கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?
என் பதில் :..
இது வழக்கமான பதிவு அல்ல . எனவே tag ...களில் சில மாற்றம் ..
. விருப்பம் உளளவர்கள் மட்டும் கருத்துக்களை பதிவு செய்யவும் . நன்றி .!
தமிழ் வளர்க்கும் சமூக வலை தளங்களில் பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம் ... முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம் . இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அனுபவ பதிவு இட்டிருந்தேன். ஒரு நல்ல பதிவர் ,வீட்டுக்கடன் விற்பனை ,சமூக ஆர்வலர் , (நாமே சொல்லிக்க வேண்டியதுதான்) அழகு இரண்டு பக்கங்களையும் முன் வைப்பது தான். அந்த வகையில் நான் கவனித்த எனக்கு ஏற்பில்லாத சில விஷயங்கள் இங்கே. இந்தப் பதிவு யாரையும் குறிப்பிட்டதல்ல.. அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் சொந்தக் கருத்தே.
முன்னெச்சரிக்கையா சொல்லிக்க வேண்டி இருக்கு ஏன்னா பேசப் போற விஷயம் அப்படி.
பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம் இல் சில காலமாகப் புழங்கி வருவதில் எல்லா இடங்களையும் போல இங்கேயும் சத்தத்திற்கும் கூட்டத்திற்கும் தான் முக்கியம் இருப்பதாகக் கருதப் படுகிறது. எல்லா விஷயத்தையும் பாராட்டவும் திட்டவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நல்ல நண்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கிடைக்கும் அதே இடத்தில் அரை வேக்காட்டுத் தனமாக உளறுபவர்கள் சிலர் . எப்படி செய்தி/சினிமா விற்பவர்கள் வன்முறையையும் கவர்ச்சியையும் முன் வைத்து வியாபாரம் செய்கிறார்களோ அது போல் தன்னை விற்க முனைபவர்களையும் காண முடிகிறது. நாகரீகம் அற்ற வார்த்தைகளில் திட்டுவது சாதாரணமாக நடக்கிறது.
ஒரு விஷயத்தை யாராவது சொன்னால் முதல் கேள்வி.. “உனக்கு என்ன தகுதி இருக்கிறது அதை சொல்ல..?” என்பதாக இருக்கிறது. நமது அனுபவம் பற்றி சொல்ல என்ன தனியா ஜர்னலிசம் படிச்சுட்டு வரணுமா ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக