வியாழன், 16 ஜனவரி, 2020


ஆல் கொண்டம்மன் கோவில்-உடுமலைப்பேட்டை (மாலகோவில் )
ஜனவரி ..17...2020...
கம்பளத்தார் ...💓💓ஆட்டம் ..💓.பாட்டம் .💓.கொண்டாட்டம் .💓.தேவராட்டம் ....💓
இன்று காலையே ஒரு உற்சாகம் மனதில் தொற்றிக்கொண்டது மண் மனம் மாறாத ..கொத்துமல்லி செடிகளின் வாசம் ...கொண்டக்கடலை செடிகளின் பசுமையும் ...கண்னுக்கு குளிர்ச்சியான பச்சை தென்னை மரங்களின் சூழந்த ..25 கிராமங்களில் இருந்து வந்திருந்த சொந்தங்களை ஒரே கோவிலில் பார்த்தும் ,பேசியும் ..கம்பளதார்களின் தேவராட்டத்தை ...தளி எத்தலப்பர் ...போற்றி வணங்கும் குலதெய்வங்களாக போற்றி பாதுகாக்கும் கால்நடை செல்வங்களை போற்றி வணங்கியது மிக்க மகிழ்ச்சி ..இன்று அருமையான சலங்கை மாடுகளின் ஒலி சத்தம்...தேவராட்டம் ,தமிழர்களின் வீர விளையாட்டு ,பாரம்பரிய மிக்க பழமை விளையாட்டுகள் இன்றைய சூழலில் இந்த பொங்கல் பண்டிகையில் திரும்ப பார்த்ததில் சந்தோசம் .......உலக சூழலில் மாறிக்கொண்டிருக்கும் பண்பாடு ,கலாச்சாரம் ,மறுபடியும் நம் கண்முன்னே கொண்டு வந்திருந்தது வேறு யாரும் இல்லை ..வளரும் இளைஞர்கள் ..எதிர்காலத்தில் மிகவும் பாதுகாப்பாக கொண்டுசெல்வார்கள் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தியுள்ளனர் ..மால கோவிலுக்கு வந்திருந்த அனைத்து சொந்தங்களின் மனதில் புது சொந்தங்களையும் ,விட்டுப்போன சொந்தங்களையும் பார்த்தும் ,பேசியும் பார்த்தது மகிழ்ச்சியாக அமைந்தது இந்த கோவில் திருவிழா ....சீரும் காளையுடன் ..அடிவள்ளி ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ...எங்க வீட்டு மகாலட்சுமிகளுடன் தொடங்கி வைத்த தேவராட்டதுடன் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த திருவிழா ...ஆல்கொண்டம்மன் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ..அடிமேல் அடிவைத்து ..தேவராட்டம் ...சலிகெருது ..சீரும் காளையுடன் .நம் சொந்தங்களுடன் ..கலந்துகொண்டு வந்தது மகிழ்ச்சி .நேரம் சென்றது கூட தெரியவில்லை ...அந்தளவுக்கு ..பக்தி பரவசத்துடன் ..வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி ...இந்தஆண்டு இயற்கை சோதிக்காமல் ..விவசாயம் செழிக்க ...🙏🙏கால்நடைகள் அபிவிருத்தி பன்மடங்கு பெருகி செல்வம் செழிக்க ஆல்கொண்டம்மன் ..அனைவர்க்கும் அருள்புரிவாராக ....🙏🙏🙏 பொங்கல் விழா 2020..🌷🌷🍊🍊
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்🌷🌷
9944066681..💓💓💓👍👍👍🥦🥦

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக