கேள்வி : ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?
என் பதில் :
குறைகளை சுட்டிக்காட்டாத தன்னடக்கம்.
தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற நிலை.
‘செமயா இருக்கணும்’ போய், ‘நிறைவா இருக்கணும்’ என்ற புதிய குறிக்கோள்.
குறைந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷம்.
பொருளால் வரும் ஆசையின் குறைவு.
மற்றவர் செயல்களுக்கு தனக்குப் புரியாத காரணங்கள் இருக்கலாம் என்ற எண்ணம்.
பத்து வருடங்களுக்கு முன்னர் தான் செய்த சில பல செயல்கள் சரியல்ல என்ற புதிய ஒப்புதல் பார்வை.
ஆச்சர்யங்கள் குறைந்து போய் விட்ட ஒரு அமைதி.
‘அரசியல்ல இதெல்லா சகஜமப்பா’ என்று நினைத்து ஒரு புன்முறுவல்.
Like க்காக புளுகாமல், தோன்றியதைப் பகிரும் வெளிப்படைத்தன்மை.
இன்னும் இருக்கு ரொம்ப பதிவுகளை அதிகப்படுத்தினால் போர் அடித்துவிடும் என்பதால் ...இதுவே அதிகம் ..
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக