திங்கள், 22 மார்ச், 2021

 கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா? எவ்வளவு வட்டி?


என் பதில் : 



வீட்டு மனை வாங்குவதற்கு வங்கி கடன் கிடைக்கும். அதில் சில பல அம்சங்கள் உள்ளன.


அது வீட்டு மனையாக இருக்க வேண்டும்.

விவசாய நிலமாக இருக்க கூடாது.

ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.

பொதுவாக, மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.

இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இது கிடையாது.

வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது. அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை இருக்கலாம். இதற்கு மாறாக, வீட்டுக்கடன் 30 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம்.

வீட்டு மனையுடன் வீடு கட்டுவதற்கான கடன் வாங்கும் போது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்,உதாரணமாக 2 வருடங்கள், வீடு கட்டி முடித்திருக்க வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்காவிடில், அது வீட்டுக் கடனாக கருதப்படாமல், வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.

வீட்டு மனைக் கடனுக்கு காலவரையறை குறைவாகையால், மாதாந்திர தவணை அதிகமாக இருக்கும்.

வீட்டுக் கடனை விட, வீட்டு மனைக் கடனுக்கு வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


குறிப்பு : இடத்தின் மதிப்பு என்றும் இறங்காது ...அதன் மதிப்பு நீண்டகாலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ..உடனே பணமாக மாற்றமுடியாது ..


நன்றி ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக