புதன், 2 செப்டம்பர், 2020

மனைவியை 'பொண்டாட்டி' என ஏன் அழைக்கிறோம்?

கேள்வி :  மனைவியை 'பொண்டாட்டி' என ஏன் அழைக்கிறோம்?


பதில் :.

பொண்டாட்டி - என்பது கொச்சையான வழக்கு. பெண்டாட்டி - என்ற தூய தமிழ்ச் சொல்லே பொண்டாட்டி எனத் திரிந்தது.

பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி.

பெண்டாட்டி - என்பது அவளின் பேணும் தன்மை குறித்து அமைந்த அழகான பெயராகும்.

விருப்பத்திற்குரிய , ஆசைக்குரிய ஆட்டி , விரும்பிப் பாதுகாக்கப்பட வேண்டியவள் - என்றும் பொருளுண்டு.

✔பெள் = என்ற மூலம் ஆசை, விருப்பம் குறித்தது.

* பெள் + தல் = பெட்டல் > பெட்டை.

* பெண் > பேண். விரும்பு, விரும்பிப் பாதுகாத்தல். பேணுதல் = விரும்புதல், போற்றல்.

* பெட்பு : பெருமை ; விருப்பம் ; அன்பு ; தன்மை ; பேணுகை ; பாதுகாப்பு.

பெள் > பெண் = பெள்ளப்படுபவள் /பேணப்படுபவள் பெண் ஆனாள்.

பெள் > பெண் > பெண்டு (ஒருமை).

பெள் > பெண் > பெண்டிர் (பன்மை).

பெளுவு = பெள்ளுதல் , பேணுதல்

(beloved).

துக்கடா :

ஆள் - என்ற மூலத்திலிருந்து வந்த சொல் ஆண் ஆகும்.

ஆட்டி என்பதே …. ஆண் - என்ற வழக்கிற்கு சமமான பெண்பால் சொல்லாகும்.

ஆள்+தி - ஆட்டி.

ஆட்டி - என்ற பின்னொட்டு கொண்டு அமைந்த சொற்களில் சில...

* சீமாட்டி - ( சீமை+ஆட்டி).

* மூதாட்டி (மூத்த + ஆட்டி).

* ராசாட்டி ( அரச + ஆட்டி ) - இராசாத்தி (ராணி)

* வண்ணாட்டி (வண்ணாத்தி).

* கைம்பெண்ணாட்டி (கம்னாட்டி).

* வைப்பாட்டி (வைப்பு + ஆட்டி).


நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக