புதன், 10 மார்ச், 2021

திரு சிவகுமார் V. K. அவர்களுக்கு...

 திரு சிவகுமார் V. K. 

அவர்களுக்கு... 


🌹🌹🌹 உங்களது எழுத்துக்களை வைத்து

உங்களது எண்ணங்களை

யோசித்து பார்த்தேன்..

இது போல தொடர்நதுஎழுத வேண்டுமென யாசிக்க சொல்லியது என் மனம்... 🌹🌹🌹


♦️ உங்களது நூலக அறிவு புயல் காற்றாய்.._♦️

♦️ சமூக பார்வை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற

கடல்அலைகளின் ஆவேசம்போல ♦️

 ♦️ சுஜாதாவின்  எந்திரவியல் _எழுத்து வன்மை கலப்பு♦️ 

♦️ மாலனின் அரசியல்  நெடிவாசம் இதமாய்..♦️   

♦️ கி.ராஜநாரயணனின்

கரிசலங்காட்டு நடை தென்றலாய்..♦️

♦️ பாலகுமாரனின் முழுமையான நெடும் வீச்சு ♦️

♦️ மறைமலை அடிகளாரைப்போல

 நீண்ட விளக்கங்கள்♦️

♦️ பெண் எழுத்தாளர்களின் மனதாய்மாறி பெண்ணியத்தை போற்றும் புரிதலுடனான பதிவுகள் பூவாடை காற்றாய்..♦️


♦️ பற்பல விஷயங்களுக்கு..

இனம்புரியா 

ஒரு இளம் வெறித்தனம் இழையோடுகிறது கூதலாய்...♦️


♦️  தீராத காதலாய்

உருவமில்லாததை உணர்வது போல... வெற்றிபெற்ற உணர்வின்பால் வருகிற அமைதி ஆங்காங்கே ...

அது தேவைப்படுகிற இடங்களில் நளின வார்த்தைகள்...♦️


♦️ வாழ்வியலை அப்படியே வார்த்து தந்துவிட வேண்டுமென்கிற வேட்கை...♦️


♦️ முழுமையாக எழுதிவிடுவது என்னால் முடியாது உறவே..♦️


♦️ என்னை போன்றோரின் உள்ளன்பு உம்மை மென்மேலும் எழுததூண்டட்டும்.. .♦️


உடுமலையோடு சேர்த்து

கம்பளத்தையும் கொஞ்சம் இன்னும் விரிவாக விதைக்க வேண்டுமாய்...


என்றென்றும் அன்புடன்


கே .என் .நாகராஜன் .vpk 



🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

💐💐💐🌷🌷🌷🌹🌹🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக