பொங்கல் ...காப்பு கட்டுதல் முறை
அழகான விடியல் ...எங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளுடன் காலைநேரத்தில் பொங்கல் திருவிழாவிற்கு தேவையான ..கரும்பு ..மஞ்சள்கொத்து ...ஆவாரம்பூ..மாவிலை இழைகளுடன் இன்று உடுமலைச்சந்தையில் பொங்கல் திருவிழா கூட்டத்துடன் கொள்முதல் செய்தது மகிழ்ச்சி .. ..போகி முடிந்து மாலை அந்திமயங்ககும் வேளையில் நம் வீட்டில் வேப்பம் இழையுடன் சேர்த்து சிறுபீளையும் வீட்டின் முற்றத்தில் காப்பு கட்டுப்படும்
கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்!
காப்பு இலைக்கொத்தில், மாவிலை, ஆவாரை, தும்பை உள்ளிட்ட மூலிகைகளும், சிருபீளையும் இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, மாவிலை, காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் பிராண வாயுவை சீராக்கும் தன்மை மிக்கது, அதுபோல சிறுபீளை நச்சுத் தன்மை மிக்க பூச்சிகளை விரட்டி, சுற்றுப் புறத்தை விஷப் பூச்சிகள், விஷக் கிருமிகளிடமிருந்து காக்கும் இயல்புடையது.
இதனாலேயே, வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர். அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர்.
இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்....
நம் முன்னோர்கள் நமக்கு வாழ்வியலை அழகாக தமிழர் திருநாளை கொண்டாட கற்றுக்கொடுத்துஇருக்கிறார்கள் ...நம் வருங்கால தலைமுறைக்கு இதை சிதறாமல் கொடுக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது ...என்றும் உங்களுடன் ஷியாம் சுதிர் சிவக்குமார் ...பொங்கல் 2018....தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..முதல் நாள் ....நாளை இன்னும் பட்டையை கிளப்பும் துள்ளிவரும் பொங்கலுடன் நாளை ...சந்திப்போம் ....
இதனாலேயே, வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர். அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர்.
இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்....
நம் முன்னோர்கள் நமக்கு வாழ்வியலை அழகாக தமிழர் திருநாளை கொண்டாட கற்றுக்கொடுத்துஇருக்கிறார்கள் ...நம் வருங்கால தலைமுறைக்கு இதை சிதறாமல் கொடுக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது ...என்றும் உங்களுடன் ஷியாம் சுதிர் சிவக்குமார் ...பொங்கல் 2018....தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..முதல் நாள் ....நாளை இன்னும் பட்டையை கிளப்பும் துள்ளிவரும் பொங்கலுடன் நாளை ...சந்திப்போம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக