வியாழன், 16 ஜனவரி, 2020

இன்று மாட்டுப்பொங்கல் ...ஏராம் வயல் (பொன்னலம்மன் சோலை -வழி )

இன்று நானும் மதிப்புக்குரிய அய்யா குமார ராஜா அவர்களின் குடும்ப நண்பர் ஜெயக்குமார்  தோட்டம் சென்று வந்தேன் ..அருமையான பட்டி பொங்கல் ..வந்திருந்த நண்பர்களிடம் அரிய தகவல் கிடைத்தது மகிழ்ச்சி ..

புத்தம் புது அருமையான தோழர் எனக்கு கிடைத்தார் ...தோழர் .பெயர் ராஜேஷ் சொந்த ஊர் .JN பாளையம் .. என்றார் ..பள்ளி -காந்திகலா நிலையம் பள்ளியில் 7 -ம் வகுப்பு படித்திக்கொண்டிருக்கிறார் என்று அழகாக பதில் அளித்தார் ...பொங்கல் க்கு வேற சிறப்பு என்று கேள்வி கேட்டு வினவினேன் ..தோழர் எங்கள் ஊரில் சலிகெருது நான்கு இருப்பதாகவும் ..நாளை ஜல்லிவீரன் கோவிலுக்கு சலிகெருதுஉடன் செல்வதாகவும் கூறினார் ..நான் தோழரிடம் மாலகோவில் செல்ல மாட்டீர்களா என்று வினவினேன் ..அதற்கு அம்மாபட்டியில் ரங்கசாமி என்ற மாமா இருப்பதாகவும் ..அவருடன் சென்றால் அங்கு செல்வேன் என்று தோழர் கூறினார் ...நாளை மறு நாள் மாட்டுக்கு பால்போடும் நேன்பு  இருப்பதாகவும் ..அது முடிந்தவுடன் ..திருமூர்த்தி மலைக்கு மேலே மேய போய்விடும் என்றும் ..அடுத்த வருடம் தான் வரும் என்று கூறினார் தோழர் ராஜேஷ் ..தோழரிடம் உங்கள் தந்தை பெயரை கேட்டேன் திருமலைசாமி பங்காரு என்றார் ..இன்று மாட்டு பொங்கலுக்கு JN பாளையத்து ஒரு அருமையான தோழர் கிடைத்தது மகிழ்ச்சி ..தோழருக்கு சிறு வயது என்றாலும் அருமையான சலிகெருது தகவல் தெரிந்து வைத்திருப்பதற்கு மகிழ்ச்சி ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக