ஒரே ஒருமுறை மட்டும் கடுமையாக உழைத்துவிட்டு (6 மாதங்கள் அல்லது ஓராண்டு) பின்னர் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருப்பதற்காக நேர்மையான வழியில் செய்யக்கூடிய தொழில்கள் எவை?
இருக்கு!
ஆனால், இல்ல!
இந்த வினாவை கேட்கும் பொழுது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. இந்த கதையை யார் எனக்கு சொன்னார்கள் என்பதை கடைசியில் தெரிவிக்கிறேன்.
இத்தாலி நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் பப்லோ மற்றும் ப்ருனோ என இருவர்கள்.
அவர்கள் இருவருக்கும் கடினமாக வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஒரு நாள் அந்த கிராமத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது என்னவென்றால், அந்த கிராமத்தில் இருந்து 40 மைல் தொலைவில் ஒரு அருவி உள்ளது. அங்கிருந்து தண்ணீரை கிராமத்திற்கு கொண்டு வந்தால் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து மீளலாம் என முடிவு எடுக்கிறார்கள்.
இந்த வேலையை பப்லோ மற்றும் ப்ருனோ விடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் கொண்டுவரும் தண்ணீருக்கு காசு தருகிறோம் என்று சொல்லி ஒப்படைக்கிறார்கள். அவர்கள் இருவரும் இதற்கு ஒப்பு கொள்கிறார்கள்.
பப்லோ வும் ப்ருனோ வும் ஆளுக்கு இரு வாளிகளை எடுத்து தினமும் 40 மைல் தொலைவிற்கு நடந்து சென்று வந்து கிராமத்திற்கு தண்ணீர் கொடுத்து சம்பாதித்தனர்.
நாட்கள் ஓடின!..
ஒரு நாள் பாப்லோவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையை ப்ருனோவிடம் சொல்கிறான். நாம் இருவரும் சேர்ந்து அருவியில் இருந்து தண்ணீரை கொண்டு வர ஒரு நீண்ட குழாய்களை இணைத்து கிராமத்திற்கு தண்ணீரை கொண்டு வருவோம் என்று ப்ருனோவிடம் சொல்கிறான். இது முட்டாள் தனமான வேலை அப்படி செய்தால் நமக்கு இன்றைய நாள் காசு எதுவும் கிடைக்காது என்று ப்ருனோ பப்லோவிடம் சொல்கிறான். ஆனால், பப்லோ இந்த யோசனையை ப்ருனோவின் உதவி இல்லாமல் செயல்படுத்துகிறான்.
நாட்கள் ஓடின!
ப்ருனோ தினமும் அருவியில் இருந்து தண்ணீரை வாளியில் எடுத்து கொண்டு வரும் வேலை செய்து தினமும் சம்பாதித்தான்.
பப்லோ, அவனது குழாய்களை இணைக்கும் பணியை தொடர்ந்து கொண்டே இருந்தான்.
சில மாதங்களுக்கு பிறகு!
ப்ருனோவின் தண்ணீரை சுமந்து சுமந்து உடல் தொய்வுற்றது. ப்ருனோவால் அந்நாளில் தண்ணீர் எடுத்துவர உடல் ஒத்துழைக்கவில்லை. நடந்து நடந்து கால்களும் பலவீனம் அடைய தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து ப்ருனோவால் தண்ணீரை கிராமத்திற்கு கொண்டுவர முடியவில்லை.
அதே சமயம் பப்லோ தன்னுடைய குழாய் இணைப்பை முடித்து கிராமத்திற்கு தண்ணீரை திறந்து உட்கார்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தான்.
இந்த கதையில் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால், இதற்கும் ஐன்ஸ்டீன்-க்கும் என்ன தொடர்பு?
தொடர்பு இருக்கு! ஆனா இல்ல!
இது சிலருக்கு புரியாது. இது புரிந்தால் நீங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.
இருக்கு!
ஆனால், இல்ல!
இந்த வினாவை கேட்கும் பொழுது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. இந்த கதையை யார் எனக்கு சொன்னார்கள் என்பதை கடைசியில் தெரிவிக்கிறேன்.
இத்தாலி நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் பப்லோ மற்றும் ப்ருனோ என இருவர்கள்.
அவர்கள் இருவருக்கும் கடினமாக வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஒரு நாள் அந்த கிராமத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது என்னவென்றால், அந்த கிராமத்தில் இருந்து 40 மைல் தொலைவில் ஒரு அருவி உள்ளது. அங்கிருந்து தண்ணீரை கிராமத்திற்கு கொண்டு வந்தால் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து மீளலாம் என முடிவு எடுக்கிறார்கள்.
இந்த வேலையை பப்லோ மற்றும் ப்ருனோ விடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் கொண்டுவரும் தண்ணீருக்கு காசு தருகிறோம் என்று சொல்லி ஒப்படைக்கிறார்கள். அவர்கள் இருவரும் இதற்கு ஒப்பு கொள்கிறார்கள்.
பப்லோ வும் ப்ருனோ வும் ஆளுக்கு இரு வாளிகளை எடுத்து தினமும் 40 மைல் தொலைவிற்கு நடந்து சென்று வந்து கிராமத்திற்கு தண்ணீர் கொடுத்து சம்பாதித்தனர்.
நாட்கள் ஓடின!..
ஒரு நாள் பாப்லோவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையை ப்ருனோவிடம் சொல்கிறான். நாம் இருவரும் சேர்ந்து அருவியில் இருந்து தண்ணீரை கொண்டு வர ஒரு நீண்ட குழாய்களை இணைத்து கிராமத்திற்கு தண்ணீரை கொண்டு வருவோம் என்று ப்ருனோவிடம் சொல்கிறான். இது முட்டாள் தனமான வேலை அப்படி செய்தால் நமக்கு இன்றைய நாள் காசு எதுவும் கிடைக்காது என்று ப்ருனோ பப்லோவிடம் சொல்கிறான். ஆனால், பப்லோ இந்த யோசனையை ப்ருனோவின் உதவி இல்லாமல் செயல்படுத்துகிறான்.
நாட்கள் ஓடின!
ப்ருனோ தினமும் அருவியில் இருந்து தண்ணீரை வாளியில் எடுத்து கொண்டு வரும் வேலை செய்து தினமும் சம்பாதித்தான்.
பப்லோ, அவனது குழாய்களை இணைக்கும் பணியை தொடர்ந்து கொண்டே இருந்தான்.
சில மாதங்களுக்கு பிறகு!
ப்ருனோவின் தண்ணீரை சுமந்து சுமந்து உடல் தொய்வுற்றது. ப்ருனோவால் அந்நாளில் தண்ணீர் எடுத்துவர உடல் ஒத்துழைக்கவில்லை. நடந்து நடந்து கால்களும் பலவீனம் அடைய தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து ப்ருனோவால் தண்ணீரை கிராமத்திற்கு கொண்டுவர முடியவில்லை.
அதே சமயம் பப்லோ தன்னுடைய குழாய் இணைப்பை முடித்து கிராமத்திற்கு தண்ணீரை திறந்து உட்கார்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தான்.
இந்த கதையில் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால், இதற்கும் ஐன்ஸ்டீன்-க்கும் என்ன தொடர்பு?
தொடர்பு இருக்கு! ஆனா இல்ல!
இது சிலருக்கு புரியாது. இது புரிந்தால் நீங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக