திரு சிவகுமார் V. K.
அவர்களுக்கு...
🌹🌹🌹 உங்களது எழுத்துக்களை வைத்து
உங்களது எண்ணங்களை
யோசித்து பார்த்தேன்..
இது போல தொடர்நதுஎழுத வேண்டுமென யாசிக்க சொல்லியது என் மனம்... 🌹🌹🌹
♦️ உங்களது நூலக அறிவு புயல் காற்றாய்.._♦️
♦️ சமூக பார்வை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற
கடல்அலைகளின் ஆவேசம்போல ♦️
♦️ சுஜாதாவின் எந்திரவியல் _எழுத்து வன்மை கலப்பு♦️
♦️ மாலனின் அரசியல் நெடிவாசம் இதமாய்..♦️
♦️ கி.ராஜநாரயணனின்
கரிசலங்காட்டு நடை தென்றலாய்..♦️
♦️ பாலகுமாரனின் முழுமையான நெடும் வீச்சு ♦️
♦️ மறைமலை அடிகளாரைப்போல
நீண்ட விளக்கங்கள்♦️
♦️ பெண் எழுத்தாளர்களின் மனதாய்மாறி பெண்ணியத்தை போற்றும் புரிதலுடனான பதிவுகள் பூவாடை காற்றாய்..♦️
♦️ பற்பல விஷயங்களுக்கு..
இனம்புரியா
ஒரு இளம் வெறித்தனம் இழையோடுகிறது கூதலாய்...♦️
♦️ தீராத காதலாய்
உருவமில்லாததை உணர்வது போல... வெற்றிபெற்ற உணர்வின்பால் வருகிற அமைதி ஆங்காங்கே ...
அது தேவைப்படுகிற இடங்களில் நளின வார்த்தைகள்...♦️
♦️ வாழ்வியலை அப்படியே வார்த்து தந்துவிட வேண்டுமென்கிற வேட்கை...♦️
♦️ முழுமையாக எழுதிவிடுவது என்னால் முடியாது உறவே..♦️
♦️ என்னை போன்றோரின் உள்ளன்பு உம்மை மென்மேலும் எழுததூண்டட்டும்.. .♦️
உடுமலையோடு சேர்த்து
கம்பளத்தையும் கொஞ்சம் இன்னும் விரிவாக விதைக்க வேண்டுமாய்...
என்றென்றும் அன்புடன்
கே .என் .நாகராஜன் .vpk
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
💐💐💐🌷🌷🌷🌹🌹🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக