ஞாயிறு, 2 மே, 2021

 

கேள்வி : மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத வாழ்க்கையின் சில யதார்த்தமான விடயங்கள் என்ன?


என் பதில் : 


இன்று சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுப்பதில்லை.


காதல் திருமணத்தை மட்டும் சொல்லவில்லை.பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையாக இருந்தாலும் அது பெண்ணின் விருப்பமின்றி நடைபெறுகிறது.


இன்று ஓரளவுக்கு மாறினாலும். இன்னும் பெருவாரியான பெற்றோர்களுக்கு அந்த ஏற்றுக்கொள்ளும் தன்மை வரவில்லை. சாதி, மதம், பொருளாதார பிண்ணி அவர்கள் கண்களை மறைத்து விடுகிறது.


பல பெண்கள் கட்டாய திருமணத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அதற்காக பெற்றோர்கள் செய்வதை சரி என்று கூறமுடியாது.


விருப்பமில்லாத திருமண வாழ்க்கையில் நுழைவது நரகத்தை விட கொடுமையானது. அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.


அப்படியென்றால் எல்லோரும் காதல் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. எந்த முறை திருமணமானாலும் அது பெண்ணின் முழு சம்மதத்துடன் நடக்க வேண்டும்.


இன்று தினம் தினம் எண்ணற்ற காதல் ஜோடிகள் காவல் நிலையங்களில் தஞ்சம் புகுகின்றன. அந்தளவுக்கு பெற்றவர்கள் மனதில் வன்மும் வன்முறையும் புதைந்து கிடக்கிறது.ஆனால் பெற்றவர்களே கண்கண்ட தெய்வம் என்று இந்த சமூகம் சொல்லும்.


ஒரு காலத்தில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அதை இன்று நினைத்துப் பார்த்தால் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமாக தெரியும். அதைப் போல பின்னாள் வரும் சந்ததியினர் இப்பொழுது நடக்கும் கெளரவக் கொலைகளை பார்த்து ஏளனம் செய்வார்கள்.


ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்து விட்டு இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது மிகுந்த மனத்துயரத்தை ஒரு பெண்ணிற்கு கொடுக்கும்.


பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளிடம் சாதகபாதகங்களை சொல்லி புரிய வைக்கலாம்.ஆனால் நிர்பந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஆணுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகள் இருப்பதில்லை.


ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் மிகுந்த பாகுபாடு இருப்பது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.


தன் பெண்பிள்ளைகளின் உறவை முறித்துக்கொண்டு எந்த ஒரு ஒட்டு உறவின்றி எண்ணற்ற பெற்றோர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


அப்படி என்றால் அயோக்கியனை தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது.? எல்லா பெண்களும் சினிமாவில் காண்பிப்பது போன்று பரதேசிகளையே விரும்புவதில்லை. அது போன்ற சூழ்நிலையை பற்றி இங்கு பேசவரவில்லை. நல்ல மாப்பிள்ளையாக இருந்தும் நிராகரிப்பவர்களைப்பற்றி பேசுகிறேன்.


தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். நீங்கள் சொற்கத்திற்கே சென்றாலும் அங்கு சுதந்திரம் இல்லை என்றால் ஒரு பயனும் இல்லை. அதைப் போலத்தான் நீங்கள் எவ்வளவு அழகான வாழ்க்கை அமைத்துக்கொடுத்தாலும் அதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் எல்லாம் வீண்தான்‌.


காதல் தெய்வீகமானது, புனிதமானது, அழகானது என்று துதிபாட இங்கு வரவில்லை. பெண்ணின் சம்மதமும் விருப்பமும் தான் இந்த பதிவின் மையக்கருத்து.


ஆண்களும் பெண்களும் எத்தனையோ கனவுகளுடன் திருமண பந்தத்தை தொடங்குகிறார்கள். ஆனால் தம் வாழ்க்கைத்துணை வேறுவழியின்றி நம்மை மணக்கிறார்கள் என்று பல பேருக்கு தெரிவதில்லை. உண்மை எப்பொழுதும் ஒளிந்துகொண்டு தான் இருக்கும்‌.


ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதை பல பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.


நன்றி ....வாழ்க்கை வாழ்வதற்கே ...


சனி, 1 மே, 2021

 கேள்வி: சொந்த வீடு வாங்க வாழ்க்கையை தொலைப்பது முட்டாள்தனமா இல்லையா?


என் பதில் : 


சொந்த வீடு வேண்டும் என்பதும் , வேண்டாம் என்பதும் அவரவர் விருப்பம்தான்.


என் அனுபவத்தில் நடந்ததைச் சொல்கிறேன்.


முதலில், நாங்கள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். வருமானம் நன்றாக இருந்தது. அப்போது எல்லாம் ,சொந்த வீடு வேண்டும் என்ற நினைப்பு இருந்தாலும், தீவிரமாக இல்லை.


வந்தது ஏழரை. வாடகை கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கே  சென்று விட்டோம். தினமும் பிரச்சினைகள்.


ஒருவழியாக, மறுபடியும் நகரத்திற்கு வந்து , மறுபடியும் வாடகை வீடு.


ஆனால்,வாடகை வீட்டில் வசிக்கும் பொழுது மிகவும் பொறுமை வேண்டும். இல்லையெனில் பட்டியலைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.


ஒருவழியாக, லோன் அரேஞ்ச் செய்து கொடுத்து, வீட்டையும் கட்டித் தரும் ஃபில்டர்ஸ் மூலமாக சொந்த வீட்டில் குடியேறி விட்டோம் வெற்றிகரமாக!!


ஆனால்,முதல் ஒரு வருடத்திற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதை நாங்கள் எதிர்பார்த்ததுதான்.


ஏனெனில், வீடு கட்ட ஆரம்பிக்கும் போதே, பட்ஜெட் போட்டு பார்த்தோம். ஒருவரின் சம்பளம் முழுவதும் லோனுக்கு போய்விடும். இன்னொருவரின் சம்பளத்தில் தான் மளிகை, விசேஷம், ஸ்கூல் ஃபீஸ்,காலேஜ் ஃபீஸ், மாதாந்திர சீட்டு பணம் சமாளிக்க வேண்டும்.


குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, எங்களுக்கு உதவினார்கள், மனரீதியாக.


முதல் ஆறு மாதங்கள்,மிகக் கடுமையாக இருந்தது ‌‌. அவசரத்திற்கு 15,20 நாள் அல்லது ஒருமாதத் தவணைக்கு ( முடிந்த வரையில் வட்டிக்கு வாங்காமல்) கைமாற்று வாங்கி சமாளித்தோம்.


ஒவ்வொரு சீட்டும் முடிய,முடிய( ஏற்கனவே அவைகள் முடிவதற்கு சில மாதங்கள் மட்டுமே இருந்தது. அதை மட்டும் கொஞ்சம் கவனித்து வீட்டு வேலையை ஆரம்பித்தோம்) எங்களைச் சுற்றி இறுக்கியிருந்த கயிறு, இலேசாக இளக ஆரம்பித்தது.


கடைசி சீட்டும் முடிந்ததும் , முற்றிலும் விடுதலையான உணர்வு!! பரவசம்!!


இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,இந்த ஆறு மாதங்களில் " திட்டமிடல்" என்னவென்று மேலும் நன்றாகப் புரிந்து கொண்டோம்.


எந்த விஷயம் எதுவென்றாலும், முதலில் ஹவுசிங் லோனுக்கு எடுத்து தனியே வைத்து விட்டுத்தான் மற்ற செலவெல்லாம்.


ஆனால்,ஒரு இரகசியம் தெரியுமா? முதலில் ஏதாவது கைமாற்றாகப் பணம் கேட்டால்,சிறிது தயக்கத்துடன் தருவார்கள்.


ஆனால், இப்பொழுதெல்லாம், கேட்டவுடன் உதவி செய்ய முன்வருகிறார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.


சம்பளம் முழுவதும் கையில் வாங்கியபோது யோசித்தார்கள், இப்பொழுது," பாவம், உங்கள் சம்பளமே லோனுக்குப் போய் விடுகிறது,என்ற செய்வீர்கள்? " என்று இரக்கப்பட்டு உதவுகிறார்கள். ( ஏனெனில்,சொந்த வீட்டை விட்டு எங்கேயும் ஓடிப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்)


ஆனால்,ஒன்று மட்டும் நிச்சயம். எதுவாக இருந்தாலும் ( வீடோ அல்லது வேறு ஏதாவதோ) விரலுக்கு ஏற்ற வீக்கமாக இருக்க வேண்டும் ‌‌


நான் ஜாதகத்தை நம்புகிறேன். உங்களுக்கு விரய காலம் என்றால் ‌‌‌‌‌‌‌‌அதை சுப விரயமாக மாற்றிக் கொள்ளலாம்.தேவையற்றவிரயங்கள் வந்து, உடலும் மனமும் கெட்டு பணமும் விரயமாவதைவிட , பூமியில் அந்த பணத்தை முதலீடு செய்தால், ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். பின்னர் அதன்மூலமே நாம் பல பயன்களை அடையும் போது தான்,அதன் பலனை அனுபவிக்கும் போதுதான் தெரியும்.


உண்மையில்,சொந்த வீட்டில் இருக்கும் போது ( அது ஃபேங்கில் அடமானத்தில் இருந்தாலும். அடமானத்தில் இருப்பது நமக்குத்தானே தெரியும். இன்று அதுதானே ஃபேஷன்) அதன் மரியாதையும், கௌரவமும் தனி!!


வீண் ஆடம்பரமான பொருட்களை ( மறு முறை விற்க முடியாது) கஷ்டப் பட்டு தவணையில் வாங்குகிறோம். அதன் தவணை முடிந்தவுடன் கொஞ்ச வருடங்களில் , அப்பொருளின் ஆயுள் முடிந்து பழைய பேப்பர்காரனிடம் ஒழித்து விட்டு மீண்டும் புதிதாக ,புதிய விலையில் வாங்க வேண்டும்.


ஆனால் வீடு அப்படிப்பட்டது அல்ல,50 /60 வருடங்கள் ஆனாலும்,கட்டிடத்தை ஆல்டர் செய்யலாம். இல்லை இடித்து விட்டு புதிதாக "காம்ப்ளெக்ஸ்" கட்டி வாடகைக்கு விடலாம்.


இன்னும் யோசித்தால், நிறைய ஐடியா கிடைக்கும். கையில் வெண்ணெய்( நிலம்) இருந்தால் நெய்யிற்கு ( போனுக்கு) அலைய வேண்டியதில்லை அல்லவா?


ஆதலால்,சொந்த வீடு கட்டி, தற்காலிக சுகங்களை இழந்தாலும், நிரந்தரமான "மன நிம்மதியை " தருவது " சொந்தவீடு தான்" என்பது என் கருத்து.


( உண்மையில்,ரிடையர்ட்டு லைஃப் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எல்லோர் மனதிலும் ஒரு ஆசை இருக்கும். நமக்கு மட்டும் இருக்காதா? எத்தனை நாள் ஓடியிருப்போம். அறுபது ,எழுபது வயதில் " அக்கடாவென்று" கால் நீட்டி உட்கார நமக்கும் ஒரு இடம் வேண்டுமே.)


இல்லாவிட்டால்,நாளை மருமகள் வந்து," உங்கள் தகப்பனார் இவ்வளவு காலம் சம்பாதித்து என்னத்தை மீதம் வைத்தார்?" என்று கேட்பார்கள். இன்று நாம் செய்யும் நம்முடைய அன்றாட தியாகங்கள்(குழந்தைகளுக்காக) அவர்களுக்கு மறந்துவிடும். நமக்கும் தான். ஒன்றா இரண்டா ஞாபகத்தில் வைத்துக் கொள்ள!!!


என் கருத்து பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளவும். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்., அவ்வளவுதான்.


நன்றி ..


சிவக்குமார் .

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



வெள்ளி, 30 ஏப்ரல், 2021

 கேள்வி ; நம் நாட்டில் கான்கிரிட் பில்லர் முறை வருவதற்கு முன்பே கட்டிய பல கட்டிடங்கள் இன்னும் பலமாக இருக்கும்போது ஒரு மாடி கட்டிடத்துக்கும் கான்கிரிட் தூண் முறை ஏன் பயன்படுத்த படுகிறது?


என் பதில் : 


இன்றைய நில பற்றாக்குறையில் ஒரு மாடி கட்டிடம் என்பது இலாபமானது கிடையாது. அதுபோல இப்போது கட்டுவதும் கிடையாது. நகரங்களில் பல அடுக்கு வீடுகள் தான் கட்டகிறார்கள். ஆனால் கான்கிரீட் தூண் முறை அல்லாமல் அதே வலுவைத் தரக்கூடிய கட்டிடம் என்பது வீடு கட்ட வேண்டிய செலவுகளை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் விரிவு செய்ய முடியாது.


நன்றி ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



செவ்வாய், 27 ஏப்ரல், 2021

 கேள்வி :  இளம் வயதில் தோன்றாத தொழில் முனைவோராக வேண்டும் என்ற உந்துதல், நாற்பது வயதிற்கு மேல் அதிகம் தோன்றுவது ஏன்?


என் பதில் : 


வாழ்க்கை நாற்பதில் ஆரம்பிக்கிறது என்ற கூற்றை பார்த்து இருப்பீர்கள்.


அது ஓரளவு உண்மை தான் என்று நினைக்கிறேன்.


20 இல் மன முதிர்ச்சி கொஞ்சம் கம்மி தான். பிற கவன சிதறல்கள் அந்த வயதுக்கு உரிய கோபம், காதல் சுழற்சிகள், வேலைக்கு போய் கொண்டு இருப்பினும் அதனை தாண்டிய நுண் கல்வி சிந்தனை இல்லாமல் சிதற கூடிய காலம் தான். தவறு இல்லை. 25 வயது என்று வைத்து கொள்வோம். நான் துருக்கி சென்றேன் டென்மார்க் சென்றேன் என்று ஒரு நண்பர் இன்ஸ்ட்டா போஸ்ட் போடும் போது வருடம் முடிவதற்கு முன்னர் நாமும் ஒரு லடாக் லே ஆவது விசா கிடைக்கலேன்னாலும் போக வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கும்.


ஆனால் இதே 20-30 வயதுக்குள் தான் மூன்று வேலை கூட சளைக்காமல் செய்ய, படிக்க வலு இருக்கும்


30 கள் பெரும்பாலும் குடும்பம் மற்றும் வேலை இரண்டை எப்படி சமாளிப்பது இதிலேயே சென்று விடுகிறது. வீடு கட்ட வாங்கிய கடன், குடும்பம் குழந்தை பற்றி தீவிர பிளானிங், ஒவ்வோர் செலவு அல்லது பெரியோர்களுக்கான பிரச்சனைகள் இவற்றை சமாளிப்பது. இந்த நேரத்தில் எனெர்ஜி ஆற்றல் உண்டு ஆனால் அளவுக்கு மீறி குடும்ப சுமையை அதிகமாக்கி யோசிக்கின்றது மனம். நண்பன் இரண்டு குழந்தை பெற்று கிறீன் கார்டு வாங்கி விட்டான்...நாம இன்னும் ரேஷன் கார்டு கூட வாங்கலையே என்று பல ஆண்களே கூட புலம்புவதை பார்த்து உள்ளேன். ஆண்களே என்று ஏன் சொன்னேன் என்றால் பெண்களை விட சற்று கம்மியா புலம்புவார்கள். ஆக இந்த 30-40 பெரும்பாலும் உறவுகள் குடும்ப கவன சிதறல் எண்ணிலடங்கா உள்ளது. 


தினுசு தினுசாக இதில் பிரச்சனை. அந்த பிரச்சனைகளை காசாக்கும் நீதி மன்றங்கள். இதில் தப்பான பெண்டாட்டியை தேர்வு செய்த ஆணின் கதி அளவுக்கு அதிகமான கோடிகளை வக்கீலுக்கும் எக்ஸ் க்கும் கொடுப்பது இதனால் வாழ்க்கை வெறுப்பது. கேட்கவே வேண்டாம் பெண்கள் என்றால் முத்திரை குத்தப்படும் இன்னும் ஏகப்பட்ட காயங்கள். ஒரு குழந்தை இல்லேனா கூட இவளை குற்றம் சொல்லும் சமூகம் அதற்கு அவள் பொறுப்பே இல்லேன்னாலும்..விடாது. ஆக உறவு பிரச்சனை மாபெரும் அளவு ஆகும் போது எங்க தான் மற்றதை பற்றி சிந்தனை.



40 இல் உலகம் என்றால் என்ன..வாழும் காலங்களின் முக்கியத்துவம் உண்மையை புரிந்து கொள்ள தொடங்குகிறது மனம். குடும்பம் அல்லது பிற நண்பர்களுக்கு மட்டும் கொடுத்த முக்கியத்துவம் தவிர உண்மையில் மனிதன் தன்னை நேசிக்க தொடங்குவதும் 40 கள் ...


பிறருக்கு மட்டும் கொடுத்து ஏழை ஆனேனே - திருமங்கை ஆழ்வார் பாசுரத்தில் வருவது போல யோசிக்காமல் ரோபோட் போல குடும்பம் இல்ல நட்பு இல்ல கவன சிதறல்கள் தாண்டி மீண்டு வந்து ..உண்மையில் தனக்கு என்ன வேணும்? என்பதை யோசித்துதெளிவு பிறக்கிறது.


நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிறிய வயதில் மிக புகழ் பண உச்சிக்கு போகும் பலர் காணாமல் போய்'விடுவது அதிகம். ஏனெனில் அனுபவம் என்பது கம்மி.


அரவிந்து சாமி அவர்களே ரோஜா பம்பாய் போன்ற பல படங்கள் தனக்கு கொடுத்த புகழ் அங்கீகாரம் மகுடம் மிக அதிகம் என்றும் ஏற்க முடியாத நிலமை என்றும், குடும்பம் விரிசல் பட்டு கஷ்டப்பட்டு stroke வரை சென்ற அனுபவத்துக்கு பின்னர் தன் 40க்கு மேல் இன்னோர் புது வாழ்க்கை...பாதை மாற்றம் வெற்றி இதனை பற்றி ஓர் நேர்காணலில் சொல்லி இருந்தார்.


ஆகவே தான் 40 தாண்டிய பின்னரே பலர் உண்மை டெஸ்டினி பற்றி யோசிக்கின்றனர்.


ஜோதிட காரணங்கள் கூற முடியும் என்னால் ஆனால் வேண்டாம். அறிவியல் காரணங்களே யோசிப்போம்....என்ன தான் ஜோதிடம் மாற்ற முடியாத கர்மா பற்றி சொன்னாலும் இங்கு இருக்கும் பல நல்ல உள்ளங்கள் அந்த விளக்கங்களை ரொம்ப ஏற்பதில்லை. பிடிக்கவில்லை அதனை நான் மதிக்கிறேன். 

40 க்கு மேல் தெளிவு கிடைத்து டெஸ்டினி புரிந்து கவன சிதறல் இல்லமல்...இது ஒன்னு நாம செஞ்சால் போதும் என்ற அளவு அருமையான தீர்மானத்துக்கு வருகிறது மனது.


இந்த வயதில் மன்னித்தல், மறத்தல், இன்னும் பார்வைக்கு எப்படி இருக்கிறோம், எடை போடுதல் எல்லாத்தையும் மனிதன் ஓரளவு எளிதாக தாண்டுகிறான்.


ஆக 20-30 எனெர்ஜி சற்று குறைந்தாலும் அனுபவ ஞானமும், தெளிவும், நோக்கமும் புரிவதிலும், யாரும் எதுவும் கூட வரப்போவதில்லை என்று உணர்ந்தும் மனிதன் தன் குறிக்கோளை விரைவில் அடைகிறான் . 40 முதல் 60 ஒவ்வோர் மனிதனின் மிக மிக அற்புத காலம் என்றே எண்ணுகிறேன். இந்த வருடங்களில் ஏற்படும் வெற்றி, உயர்வு, சமூக பணி, செயல் திறன், focus பல கதவுகளை திறக்கிறது.


நன்றி...


என்றும் அன்புடன் சிவக்குமார் 

994406661


ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

 நன்றிகள் ....

🙏🙏🙏🌱🌱🌱🌷🌷
இன்று எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எனது அருமை நண்பர்களுக்கும் .என் அருமை சொந்தங்களுக்கும் ,எனது சொத்துக்களுக்கும் (வாடிக்கையாளர்கள் ),என்னுடன் நிழல் போன்று என்னுடன் பயணிக்கும் எனது தம்பிகள் ,மாப்பிள்ளைகளுக்கும் எனது பணிவான நன்றிகள் ..வயது ஆகா ஆகா ...இளமையுடன் பொறுப்புகள் ..கூடிகொண்டேபோகிறது ..வருட வருடம் ..நட்புவட்டங்கள் ,சொந்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .🌷🌷பொருளாதாரம் 🌷🌷,வாழ்வியல்🌱🌱.சமுதாயம் 🌱🌱வரலாறு🤺🤺🏹🏹🐎 நிதியியல் ...,சார்ந்த பணிகள் இன்னும் பொறுப்புடன் எனது தேடல்களை மேலும் கூட்டுகிறது ..
🙏என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌷
🥰தனித்திரு 🙏..விழித்திரு .🌳படித்திரு 🌳...சமூகத்தை காத்திடு .🌷🌱📚📚📚✍️✍️✍️✍️..நன்றி .. ....மிக்க நன்றி ...

சனி, 24 ஏப்ரல், 2021


கேள்வி : ஒரு புத்தகம் என்ன செய்யும்? ஒரு குழுவில் என்று கேட்டு இருந்தேன் ..

பதில் : ஐஸ்வர்யா என்ற வாசகி அருமையான தகவலை பதிவு செய்துள்ளார் ..நன்றி ...


ஒன்றும் செய்யாது….


//அனைத்து கருத்துக்களையும் தன்னுள் அடக்கி அமைதியாகவே இருக்கும்//


அப்படி பட்ட அமைதியை உங்கள் கையால் எடுத்து களைத்தீர்கள் எனில் அது (புத்தகம்) என்ன செய்யும் என்று சொல்கிறேன்…


உலகத்தை பற்றிய விசாலமான பார்வையை உங்களுள் கொண்டுவரும்..

உங்களைப் பற்றி உங்களை சிந்திக்க வைக்கும்..

நாம் பார்க்கும் அத்தனை ஜீவராசிகளின் மீதும் அன்பு காட்ட வைக்கும்…

மூடநம்பிக்கைகளை சிதைத்து அறிவுபூர்வமான சிந்தனைகளை உருவாக்கும்..

வரலாற்றையும் புராண இதிகாசங்களையும் அசைபோட வைக்கும்..

தேசத்திற்காக உழைக்க வலியுறுத்தும்..

காக்கை ,குருவி ,மழை என இயற்கையை ஆதரிக்க சொல்லும்..

சாதி ,மதத்தின் பின்னால் உள்ள சதி வலையை புரிந்து கொள்ள வைக்கும்..

சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வு உள்ள இந்த சமூகத்தின் மீது கோபத்தை தூண்டும்..

உலகினை மாற்றவும் புரட்சி செய்யவும் ஊக்கப்படுத்தும்..

சிலரிடம் கேள்விகளைக் கேட்க வைக்கும் (சந்தேகம்)… பலரிடம் பதில்களைச் சொல்ல வைக்கும் (அறிவுரை)

நல்வழியில் உங்களைப் பயணிக்க வைக்கும்..

அறிவின் அளவை விசாலமாக்கும்.. அறியாமையின் அளவை சுருக்கி விடும்..

உணர்வுகளோடு உறவாட வைக்கும்..அதே உணர்வுகலுக்கு வலியை ஏற்படுத்தும்..

மனிதனாக வாழவும் வைக்கும் ..மிருகமாக மாறவும் வைக்கும்…

அதனுள் உங்களை மூழ்கடித்து கற்பனையில் மிதக்க விடும்..

பல மொழிகளை கற்றுத் தந்து உங்கள் மொழியை மறக்கவும் வைக்கும்.. பல மொழிகளோடு உங்கள் மொழியை ஒப்பிட்டு உயர்வாக பேசவும் வைக்கும்..

உங்கள் அறிவு பசியை அடக்கவும் செய்யும்.. ஆசை பசியை அதிகரிக்கவும் செய்யும்..

சிலநேரம் தாலாட்டு பாடி தூங்க வைக்கும்..

வாழ்க்கை என்ற பாதையில் எதிர்கால பயணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும்.. வாழ்ந்து முடிந்த கடந்தகால பாதையை நினைவு படுத்தும்… நிகழ்கால பாதையில் எப்படி நகர்வது என்று புலம்ப வைக்கும்..

பணம் சம்பாதிக்கும் வழியை கற்றுத்தந்து சம்பாதித்த பணத்தில் தன்னையே (புத்தகம்)வாங்க வைக்கும்..

கவிஞனாக மாற்றும்..

கற்பனை திறனை அதிகரிக்கும்..

வெற்றியாளனாக மாற்றும்…

தன்னையே படிக்க வைத்து உங்களை பைத்தியமாகவும் மாற்றும்…

தன்னை பற்றியே சிந்திக்க வைத்து தன்னுடைய காதலன்/காதலியாக உங்களை மாற்றிவிடும்…

உலகத்தில் இருந்து தனித்து இருக்க உன்னிடம் வந்தேன் ஆனால் உலகமே இங்குதான் இருக்கு என புரிந்துகொண்டேன் புத்தகமே!!!

இப்படிக்கு…..

உலகத்தையே தன்னுள் அடக்கி தன்னடக்கமக இருக்கும்..

உன்னுள் மூழ்கி..

என்னை தொலைத்து…

உன்னை நினைத்து…

என்னை மறந்து..

உனக்காக…

உன்னை பற்றி…மற்றவர்களுக்காக..

எழுதும்.. உன் பிரியமுள்ள…

வா(சகி)…..☺️

புத்தகம் மனித குலத்தின் அறிவு சொத்து..

புத்தகத்தை வெறும் தாளில் கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக்கூடாது. நம் வாழ்க்கையை புரட்டிப்போடும் நெம்புகோல். ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்..

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு ஒரு நூலகம் கட்டுவேன் என்றாராம் -மகாத்மா…

நாம் என்ன செய்வோம்?😅😅😅

இறுதியாக…

ஒரு மனிதன் புத்தகத்தை படித்து தன் வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைகிறான் எனில் அதற்கான பேர் , புகழ்,சிறப்பு அனைத்தும் அந்த வெற்றியாலனின் உழைப்பை தாண்டி அந்த புத்தகத்தை மட்டும் சேராது…

அந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் சொந்தக்காரரான எழுத்தாளரையே சாரும்…

அந்த எழுத்தாளரின் கர்ப்பனை திறனுக்கே அனைத்து புகழும் சொந்தமாகும்…

ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு வினாடியும் நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறமை எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு…

அவர்களுடைய சிந்தனை மற்றும் கற்பனைத் திறனின் குழந்தையே "புத்தகம்"..

நன்றி…ஐஸ்வர்யா வாசகி க்கு ...



 


இந்த வருடம் எனது பிறந்தநாள் பரிசாக ...

உடுமலை வரலாறு =தொல்லியல் துறை -வரலாறு துறை ..நூல்களின் மூலம் நமது சமுதாயம் சார்ந்த செய்திகள் ...கல்லூரியில் ..சிலப்ஸ் (பாடத்திட்டமாக கொண்டுவரவுள்ளது )..நம் எதிர்கால இளைய சமுதாயத்திற்கு என்னாலான ஒரு சிறு பணி ..எனக்கு உதவிய சொந்தங்கள் ..நண்பர்களுக்கும் ..நன்றி ..

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லும் ..எனது இனிய சொந்தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் .. நன்றி ..கீர்த்திவீரர்   எத்தலப்பர் (KVE )அருளாசியோடு ..எட்டுவருட உழைப்பு .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681



வியாழன், 22 ஏப்ரல், 2021

Sivakumar Kumar is feeling hopeful in Udumalaippettai.🙏 அப்பாவின் அருமை ...மலரும் நினைவுகளுடன் (23.04.2018) 🥰🥰வேலுச்சாமி என்கிற கிருஷ்ணசாமி 🥰🥰🙏 தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில் முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்" பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர..... அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்.... கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார். தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு... மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார். அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார் பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும் செய்வதில்லை..ஏனோ!!! வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்) மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு செய்யும் அப்பா...... பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா... பேரனோ.... பேத்தியோ..... வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,, (அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா? பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....) இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா..... அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல..... இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்... அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி) சமாளிக்கும் திறமை... தனக்கென வாழாதவர்.... இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்... மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்" அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்... அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை.... அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும் மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....அப்பா மறைந்து ..வருடங்கள் மூன்று ஆனாலும் ...அவரின்நினைவுகளுடன் ..அவர் கூடவே இருப்பது போன்றே இருக்கிறது ... அப்பாவின் அருமை அன்பிலே... அதை நாம் புரிதலே.... இத்திரியிலே..... அப்பாவின் பாதம் வணங்குவோம் என்றும் அவரை போற்றுவோம். அப்பாவின் ..பொறுமை ..சகிப்புத்தன்மை ..எந்த பிரதிபலன் பாராது பணிகள் உதவி என்று கேட்டால் தன்னாலான பணிகளை செய்துகொடுக்கும் பாங்கு ..இவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ..உலக புத்தக தினம் ...என் அப்பாவின் நினைவு தினமும் இதே நாளில் தான் ...நான் பிறந்தது முதல் பள்ளிப்படிப்பு ...வாழ்க்கை கல்வி ...என்று தினம் தோறும் ..45 வருடங்களாக சொல்லித்தந்த நடமாடிய புத்தகம் ...அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கை கல்வியுடன் என்றும் மறவாது இருப்பது .. உடுமலையில் இருக்கும் கச்சேரி வீதி பள்ளியில் படிக்கும் போதே ..நூலகத்தை காட்டி ...விடுமுறை நாட்கள் ..பள்ளியின் மதிய உணவு நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் ...படிக்க வழிகாட்டிய தந்தை ...எந்த சூழ்நிலையிலும் ...மனம்

கோணாமல் புன்னைகையுடன் ..பணியாற்ற வேண்டிய கற்றுக்கொடுத்த புத்தகம் ...உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும்,... உலக புத்தக தினம் ..என் தந்தையின் நினைவுதினம் ...வாழ்வில் மறவாது ..என்றும் உணர்வுடன் கூடவே இருக்கும் தந்தையின் நினைவுகள் .. என்றும் நீங்கா நினைவுகளுடன் ..வணங்குகின்றேன் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681....📚📚📚✍️✍️✍️✍️🙏🙏🙏


கேள்வி :  ஒரு வங்கியில் நிரந்திர வைப்பு தொகையில் (Fixed deposit) முதலீடு செய்த பின்பு, அந்த வங்கி திவாலாகிவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்குமா?


என் பதில் : 



வைப்புத் தொகையோ, சேமிப்புக் கணக்கோ, எதுவாகினும் தனியார் வங்கிகளிலோ அ பொதுத் துறை வங்கிகளிலோ தாங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகை வட்டியையும் சேர்த்து ரூபாய் 5 லட்சம் வரை வைத்துக் கொள்வது நல்லது. இந்த உச்ச வரம்பை தாண்டும் பட்சத்தில், வங்கிகள் திவாலானால் , ரூபாய் 5 லட்சம் வரை DICGC என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பை தருகின்றன. இந்த உச்ச வரம்பை தாண்டும் பட்சத்தில் , இன்சுரன்ஸ் கம்பெனி ஏமாற்றம் தர வேண்டியதிருக்கும். 


இதற்கு மேல் போடுவதாக இருந்தால், தங்களது மனைவி பெயரில் ரூபாய் 5 லட்சம் வரையும், தங்கள் மனைவி மற்றும் தங்களையும் இணைத்து joint account மூலமாக மற்றொரு ரூபாய் 5 லட்சம் ஆக மொத்தம் ரூ 15 லட்சம் இருவரையும் சேர்த்து ஒரு வங்கியில் போடுவது நல்லது. குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் தலா ரூபாய் 5 லட்சம் வரை அவர்கள் பெயரில் போடலாம். வட்டியையும் சேர்த்து ரூபாய் 5 லட்சம் தான் இன்சூரன்ஸ் நிறுவனம் தரும்.


பொதுத்துறை வங்கிகளில் , எந்த உச்ச வரம்பும் இன்றி வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு, அரசாங்கம் கொடுத்து விடும் என பாராளுமன்றத்தில் சில காலத்திற்கு முன்பு, அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். இருப்பினும், தாங்கள் பல வங்கிகளில் இந்த லிமிட் தாண்டாது வைப்பது நல்லது.


பல அரசாங்க கொள்கை முடிவுகள், சமீப காலமாக மாறிக் கொண்டு வருவதால், மக்கள் கவனமாக நம் உழைப்பால் சேர்த்த பணத்தை இழந்து விடக் கூடாது என்பது எனது கருத்து. வட்டிக்கு ஆசை பட்டு உள்ளதையும் இழந்து விடக் கூடாதல்லவா ? வைப்புத் தொகை போடும் முன்பு DICGC இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று அந்த வங்கியிடம் கேட்டு போடவும். 


நன்றி. வணக்கம்.

V .K .சிவக்குமார் 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

 கேள்வி : அமெரிக்க வங்கிகளில் வாராக்கடன் தொகைக்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்?


என் பதில் : 


அமெரிக்க வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகள்:


சமரச தீர்வு (Compromise settlement or One-time settlement): கடன் தொகையில் குறிப்பிட்ட கழிவைக் கொடுத்து மீதியைக் கட்டச் சொல்லி கடனாளியுடன் வங்கி சமரச தீர்வு செய்து கொள்ளலாம்.

கடனாளியின் பிணையச் சொத்து விற்பனை (Sale of collateral): பிணையச் சொத்தை விற்று முடிந்த அளவுக்கு கடனை வசூலிப்பார்கள். பெரும்பாலும் நீதிமன்ற வழக்கு (Litigation) மூலமாக செய்யலாம்.

கடன் மறுசீரமைப்பு (Loan restructuring): கடனாளியின் கடன் தொகையைக் குறைத்து அதைக் கட்ட வேண்டிய காலக்கெடுவை நீட்டுவார்கள். அந்தந்த கடனாளியின் வணிகச் செயல்பாடு மற்றும் அதன் மூலம் வரும் பணப் பாய்வைப் (Cashflows) பொறுத்து கடன் மறுசீரமைப்பு அமையும்.

கடனை விற்று விடுதல் (Sale of NPAs): வசூல் செய்யும் நிறுவனங்களுக்கு கடனை வந்த விலைக்கு விற்று விடலாம்.

(கடனாளி பெரிய நிறுவனமாக இருந்தால்) கடனாளி மீது திவால் அறிவிப்பு (Bankruptcy notice) கொடுத்தல்: அந்நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கச் சொல்லி அதன் சொத்துக்களையும் பொறுப்புகளையும் நீதிமன்றம் நியமிக்கும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கக் கேட்கலாம். சொத்துக்களை விற்று வரும் பணத்திலிருந்து நிர்வாகிகள் கொடுக்கும் தொகையை வங்கி ஏற்றுக் கொள்ளலாம்.


நன்றி ...


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சனி, 17 ஏப்ரல், 2021

கேள்வி : எப்படி உங்கள் தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது?

என் பதில் :


வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒவ்வொரு ஆணுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான விசயம் அளவுக்கு அதிகமான பொறுமை. நிதானம். சகிப்புத்தன்மை.  இது ஏன் பெண்களுக்குத் தேவையில்லையா? என்று கேட்கத் தோன்றும். உண்மை. அதில் சில சட்டச் சிக்கல் உள்ளது.

பெண்கள் என்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் என்று எந்தப் பாத்திரமாக உங்களுடன் இருந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் எதுவும் கடைசி வரைக்கும் உங்களுடன், உங்கள் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போய்விடும் என்று எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகும் வரையிலும் அவர்களின் எண்ணங்கள் வேறு. திருமணம் ஆனதும் அவர்கள் எண்ணங்கள் வேறு. குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் நோக்கம் மாறும். குழந்தைகள் வளரும் போது, வளர்ந்த பின்பு முற்றிலும் அவர்கள் வேறொரு ஜீவனாக மாறியிருப்பார்கள்.  உடல்வாகு முதல் உள்ள அமைப்பு வரைக்கும் எல்லாமே மாறி இருக்கும்.

நீங்கள் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் அவர்கள் மாறவே மாட்டார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் அவர்களாகவே இருப்பார்கள்.  என் கணவன், என் குழந்தைகள் என்று அவர்கள் சொல்லலாம்.  ஆனால் அவர்களின் முழு உணர்வும் வெளியே வருவது அபூர்வம்.

மது, மாது இருந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்பட்ட பணத்தை சம்பாரித்துக் கொண்டு வா? என் தேவைகளை நிறைவேற்று? என்று சொல்லும் காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை வந்து நிற்கின்றது. தாய் என்ற வார்த்தைக்குள் இருந்த அனைத்தும் காலப் போக்கில் மாறிவிட்டது.

ஆனால்......

அளவான ஆசைகள், எதார்த்தம் புரிந்த மனைவி, இதயத் துடிப்பை எகிற வைக்காத ம மகன்  இருந்தால் உங்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்பு உருவாகும்.

நன்றி ....

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கேள்வி :  கனடாவில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது. வீடு வாங்கி மாத தவணை செலுத்துவதால், மாத தவணை என்னும் பெயரில் பணம் சேமிக்க வழி இருக்கின்றதா? 


இல்லை மாத வாடைகையில் தொடர்ந்து, வீடு வாங்க வேண்டிய பணத்தை FD அல்லது வேறு வகையில் இன்வெஸ்ட் செய்வது சரியா?


என் பதில் : 


யூஎஸ் கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானவரி அதிகம். வீடு வாங்கி தவணை கட்டினால் வரி குறையும். உங்கள் வீட்டு வாடகை மற்றும் வரி சேமிப்பில் வீட்டுக்கு தவணை கட்ட இயலுமானால் சொந்த வீடு வாங்குவது நல்லது.


நன்றி ..

சிவக்குமார் .V .K 

Sivakumar.V.K

(Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

புதன், 14 ஏப்ரல், 2021

கேள்வி :  தமிழ்ப்பெண்கள் தனது கணவர் இருக்கும் போது அவர் கட்டிய தாலியை கழற்றி வைக்க முடியுமா? பண்டைய நாட்களில் அது தவறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வளவு தூரம் உண்மையானது?


என் பதில் : 


இது ஒவ்வொருத்தர் மனசுக்கு தோன்றும் விதம் நடந்து கொள்வது உத்தமம்! திருமாங்கல்யம் அணிவித்தல் நல்ல நாளில் தேவர்களும் மனிதர்களும் புடை சூழ நடக்கும் புனித தினத்திற்கு முக்கிய நிகழ்வு!


கூரை புடவையை முகூர்த்த நேரத்தில், சரியாக கட்டி விடவேண்டுமே, என்று சில பெரியோர்களுக்கு டென்சன் இருக்கும். மெட்டியை கழட்டும் பெண்களால் கூட மாங்கல்யத்தை எடுத்து வைக்க தோணாது சிலருக்கு.


சிலருக்கு முக்கிய நாட்களில் அணிய பிடிக்கும்! சிலருக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் / செய்தி வாசிப்பாளர் போன்று இருந்தால் அணிய மாட்டார்கள்!


சிலர் விவாகரத்து ஆனாலும் தாலிக்கொடிக்கு கோவிலில் தரும் குங்குமமும் வைப்பார்கள்!


சிலர் கணவரின் ஆணை ”நீ பூ பொட்டு வெச்சுக்கணும் எப்போதும்” என்று சொன்னதை, எப்போதும் பின்பற்றுகின்றனர் பேராசிரியை சாரதா நம்பியாரூரான் போல. அவர்கள் சொற்பொழிவில் இதனை கேட்ட ஞாபகம்.


ஆக ஒவ்வோர் பெண்ணின் விருப்பம் மற்றும் உரிமை மற்றும் அன்பின் சின்னம் மாங்கல்யம்👍


பலர் பவளம் கருகு மணி சிறிய சின்னங்கள் சேர்த்து அணிவார்கள்!


பவளம் இன்றைய தினமான செவ்வாய் என்னும் மங்களனுக்கு உரியது! ஆகவே “மாங்கல்யம்” என்ற பெயர் வந்தது !


நன்றி ...


சிறுகுறிப்பு :தற்காலத்தில் பெண்செல்வங்கள் .. ஏதாவது விழாக்களுக்கு,வீட்டுக்கு நண்பர்கள் ,சொந்தங்கள் வரும்பொழுது , செல்லும்பொழுது ..எங்கடா ..என் தாலிக்கயிறு ..கொஞ்சம் தேடிக்கொடேன் ...எங்க வைச்சேன் தெரியல ...தேடிக்கொண்டு இருப்பார்கள் ..தேடியெடுப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆகும் ..அதனால் விழாக்களுக்கு வருவது ,செல்வது தாமதமாகும் ....