்கும். திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற, மிசை உலகும் பிறலகும் மேதினியே தனி வெல்ல, அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல, இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக. தேவார மூவரால் மீண்டும் உயிர்ப் பெற்ற தமிழிசை: காரைக்கால் அம்மையார் தமிழிசைக்கு வித்திட்டவராயினும், அதனை பல மடங்கு முன்னோக்கி எடுத்துச் சென்றவர் திருஞானசம்பந்தர். ஆயினும், அம்மையார் சென்ற வழியிலேயே சம்பந்தரும் சென்றார். அம்மையார் தன்னுடைய முதல் பதிகத்தை நட்டபாடை (இன்றைய கம்பீரநாட்டை இராகம்) பண்ணில் பாடினார். சம்பந்தரும் தன்னுடைய முதல் பதிகத்தை இப்பண்ணிலேயே பாடினார். அம்மையார் உருவாக்கிய திருக்கடைக்காப்பு உத்தியை முதன்முதலில் பயன்படுத்தியவரும் சம்பந்தரே ! இசைக்கும், தமிழுக்கும் ஏது சாதி என்றுக் கூறி சாதிய கட்டமைப்பைத் தகர்த்தவர் திருஞானசம்பந்தர் : சம்பந்தர் ஒவ்வொரு தலத்துக்கும் செல்லுகையில், அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மற்றும் அவரது மனைவி மதங்கசூளாமணியாரும் உடன் செல்வர். ஏனெனில், யாழ்ப்பாணர் யாழ் வாசிப்பதிலும். சூளாமணியார் தாளம் மற்றும் பண் அமைப்பதிலும் வல்லவர்கள். தான் எங்கு சென்றாலும் தவறாமல் இவ்விருவரையும் உடன் அழைத்து செல்வார் சம்பந்தர். அன்று, பாணர்கள் பிரமாணர்களாலும் மற்றும் பிற உயர் சாதியினராலும் "தாழ்சாதி மக்கள்" என்று புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணால் தேவார பண்களை அறிவித்த பெருமான் : தில்லைக் கோவிலில் நம்பியாண்டர் நம்பியின் துணைக் கொண்டு தேவார சுவடிகளை மீட்டார் இராசராச சோழன். தேவாரம் மற்றும் திருமுறைகளைப் பகுக்கும் பொறுப்பை நம்பியாண்டார் நம்பிகளிடம் ஒப்படைத்தான் மன்னன். தேவாரம் கிடைத்த நிலையில், தேவார பாடல்கள் எந்த பண்களால் பாடப்பட்டவை என்று நம்பியாண்டார் நம்பி குழம்பினார், எண்ணி வருந்தினார். நம்பியாண்டார் நம்பி, திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த ஊரான எருக்கத்தம்புலியூர் சென்றார். அங்கு இருக்கும் ஈசனிடம் தேவார பண்களைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். "பாணன் வழி வந்த வல்லி ஒருத்திக்குப் பண்களை அறிவித்துள்ளோம். பெற்றுக் கொள்" , என்று அசரீரி ஒலிக்கவே, நம்பியும் அப்பெண்ணைப் பார்த்து, மூவர் பாடிய முறையிலேயே அப்படியே பாடப்பெற்று, அதற்கான கட்டளைகளையும் வகுத்தார். இவை அனைத்தும் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறை கண்ட புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவாரத்தில் பாடப்பட்டுள்ள தமிழ்ப் பண்களுக்கு இணையான கர்நாடக இராகங்கள் : தமிழ்ப் பண்கள் - கர்நாடக இராகங்கள் நட்டபாடை - கம்பீரநாட்டை கொல்லி - நவரோஸ் இந்தளம் - மாயமாளவகௌளை குறிஞ்சி - அரிகாம்போதி செந்துருத்தி - மத்தியமாவதி யாழ்மூரி - அடாணா (அ) நீலாம்பரி சீகாமரம் - நாதநாமகிரியை நட்டராகம் - பந்துவராளி தக்கராகம் - காம்போதி பழந்தக்கராகம் - சுத்தசாவேரி பழம்பஞ்சுரம் - சங்கராபரணம் தக்கேசி - காம்போதி செவ்வழி - யதுகாம்போதி பியந்தை காந்தாரம் - நவரோஸ் காந்தாரம் - நவரோஸ் காந்தார பஞ்சமம் - கேதார கெளளை கொல்லிக்கௌவாணம் - நவரோஸ் கெளசிகம் - பைரவி பஞ்சமம் - அகிரி சாதாரி - பந்துவாராளி புறநீர்மை - பூபாளம் அந்தாளிக்குறிஞ்சி - சாமா மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி (அ) அமிர்தவர்ஷினி வியாழக் குறிஞ்சி - சௌராஷ்டிரம் முடிவு : தமிழ் கற்ற நாத்திகர்களும், தேவாரத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர். ஏனெனில், பக்திக்கு ஆற்றிய பங்கை விட, இந்நூல் தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிய பங்கு அளப்பரியது. காரைக்கால் அம்மையார் தமிழ் இசை மீண்டும் புத்துயிர் பெற வித்தாக இருந்தார் எனில், தேவார மூவரே அதனை கிளைக்கச் செய்தனர். தேவாரம் தமிழிசைக்கு ஆதாரம் என்று சொல்வதை விட, அதனை கிளைக்கச் செய்தது என்று கொள்வதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று, தமிழிசையைப் புத்துயிர் பெற செய்த காரைக்கால் அம்மையார், ஒரு பெண் ! தேவார பண்கள் மீண்டும் அமைய காரணமாக இருந்தவர், ஒரு பெண் ! இன்று இக்கேள்வியைத் தொடுத்தவரும் ஒரு பெண் ! இறைவனின் அருளை என்னவென்று சொல்வது ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் இசை !

 திருமணம்.....

 அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடுத்த கட்ட நகர்வைத்தருவது ,ஆனால் எங்களது அறக்கட்டளையின் துணைத்தலைவருக்கு தம் சமூகப்பணிக்கும் அரசியல் பணிக்கும் மாற்றத்தைக் கொடுத்தது.


அரசியலுக்காக சமூகப் பணியாற்றும்   இம்மண்ணில் சமூகத்திற்காக அரசியல் களம் கண்டு....  ஆதாயமின்றி இன்றளவும் பாடாற்றும் உடுமலை வரலாற்று செல்வத்தின் அரசர்,

தமிழுக்காகத் தலை கொடுத்த குமணன் மண்ணில் மொழிக்காகப் போராடி சிறை கண்ட  மொழிப்போர் ஈகி வெ.காளியப்பனின் தலைமகனுக்கு அடுத்த மகன்,

மண்ணின் மைந்தன் சாதிக்பாட்சாவை  சரியாக இனம் கண்டு மனிதப்புனிதர் எனும் பட்டத்தைத் தந்திட்ட மனிதப் பனிதரின் அன்பில் விழைந்த பாசமலர்,

உடுமலை வரலாற்றில் உயிர்ப்பான நாயகருக்கு உரிமையுடன் கூறும்

Suguna Selvaraj

 and 

VK Selvaraj..அவர்களுக்கு 

.மண நாள் வாழ்த்து வாழ்க வாழ்வாங்கு வாழ்க...

திங்கள், 7 டிசம்பர், 2020

உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் ..

 உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம்  வல்லகொண்டம்மன் ..


திருமலை நாயக்கர் காலத்திற்க்கு முற்ப்பட்ட நான்கு ஜமீன்தார்களின் குலதெய்வமாக விளங்கிய கோட்டமங்களம் பாலமண்ணவகையரா வல்லகுண்டம்மாள் கோவில் தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது...

உள்ளே அரிய பல சிலைகள் காணப்படுகிறது ...


ஒரே கல்லில் ஏழு கண்ணிமார் சிலைகளை பார்த்திருப்பீர்...

ஆனால் இங்கு கருவரையில் ஏழு கண்ணிதெய்வங்களின் சிலைகள் தனித்தனியாக இரண்டடி உயரத்தில் அருமையாக வடித்துள்ளனர் ...


 லிங்கம் நந்தி மற்றும் தொட்டால் (புல்லாங்குலல்) வாசித்தபடி முண்ணோர் சிலைகள் 


இடும்பன் காவடி சிலைகள்..


 முண்ணோர்களின் வேட்டைக்கு செல்லும் சிலைகள் ...

 அதுபோக கூம்பு வடிவில் ஒரு சிலை அமைந்திருந்தன அது என்ன என்பது புல படவில்லை..


இவையனைத்தும் கருவரையில் உள்ளது 


இராஜகம்பளத்தாரின் பாரம்பரியத்தின்படி அந்த கருவறை அமைந்திருந்தன என்பதை பார்தவுடன் எனக்கு தெளிவாய்ன...


நைரிவாரு மட்டும் இங்கு வழிபடுகின்றனர்

மற்ற குடி பாடுகள் பிடிமண் எடுத்து சென்று அவர்களின் ஊரு அருகிலே ஆவகணம் செய்து வழிபடுகின்றனர்...

பாலவார்களின் தாய்கோவிலாக செயல் படுகின்றது

கெங்குசி பாலமண்ண வகையராக்கள் இங்கிருந்து கிழக்கு நோக்கி  பிடிமண் எடுத்து செல்லும் போது மால மேட்டில்  பல்லகுடும்பன்  துணை காக்கா அமர்ந்துள்ளார்

என்பது என் கோடாங்கி மூலை


இக்கோவிலில் நாகம் ஒன்று காவல் காக்கிறது என்பதை சொல்ல கடமைபட்டுள்ளேன்...

(புதையளுக்கா காவல)்?


இதை நானே உணர்ந்தேன் ..


இங்கு ஏதோ ஒரு சக்தி உள்ளது ..

அதை சிலர் அடக்குகின்றணர்

அதை அகம விதிகளில் பூஜை புனஸ்காரங்கள் செய்கின்றபோது

பாசிட்டீவ் சக்திகள் வெளிப்படும் என்பது உண்மை....

பதிவு :..வைகை சாரல்👍


குறிப்பு : இந்த ஆண்டு ..கடந்த தீபா திருவிழா அன்று கிழக்கில் இருந்து அதிகம் புது சொந்தங்கள் வருகை தந்தனர் ...எப்பொடியோ ..உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம்  வல்லகொண்டம்மன் ..ஆதி மண்ணின்  குலதெய்வ கோயிலை கண்டு பிடித்து விட்டார்கள் ...மிக்க மகிழ்ச்சி ..




புதன், 2 டிசம்பர், 2020

கேள்வி : கோவை நகரம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்தது போன்று மதுரை ஏன் அடையவில்லை?


என் பதில் :..


கொங்கு மண்டலத்தின் காலச்சாரமே அதுதான்.


உழைப்பு, உண்மை, உயர்வு.


நாங்கள் ஆயிரம் வருசமாக ஒடுக்கப்பட்டவர்கள், எங்கள் நிலங்களை மன்னர்கள் பிடுங்கி கொண்டனர் என ஒப்பாரி வைத்து சோம்பேறித்தனமாக தூங்காமல் உழைப்பில் நம்பிக்கை வைத்து தொழிலில் நேர்மையை பின்பற்றி தான் முன்னேறியதோடு அல்லாமல் பல பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து முன்னேற்றி விட்டு நாட்டுக்கு வருமான வரியையும் சரியான முறையில் செலுத்தி இன்று தமிழகத்தின் உற்பத்தி துறையில் 60% க்கும் மேல் கையில் வைத்திருப்பது கோவையை தலைமையிடமாக கொண்ட கொங்கு மண்டலம்தான்.


ஜிடி நாயுடு ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியை நா. மகாலிங்கம் உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடர்ந்ததன் விளைவு இயந்திர உற்பத்தி, நூல் தொழிற்சாலை, ஆடை ஏற்றுமதி, கல்வி மற்றும் மருத்துவமனை என தமிழகத்தின் பின்னோக்கி தள்ளும் வண்ணம் கோவை உயர்ந்து நிற்கிறது.


கல்வி நிறுவனம் என்று பார்த்தால் PSG, ராமகிருஷ்ணா, குமரகுரு, கோவை வேளாண் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி என கல்வி துறையில் முன்னணியில் உள்ளது.


மருத்துவ துறையில் அரசு மருத்துவமனை தொடங்கி, கோவை மெடிக்கல், psg மருத்துவமனை, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கேஜி மருத்துவமனை, ராமகிருஷ்ணா மருத்துவமனை, ராயல் கேர் என உலகத்தரம் வாய்ந்த பல மருத்துவமனைகள் உள்ளது.


மருத்துவ சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டுவதில் கோவை தான் இந்தியாவிலேயே முதலிடம்.


தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரம், சென்னைக்கு அடுத்ததாகவும் இந்த நகரம் அமைந்துள்ளது. நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட ஐடி பூங்காக்கள் தொடங்குவதன் மூலம் இந்நகரில் பி.பி.ஓ தொழிற்துறையினர் பெரிதும் வளர்ந்துள்ளனர். உலக அவுட்சோர்சிங் நகரங்களில் இது ஒரு இடத்தைப் பிடித்தது. விப்ரோ, ஃபோர்டு, ராபர்ட் போஷ் ஜிபிஎச், ஐபிஎம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டாட்டா எக்ஸ்சிஸி, டெல், சிஎஸ்ஸ் கார்ப் மற்றும் கேஜிஐஎஸ்எல் போன்ற நகரங்கள் இந்நிறுவனத்தில் உள்ளன.


கோயம்புத்தூர் கார் கூறு தொழிலில் மிகவும் நம்பகமான அவுட்சோர்சிங் இடங்களில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது.


ஆசியாவின் மின் மோட்டார் நகரமாக கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் நிறைய சிறிய அளவிலான பொறியியல் நிறுவனங்கள் உள்ளன.


இங்கு சாதி சண்டைகள் இல்லை, தமிழன் தமிழன் என போராடும் கூட்டமும் இல்லை, பல தொழிற்சாலைகள் இருந்தாலும் கேரளாவை போல கொடி பிடித்து ஸ்டிரைக் செய்யும் அட்டைப்பூச்சி சங்கங்களும் இல்லை என்பதை இங்கு வந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரியும்.


அதே போல இங்கு யாராக இருந்தாலும் வாங்க போங்க என மரியாதையுடன்தான் அழைப்பார்கள்.அதே போல இங்கு ரவுடித்தனம் என்பதே மருந்துக்கு கூட கிடையாது.


மனித குலத்தை நாசமாக்கும் மொழிவெறி இனவெறியை தவிர்த்து அனைத்து தரப்பட்ட மனிதர்களையும் சகோதரர்களை போல அரவணைத்து செல்லும் தர்ம பூமி இது.


அதே போல நில அபகரிப்பு கட்டப் பஞ்சாயத்து எல்லாம் இங்கு அறவே இல்லை.


இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்றால் அது கோவை தான்.


ஆக சட்டம் ஒழுங்கு இங்கு மிகவும் சரியாக உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பதில் முன்னணியில் கோவை தான்


இந்த கட்டுப்பாடுமும் ஒழுக்கமும்தான் கோவை யின் வளர்ச்சிக்கு காரணம்.


இது முழுக்க முழுக்க இங்குள்ள மக்களின் உழைப்பால் விளைந்த பலன் இது.


இந்த வெற்றி இட ஒதுக்கீட்டாலோ, சமூக நீதியாலோ அரசாங்க ஸ்காலர்ஷிப்பாலோ இன்னும் பிற சலுகைகளாலோ வந்தது அல்ல முழுக்க முழுக்க உழைப்பு, திறமை மற்றும் நேர்மையால் மட்டுமே பெற்ற வெற்றி.


இதை சில கட்சிகள் தங்களின் ஆட்சிதான் காரணம் என கோவை மக்களின் உழைப்பையும் வெற்றியையும் திருட பார்க்கின்றன.


இந்த அரசியல்வாதிகளின் நிர்வாக திறமின்மையால் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சினையால் கோவை சந்தித்த பிரச்சனை இழப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. கோவையின் இருண்ட காலம் அது.


உண்மையில் எங்களால்தான் தமிழகம் இன்று முன்னணியில் உள்ளது என மேடைக்கு மேடை சவடால் விடும் கட்சிகளுக்கு ஒரேயொரு கோரிக்கை முடிந்தால் உங்களின் ஆட்சி நிர்வாக திறமையால் ஒரு ராமநாதபுரத்தையோ, திருவாரூரையோ இன்னொரு கோவையாக மாற்றி காட்டுங்களேன் பார்ப்போம்.


பிகு :- நான் கோவை நகரின் பெருமை பற்றி பேசியதற்கு சிலருக்கு ஏன் எரிச்சல் என புரியவில்லை. நான் மற்ற ஊர்களை இழிவுபடுத்த வில்லையே இதில். முடிந்தால் உங்கள் ஊரின் பெருமை பற்றி எழுதுங்கள் அது பிரயோஜனப்படும். அதை விடுத்து உங்கள் மொழி வெறி, இனவெறியை இந்த பதிலில் காட்டும் உங்களை கண்டால் பரிதாபம் தன் வருகிறது.

திங்கள், 30 நவம்பர், 2020

 Kannabiran Udt...


கொரோனா காலத்திலும் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் உடுமலையின் அறிவியல் மாணவ ,மாணவிகள் .....


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வை இணைய வழியில் நடத்தி வருகின்றன.இந்த பேரிடர் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இந்த வருடமும் தேர்வானது தேசிய அளவில் இன்றும் ( நவம்பர் 29 மற்றும் 30) நாளையும் நடைபெறுகிறது. 


இத்தேர்வில் இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதி வருகின்றனர். இத்தேர்வு இணையவழியில் கணினி ,மடிக்கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலமாக இணைய வழியில் தேர்வினை மாணவர்கள் எழுதி வருகின்றனர். தேர்வானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் இத்தேர்வினை எழுதி வருகின்றனர்.


இந்த முதல்நிலை தேர்வானது மாணவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து தேர்வினை எழுதி வருகின்றனர். அறிவியல் துறையில் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் ஆராய்ச்சித் துறையில் அவர்களை ஈடுபடுவதற்காக இந்த தேசிய திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் இந்த வருடம் இணையவழியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுகின்றார்கள். அதுமட்டுமின்றி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகளையும் பெறுவார்கள். 


இந்த தேர்வானது திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 300 மாணவர்கள் எழுதினர். வீடுகளிலிருந்து முதல்முறையாக ஒரு தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு எழுதியது புதுமையானதாகவும் வீட்டிலிருந்தே ஒரு தேசிய அளவிலான தேர்வினை எழுதியது மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று மாணாக்கர்கள் கருத்து தெரிவித்தனர். 


உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்து இத்தேர்வினை எழுதினர். பேரிடர் காலகட்டத்தில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் தேசிய அளவிலான ஒரு தேர்வு இணைய வழியில் குழந்தைகள் வீட்டில் இருந்தே எழுதியது நல்லதொரு முயற்சியாக இருந்தது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். உடுமலை பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சரவணன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.


வெள்ளி, 27 நவம்பர், 2020

கண்ணை கவரும் தென்னை நாரில் மிளிரும் படைப்புகள்...

நன்றி :..தினமலர் ..பொட்டையம்பாளையம் கிராமம் .உடுமலைப்பேட்டை 


தென்னை நாரும், கண்களுக்கு விருந்தளிக்கும், கலை வண்ண படைப்புகளாக, மகளிரின் கைவண்ணத்தில், உருவாக, கயிறு வாரியம் வழிகாட்டுகிறது. இப்படைப்புகளுக்கு, அனைவரும் கைகொடுத்தால், சூழலும், மகளிரின் பொருளாதாரமும் மேம்படும்.கல்லும், மண்ணும், கைவண்ணத்தில், கலை படைப்புகளாக, நம் வாழ்வில், இரண்டற கலந்து விட்டது; அதிலும், மகளிரின் அழகு மிளிரும் படைப்புகளுக்கு, தனியிடம் உண்டு. அவ்வாறு, தென்னை நாரை மூலப்பொருளாக கொண்டு, பெண்கள் உற்பத்தி செய்யும், கலை படைப்புகள் பார்ப்பவர்களை ஈர்ப்பதை தவிர்க்க முடியாது.அவ்வாறு, கயிறுவாரியம், தென்னை நாரில் இருந்து கால் மிதியடி மட்டுமல்லாது, வீட்டை அலங்கரிக்கும், குதிரை, மான், முதலை, ஒட்டகச்சிவிங்கி, ஸ்டாண்ட் ஆகியவை தயாரிக்கவும், ஊக்கத்தொகையுடன் பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. தற்போது, பொட்டையம்பாளையம் கிராம பெண்களுக்கு, கயிறு வாரியம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், இரண்டு மாத பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது.இதில், தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்பட்ட, கயிறுகளை கொண்டு, கால் மிதியடி தயாரிக்க, முதற்கட்டமாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. பின்னர், பல வகை கயிறுகளை கொண்டு, வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி துவங்குகிறது.வீட்டில் இருந்தபடியே, சுயதொழில் மூலம், வருவாய் ஈட்ட ஆர்வம் காட்டும் பெண்களுக்கு, இத்தகைய பயிற்சிகள் வரப்பிரசாதமாக அமைகிறது. பயிற்சிக்குப்பிறகு, சான்றிதழும், தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு, வங்கிக்கடனும் பெற்றுத்தர வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.தங்களையும், வீட்டையும், அலங்கரிப்பதில், தனித்திறமை கொண்ட பெண்களிடம், தென்னை நாரும், உயிரோட்டமுள்ள கலைப்பொருளாக மாறுவதை நேரடியாக நாம் பார்க்கலாம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இத்தகைய கலைப்பொருட்களை வாங்கி, பயன்படுத்தினால், தொழிலில், ஈடுபடும் பெண்களுக்கு, நிரந்தர வருவாயும் கிடைக்கும்...

நன்றி ...தினமலர் ...உடுமலைப்பேட்டை ..


தொழிற்பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு அணுகவும் 

நாகராஜ் -99651 42973..உடுமலை சுற்று சூழல் சங்கம் 

சிவக்குமார் -9944066681...கம்பளவிருட்சம் அறக்கட்டளை -உடுமலை 

கேள்வி : வீட்டுத்தரைக்கு மார்பிள்ஸ், மார்போனைட், க்ரானைட் மற்றும் டைல்ஸ் - இதில் எது சிறந்தது?

என் பதில் :..

வீட்டுத் தரைகளுக்கு டைல்ஸ், மார்பிள்ஸ், மார்போனைட், கிரானைட் ஆகியவை அழகுக்காகவும் தரையை எளிமையாக சுத்தம் செய்வதற்காகவும் ஒட்டப்படுகின்றன.
இதில் மார்பிள்ஸ் மற்றும் கிரானைட் இயற்கையாகக் கிடைப்பவை. பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மதுரை,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.
மார்போனைட் என்பது கிரானைட் அல்லது மார்பிள் போன்ற தோற்றமளிக்கும் டைல்ஸ் வகையாகும்.
டைல்ஸ் என்பது செயற்கையான முறையில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதாகும்.
இயற்கையான முறையில் கிடைப்பதால் கிரானைட் மற்றும் மார்பிள்கள் சாதாரணமான வெளிப்புற வெப்பநிலைகளையே வீட்டின் உட்புறமும் பிரதிபலிக்கும்.
ஆனால் மார்போனைட் மற்றும் டைல்ஸ் ஆகியவை வெளிப்புற வெப்பநிலையை சற்று அதிகமாக வீட்டின் உட்புறம் பிரதிபலிக்கும்.
அதாவது டைல்ஸ் மற்றும் மார்போனைட் குளிர்காலங்களில் அதிக குளிரையும் வெயில் காலங்களில் அதிக வெப்பத்தையும் வீட்டினுள் பிரதிபலிக்கும்.
விலையின் அடிப்படையில் பார்த்தால் டைல்ஸ் வகைகள் ஒரு சதுர அடி₹30 முதல் கிடைக்கின்றன.
மார்போனைட் ஒரு சதுர அடி₹50 முதல் கிடைக்கின்றன.
கிரானைட் ஒரு சதுர அடி₹80 முதல் கிடைக்கின்றன.
மார்பிள் நிறத்தைப் பொறுத்து அதன் விலை மாறுபடும். குறைந்த பட்சம்₹200 முதல் கிடைக்கும்.
குறைவான செலவினை விரும்பினால் டைல்ஸ் வகைகளை தேர்வு செய்யலாம்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என விரும்பினால் கிரானைட் மற்றும் மார்பிள்களைத் தேர்வு செய்யலாம்.
வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டும் முன்பு இதை ஒரு முறை மனதில் வைத்துக் கொள்ளவும்.👍👍✒✒✒📚📚🏘🏘🏘
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?

 கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?


என் பதில் :..

இது வழக்கமான பதிவு அல்ல . எனவே tag ...களில் சில மாற்றம் ..

. விருப்பம் உளளவர்கள் மட்டும் கருத்துக்களை பதிவு செய்யவும் . நன்றி .!

தமிழ் வளர்க்கும் சமூக வலை தளங்களில் பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம் ... முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம் .   இரண்டு  நாட்களுக்கு முன் ஒரு அனுபவ பதிவு இட்டிருந்தேன். ஒரு நல்ல பதிவர் ,வீட்டுக்கடன் விற்பனை  ,சமூக ஆர்வலர் , (நாமே சொல்லிக்க வேண்டியதுதான்) அழகு இரண்டு பக்கங்களையும் முன் வைப்பது தான். அந்த வகையில் நான் கவனித்த எனக்கு ஏற்பில்லாத சில விஷயங்கள் இங்கே. இந்தப் பதிவு யாரையும் குறிப்பிட்டதல்ல.. அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் சொந்தக் கருத்தே.

 முன்னெச்சரிக்கையா சொல்லிக்க வேண்டி இருக்கு ஏன்னா பேசப் போற விஷயம் அப்படி.

பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம்  இல் சில காலமாகப் புழங்கி வருவதில் எல்லா இடங்களையும் போல இங்கேயும் சத்தத்திற்கும் கூட்டத்திற்கும் தான் முக்கியம் இருப்பதாகக் கருதப் படுகிறது. எல்லா விஷயத்தையும் பாராட்டவும் திட்டவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நல்ல நண்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கிடைக்கும் அதே இடத்தில் அரை வேக்காட்டுத் தனமாக உளறுபவர்கள் சிலர் . எப்படி செய்தி/சினிமா விற்பவர்கள் வன்முறையையும் கவர்ச்சியையும் முன் வைத்து வியாபாரம் செய்கிறார்களோ அது போல் தன்னை விற்க முனைபவர்களையும் காண முடிகிறது. நாகரீகம் அற்ற  வார்த்தைகளில் திட்டுவது  சாதாரணமாக நடக்கிறது.

ஒரு விஷயத்தை யாராவது சொன்னால் முதல் கேள்வி.. “உனக்கு என்ன தகுதி இருக்கிறது அதை சொல்ல..?” என்பதாக இருக்கிறது. நமது அனுபவம்  பற்றி சொல்ல என்ன தனியா ஜர்னலிசம்  படிச்சுட்டு வரணுமா  ???

தன்னை மேதாவியாக நகைச்சுவையாளராகக் காட்டிக்கொள்ள இன்னொரு சக மனிதனைத் திட்டியும் சபித்தும் ஆக வேண்டுமா? இங்கே வெளிப் படுவது நகைச்சுவை பூசிய வெறுப்பு மட்டுமே. முகம் தெரியாத ஒருவர் மேல் காரணமே இல்லாமல் கொட்டப்படும் வெறுப்பின் அளவு நிஜமாகவே மலைக்க வைக்கிறது.
இதற்கு பொதுவான ஒரு காரணம் தன்னுடைய கருத்தை எல்லாரும் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆங்கிலத்தில் “Agree to Disagree” என்று சொல்வார்கள். எதிராளியின் மறுப்பை ஏற்கும் பக்குவம் இங்கே கொஞ்சமும் இல்லை. இது இங்கு மட்டும் என்று இல்லை. வீடுகளில், அலுவலகங்களில், அரசியலில் என்று எல்லா இடங்களிலும் பொதுவாக இருக்கிறது. என் கருத்தை ஏற்காதவன் எதிரி என்ற நினைப்பில் நாம் நிறைய நிழல் எதிரிகளை உருவாக்கி அவர்களோடு அட்டைக்கத்தி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம். எதிர்கட்சிகள் இல்லாமல் சட்ட சபைகள் நடப்பதும் பாராளுமன்றங்கள் முடங்குவதும் போல . !
மொழி, அனுபவம், கருத்துக்கள் எல்லாவற்றிலும் இந்தப் பக்குவம் தேவை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான சூழலில் வளர்கிறான். சிந்தனைகளும் நம்பிக்கைகளும் ஒருவருக்கொருவர் மாறுபடுவதுதான் இயற்கை. அதை மதிப்பதன் மூலம் நிறைய ஈட்டிகளில் நாம் வெள்ளைக்கொடி கட்ட முடியும்.
“நீ சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் அதைச் சொல்வதற்கான உன்னுடைய உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன் (Evelyn Beatrice Hall)” என்ற வரிகளை ஒவ்வொரு வரி எழுதும்போதும் பேசும்போதும் நினைத்துக் கொண்டால் ஆரோக்கியமான சண்டைகளும் அறிவுபூர்வமான வாதங்களும் பிறக்கும். இன்னுமொரு செக்ஷன் 66 A ...தேவையில்லை . நன்றி . வணக்கம் .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
வாழ்க்கை வளர்வதற்கு ...வாழ்வதற்கு ...
9944066681..







வியாழன், 26 நவம்பர், 2020

 

உடுமலைப்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவி ......


மலேசியா நாட்டில் நடைபெறவிருக்கும்  கராத்தே போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவி -க்கு உதவி தொகையாக உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் 1985ஆம் ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர், சாதனையாளர் K.P.கேதாரினாத் அவர்களின் நினைவாக அதே வருடம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் P.R.மோகன் ராஜ், K.P.விஸ்வனாத், R.கிருஷ்ண குமார் ஆகியோரின் சார்பாக ₹15,000 காசோலை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் மலேசியாவில் ஏற்படும் செலவுகளை அதே ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற திரு R. தினேஷ் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.


மாணவி பெயர் - J . பூமிகா..விற்கு .ஏற்பாடு செய்த ஆசிரியை  திருமதி..வித்யா முதுகலை வணிகவியல் ஆசிரியை...ஆசிரியை பொறியாளர் ராமசந்திரன்... அவர்களின் சகோதரி.


கொரோனா காலம் என்பதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையிலும் ,கலந்துகொள்ள உதவி தொகை இல்லாத சூழ்நிலையிலும் ,இந்த உதவி செய்ய நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி அவர்கள் இவர்களிடம் சொல்லி இருந்தார்கள் ..தற்பொழுது இந்த இந்த போட்டியில் கலந்துகொள்ள உதவி இருக்கிறார் 

மேலும் விவரங்களுக்கு 

ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் ...  

 நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி- 94421 10286

செவ்வாய், 24 நவம்பர், 2020

Mr. A. Muruganantham, Founder Director, Jayshree Industries, Coimbatore குறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்

கோவையின் பொக்கிஷம் ......


 We also had a chance to meet one of the 100 most influential people as per Times Magazine –

 Mr. A. Muruganantham, Founder Director, Jayshree Industries, Coimbatore

குறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்

மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம்.

கோவை மாவட்டம் கிராமப் பகுதிகளில் ஏழைப் பெண்களின் மாதாந்திர பிரச்சனையை, சமூக நோக்கில், மிகக்குறைந்த விலையில் சமாளிக்க கற்றுக் கொடுத்த அருணாச்சலம் முருகானந்தம் உலக மக்களின் பாராட்டுக்களை பெற்ற வண்ணம் இருக்கிறார். எளிதில் கிடைக்காத கௌரவம், நாம் அறிந்திராத மாமனிதர்களுக்குக் கிடைக்கும் சமயங்களில், அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், அதைக் கொண்டாடத் தவறி விடுகிறோம். அந்த வகையில் அருணாச்சலம் முருகானந்தம் சாதனையும் முக்கியத்துவமும் சமூகத்தின் கண்களில் இன்னமும் முழுமையாகப் படவில்லையோ என்று தோன்றுகிறது.

60% பெண்களுக்கு நாப்கின் வசதி இல்லை இந்தியாவில் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்கும் வசதியின்றி வாழும் அவலம் நிலவுகிறது. இந்நிலையைப் போக்க முயன்ற முருகானந்தம், தன் பல ஆண்டுக்கால விடாத முயற்சியால், பிரத்யகே இயந்திரம் தயாரித்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார்.

இரண்டு ரூபாய்க்கு நாப்கின் பன்னாட்டு நிறுவனங்களால் அதிக விலையில் விற்கப்படும் பெண்களுக்கான நாப்கின்களை, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என கற்பனைக் கெட்டாத விலையில், சுகாதாரமாகத் தயார் செய்து, சேவை உள்ளத்துடன் அவற்றை விற்பனை செய்தார் அருணாச்சலம் முருகானந்தம்.

உலக மகளிருக்கும் அர்ப்பணம் உலகம் முழுக்க மகளிர் அமைப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு தமது இயந்திரங்களை வழங்கி உற்பத்தி முறைகளையும் கற்றுத்த தந்துள்ளார். இவரது முயற்சியால் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் நாப்கின்களை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகின் சக்தி வாய்ந்த நபர் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை, கடந்த 2014ம் ஆண்டு தேர்வு செய்து உலகிற்கு அடையாளப்படுத்தியது. அதன் பிறகே அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை, இனங்கண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துக் கௌரவப்படுத்தியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.



பெண்கள் வாழ்த்தும் ஆண் ஏழைப் பெண்களின் மனதை, தாயுள்ளத்தோடு அறிந்து அவர்களின் மாதாந்திர பிரச்சனையை போக்கும் வகையில் செயல்பட்டு வரும் அருணாச்சலம் முருகானந்தம், பெண்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்.

இவரை கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் உலக கருத்தரங்கில் சந்தித்து பேச எனது மேலாண்மை பேராசிரியர் திருமதி பங்கஜம் அம்பிகைவேலு ,என் கல்லூரி நண்பர் ,குடும்ப நண்பர் அப்சல் நூரின்  மூலம் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது ,மிக்க மகிழ்ச்சி ...

இனிய நண்பர் கோவை -பாப்பநாயக்கன்புதூர். ..அருணாச்சலம் முருகானந்தம் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Sivakumar Kumar is in Coimbatore,Pollachi,Udumalaipettai... Tamil Nadu.

கேள்வி : சிறுதொழில்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வாறு புதிய வாடிக்கையாளர்களை பெறுகின்றன?

என் பதில் :

22 வருடம் மார்க்கெட்டிங் தொழிலில் இருந்ததினால்

கிடைத்த அனுபவத்தில் சொல்கிறேன்.எந்த பயிற்சி வகுப்புகளிலும் வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கின்ற முதல் அறிவுரை முதல் சந்திப்பில் எதிரில் இருப்பவர்களுக்கு கை குலுக்கி அவர்களிடம் விசிட்டிங் கார்டை கை மாறுவது தான் .

First impression is the best impression என்று ஆங்கிலத்தில் ஒரு

வார்த்தை நடை முறையில் புழக்கத்தில் உள்ளது .இதை

உங்கள் நடை முறை வாழ்க்கையில் பழக்கமாகவே வைத்து கொள்வது நல்லது .

உங்கள் தொழிலை பற்றிய ஐந்து நிமிட விளக்க உரையை உங்கள் விசிட்டிங் கார்ட் ஒரு நிமிடத்தில்

பிரதி பலிக்கும் .உங்கள் தொழிலை பற்றி உள்ள முழு வர்ணனையை உங்கள் இணையத்தளம் பிரதி பலிக்கும் .

முன் பின் பழக்கம் இல்லாத ஒருவரை நீங்கள் திடிரென்று சந்திக்க நேருகிறது ..இல்லது திருமண விழாக்களிலோ வேறு எங்கு வைத்தோ உங்கள் சொந்த பந்தங்களை பார்க்க நேருகிறது .

கண்டிப்பாக அனைவருக்கும் நீங்கள் என்ன தொழில் செய்கின்றிர்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..ஆனால் இந்த விசிட்டிங் கார்டை அவர்களுக்கு நீங்கள் கை மாறும் பொழுது உங்களின் தொழிலை பற்றிய

ஒரு விவரம் அவர்களுக்கு போய் சேருகிறது .

உங்களின் வாழ்வியலில் இந்த பழக்கத்தை நீங்கள் கடை பிடிக்கும் பொழுது ..பல business sours களில் இதுவும் ஓரிரு துளிகளாக உங்கள் வியாபாரத்தை பெருக்க உதவும்

அது மட்டுமல்ல பல வருடங்களாக வியாபாரம் செய்தும் நூலகத்தில் உள்ள புத்தகங்களை போன்று விசிட்டிங் கார்டுகள் குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது ஒரு வருக்கு ஒரு விசிட்டிங் கார்ட் கூட இல்லாமல்

தொழில் செய்பவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அது தங்களின் தொழிலின் நேர்த்தியையும் தரத்தையும் வெட்ட வெளிச்சமாக படம் பிடித்து காட்டுகிறது🥰

👍📚📚📚சிவக்குமார்....V..K.... 

👍🏡🏘️🏚️வீட்டு கடன் பிரிவு 

👍🏡🏘️🏚️உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

👍🏡🏘️🏚️அழைப்பு எண் :9944066681...

👍🏡🏘️🏚️.. :9944066681Email:siva19732001@gmail.com

👍🏡🏘️🏚️(Home Loans,Home Loans To NRIs) 

👍🏡🏘️🏚️Coimbatore,Pollachi, Udamalpet

👍🏡🏘️🏚️Mobile --09944066681 Call or sms

👍🏡🏘️🏚️Siva1973200@gmail.com

திங்கள், 23 நவம்பர், 2020

 அந்த மூணு குழுவில் ...என்ன வியாபாரம் செய்கிறார்கள் ..அந்த குழுவில் தொகை வாங்கி எதற்கு பயன்படுத்தினார்கள் ...கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளவும் ..

தொழிற்பயிற்சி ..சிறு தொழில்முனைவோர் ..

சுற்று சூழல் இயக்கம் ..கயிறு வாரியம் மூலம் பயிற்சி ...இரண்டு மாத பயிற்சி ..6000 ரூபாயுடன் ...சிறிய உபகரணங்கள் வாங்கி தொழில் முனைவோர் ஆகலாம் ...அவர்களின் சக்திக்கு தகுந்த ..நேற்று என் அருமை தம்பி தமிழின் வழிகாட்டுதலின்படி சென்று பயிற்சி குழு இருக்கும் பொட்டையம்பாளையம் கிராமத்திற்கு சென்று தெரிந்துகொண்டேன் ..இதை தம்பி மூன்று வருடமாக சொல்லிக்கொண்டிருந்தார் ..என் அருமை மாப்பிள்ளையும் செந்தில்ராம் மறவாமல் சொல்லிக்கொண்டிருந்தார் ..நேற்று பார்வையிட்டு ..அதன் வழிகாட்டுதல்களை தெரிந்து கொண்டேன் ..இதற்கான பயிற்சி யை எனது நண்பர்கள் நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியர் மணி அவர்களும் .சுற்றுசூழல் செயலாளர் நாகராஜன் என்பது தெரிந்து எனக்கும் மகிழ்ச்சி ..இதைவிட அங்கு பயிற்சி எடுப்பவர்கள் அதிகம் நம் கம்பள சொந்தங்கள் என்றவுடன் மகிழ்ச்சி இன்னும் கூடுதல் ஆனது ..இந்த பயிற்சியை அடுத்த நம் கம்பள சொந்தங்கள் இருக்கும் ஊர்களுக்கு பரவலாக்க கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் அதற்கான ஏற்பாடுகளை குழுமூலம் செய்திகொண்டுள்ளோம் ...அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ..

இதற்கான தகவல் வேண்டுவோர் என்னிடம் தொடர்பு கொள்ளலாம் .நன்றி 

சிவக்குமார் 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை தொழில்சார் குழுமம் 

உடுமலைப்பேட்டை 

9944066681...


செவ்வாய், 17 நவம்பர், 2020

 கேள்வி : ஒரு செயலை செய்வதற்கு முன் கூறலாமா ..விவாதிக்கலாமா ..?


என் பதில் :...இதில் எனக்கு வாழ்க்கை கல்வி எனக்கு அதிகம் கற்று கொடுத்து இருக்கிறது ...


Online-ல் கூவாதே. நிஜத்தில் மாற்றத்தைக் கொண்டு வா....

முடிந்தவரை நீங்கள் செய்யப்போகும் செயல்களை பிறரிடம் கூறாதீர்கள். அவ்வாறு கூறும் பட்சத்தில் அதனுடைய வீரியம் குறைய வாய்ப்புள்ளது. இதை ஏன் கூறுகிறேன் என்றால், நாம் செய்யும் எந்த ஒரு செயலும், நம்முடைய வாழ்வில் மட்டுமே மாற்றத்தை கொண்டுவரும். அதற்கும் பிறருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு செயலை நாம் செய்து முடிக்கும் முன்னரே, பல கணக்குகளை போட்டுக் கொண்டு, பிறரிடம் வெளிப்படுத்தும்போது, ஒரு பொய்யான மனநிறைவு நம்முள் ஏற்பட்டுவிடும். அந்த மன நிறைவின் காரணமாக, நாம் செய்யப்போகும் செயலில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அது தனிப்பட்ட அழுத்தத்தை நம்முள் அதிகமாக ஏற்படுத்தும்.

வெற்றி பெறுவேன் என்பதற்கும், வெற்றி பெற்றேன் என்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம். 

எனவே, நீங்கள் வெற்றி பெறும் முன்பே நான் இதைச் செய்கிறேன், அதை செய்கிறேன், இப்படி இருக்கிறேன், அப்படி இருக்கிறேன், அதை சாதிப்பேன், இதைச் சாதிப்பேன் என்று அறைகூவல் விடுக்க வேண்டாம்.

வாழ்க்கை நாம் எதிர்பாராத ஒன்றை எப்பொழுதும் பரிசாக வைத்திருக்கும்.

சிறுக சிறுக செய்தாலும் சிறப்பாக செய்வதே, நம்மை ஒரு பிராண்டாக மற்றும் என்பதை நான் சமீபத்தில் உணர்ந்தேன்.😊.

உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுங்கள். பிறருடைய அடையாளங்களோடு உங்களை அடைமொழியாக இணைக்க வேண்டாம்.

முயற்சி தான் நம்மை முன்னேற்றும்💪.

நன்றி ....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

 கேள்வி : கோவையில் குடியேற சிறந்த பகுதிகள் எவை ?


என் பதில் ..:  நான் அறிந்தவரை 1996 முதல் இன்று 16-11-2020...நம்ம 

கோயம்புத்தூரில் 5 முதல் 30 கிமீ சுற்றளவில் இதற்கு நிறைய options உண்டு 


பணியிடம் / தொழிலகம் மற்றும் பள்ளி / கல்லூரி இருக்கும் இடத்தை பொறுத்து 


காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர், ஆவாரம்பாளையம், ராம்நகர், சிவானந்தா காலனி, TVS நகர், தடாகம், கணுவாய், மருதமலை, இடையர்பாளையம், வடவள்ளி,தொண்டாமுத்தூர் , வேடப்பட்டி, R.S. புரம், ரெட் ஃபீல்ட்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், வெள்ளளூர், மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம், போத்தனூர், கடைவீதி, அசோக் நகர், காந்திபார்க், பொன்னையராஜபுரம், செல்வபுரம், சுண்டைக்காமுத்தூர், பேரூர், காளப்பாளையம், கோவைபுதூர், குனியமுத்தூர், பாப்பம்பட்டி, சின்ன குயிலி, பெரியகுயிலி, கணபதி, சரவணம்பட்டி, வினாயகபுரம், விளாங்குறிச்சி, காளப்பட்டி, கோவில்பாளையம், துடியலூர், NGGO காலனி, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, அன்னூர் சாலை, பிளிச்சி …


போன்ற பல வீட்டுமனை பிரிவுகள் சில பல வசதிகளுடன் தேர்வு செய்வார்கள்.


குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் மனை / வீடு / அடுக்ககம் விலை அல்லது வாடகையின் பட்ஜெட்டை அனுசரித்து இங்குள்ளோர் குடியேறுவதுண்டு.


கோவை மாநகருக்கு கானல் நீராக இருக்கும், flex banner - ல் மட்டுமே அவ்வப்போது பார்த்து வரும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் எங்கள் கோவைக்கு அமைந்துவிட்டால் ?! ..இன்னும் சிறப்பு ...காத்திருப்பு என்றும் வீண்போவதில்லை ..நம்பிக்கையுடன் ..வளர்ச்சி ..நிலையான வளர்ச்சி ..நம்ம ஊரு கோயமுத்தூரு தானுங்க .....


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சனி, 14 நவம்பர், 2020

 Peelamedu Day ....

😊
கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு - வயது 308
கல்விக்கும், செல்வத்துக்கும் புகலிடமாகி, பல புகழ் பெற்ற மனிதர்களைப் பிரசவித்து, கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு என்ற ஊர்தான், அந்த மகிமைக்குரிய மண். அதென்ன புதுப்பெயர் பூளைமேடு...அது புதுப் பெயர் இல்லை; அதுதான் பழைய பெயர்.
பூளைமேடு,
கோவையின் முக்கிய அங்கம்; சொல்லப்போனால், இந்த நகரின் மூளை. பூளைச் செடிகள் பூத்த மேடான பகுதியாக இருந்ததால், 'பூளைமேடு' என்று அழைக்கப்பட்ட ஊர்தான், பேச்சு வழக்கில் மருவி, பீளமேடு என்றானது. அன்றைய பீளமேடு என்பது பீளமேடுபுதூர், பாப்பநாயக்கன் பாளையம், ஆவாரம்பாளையம், உடையம்பாளையம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாகும்.
சங்கனூர் பள்ளத்துக்கு தெற்கே பீளமேடு புதூர், வடக்கே பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லூரி பகுதி, கிழக்கே நவ இந்தியா முதல் விமான நிலையம் வரை உள்ள பகுதிகள் இதன் இன்றைய எல்லைகள். இங்குள்ள வரதராஜபெருமாள் கோவில், ரேணுகாதேவி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் ஆகியவை பீளமேடு உருவான காலத்திலேயே தோன்றியவை.
ஒரு கொசுவர்த்தியைச் சுழற்றிக் கொண்டு 'பிளாஷ்பேக்'கிற்குள் போவோம்....
கி.பி., 1378க்கு பின், இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தென்னிந்தியாவின் பெரும் பகுதி, விஜய நகரப் பேரரசால் மீட்கப்பட்டது. பிறகு, கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் கி.பி.,1529 ல் மதுரையில் ஆட்சியில் அமர்த்தப்பட்டார் விஸ்வநாத நாயக்கர்; அதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தன.
நாயக்கர்களுக்கும், மைசூர் உடையார்களுக்கும் போர் ஏற்பட்டதால் கோவையின் பெரும்பகுதி மைசூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டதாக மாறியது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் கோவை பகுதியில் கன்னடர்கள் அதிகம் குடியமர்த்தப்பட்டனர். கி.பி., 1711 ல் கோவைக்கு மைசூர் மகராஜாவின் பிரதிநிதியாக மாதேராஜா என்பவர் நியமிக்கப்பட்டார். கி.பி.1710 ல் குருடிமலையில் பெய்த பெரும் மழையால் சங்கனூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அதையொட்டியுள்ள கிருஷ்ணாபுரம், கணபதி, ஆவாரம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வீடுகளை அடித்துச் சென்றது; பலர் உயிரிழந்தனர்.
பலர், மேடான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். தாழ்வாக இருந்த கிருஷ்ணாபுரத்தில் வெள்ளச்சேதம் தொடர்ந்து ஏற்பட்டதால், மக்கள் மேடான பூளைமேடு பகுதியில் குடியேற விரும்பினர். கங்கா நாயுடு, கொத்தார் முத்து நாயுடு, பேகார் எல்லையப்ப நாயுடு, ராமன், சுப்பன், வெள்ளிங்கிரி, ஆசாரி, ராமபோயன் ஆகியோர் தலைமையில் மாதேராஜாவை சந்தித்து தங்கள் குடியிருப்பை பூளைமேடுக்கு மாற்றித் தரும்படி கேட்டனர்.
ஆரம்பத்தில் மறுத்த மாதேராஜா, பின்பு தெலுங்கர்களுடன் கன்னடர்களையும் சேர்த்து குடியேற அனுமதித்தார். 11.11.1711 அன்று பூளைமேட்டில் குடியேற பூமி பூஜை போடப்பட்டது. வீடுகள் கட்ட, குருடிமலை மற்றும் வெள்ளியங்கிரி மலையில் இருந்து மரங்கள் கொண்டு வரப்பட்டு 200 வீடுகள் கட்டப்பட்டன. அன்றைய பூளைமேடு கிராமத்தின் மக்கள் தொகை, ஆயிரம்.
ஊருக்குள்ளே பெருமாளுக்கும், மாரியம்மனுக்கும் தனித்தனி கோவில்களும் தனித்தனி கிணறுகளும் வெட்டப்பட்டன. இக்கிணறுகளை 1813ல் நம்புரார் சாமா நாயுடு மகன் ரகுபதி நாயுடு கோவிலுக்கு தானமாக அளித்தார். பூளைமேட்டில் ஒன்பது குளங்கள் இருந்தன; அதையொட்டி, காடுகளும் தோட்டங்களும் உருவாகின.
ஊரின் கிழக்கில் ஒரு தண்ணீர்ப்பந்தலும், அவிநாசி சாலையிலிருந்து மேற்கே செல்லும் பாதையில் (பயனீர் மில் சாலை) மயானமும் இருந்தன. இன்றைய பீளமேடு புதூரின் அன்றைய பெயர், கொள்ளுக்காடு. ஆரம்பத்தில் இப்பகுதியில் பத்து வீடுகளும் தோட்டங்களும் மட்டுமே இருந்தன. நாளடைவில், அதுவும் பெரிய ஊராக விரிவடைந்தது. கல்வி, மருத்துவம், தொழில், தொழில்கல்வி, மருத்துவக் கல்வி என பல துறைகளிலும் வளர்ந்து, கோவைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுத்தரும் மூளையாக இருப்பது, இந்த பூளைமேடுதான். பெயருக்கேற்ப, பலரையும் வாழ்வில் உயர்த்தி விட்ட இந்த மண்ணுக்கு வயது 307;
வாருங்கள்...வாழ்த்துங்கள்.
வளரட்டும் பூளைமேடு...வாழ்த்துவோம் மகிழ்வோடு!.

வெள்ளி, 13 நவம்பர், 2020

 திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் (ஜெய்வந்த் ஏஜென்சிஸ் )-உடுமலைபேட்டை

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர் உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

இன்று திருமதி .செல்வி விஜயகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 14-11-2020

ஜெய்வந்த் HP ஏஜென்சிஸ்...வக்கீல் நாகராஜன் வீதி ,(BSNL அலுவலகம் எதிரில்)உடுமலைப்பேட்டை,தொடர்பு எண் : .94891 87696. 👍🌱🌱🎂🎂


திங்கள், 9 நவம்பர், 2020

 

கேள்வி : மென்திறன்கள்  என்றால் என்ன ?..ஒரு சிறு விளக்கம் அளிக்க முடியுமா ..?


என் பதில் :..


மென்திறன்கள் என்பது ஒருவர் மற்றொருவரோடு பேசிப் பழகும் தன்மை, சமூகத்தில் பழகும் திறன், தொடர்புத் திறன், ஆளுமை பண்புகள், அணுகுமுறைகள், தொழில் சார்ந்த பண்புக்கூறுகள், உணர்வுகள் சார்ந்த திரன் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மேற்கண்ட பண்புகளைப் பயன்படுத்தி ஒருவர் தாங்கள் செய்யும் தொழிலில் யுத்திகளை கையாள்வது, குழுக்களில் பணிபுரியும் பொழுது அதற்கேற்ற பண்புகளை வெளிப்படுத்துவது போன்றவற்றின் மூலம் தங்களுடைய இலக்கை அடைவது அவசியமாகிறது.


காலின்ஸ் ஆங்கில அகராதியில், மென்திறன்கள் பற்றி நான் படித்து தெரிந்த கொண்ட விளக்கம் ..


"மென்திறன்கள் என்பது சில பணிகளுக்கு தேவைப்படும் ஏட்டு அறிவைச் சாராத பொது அறிவு அல்லது இயல்பு அறிவு சார்ந்த பண்புகள், மக்களை கையாளும் விதம் மற்றும் நேர்மறையான நெகிழ்வான அணுகுமுறை ஆகும்"


தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினாலும் மென்திறன்கள் அற்றவர்களை நிறுவனங்கள் ஏற்கத் தயங்குகின்றன.


2020 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேர்காணலில் பின்வரும் மென் திறன்களை உடையவர்களையே பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.


தொடர்புத் திறன்

சுயமுயற்சி

தலைமைப்பண்பு

குழுப்பணியாற்றுதல்

பொறுப்பேற்று செயலாற்றுவது

பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் திறன்

முடிவெடுக்கும் ஆற்றல்

கடினமான பணியையும் ஏற்று செய்யும் திறன்

நேரத்தை நிர்வகிக்கும் திறன்

பணியில் வளைந்து கொடுக்கும் தன்மை

பலருடன் கலந்துரையாடி ஒப்பந்தம் செய்து முடிவெடுக்கும் திறன்

இவற்றுள் உங்களுக்கு இருக்கும் மென்திறனை கண்டறிந்து அதை உங்கள் தற்குறிப்பில் இணையுங்கள்.


நேர்காணலில் உங்களுடைய மென்திறனைப் பற்றிய கேள்விகள் எழும்பொழுது உங்களுடைய மென்திறனை விளக்கும் படியான உங்கள் வாழ்க்கையில் நடந்த எடுத்துக்காட்டுகளைப் பகிருங்கள்.


உங்கள் திறமை உலகறிய மென்திறன் தேவை!


மென்திறன்கள் பயில்வோம்! சாதனை படைப்போம்!


நன்றி ...வாழ்த்துக்கள் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



சனி, 7 நவம்பர், 2020

 மாலகோவில் ...🐂🐐🥰🌱🌳


தைமாதம் ..சித்திரை மாதமும் ..கால்நடைகளை இங்கு இருக்கும் குட்டையில் குளிப்பாட்டி ...இந்த மாலகோவிலில் வருடம் தவறாமல் வழிபாடு செய்வது ஒரு சமூக மக்களின் பண்பாடு ..பாரம்பரியம் ...

கோழிக்குட்டை ..பண்ணைக்கிணறு அருகே ..புதுப்பாளையம் செல்லும் வழியில் 


உடுமலைப்பேட்டை .. 📚📚✍️✍️🌱🌳⚔️🏹🐐🐂🐂

 


திருமண வரவேற்பு நிகழ்வு ..


என் அருமை மாப்பிள்ளை A .தினேஷ் பாபு -D .ரேவதி 

புதுமண தம்பதிகளுக்கு ..வாழ்த்துக்கள் ..

நாள் :10-11-2020

கிழமை :செவ்வாய் கிழமை ...

இடம் :GK மஹால் .சோமவாரப்பட்டி -பெதவை -உடுமலைப்பேட்டை 

நேரம் : மாலை - 6  மணிமுதல் 10 மணிவரை 


மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .

இங்ஙனம் ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் 

உடுமலைப்பேட்டை ..

வெள்ளி, 6 நவம்பர், 2020

திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை


திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை 

பொறுப்புகள் 

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் மாநில மகளிர் அணி செயலாளர் 

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் 

நமது கம்பள பெண் சமுதாயத்தில் நமது சொந்தங்களுடன் சிறு சிறு சமுதாய பணிகள் செய்து இந்த அளவிற்கு முன்னேறியது ஒரு வழிகாட்டல்களாக எடுத்துக்கொள்ளலாம் ..தனக்கு திருமணம் முடித்ததும் ..தன் தாயின் இழப்புடன் ..தன் கணவர் ராமசாமி அவர்கள் ,டைல்ஸ்வியாபாரத்திற்கு ,தரை, கூரை மற்றும் சுவர்களின் முக்கிய கட்டுமான அங்கமாகத் திகழ்பவை டைல்ஸ். உள்கட்டுமானம், வெளிக்கட்டுமானம் இரண்டுக்குமே அழகியலைச் சேர்ப்பதில் உதவுவன. பொருளாதாரச் சந்தை ஏறி இறங்கினாலும், கட்டுமானப் பொருள்களுக்கான சந்தை என்பது அதற்குரிய லாபத்தை எட்டத் தவறுவதில்லை எனலாம். இதில் டைல்ஸுக்கும் பங்குண்டு.வியாபாரத்திற்கு முழுமூச்சுடன் ஒத்துழைத்து தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் தன் கூட பிறந்த தம்பிகளின் கல்விக்கும் தன் கணவரின் ஒத்துழைப்போடும் ,பொறுப்புடன் வளர்த்து கல்வி தான் நம் சமுதாயத்திற்கு வளர்ச்சிக்கு உதவும் என்று ஆணித்தரமாக எண்ணி கல்லூரி படிப்பு முடிய வாழக்கையில் உயர்த்தி ..இரண்டு தம்பிகளின் திருமண பந்தத்தில் ஒன்றிணைத்து பொறுப்புடன் இன்று நம் கம்பளசமுதாயத்தில் தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும்  முன்னேற்றம்  அடைய வைத்து  நம் கம்பள சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக உள்ளது .திருமதி மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இரண்டு ஆண் செல்வங்களை பள்ளிப்படிப்பிற்கு உறுதுணையாக ,குடும்ப சக்கரத்தை பொறுப்புடன் நகர்த்தி வருவது மிக்க மகிழ்ச்சி ..

இந்த வளர்ச்சியை கண்கூட பார்த்த நம் சமுதாய தலைவர்கள் ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் ..திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு ..மாநில மகளிர் அணி செயலாளர் பதிவு கொடுத்து .நமது சமுதாய சொந்தங்கள் இருக்கும் ஊர்களில் நிகழ்வுகள் நடக்கும்பொழுது இவரும் கலந்துகொண்டு சிறப்பு செய்வது மகிழ்ச்சி ..மேலும் இவர் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு சிறு கல்விக்கான நிதிகளையும் நம் சொந்தங்களுக்கு அளித்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ..


இன்று திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...உடுமலைப்பேட்டை ..





 

வியாழன், 5 நவம்பர், 2020

 Sivakumar Kumar........கார் இன்சூரன்ஸ் -9944066681

கேள்வி : வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம்

என் பதில் :.

வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம் என்பதை நாம்  

தெரிந்து வைத்திருப்பது நல்லது. 

அவ்வாறு இழப்பீடு பெறுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்: 

1) மூன்றாவது தரப்பினருக்கு ஏற்படும் உடல் சேதம் அல்லது பொருள் சேதம். அல்லது,

2) காப்பீடு செய்திருப்பவருக்கு ஏற்படும் தனிநபர் சேதம், காப்பீடு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு ஏற்படும் சேதம். இந்த சுய சேத 

இழப்பீட்டைப் பெற அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யும் விரிவான காப்பீடு வைத்திருப்பது அவசியம். 

மூன்றாம் தரப்புக்கான இழப்பீடு உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம். அல்லது வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். வாகன காப்பீடு செய்திருக்கும் நபர்கள் இழப்பீட்டை எப்போது பெறுவது எப்படி பெறுவது என்பது குறித்து அறிந்து வைத்திருத்தல் அவசியம். 

சுய சேதத்திற்கான இழப்பீடு வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும் போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம். அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு ஒரு சோதனையாளரை அனுப்பி சேதத்தின் அளவு குறித்து அவர்களால் ஆய்வு செய்ய முடியும். விபத்து நடந்த இடத்தில் இருந்து காவல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வாகனத்தை நகற்ற முயற்சிக்கக் கூடாது. வாகனத்தை எடுத்துச் செல்ல உத்தரவு கிடைத்த பின் அவ்வாறு செய்தல் நன்று. உங்கள் காப்பீடு பணமில்லா சேவை அளிப்பதாக இருந்தால் வாகனத்தை சரி செய்யும் பணிமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக சரி செய்ய ஆகும் கட்டணத்தை அளித்துவிடும். இந்த சேவை இருந்தாலும் இல்லாவிடினும் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.

திருட்டுக்கான காப்பீடு உங்கள் வாகனம் திருட்டு போனால் உடனே காவல் துறைக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து துறைக்கு தெரிவிப்பதும் அவசியம். காப்பீடு ஆவணத்தை பெற்ற உடனேயே இழப்பீடு பெறுவதற்கான முறைகளையும், ஆவணக்கோப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இழப்பீடு கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, கையொப்பமிட்டு காப்பீடு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில வகையான இழப்பீடுகளுக்கு சில சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs,CAR INSURENCE) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE


கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

என் பதில் : 

 எங்கே வீடு கட்ட போகிறீர்கள்.
சென்னை போன்ற நகரமா ?
அல்லது மதுரை, கோவை போன்ற இரண்டாவது நகரமா?
பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை ..யா .அல்லது       கிராமத்தில் கட்ட போறீங்களா?

உங்கள் வரைபடம் எங்கே?
நிலம் எவ்வளவு?

நிலம் 1000 sft - அல்லது கட்டிடம் 1000 sft ?
ஒரு மாடியா ? இரண்டு மாடியா?

உங்கள் நிலத்துக்கு அருகில் உள்ள சாலையின் அகலம் என்ன ?

உங்கள் நிலத்தில் எது போன்ற மண்..(ஜி..நிலமே இன்னும் வாங்க வில்லை)
நல்ல செம்மண் போல இருக்குமா? களிமண் போல இருக்குமா?
அல்லது குப்பைகள் போல மூடி உள்ள இடமா ? சதுப்பு நிலம் போன்ற இடமா ?

கம்பௌண்ட் சுவர் கட்ட வேண்டுமா? இல்லை பக்கத்தில் உள்ள நிலத்தில் ஏற்கனவே சுவர் உள்ளதா?

செப்டிக் டேங்க் கட்ட வேண்டுமா? அல்லது நகராட்சியின் கழிவுநீர் திட்டம் (line) ஏற்கனவே உள்ளதா ?

கீழ் நிலை தொட்டி (underground tank) கட்ட வேண்டுமா?

இது எதுவுமே இல்லாமல் ஒரு estimate கேட்டு உள்ளீர்கள்.

எதுவும் இல்லை..சும்மா கேள்வி கேட்ட வேண்டும் என்று கேட்டு உள்ளீர்களா?

பதில் எடுத்து கொள்ளுங்கள்.

கோவை  போன்ற 2வது நகரம் என்று வைத்து கொள்ளுங்கள்.

இன்னும் தெளிவாக வேண்டும் என்றால் ஒரு கட்டிட Architect அவர்களிடம் சென்றால் அவர் உங்களுக்கு தெளிவான வரைபடம் வரைந்து குடுப்பார்.

_______

Option 1 - விருப்பத்தேர்வு 1
Option - 2 - விருப்பத்தேர்வு 2
Option - 3 (Land 900 to 1000 sft) - விருப்பத்தேர்வு 3
வரைபடம் இணைத்துள்ளேன் ..பார்க்கவும் .
சரியான திட்டமிடல் (Planning) உடன் பண்ணினால் 15 லட்சத்தில் கட்ட முடியும்.

நீங்களே சொந்தமாக, உங்கள் மேற்பார்வையில் கட்ட வேண்டும். 6 மாதம் வீட்டுக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும்.
வீட்டுக்கு குறைந்த செலவினால் ஆன tile மட்டும் தான் கட்டப்பட வேண்டும். (35 to 80 sft விலையில்)
ஜன்னல் மற்றும் கதவுகளை எண்ணிக்கை சற்று குறைவாக வைக்க வேண்டும் (அடுப்படியில் கதவு தவிர்க்க வேண்டும்…அது போல சில விசயங்கள்).
வீட்டின் உயரம், சாலையில் இருந்து 2 அடி உயரம் தான் இருக்கும். (I.e . வீட்டின் உட்புறம் ..தரையின் அளவு சாலையை விட 2 அடி தான் உயரம்..நீங்கள் இந்த உயரத்தை ஏற்றினால் செலவு அதிகரிக்கும்
ஜன்னலின் மரத்தை வேப்ப மரம் உபயோகப்படுத்தலாம். தேக்கு மரம் விலை உயர்வு.
வீட்டின் cupboard எல்லாம் பின்னாடி செய்து கொள்ள வேண்டும். (15 லட்சத்தில் இது சேராது.)
நிலம் வாங்கும் போது, செவ்வக வடிவ நிலத்தை விட சதுரவடிவ நிலம் வாங்கினால் வரைபடம் வடிவமைப்பு (Design) செய்யும்போது மிக சிறந்த Design / Elevation அமையும்.

நன்றி ...உங்கள் கனவு வீடு அமைய வாழ்த்துக்கள் 

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 3 நவம்பர், 2020

 திருமண வாழ்த்துக்கள் ..04-11-2020

என் அருமை மாப்பிள்ளை S .பாலகுமார் -என் அருமை மகள் N .வசந்தா 

உடுமலைப்பேட்டை ,கே .வல்லகொண்டபுரம், ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் திருக்கோவிலில் . நேரம் :காலை  6.00 மணிக்குமேல் 7.25 ..குள் ..நடைபெறும் திருமணத்திற்கு ..புதுமண தம்பதிகளுக்கு . திருமண வாழ்த்துக்கள் 


கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 

உடுமலைப்பேட்டை 




ஞாயிறு, 1 நவம்பர், 2020

ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-11-2020)

 இன்றைய ஞாயிறு ...01-11-2020


ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-110-2020)


இன்றைய பயணம் வளம் கொழிக்கும் மருத நிலம் ...கரை வழி நாடு ...மேய்த்தல் நிலங்கள் உள்ள பகுதி ..தன் மக்களுக்கு வாரிக்கொடுத்த குமணன் வள்ளல் வாழந்த பகுதி ..வணிக வழி கால்நடை ,அழகன் குளம் முதல் கல்லாபுரம் பெருவழி சந்தை ..R .வாடிப்பட்டி அருகே பார்த்த வணிக குறியீடு கொண்ட நடுகல் ...ஏழூர் அம்மன் தரிசனம் ..குமணன் தவம் செய்த வழியில் ஆண்டிபட்டி மலை அடிவாரம் பெருமாள் கோவில் ...பழனி வையாபுரியில் இருக்கும் அம்மன் வழிபாடு ...பயணம் முடித்ததும் ..பெருமழை  30 நிமிடம் நனைந்து  உடுமலை வந்தது மிக்க மகிழ்ச்சி ...




சனி, 31 அக்டோபர், 2020

கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?

 கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?


பதில்:..என் இனிய நண்பர் ..Dr.Andrew Peter Leon-Genetics and Plant Breeding இல் PhD, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (2020 ஆண்டு பட்டம் பெற்றார்)


கடந்த 2019 டிசம்பரில் ஹி ஹியான்குய் என்ற சீன ஆய்வாளர் ஆய்வு அறங்களை மீறியதற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவர் செய்த தவறு (மிகப்பெரிய), தான்தோன்றித்தனமாக ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தை மனிதக் கருவில் சோதித்துப் பார்த்தது! அவரின் ஆய்வின் படி பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி வைரசுக்கு எதிர்ப்புத்திறன் பெற்றிருக்கும்!


அவர் பயன்படுத்திய தொழில்நுட்பம் தான் நவீன உலகை முற்றிலும் மாற்றக்கூடிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு பெயர் 'Designer Baby technology' என்றழைக்கப்படும் கிறிஸ்பர்-கேஸ் (CRISPR-Cas). உயிரியல் ஆய்வுகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுபவராக இருந்தால் கவனித்திருப்பீர்கள்: 2014-க்கு பிறகு கிறஸ்பர்-கேஸ் தான் மிக அதிகமாகப் பேசப்பட்ட, படுகின்ற தொழில்நுட்பமாக இருக்கும்.


அப்படி என்ன தொழில்நுட்பம் அது?


பாக்டீரியாக்கள் எப்போதும் தங்களிடம் அதிசயிக்கத்தக்க உயிரியல் மற்றும் மரபியல் செயல்பாடுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன. இந்த செயல்பாடுகளால்தாம் இவற்றால் மனிதர்கள் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத அதீத சூழ்நிலைகளிலும் தப்பி வாழ முடிகிறது.


இயற்கையில் பாக்டீரியாக்களின் முக்கிய எதிரிகள் பாக்டீரியோபேஜ் எனும் வைரசுகள். சானிடைசர் வாங்க வழியில்லாததால் அவை வேறு பல நுட்பமான செயல்முறைகளால் பாக்டீரியோபேஜ்களைத் தோற்கடிக்கின்றன. அவற்றில் ஒன்று கிறிஸ்பர்-கேஸ்.


ஒரு பாக்டீரியோபேஜ் முதன்முறையாகத் தாக்கும்போது பாக்டீரியாக்கள் அவற்றின் மரபுத் தொடர்களை படி எடுத்து தங்கள் மரபுக்கூறுகளுடன் சேமித்து வைத்துக்கொள்கின்றன. இதுக்குப் பேர்தான் சுருக்கமாக ‘கிறிஸ்பர்’ (CRISPR:clustered regularly interspaced short palindromic repeats). கேஸ் என்பதற்கு ‘கிறிஸ்பர் சார்ந்த’ என்ற பேர் (Cas-CRISPR associated). இது ஒரு கிறிஸ்பர் சார்ந்த, டி.என்.ஏக்களை துண்டுபோடும் புரதத் தொகுப்பு (restriction enzyme - Molecular scissors).


இப்போதான் ஆட்டம் ஆரம்பம். அதாவது, மறுமுறையாக ஒரு பாக்டீரியோபேஜ் தாக்கினால், முந்தையத் தலைமுறையில் சேமித்த மரபுத்தகவல் இருக்கிறதல்லவா? அந்தத் தகவலை வைத்துக் கொண்டு, இந்த கேஸ் என்சைம் பாக்டீரியோபேஜ்களின் டி.என்.ஏ-வை ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்திவிடும். அதாவது பரம்பரை பரம்பரையாகத் தங்கள் எதிரியை அடையாளம் கண்டு அழிக்கும் ஆற்றல் பெறுகின்றன.


இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா. இந்த கிறிஸ்பர்-கேஸ் 1980 களிலேயே கண்டறியப்பட்டாலும் ஆரம்பத்தில் ஆய்வாளர்களும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தக் கேஸ் புரதத்தொகுப்பைக் கூர்ந்து பார்க்கையில் அது வைரசின் டி.என்.ஏ என்றில்லாமல் எந்த டி.என்.ஏ வையும் துண்டுபோடும் ரவுடி என்பது தெளிவானது. மற்றபடி இதை ஒழுங்குபடுத்தத்தான் பாக்டீரியாக்கள் வைரசின் டி.என்.ஏக்களை சேமித்து வைக்கின்றன. அதாவது, சேமித்து வைக்கப்பட்டுள்ள வைரசின் டி.என்.ஏ-விற்கு பதிலாக நாம் விரும்பும் டி.என்.ஏ பகுதியை இணைத்தால் அந்த இடத்தை அடையாளம் கண்டு கேஸ் 'சம்பவம்' செய்துவிடும்.


கேஸ் என்சைம் - எவனா இருந்தாலும் வெட்டுவேன்!


ரொம்ப எளிதாக விளக்கவேண்டுமானால், காவல்துறையிடம் இருக்கும் டி.என்.ஏ வை அழித்துவிட்டு வேறு ஒருவரின் டி.என்.ஏ வை வைத்து மாட்டி விடுவது போன்றது.


இதைத்தான் 2010 வாக்கில் (2012-ல் அறிவியல் இதழ்களில் பதிவாகின) Jennifer Doudna மற்றும் குழுவினரும், Feng Zhang மற்றும் குழுவினரும் தன்னிச்சையாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு காப்புரிமை பெற்றனர். (இந்தக் காப்புரிமை பெறுவதற்காக எழுந்த போட்டியே, இந்த தொழில்நுட்பம் எவ்வளது முக்கியமானது என்பதை உணர்த்தும்!).


இதில் என்ன சிறப்பு?


உயிரினங்களின் இயக்கங்கள் மரபுப்பொருட்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மரபுப்பொருட்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய மாற்றத்தை விளைவிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இயற்கையில் இப்படி நடக்கும் மாற்றத்தைத்தான் நாம் சடுதி மாற்றம் (mutations) என்கிறோம் - இதுவே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.


ஆனால், இந்த சடுதி மாற்றத்தை அதிதுல்லியமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் (ஜீன்) நடத்தும்போது நோய் எதிர்ப்புத்திறன் போன்ற உயர் பண்புகளைப் பெற வழியிருக்கிறது. கிறிஸ்பர்-கேஸ் இந்தச் செயல்களை முன் எப்போதும் இல்லாத வகையில் எளிதாகவும் செலவற்றதாகவும் மாற்றிவிட்டது. முக்கியமாக, வேளாண்மைத் துறையில் மரபு-மாற்றியப் பயிர்கள் தீவிர எதிர்ப்பைச் சந்தித்து வரும் காலகட்டத்தில் இத்தொழில்நுட்பம் நம்பிக்கை தருவதாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது (நம்புங்கள்-கிறிஸ்பர் இல்லாமல் வருங்கால வேளாண் இரகங்கள் இல்லை!). ஏற்கனவே நாளானாலும் கருத்துப் போகாத காளான் வகைகள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன.


எச்சரிக்கை மணி!


எப்போதும் போலவே, பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கிறிஸ்பர் போன்றத் தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியமானது. காப்புரிமை பெறும் காலகட்டத்திலேயே யு.சி. பெர்க்லி பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்காமல் தனியார் சார்ந்த பிராடு (Broad Institute) ஆராய்ச்சி நிலையத்துக்குக் காப்புரிமை வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.


Feng Zhang, சீன ஆய்வாளரின் தன்னிச்சையான எச்.ஐ.வி ஆய்வு அறிவிக்கையைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பல நாடுகளும் சட்டங்கள் வகுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.


கிறிஸ்பர் குறித்து ஒரு கண்காட்சியில் விளக்கிக்கொண்டிருக்கும் போது, ஒரு மாணவர் 'டிசைனர் பேபி' என்று சொல்கிறீர்களே - எனக்கு ஒரு ஆண்குழந்தை 'Blue Eyes'-உடன் வேண்டும், முடியுமா? என்றார். வேடிக்கையாகத் தோன்றினாலும் வில்லங்கம் புரிகிறதா!


அறிவியலின் கண்டுபிடிப்பு ..நன்றி ..

செவ்வாய், 27 அக்டோபர், 2020

உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

 அன்புள்ள திரு சிவகுமார் மாமா அவர்களுக்கு, தங்களுடைய சொந்த விஷயம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தங்களது சொந்த விஷயங்கள் சம்பந்தப்பட்ட தளத்திலோ அல்லது தனித்தனியாகவோ பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் இத்தளத்தில் சமுதாய சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் பதிவிடுவது சிறந்தது என கருதுகிறேன்.

நீங்கள் பதிவிடும் அத்தனை பதிவுகளையும் பெரும்பாலும் முழுவதுமாக படிக்கவும் மாட்டார்கள்.பெரும்பாலோர்க்கு படிக்கவும் நேரமும் இருக்காது என கருதுகிறேன்.

தாங்கள் நமது சமுதாய பதிவுகள் இல்லாமல் மற்ற பதிவுகள் பதிவிட்டால் நிறையபேர் என்னிடம் யாருங்க அந்த சிவக்குமார்? சம்பந்தமே இல்லாத பதிவுகளப்போட்டுட்டு வெறுப்பேத்தறாரு.நாங்கள்ளெல்லாம் குரூப்ல இருக்கறதா?இல்ல லெஃப்ட் ஆகிடறதான்னு கேட்கிறாங்க.

தாங்களால் நிறையபேர் லெஃப்ட் ஆகிடற வருத்தமான சூழ்நிலைக்கு ஏன் கொண்டு வர்றீங்க? 

இதை என்கிட்ட கேட்கறவங்களுக்கு உங்களபத்தி நான் எப்படிங்க பதில் சொல்லமுடியும்?

   புரிஞ்சுக்குவீங்கன்னு நெனைக்கிறேன் மாமா.


அன்பு நண்பருக்கு

 உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

இது நமது சமுதாயம் சார்ந்த குழு என்பது உண்மையே..ஆனால் சமுதாயம் சார்ந் பதிவுகளை இட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களைத்தான் பதிவு செய்யக்கூடாது என்பது கொள்கை. இதுநாள் வரையிலும் சிவா மாமா அவர்கள் இது மாதிரி சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிடுவதில்லை.

.

ஒரே ஒரு சின்ன விஷயம் மற்ற சமுதாயத்திலிருந்து நாம் இன்னமும் முன்னேறாதிருப்பதற்க்கு காரணம் என்னவென்றால்   எத்தனையோ நல்ல விஷயங்களை பகிரும் போது பாராட்டாத நாம் எப்போதாவது வேறு ஏதாவது பகிரப்பட்டால் அதைப் பெரிதாக பேசிக்கொண்டிருப்பதுதான்.. எத்தனையோ நல்ல

நம் சமுதாயம் சார்ந்த விஷயங்களை  பகிரும் போது பாராட்டாத நாம் குறை சொல்வதற்க்கு நேரத்தை ஒதுக்குவது இன்னும் நம் சமுதாயத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது..

இங்கு அரசியல் பேசுகிறார்கள் 

உடல் ஆரோக்கிய குறிப்புகள் வருகிறது 

வேலை வாய்ப்பு தகவல்கள் இடம்பெறுகிறது

தம் உழைப்பால் முன்னேறிய நம் சமுதாய   நண்பர்களைப் பற்றிய பதிவுகள் வருகிறது..பல்வேறு துறைகளில் முன்னேறிய நம்

நம் சமுதாய மகளிர் ஆண்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன..

இதையெல்லாம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்...

பிற சமுதாயத்தவர்கள் (கவுண்டர் வண்ணியர் நாயுடு இன்னும் பல) இவர்களெல்லாம் நமக்கு பின் இருந்தவர்கள்தான் ஆனால் அவர்கள் முன்னேறியததன் காரணம் பிற சமுதாயதத்திலிருந்து கற்ற பாடங்கள்தான்..கொங்கு அமைப்பில் ஒரு முக்கிய மனிதர் சொன்னது என்னவென்றால் நான் தீரன்சின்னமலையை நேசித்து போற்றி விழா எடுப்பதற்க்கு ஊக்கமளித்தது கட்டபொம்மனுக்கு நீங்கள் எடுக்கும் பிரமாண்ட விழாதான் என்று சொல்லி இருக்கிறார் அவர்கள் நம்மை பின்பற்றுகிறார்கள்..

ஆனால் நாம் பிற பதிவுகளைப் போடுவதற்க்கு தடை வருகிறது இன்னமும் நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகத்தான் இருந்துகொண்டு வருகிரோமே தவிற நமக்கான முன்னேற்றத்தை இதன் மூலம் தேட தவறுகிறோம் ..

ஆனால் சிவக்குமார் மாமா அவர் போடும் பதிவுகளுக்குப் பின்னால் நம் சமுதாய நண்பர்களின் உயர்வு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும்..

அன்றாடம் நாம் பார்க்கும் பழகும் நண்பர்கள் பெரிய மனிதர்கள் பல்வேறு துறைகளைச்சார்ந்த நண்பர்கள் ஆகியோருடனா பயணம் நம் வாழ்க்கைக்கும் நம் உயர்வுக்கும் உதவும் என்பதற்க்குதான் தான் செய்யும் வேலைகள் போகும் இடங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவுகளாக இடுகிறாரரே தவிற சுய விளம்பரம் கிடையாது...

இந்த குரூப்பில் இருக்கும் சில பேர் சொல்லி இருக்கிறார்கள் தினமும் காலையில் எழுந்து ஒரு செய்தித்தாள் படிப்பதை போல இருக்கிறது குருப்பில் வரும் தகவல்கள் என்று ....எனவே தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் தேவைப்படாத விஷயங்களை விட்டு விடுங்கள்.....


நன்றி....📚✍️✍️Jayaraman.🤭😲

அன்பு உறவுகளே... சக உறவினர் ஒருவர் சிவகுமார் சார் குறித்து

அன்பு உறவுகளே...

சக உறவினர் ஒருவர்

சிவகுமார் சார் குறித்து

எழுதிய பதிவு என்னை

அதிர்வுக்குள்ளாக்கியது

நாங்கள் வேறு ஒரு

அமைப்பை நடத்தி

வந்தாலும் மனப்பூர்வமான  இதய

சுத்தியோடு சொல்கிறேன் நம் சமுதாய உணர்வோடு

வலம் வரும் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமையும் அக்கறையும் கொண்ட

மிகச் சில தலைவர்களில் திரு.

சிவகுமார் சார் அவர்களும் உண்டு.

KVE குழுமத்தில் நம்

சமுதாய மக்களின் நலனுக்காக தானே

ஒவ்வொரு விடயத்தையும் தேடித்

தேடி எழுதி வருகிறார்.

நூலகர் வட்டம் அகழாய்வு பாரம்பரிய

கோவில்கள் நம்மவர்களின் திருமண

விழாக்கள் குழுவினரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம் இனத்தின் பூர்விக

வரலாறு பூர்விக பாடல்கள் சடங்கு

சம்பிரதாயங்கள் இவையெல்லாம் சமுதாய விஷயங்கள்

தானே? இது போக

தன்னம்பிக்கை தரும்

செய்திகள் அன்றாடம்

வாழ்வில் எதிர்கொள்ளும் கடன்

முதலீடு காப்பீடு மற்றும்

வீட்டுக்கடன் போன்ற

பதிவுகள் நம் சமுதாய

மக்களுக்கு பயன்படாதா?

நண்பரே எது உங்களுக்கு வேண்டாம்

என்று எனக்கு புரியவில்லை.

எல்லாம் சரியாவே

இருக்கின்றது.

சமுதாய செய்திகளோடு

நாட்டு நடப்புகளையும்

விவாதித்து செய்திகள்

அளிப்பது தவறா?

வேண்டாம் தோழரே

கண்ணியம் மிக்க

ஒருவரை காயப்படுத்த

வேண்டாம்.

திரு சிவகுமார் அவர்களின் ஆத்மார்த்தமான பணியில் நம்மையும்

இணைத்துக் கொண்டு

ஒற்றுமையுடன் ‌நம்

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக

மட்டுமே பாடுபட

உறுதி ஏற்போம்



அன்புடன்

சௌந்தரபாண்டியன்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱



அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱

தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...

ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் அக்காமார்களும் ,தங்கச்சிமார்களும் எல்லாம் சேலை,தாவணி ,பட்டுப்பாவாடைனு , எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே பழனி ரோட்டுல இருக்கிற குறிஞ்சி துணிக்கடையில துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு காதர் பாய் அண்ணா ..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் காந்தி சவுக் மாடர்ன் டெய்லர் அண்ணாகிட்ட துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி தளி ரோட்ல வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே தளி ரோட்ல இருக்கிற கோமதி ஏஜென்சிஸ் ல பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வாங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டுமாடர்ன் டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...நெறைய பேர் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...
⛱⛱⛱

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி க்கு கல்பனா தியேட்டர் ல கமல் படம் புன்னகை மன்னன் சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க....தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மலரும் நினைவுகளை ...

என்றும் அன்புடன் தீபாவளி வாழ்த்துக்களுடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..👍❤❤❤❤⛱⛱⛱✒✒🏡🏡