வெள்ளி, 31 ஜனவரி, 2020



தமிழக ஆடு இனங்கள்...
இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. நமது பகுதிக்கு தகுந்த கிழ்கண்ட இனங்களையே வளர்த்து பயன் அடைவோம்.
மோளை ஆடு அல்லது மேகரை ஆடு:
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம்
இது தமிழகத்தின் மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல்,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம்,பவானி,அந்தியூர் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு காணப்படுகிறது .
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம். நோய் எதிர்ப்பு சக்தியில் முதல்தரம். கிடாய்க்கு மட்டும் கொம்புகள் இருக்கும்.நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும்.உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும். இறப்பு விகிதம் மிக மிக குறைவு.
பிறந்த குட்டிகளின் எடை சுமார் இரண்டு கிலோ வரை இருக்கும். இந்த ரக ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் சினைக்கு வரும். வளர்ந்த ஆடுகள் சுமார் 7 முதல் 8 மாதத்திற்கு ஒருமுறை குட்டிகள் ஈனும். ஈத்துக்கு ரெண்டு முதல் நாலு குட்டிகள் வரை ஈனும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். குறைவான தீவனத்தில் மாதம் 2 முதல் 3 கிலோ வரை வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஒரு வயதுள்ள பெண் ஆடுகள் 30 கிலோ முதல் 36 கிலோ வரை எடை இருக்கும். ஆண் ஆடுகள் 40 முதல் 50 கிலோ எடை வரை இருக்கும்.
வளர்ப்புக்கு மிகவும் எற்ற ஆடுகள்.
கறிக்கு மிகவும் ஏற்ற ரகம். இறைச்சி மிகுந்த சுவை உடையது. இதன் தோளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
கன்னி ஆடு:
சிப்பாய் நடை போடும் கன்னி!
கன்னி ரக ஆடு… கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா… பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா போற மாதிரி இருக்கும். இந்த இனத்தை ‘பால் கன்னி’னு சொல்வாங்க. வெள்ளை நிறத்துக்குப் பதிலா… செந்நிறம் அதிகமா இருந்தா ‘செங்கன்னி’னு சொல்லுவாங்க. கன்னி ஆடுகள் ஒரு ஈத்துல ரெண்டு குட்டியிலிருந்து நாலு குட்டிகள் வரை ஈனும்.
காணப்படும் இடங்கள்:
விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்:
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை “பால்கன்னி’ என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் “செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.
குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு “ராணுவ அணிவகுப்பு’ போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு.
கன்னி ஆடுகள் முதல் தடவை மட்டும் 8-10 மாச வயசுல சினை பிடிக்கும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி வரை போடும். இந்த இனத்துலயும் தாயே மூணு மாசம் வரைக்கும் பால் கொடுத்துப் பரமாரிச்சுடும். அதனால புட்டிப்பால் தேவையே இருக்காது.
பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும்.
கொடி ஆடுகள்:
கடலோரத்துக்கு ஏத்த கொடி!
இதை ‘போரை ஆடு’னும் சொல்வாங்க. இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன.மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன. கடலோர மாவட்டங்களுக்கு ஏத்த இனம்!
நல்ல உயரம், நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு இதுதான் கொடி ஆட்டோட அடையாளம். கொடி ஆட்டுக்குக் காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும்.
இந்த ஆடுகள் ரெண்டு நிறத்துல இருக்கும். வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, ‘கரும்போரை’ அல்லது ‘புல்லைபோரை’னும்… வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா ‘செம்போரை’னும் சொல்வாங்க. 100 செ.மீ உயரம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரைக்கும் கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். கிடா 47 கிலோவிலிருந்து 70 கிலோ வரையும் இருக்கும். பெட்டை 32 கிலோ வரை இருக்கும்.
கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி ஈனும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். மூணு மாசம் வரைக்கும் குட்டிகளுக்கு தாராளமா பால் கொடுத்து அதுவே பராமரிச்சுடும். போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிக்குறதால குட்டிக நல்ல ஆரோக்கியத்தோட வளரும்.
பிறந்த கிடா குட்டிகள் : 1.5-2.1 கிலோ எடை,பெட்டை குட்டிகள் : 1.5-2.05 கிலோ எடை
சேலம் கருப்பு அல்லது கீகரை ஆடு அல்லது கருப்பாடு:
இது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், ஓமலூர், மேச்சேரி,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
பஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம்.அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை.
நல்ல குட்டிகள் ஈனும் திறன் உடையவை.
பள்ளை ஆடு!
இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். ‘குள்ள ஆடு’, ‘சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. இந்த ஆடுகளும் ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். இவை பலவகையான நிறத்துடன் காண்டுல இருக்கும்....
பெரும்பாலும் பயணக் கட்டுரைன்னு வந்தா நான் படிச்சிடுவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் . அப்டியே வண்டிய எடுத்திட்டு வழியில பல ஊர்களின் பழக்க வழக்கம், டோல், தாபா, பெட்டிக்கடை ,டீக்கடை இயற்கைக் காட்சி, ஆறு, மலை , புதிய மனிதர்கள், பாடல் இதையெல்லாம் ரசிச்சிட்டே ஒரு முடிவில்லாத பயணம் போனா எப்படி இருக்கும் ? இப்பவும் ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும் எதோ ஒரு பயண நியாபகம் வந்து போகும் . அப்படி ஒரு படம் தான் highway , இந்த படத்தை எந்த அளவு ரசிச்சேன்னு சொல்லத் தெரியல திரும்ப ஒருக்கா படிங்க.....https://youtu.be/8HDTS80dlr4
ஒரு குழந்தை இதுவரைக் கூறிய மிகவும் அப்பாவியான விஷயம் என்ன?

என் மகனுக்கு மூன்று வயதில் இருந்தே செல்ல பிராணிகள் வளர்க்க வேண்டுமென்று ஆசை. எங்கள் வீட்டில் அதற்கு அனுமதி கிடையாது. எதை பார்த்தாலும் அதை வாங்கி கேட்டு கொண்டு இருந்தான்...

அம்மாவும் மகனும் அப்பாவியான உரையாடல் ...

சில நாட்கள் பூனை...

சில நாட்கள் நாய்…

சில நாட்கள் பறவைகள்…

இப்படியே நாட்கள் சென்றன… சில நாட்களுக்கு முன் (  நான்கு வயது ) ஜுராசிக் பார்க் முதல் பாகம் படம் பார்த்து கொண்டு இருந்தான்…

அன்று இரவு என்னிடம் வந்து ,அம்மா உன்கிட்ட ஒன்னு கேட்பேன், நோ சொல்ல கூடாது சரியா என்றான். சரி பயபுள்ள ஏதோ வில்லங்கமா கேக்க போகுதுனு ஒரு உள்ளுணர்வு… சொல்லுமா என்றேன்.pleaseமா எனக்கு ஒரே ஒரு டைனோசர் குட்டி வாங்கி தா மா ,பத்திரமா பார்த்துக்குவேன் என்றான் . அவனது அப்பாவித்தனமாக முகத்தை பார்த்து என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் நின்று…. பிறகு , அம்மா (அவனை அப்படித்தான் அழைப்பேன் ) அது நிறைய சானி போடுமே , அம்மா-க்கு சுத்தம் பண்ண முடியாதும்மா சொன்னேன் .


அதுக்கு வந்த பதில் , நம்ம சித்தப்பா வீட்ல ( ஆவாரம்பாளையம்  ) கட்டி போட்ருவோம் மா.. அப்போ அவங்களே சுத்தம் பண்ணிருவாங்க உனக்கு தொந்தரவு இருக்காது please வாங்கி தா மா…. (Mind voice எப்படி பேசினாலும் லாக் பன்றானே,) அப்பறம் நிறைய சமாளிச்சேன். ஆனாலும் இந்த topic ஒரு மாசம் நடந்தது . இதுதான் என் வாழ்வில் நடந்த கொஞ்சம் வில்லத்தனம் கலந்த அப்பாவித்தனமான விஷயம் ….

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

மிக சிக்கலான உறவாக நீங்கள் நினைப்பது எது?

நட்புக்கு மேல், காதலுக்கு கீழ்!

உறவுகளில் மிக சிக்கலான ஒன்று, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அதிகமான நட்பு. அதிகமான நட்பு காதலாக மாறும் போது எந்த ஒரு பிரச்னையும் வராது. நட்பு அதிகமாகிக்கொண்டே போய்,

“நட்புக்கு மேல் காதலுக்கு கீழ்”

என்ற நிலைமைக்கும் வரும் போது தான் சிக்கல் தொடங்குகிறது.இது ஒரு வகையான Safe zone என்று கூட சொல்லலாம். முடிந்தால் காதலாக மாற்றிக்கொள்ளலாம், இல்லை என்றால் நண்பர்களாக தொண்டர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு நிலை தான் இது. நன்கு உற்று பார்த்தல் அப்படி ஒரு இடமே கிடையாது. தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு பிறரையும் குழப்பிவிடுவது தான் இது.

இங்கு காதலித்து ஏமாந்தவர்களை விட, காதலிப்பதாக நினைத்து ஏமார்ந்தவர்களே அதிகம். இதற்கு முக்கிய காரணம், இந்த மய்யம் தான்.அரசியலில் மட்டுமல்ல, உறவுகளிலும் மய்யம் என்ற ஒன்று கிடையாது. ஒன்று இடது, இல்லை வடது தான்.

மய்யம் என்றுமே வில்லங்கம் தான். !!


குறிப்பு: ஆணும் பெண்ணும் நண்பர்களாக வாழ முடியாதா? என்ற பழைய கேள்வியை ஒரு சிலர் கேட்பார்கள். முடியும். கண்டிப்பாக நண்பர்களாக வாழ முடியும். இருவரின் குடும்ப வாழ்க்கை பாதிக்காத வரைக்கும்.
கொங்குக் கொற்றவன்...🥰✒📚📚

குடியரசு தின விழா சிறப்பு நிகழ்வாக-26.01.2020

சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

உடுமலை காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில்
நடைபெற்றது ...!

நிகழ்வை ஒருங்கினைத்த

கிளை எண்  நூலகம் 2 நூலகர் திரு. கனேசன் அவர்களுக்கும்

அருண்ஜோதி கிளினிக்ல் லேப் & எக்ஸ்ரேஸ் திரு. கலைச்செல்வன் மற்றும்

உறைவிடப்பள்ளி காப்பாளர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கும்

கலந்துகொண்டு இயற்கை உணவு சார்ந்து உரையாற்றிய அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர்
திரு. இராகவேந்திர சாமி அவர்களுக்கும் ..

மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும்

#கம்பளவிருட்சம்அறக்கட்டளைசார்பாக

நன்றிகளையும் வாழ்த்துகளையும் பரிமாரிக்கொள்கிறோம் .

வெள்ளி, 24 ஜனவரி, 2020

மனைவியை சந்தோஷமாக வாழவைக்க கணவனாக என்ன செய்ய வேண்டும்?


மிகவும் எளிது.அவர்களின்,நியாயமான விருப்பங்களை,நிறைவேற்றினாலே போதும்.

பணிக்குச்செல்பவரோ,தொழில் செய்பவரோ,அந்தநேரம் போக,மிகுதி நேரத்தை,மனைவியிடம் செலவிடுங்கள்.

உங்கள் பெற்றோர் உடன்பிறந்தாரோடு,கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்,குடும்பவிசயங்களில் அவரது கருத்துக்கும்,மதிப்பளியுங்கள்.

மனைவியைப் பாராட்டிப்பேசுங்கள்.மற்றவரிடத்து தூக்கிவைக்காவிட்டாலும்,குறைத்து பேசாதீர்கள்.

அவர்களிடத்து நிதிப்பொறுப்பை,கொடுத்துப்பாருங்கள்.பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

அடுப்படி வேலைகளில்,சிறுசிறு ஒத்தாசையாயிருங்கள்.அப்புறம் பாருங்கள்.மனைவியின் சந்தோசத்திற்கு அளவேயிருக்காது.

நோட் :இதில் எதிர்மறையாக அமைந்தால் ..என்னிடம் பதில் கேக்கக்கூடாது

செவ்வாய், 21 ஜனவரி, 2020

வீட்டு கடன் பாக்கி தொகையினை மொத்தமாக ஒரே தவணையில் சுமார் 4 அல்லது 5 லட்சம் செலுத்தி கடனை அடைக்கலாமா. அச்சமயம் ஏதாவது concession in interest அல்லது தொகை குறைப்பு கிடைக்குமா?


இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்லுமுன், வீட்டுக்கடன் பற்றிய சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்வோம்:


உங்கள் மாத வருமானத்துக்கேற்ற மாதிரி வீட்டுக்கடன் வாங்கவும். முடிந்த வரை வீட்டின் மதிப்பில் 30% வரை கையிருப்பிலிருந்து தேத்தி விடவும். சில தேசிய வங்கிகள் வீட்டின் மதிப்பில் 80% தான் கடனே வழங்கும்.


எல்லா வங்கிகளும், வீட்டுக் கடன் என்னவோ 20/30 வருடங்களுக்கு தருவார்கள். அதற்காக 20வது வருடம் தான் கட்டி முடிப்பேன் என்று சபதம் எடுக்காதீர்கள்.


எந்த வங்கியாக இருந்தாலும், நாம் கட்டும் மாதாமாதம் இ.எம்.ஐ(EMI) என்ற தொகையில் பெரும்பகுதியை, வாங்கிய கடனின் வட்டிக்குத் தான் பிடித்துக் கொள்வார்கள்.


எ.கா: EMI இருபதாயிரம் மாதம் கட்டுகிறீர்கள் என்றால் அதில் 80% அதாவது 16 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு போயிடும், மீதி 4 ஆயிரம் அசலுக்கு.


இது பெரிய தேவ ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் மாதாந்திர வீட்டுக்கடன் அறிக்கையில், வங்கிகள் தெளிவாக அனுப்புவார்கள்.


காரணம், நீங்கள் 20 வருடம் கட்டப் போகும் வட்டி தான், அந்த வங்கியின் வருமானம். எனவே வட்டியைத் தான் முதலில் வசூலிக்க நினைப்பார்கள். எனக்கு தெரிந்து, அரசு மற்றும் தனியார் வங்கிகள் Concession in Interest தருவதில்லை.


ஆகவே, உங்களுக்கு ஏதேனும் அலுவலக போனசோ அல்லது திடீரென்று பூர்வீக சொத்து விற்றதில் உங்கள் பங்காக, கணிசமான தொகை கையில் வந்தால், உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டுக் கடனில் அந்த பணத்தை, எந்த அபராதமுமின்றி சேர்ப்பிக்க முடியுமா? என்று முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் மனசு மாறுவதற்குள், அல்லது


"ஜி.ஆர்.டியில் வளையல் திருவிழா நடக்குது. ஆர் யூ ஓகே பேபி?" என்று நயன்தாரா கேட்பதை பார்த்து, நீங்கள் மனசு மாறுவதற்குள், உடனே சென்று கட்டி விடுங்கள்.


இதனால் உங்களுக்கு என்ன லாபம்?


நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் 25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அதில் ஐந்து லட்சத்தை கட்டி விட்டால், உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ அப்படியே இருக்கும், ஆனால் வீட்டுக் கடனின் கால அளவு (மாதங்கள்) குறைந்து விடும்.


இப்படியே வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என கணிசமான தொகையை செலுத்தி வாருங்கள்.


கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், எட்டு வருடத்தில் அதிக வட்டி கட்டிக் கொண்டிருக்காமல், உங்கள் முழு வீட்டுக் கடனையும் அடைத்து விடலாம்.


இது எனது சொந்த அனுபவம். எட்டு வருடத்தில் வீட்டுக் கடன் அடைத்து, வங்கியிலிருந்து வீட்டு பத்திரத்தை வாங்கும் பொழுது கிடைக்கும் நிம்மதி இருக்கே! அதெல்லாம் அனுபவித்து தான் தெரிந்து கொள்ளணும்.


வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கலாம், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நமது நிதியை நிர்வகித்தால், எட்டு வருடத்தில் நீங்கள் ஹவுஸ் ஓனர்.


மொத்தமாக 35 லட்சம் அல்லது 40 லட்சம் சேர்த்து விட்டு தான் வீடு வாங்குவேன் என்று அடம் பிடித்தால், அடுத்த மூன்று வருடத்தில் வீட்டின் விலை மேலும் 10 லட்சம் உயர்ந்து விடும்.


வீட்டு கட்டுமான பொருட்களின் விலை, வேலையாட்கள் கூலி என எல்லாமே உயர்ந்து விடும்.


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
மண்ணும் பொன்னும் என்றும் லாபம்!

(வீ .மாதவன்  நாணயம் விகடன் டீம்-நன்றி )

‘காலணாவா இருந்தாலும் மண்ணுலயும் பொன்னுலயும் (தங்கம்) போடுற பணம் வீண்போகாது’ என்று நம் பெரியவர்கள் சொல்வதுண்டு. அந்தக் காலத்திலிருந்த சூழல், வாய்ப்புக்கேற்ப பெரியவர்கள் ‘டைவர்சிஃபிகேஷனை’ இப்படிச் சொல்லிவைத்தார்கள். ஆனால், இன்றைக்கு முதலீட்டு வாய்ப்புகள் மண்ணையும் தங்கத்தையும் மீறி ஃபிக்ஸட் டெபாசிட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் எனப் பலவாகப் பெருகிவிட்டன; நமக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் பல பலன்களையும் வழங்குகின்றன.


முதலீட்டில் இரு முக்கிய அம்சங்கள்!


முதலீட்டைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒன்று, குறிப்பிட்ட காலஅவகாசத்தில் முதலீட்டுத் தொகை பணவீக்கத்தைவிட உயர்ந்திருக்க வேண்டும். மற்றொன்று, எளிதில் பணமாக்கிக் கொள்ளும்படி நம் முதலீடு இருக்க வேண்டும். நிலத்தில் செய்யும் முதலீடு ஓரளவுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதாக இருக்கிறது. ஆனாலும், நிலத்தை அவ்வளவு எளிதாகப் பணமாக்க முடிவதில்லை. மேலும், பட்டா, மனை அங்கீகாரம், பாதுகாத்தல் எனச் சில சிக்கல்கள் இருக்கின்றன.


மண்ணும் பொன்னும் என்றும் லாபம்!


தங்கத்தை எளிதில் பணமாக்க முடியும். ஆனால், அதன் முதலீட்டு வருமானம் சொற்பமாகவே இருந்துவந்திருக்கிறது. தவிர, தங்கத்தைப் பாதுகாப்பதும், அதன் தரத்தை ஆராய்ந்து வாங்குவதும் அதிலிருக்கும் பாதகமான அம்சங்கள்.


அதற்காக மண்ணிலும் பொன்னிலும் பணத்தை முதலீடு செய்யவே கூடாது என்று சொல்ல வரவில்லை. வழக்கம்போல் இல்லாமல் கொஞ்சம் மாற்றி யோசித்தால், இந்த இரண்டிலும் அருமையான வருமான வாய்ப்பு இருப்பதை நாம் அறிய முடியும்.


எப்போதும் முதலீட்டில் பணவீக்கத்தைவிட வருமானம் அதிகமாகக் கிடைக்க வேண்டும்!



ரெய்ட்ஸ் (REITS) - நவீன ரியல் எஸ்டேட் முதலீடு


ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (Real Estate Investment Trust - REITS) என்பதன் சுருக்கம்தான் `ரெய்ட்ஸ்.’ இது ஒரு நவீன ரியல் எஸ்டேட் முதலீடு. இந்தத் முதலீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.85,000 முதல் ரூ.1,00,000-க்குள் 200 சதுரடிக்கு முதலீடு செய்ய முடியும். இதில், குறைந்தபட்சமாக 200 சதுரடி வாங்க வேண்டும். வாங்கும் நிலத்தின் மதிப்பு உயரும்; ஆண்டுக்கு 5-7% வாடகையும் ஈட்டித் தரும்; அனைத்துக்கும் மேலாக நினைத்த நேரத்தில் விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் முடியும்.


ரெய்ட்ஸ் எப்படிச் செயல்படுகிறது?


ரியல் எஸ்டேட்துறையில் பலவிதமான (வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், குடோன்கள் போன்ற வருவாய் ஈட்டித்தரும்) சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் இந்த வகைச் சொத்துகளை ஒரு டிரஸ்டாக அமைத்து, அதைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்றன. இந்தச் சொத்துகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். இவற்றிலிருந்து வரும் வாடகை வருமானத்தில் 90 சதவிகிதத்தை முதலீட்டாளர்களுக்குக் கட்டாயம் டிவிடெண்டாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது செபியின் நிபந்தனை. தனிநபர்கள் குறைந்தபட்சமாக 200 பங்குகள் வாங்க வேண்டும் (ஒரு பங்கு என்பது ஒரு சதுரடி எனத் தோராயமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்).


உதாரணமாக, எம்பஸி ரெய்ட்ஸ் (Embassy REITS) ரியல் எஸ்டேட் டிரஸ்ட் தன் பங்குகளை சென்ற ஆண்டு, மார்ச் மாதம் ஒரு பங்கின் விலை ரூ.300 என்ற அளவில் வெளியிட்டது. பட்டியலிடப்பட்டு சுமார் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில், தற்போது அந்தப் பங்கின் விலை ரூ.422 என்ற அளவில் வர்த்தகமாகிறது.


இது வெளியீட்டு விலையைவிட 40% அதிகம். மேலும், கடந்த ஆறு மாதங்களில் இதுவரை ரூ.11.40 டிவிடெண்ட் அறிவிக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் ஆறு மாதகால டிவிடெண்டைக் கணக்கில்கொண்டால் சுமார் 7.5-8% (11.4x2=22.8 - 100x22.8/300=7.6%) வரை டிவிடெண்டாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


ஆனால், இந்தச் சொத்தைப் பங்குச் சந்தையில் வாங்கும்போது குறைந்தபட்சமாக 200 பங்குகள் வாங்க வேண்டும். அதேபோல 200 யூனிட்களாக விற்றுக்கொள்ளலாம். ரியல் எஸ்டேட் முதலீட்டில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும்; அதோடு பங்குச் சந்தையின் வெளிப்படைத் தன்மையுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் பகுதியாகக்கூட விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம். பட்டா பற்றிய கவலை இல்லை; வாடகைக்கேற்ற இடமா, நிலம் ஆக்கிரமிக்கப்படுமோ என்ற பயம் தேவையில்லை.


தற்போது, இந்தியாவில் எம்பஸி ரியல் எஸ்டேட் டிரஸ்ட் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் கோத்ரெஜ், ரஹேஜா, டி.எல்.எஃப் போன்ற பெரிய குழுமங்களும் தங்கள் ரெய்ட்ஸ் திட்டங்களைப் பங்குச் சந்தையில் பட்டியலிட உத்தேசித்துள்ளன.


கோல்டு பாண்ட் ஃபண்ட் என்பது அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தும் திட்டம் என்பதால் நம்பகத்தன்மையும், தரமும், வட்டியும் நிச்சயம்!
ஜொலிக்கும் தங்கம்!


தங்க நகைகள் நமக்கு அழகு தரும். அவசரத்துக்கு அடகு வைத்து அல்லது விற்று நிலைமையைச் சமாளிக்கலாம். அதையும் தாண்டி அதிலிருந்து வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஆசைக்குக் கொஞ்சம் தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கைக்குக் கிடைக்கும் பணத்தையெல்லாம் நகை வாங்கப் பயன்படுத்துவது தவறு.

gold

தங்க நகையாக வாங்காமல், சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) திட்டத்தில் தங்கத்தை பாண்டாக (டீமேட் கணக்கில் பங்குகள் இருப்பதுபோல) வாங்கி முதலீடாக வைத்துக்கொண்டால், பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.


இந்தத் திட்டத்தில் நாம் வாங்கும் தங்கத்துக்கு நமது அரசே 2.5% வட்டி அளிக்கிறது. எட்டு வருடங்கள் முதிர்வுகொண்ட இந்த பாண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிவருகின்றன. எட்டு வருட முடிவில், அரசு அன்றைய தேதியின் தங்க விலையைக் கொடுத்து, உங்களிடமிருந்து பாண்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும். வட்டி வருமானத்தை வரிப் பிடித்தம் செய்யாமல் வழங்கும்.


நம்பகத் தன்மை, தரம், வட்டி!


அரசே பொறுப்பேற்று நடத்தும் திட்டம் இது என்பதால், நம்பகத்தன்மையும், தரமும், வட்டியும் நிச்சயம் உண்டு. மேலும், இந்த பாண்டுகள் 24 கேரட் தங்கத்தின் தரத்துக்கு ஒப்பானது. ஒரு யூனிட்கூட வாங்கலாம் (ஒரு யூனிட் என்பது சுமார் ஒரு கிராம்).


உதாரணமாக, செப்டம்பர் 2016 சீரிஸ் பாண்டை ஒருவர் ரூ.3,150 கொடுத்து வாங்கியிருந்தால், தற்போது அது ரூ.3,874-ஆக உயர்ந்திருக்கும். தவிர, 2.75% வட்டியும் கிடைக்கும். (இந்த வட்டி விகிதம் எதிர்காலத்தில் மாற வாய்ப்புண்டு.)


இது பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால், தங்கம் விலை குறையும்போதெல்லாம், வாங்கினால் இன்னும் அதிக லாபம் பார்க்கலாம். உதாரணமாக, ரூ.3,150 முகமதிப்பு கொண்ட பாண்டு சீரிஸ் ரூ.2,700 வரை கீழே சென்றது. இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி வாங்கியிருந்தால், ரூ.2,700 பாண்டுக்கும் ரூ.3,150 முகமதிப்பின் அடிப்படையிலேயே வட்டி கிடைக்கும். தவிர, செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை. திருடு போய்விடுமோ என்ற பயம் தேவையே இல்லை.


முதலீட்டு நோக்கில் மண்ணிலும் பொன்னிலும் பணத்தைப் போட நினைப்பவர்கள் இந்த இரு திட்டங்களை தாராளமாகப் பரிசீலிக்கலாம்!

திங்கள், 20 ஜனவரி, 2020

வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த மிகப்பெரிய கஷ்டம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

வாழ்க்கையில் கஷ்டமா இருந்த நேரம் என்று சொன்னால்,, நான் திருமணம் ஆகி வேலை வெட்டி இல்லாமல் இருந்தது,, கிட்டதட்ட 4 மாத காலம் அது.. நரக வேதனை…

வேலைக்கு போகும் போது இருந்த மரியாதை வேலை இல்லாத இரண்டு மூன்று நாட்களில் முற்றிலும் போய் விட்டது.. அப்போது என் மனைவி ஒரு நல்ல  கம்பெனியில் இருந்தார்.. ஆகையால் வாடகை, மளிகை மற்றும் வீட்டு செலவுக்கு பிரச்சனை இல்லை, எனக்கு அப்போது குழந்தை இல்லை என்பதால் கொஞ்சம் சமாளித்தோம். நாங்கள் தனி குடித்தனம்..எனது சம்பளத்தை எனக்கு என்று கொஞ்சம் வைத்து கொண்டு மீதி மனைவி இடம் கொடுத்து விடுவேன்… அப்பா அம்மா உடுமலையில்  இருந்தார்கள்.

சுருக்கமா சொல்ல போனால் ஒரு House Husband போல நான்கு மாதங்கள் நரக வேதனை,, பைக் petrol, நியூஸ் பேப்பர், browsing center, resume print, இவை எல்லாத்துக்கும் மனைவியை எதிர்பார்த்து கொண்டிருப்பேன். Resume printouts எடுத்தே பாதி காசு போய்டும்,, ஆகையால் சில சமயம் மனைவியிடம் office இருந்து பல்க்காக resume printouts எடுத்து வர சொல்வேன்…. வீட்டில் உள்ளவர்களை விட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தொல்லை தாங்க முடிய வில்லை,, வேலைக்கு போகலையா வேலைக்கு போகலையானு ஒரே தொந்தரவு… இதுக்காகவே என் மனைவியை ஆபீஸ் ட்ராப் செய்த பிறகு வீட்டுக்கு வந்து கதவை அடைத்து கொள்ளுவேன்.. 10 - 5 pm கதவை திறக்க மாட்டேன்… பிறகு டூட்டி முடிந்ததை போல மனைவியை ஆபீஸ் ல் pick up,, இப்படியே 4 மாதங்கள் நரக வேதனை,,,, என்னால் இங்கு விவரிக்க முடிய வில்லை… கோவிலுக்கு எப்போதாவது போகும் நான் தினமும் போக ஆரம்பித்தேன்,, தினமும் ராசி பலன் பார்க்க ஆரம்பித்தேன், ராகு காலம் யம கண்டம் எல்லாம் அத்துபடி…இப்படி நிறைய சொல்லலாம்…

வேலைக்கு போகும் போது மனைவி மற்றும் குடும்பத்தோட இருந்த பேச்சு தைரியம் வேலை இல்லாத போது முற்றிலும் கோழை ஆகி விட்டேன்,,, நிறைய பொய் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டேன்.. யாரிடமாவது பேசினால் முதல் கேள்வி எங்க வேலை செயிரிங்க,,, இத கேட்டு கேட்டு என்னோட காதுல ரத்தம் தா வரல.. மாமியார் மாமனார் உடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்தேன்.. மொத்தத்தில் மற்றவர்கள் பார்வையில் ஒரு தீவிரவாதியாக இருந்தேன்..

நான்கு மாதங்கள் பிறகு எனக்கு ஜெயிலில் இருந்து விடுதலை கிடைத்தது,, ஒரு மிக பெரிய கம்பெனியில் சேல்ஸ்  மேனேஜர் வேலை கிடைத்தது.. 


ஆகையால் நண்பர்களே வேலை இல்லாமல் எப்போதும் இருந்து விடாதீர்கள்,, அதே போல சட்டென்று வேலைய விட்டு விடாதீங்க,, வேற வேலை சீக்கிரம் கிடைக்கும் என்ற நினைப்பு முற்றிலும் வேண்டாம்,, கிடைத்த பிறகு முடிவு செய்யுங்கள்.. இல்ல என்றால் ஒரு House Husband, தீவிரவாதி, தண்ட சோறு, இப்படி இருக்க தயார் ஆகுங்கள்…

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இனிமையான பொங்கல் ....🥰🥰🥰🥰

தைமாதம் முதல் நாள் என்றாலே விவசாயம் என்ற ஒரு மந்திரச்சொல் எல்லோர் மனதில் ஓடும் ...தைமகளை வரவேற்கும் நாளாக அமைவது இயல்பு ..வரும் காலங்களில் விவசாயம் சார்ந்த தொழிலை முன்னெடுதி யே எந்த ஒரு தொழிலும் சார்ந்த தாக வருங்காலத்தில் அமையப்போவது உறுதி ..நம் தலைமுறை விவசாய தொழில்களை மறந்துவரும் சூழலில் ..நம் குழந்தைகள் தற்பொழுது இருக்கும் நிலங்களில் ..தங்களின் பெற்றோர்களுடன் பள்ளி ,கல்லூரிகளில் படிக்கும் ,வேளைக்கு போகும் இளைய தலைமுறையினர் விடுமுறை நாட்கள் ,பொங்கல் பண்டிகை காலங்களில் தானாக முன்வந்து விவசாய நிலங்களில் கால் பதித்து ..பயிர்களுக்கு நீர் இறைத்து ...தலையெடுத்தும் ,கால்நடைகளை எப்படி பராமரிப்பது .என்று களப்பணி செய்தும் ..இந்த பொங்கலை கொண்டாடியது பார்க்கும்பொழுது மனதில் இனம் புரியாது மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது .. ...தங்களால் இயன்ற அளவு விவசாயப்பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது ..என்னதான் நகரத்து வாழ்க்கை வாழந்தாலும் ...எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு வந்துள்ளதை அறியும்பொழுது ...மறுபடியும் விவசாய பணிகள் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைந்து ..புதிய விவசாய நடைமுறைகளை கண்டறிந்து வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகிறது ..நம் நாட்டுக்கு விவசாயதில் வளரும் தலைமுறையினர் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது ...ஷ்யாமுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ..படித்திவிட்டு பிடித்த துறையில் பட்டம் வாங்கிவிட்டு ..பிடித்த வேளைக்கு சென்றாலும் ..இந்த விவசாய பணி எனக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லும்பொழுது எதிர்கால வாழ்க்கைக்கிற்கு நம்பிக்கை பிறக்கிறது ...பெரியோர்கள் சும்மா வா சொன்னார்கள் ..தை பிறந்தால் வழிபிறக்கும் என்று .....அதுவும் இந்த பாடலுடன் கேட்கும்பொழுது வாழக்கை இனிமையாகிறது ..நீங்களும் கேட்டு பாருங்களேன் ...
என்றும் அன்புடன் ஷியாம் சுதிருடன் ...உடுமலை சிவக்குமார்
9944066681..😍😍😍🥰🥰🥰🥰

வியாழன், 16 ஜனவரி, 2020


ஆல் கொண்டம்மன் கோவில்-உடுமலைப்பேட்டை (மாலகோவில் )
ஜனவரி ..17...2020...
கம்பளத்தார் ...💓💓ஆட்டம் ..💓.பாட்டம் .💓.கொண்டாட்டம் .💓.தேவராட்டம் ....💓
இன்று காலையே ஒரு உற்சாகம் மனதில் தொற்றிக்கொண்டது மண் மனம் மாறாத ..கொத்துமல்லி செடிகளின் வாசம் ...கொண்டக்கடலை செடிகளின் பசுமையும் ...கண்னுக்கு குளிர்ச்சியான பச்சை தென்னை மரங்களின் சூழந்த ..25 கிராமங்களில் இருந்து வந்திருந்த சொந்தங்களை ஒரே கோவிலில் பார்த்தும் ,பேசியும் ..கம்பளதார்களின் தேவராட்டத்தை ...தளி எத்தலப்பர் ...போற்றி வணங்கும் குலதெய்வங்களாக போற்றி பாதுகாக்கும் கால்நடை செல்வங்களை போற்றி வணங்கியது மிக்க மகிழ்ச்சி ..இன்று அருமையான சலங்கை மாடுகளின் ஒலி சத்தம்...தேவராட்டம் ,தமிழர்களின் வீர விளையாட்டு ,பாரம்பரிய மிக்க பழமை விளையாட்டுகள் இன்றைய சூழலில் இந்த பொங்கல் பண்டிகையில் திரும்ப பார்த்ததில் சந்தோசம் .......உலக சூழலில் மாறிக்கொண்டிருக்கும் பண்பாடு ,கலாச்சாரம் ,மறுபடியும் நம் கண்முன்னே கொண்டு வந்திருந்தது வேறு யாரும் இல்லை ..வளரும் இளைஞர்கள் ..எதிர்காலத்தில் மிகவும் பாதுகாப்பாக கொண்டுசெல்வார்கள் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தியுள்ளனர் ..மால கோவிலுக்கு வந்திருந்த அனைத்து சொந்தங்களின் மனதில் புது சொந்தங்களையும் ,விட்டுப்போன சொந்தங்களையும் பார்த்தும் ,பேசியும் பார்த்தது மகிழ்ச்சியாக அமைந்தது இந்த கோவில் திருவிழா ....சீரும் காளையுடன் ..அடிவள்ளி ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ...எங்க வீட்டு மகாலட்சுமிகளுடன் தொடங்கி வைத்த தேவராட்டதுடன் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த திருவிழா ...ஆல்கொண்டம்மன் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ..அடிமேல் அடிவைத்து ..தேவராட்டம் ...சலிகெருது ..சீரும் காளையுடன் .நம் சொந்தங்களுடன் ..கலந்துகொண்டு வந்தது மகிழ்ச்சி .நேரம் சென்றது கூட தெரியவில்லை ...அந்தளவுக்கு ..பக்தி பரவசத்துடன் ..வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி ...இந்தஆண்டு இயற்கை சோதிக்காமல் ..விவசாயம் செழிக்க ...🙏🙏கால்நடைகள் அபிவிருத்தி பன்மடங்கு பெருகி செல்வம் செழிக்க ஆல்கொண்டம்மன் ..அனைவர்க்கும் அருள்புரிவாராக ....🙏🙏🙏 பொங்கல் விழா 2020..🌷🌷🍊🍊
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்🌷🌷
9944066681..💓💓💓👍👍👍🥦🥦
இன்று மாட்டுப்பொங்கல் ...ஏராம் வயல் (பொன்னலம்மன் சோலை -வழி )

இன்று நானும் மதிப்புக்குரிய அய்யா குமார ராஜா அவர்களின் குடும்ப நண்பர் ஜெயக்குமார்  தோட்டம் சென்று வந்தேன் ..அருமையான பட்டி பொங்கல் ..வந்திருந்த நண்பர்களிடம் அரிய தகவல் கிடைத்தது மகிழ்ச்சி ..

புத்தம் புது அருமையான தோழர் எனக்கு கிடைத்தார் ...தோழர் .பெயர் ராஜேஷ் சொந்த ஊர் .JN பாளையம் .. என்றார் ..பள்ளி -காந்திகலா நிலையம் பள்ளியில் 7 -ம் வகுப்பு படித்திக்கொண்டிருக்கிறார் என்று அழகாக பதில் அளித்தார் ...பொங்கல் க்கு வேற சிறப்பு என்று கேள்வி கேட்டு வினவினேன் ..தோழர் எங்கள் ஊரில் சலிகெருது நான்கு இருப்பதாகவும் ..நாளை ஜல்லிவீரன் கோவிலுக்கு சலிகெருதுஉடன் செல்வதாகவும் கூறினார் ..நான் தோழரிடம் மாலகோவில் செல்ல மாட்டீர்களா என்று வினவினேன் ..அதற்கு அம்மாபட்டியில் ரங்கசாமி என்ற மாமா இருப்பதாகவும் ..அவருடன் சென்றால் அங்கு செல்வேன் என்று தோழர் கூறினார் ...நாளை மறு நாள் மாட்டுக்கு பால்போடும் நேன்பு  இருப்பதாகவும் ..அது முடிந்தவுடன் ..திருமூர்த்தி மலைக்கு மேலே மேய போய்விடும் என்றும் ..அடுத்த வருடம் தான் வரும் என்று கூறினார் தோழர் ராஜேஷ் ..தோழரிடம் உங்கள் தந்தை பெயரை கேட்டேன் திருமலைசாமி பங்காரு என்றார் ..இன்று மாட்டு பொங்கலுக்கு JN பாளையத்து ஒரு அருமையான தோழர் கிடைத்தது மகிழ்ச்சி ..தோழருக்கு சிறு வயது என்றாலும் அருமையான சலிகெருது தகவல் தெரிந்து வைத்திருப்பதற்கு மகிழ்ச்சி ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

புதன், 15 ஜனவரி, 2020

மாட்டுப்பொங்கல் ..🌱🌱🌷🌷🌷💓💓.2020
💓தளி ஜல்லிபட்டி -உடுமலைப்பேட்டை 💓
இன்று மாட்டு பொங்கல் ...உழவுக்கு ஆணிவேராக இருக்கும் குலதெய்வங்களுக்கு ...பாரம்பரியமிக்க திருநாள் ..25 வருடங்களுக்கு முன் சிறு வயதில் சொந்தங்களுடன் சென்று ஆடு ,மாடு ,கண்ணுகுட்டிகளுடன் சென்று திருமூர்த்தி அணையில் குளிப்பாட்டி ,அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து விளையாடியது நினைவில் வந்த மனதுடன் உற்சாகத்தோடு... இன்று மாலை மதிமயங்கும் நேரம் தளிஜல்லிபட்டி கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலை சாரலில் அமைந்திருக்கும் ..அண்ணனின் ஆட்டு பட்டிக்கு சென்று குழந்தை செல்வங்களுடன் மாட்டுப்பொங்கல் அமைதியான சூழலில் ஆட்டுக்குட்டிகளும் ...பசுமாடுகளுடன் ..தோழனாக இருக்கும் நாய்குட்டிகளுடன் ..சொந்த பந்தங்களுடன் கொண்டாடியது மகிழ்ச்சி ..இன்று தெய்வ வழிபாடு வழிபடுவதற்கு முன் ..புதியவராவாக தாய் ஆடு தன் குட்டி குழந்தைச்செல்வத்தை ஈன்றது அழகான காட்சியாக எல்லோருக்கும் மகிழ்ச்சியாக அமைந்த்து ....வழிபடுவது ஆரம்பிக்கும் முன்னரே குளிர் பனி பல் சில்லிடும் அளவிற்கு குளிர் ஆரம்பத்துவிட்டது ..ஆட்டுப்பண்ணை பட்டியில் இருந்ததால் வெப்ப சீதோஷண நிலவியது...ஆடு ,மாடு கொம்புகளுக்கு வண்ணம் பூசியும்,குங்குமப் பொட்டிட்டு குழந்தைச்செல்வங்களுடன் இன்றைய நாள் அருமையானது .வழிபாடு தொடங்கவதற்கு முன் இருந்து ..இரண்டு குச்சிகள் எடுத்துக்கொண்டு தகர டப்பா ஒன்று எடுத்து கொண்டு .மேளமாக .இசைக்கருவியாக பயன்படுத்திக்கொண்டு ... மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து அலங்கரித்த விவசாயிகள் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டும் . பசு, காளை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்து மகிழ்ச்சி ..புறப்படும் பொழுது தோட்டங்களினோடு பயணத்தில் சில்லிடும் குளிர் ...உடுமலைநகரத்தை தொடும் வரை ...குளிர் முகத்தில் பன்னீர்த்துளிகளாக சில்லிட்டது .🌱🌱🌷🌷..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681..🌾🌾🌾🌱🌱

செவ்வாய், 14 ஜனவரி, 2020

மாட்டு பொங்கல்
மாட்டு பொங்கல் -16th Jan 2019
இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள், எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
ஷியாம் சுதிர் சிவகுமார் .......ன் இனிய குலதெய்வமான மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ...உடுமலைப்பேட்டை .....மாட்டுப்பொங்கல் ..2019...தை பிறந்தால் வழி பிறக்கும்.



திங்கள், 13 ஜனவரி, 2020

கருப்பு நிற ஆண்கள் எந்த நிற ஆடைகளை உடுத்தலாம்?

 நம் கல்யாணமாகாத ..மாப்பிள்ளைகள் ...தம்பிகளுக்கு மட்டும் இந்த பதிவு ...

ஆடை அழகியலின் நிறம் முக்கியம் தான் ஆனால் நிறத்துடன் உயரம், சரும அமைப்பு மற்றும் முக அமைப்பை சேர்த்தே நீங்கள் தேர்ந்தெடுத்தால் எல்லா பெண்களையும் திரும்பி பார்க்க வைக்க முடியும்!

Formals இதில் தான் பெரும்பாலும் அலுவலகத்தில் இருக்கையில் சந்தன நிறம், இளம் மஞ்சள் (மிகவும் லயிட் வகை), இளம் பச்சை...அதாவது கஸ்டர்டு ஆப்பிள் நிறத்தில் லைட் வகை, இளம் நீலம் ...இதில் பல shade பொருந்தும் casual சொல்லும்போது அதற்கு வருகிறேன், grey பொருந்தும். மிகவும் இளம் லைட் பிரவுன் வகையும், half வைட் நன்றாக இருக்கும்.

Grey நிறத்தின் அதிசயம் என்ன என்றால் எல்லா நிற ஆண்களுக்கும் பொருந்தும்.

 ஸ்கின் டோனுடன் இளம் பிரவுன் மற்றும் லைட் சாக்லேட் பிரவுன் பொருந்துகிறது


நான் சொல்வதை போல் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள், லைட் பிங்க், நிசான் மைக்ரா கார் இளம் ஆரஞ்சு-பிரவுன், இங்கே இவர் போட்டிருக்கும் இளம் சால்மன் இந்த நிறங்கள் உங்கள் டீ-ஷர்ட், ஷர்ட் இல் தூக்கலா அழகை காட்டும்


இன்னொரு மிக ஈஸி formula எல்லா விதமான நீல நிறமும் பொருந்தும். அதற்கு ஏற்றார் போல் அழகான pant, Jean, ஜெர்கின் இதெல்லாம் சேர வேண்டும்.


நான் சொன்னேன் இல்லை? கஸ்டர்ட் ஆப்பிளின் லைட் நிறமான பச்சை...இது நன்றாக பொருந்தும், இதை விட லைட் ..அதில் கருப்பு டிசைன் ஓரத்தில் குட்டி குதிரை அல்லது ஏதாவது எழுத்து உங்கள் அழகான நெஞ்சின் ஓரம்...உங்க கேர்ள் friend surrender ஆயிடுவாங்க! நச்சுனு இருக்கும்


இப்படி பிரைட் ரெட் கருப்பு போன்ற மிக்ஸ் செய்து அணிந்தாலும் friday casuals எல்லாத்துக்கும் ஈர்க்கும் !

மிகவும் fit கட்டான உடம்பு இருந்தால் யோசிக்காமல் ரெட் shades போங்க...இது செட் ஆகுமா? பயப்பட வேண்டாம்...வெறும் ரெட் என்றில்லை கருப்பு / வெள்ளை / stripes டிசைன் எல்லாமே ரொம்ப அழகாக காட்டும் light பிரவுன், சில்வர், khaki மற்றும் அனைத்து லைட் shades



உடைகளை விட நீங்கள் உங்கள் தோரணையை எப்படி மெருகேத்தி பேசுகிறீர்கள், நடக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் இது மிக முக்கியம்...

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

பொங்கல் ...காப்பு கட்டுதல் முறை
அழகான விடியல் ...எங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளுடன் காலைநேரத்தில் பொங்கல் திருவிழாவிற்கு தேவையான ..கரும்பு ..மஞ்சள்கொத்து ...ஆவாரம்பூ..மாவிலை இழைகளுடன் இன்று உடுமலைச்சந்தையில் பொங்கல் திருவிழா கூட்டத்துடன் கொள்முதல் செய்தது மகிழ்ச்சி .. ..போகி முடிந்து மாலை அந்திமயங்ககும் வேளையில் நம் வீட்டில் வேப்பம் இழையுடன் சேர்த்து சிறுபீளையும் வீட்டின் முற்றத்தில் காப்பு கட்டுப்படும்
கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்!
காப்பு இலைக்கொத்தில், மாவிலை, ஆவாரை, தும்பை உள்ளிட்ட மூலிகைகளும், சிருபீளையும் இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, மாவிலை, காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் பிராண வாயுவை சீராக்கும் தன்மை மிக்கது, அதுபோல சிறுபீளை நச்சுத் தன்மை மிக்க பூச்சிகளை விரட்டி, சுற்றுப் புறத்தை விஷப் பூச்சிகள், விஷக் கிருமிகளிடமிருந்து காக்கும் இயல்புடையது.
இதனாலேயே, வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர். அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர்.
இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்....
நம் முன்னோர்கள் நமக்கு வாழ்வியலை அழகாக தமிழர் திருநாளை கொண்டாட கற்றுக்கொடுத்துஇருக்கிறார்கள் ...நம் வருங்கால தலைமுறைக்கு இதை சிதறாமல் கொடுக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது ...என்றும் உங்களுடன் ஷியாம் சுதிர் சிவக்குமார் ...பொங்கல் 2018....தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..முதல் நாள் ....நாளை இன்னும் பட்டையை கிளப்பும் துள்ளிவரும் பொங்கலுடன் நாளை ...சந்திப்போம் ....

வெள்ளி, 10 ஜனவரி, 2020

சென்னை, பெங்களூர் ,கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் தம்பதிகள் மாதத்திற்கு லட்சம் சம்பாதித்த பிறகும் ஏன் நிதி ரீதியாக போராடுகிறார்கள்?

மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பது வெளியில் தெரியாது.

யாராக இருந்தாலும் பணக்காகரனாய் காட்டிக்கொண்டால் தான் மதிப்பார்கள். அதை நானே கோவையில் அனுபவித்து இருக்கிறேன். இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. புரூக் பீல்டு  மாலில் ஆண்கள் பெண்கள் அதிகமாக இருந்த இடத்தில் திடீரென ஒரு 500₹ சத்தம் கொடுத்தது. எல்லோருடைய கண்ணும் என்னை பார்த்தது அதுவும் வித்தியாசமாக கேவலமாக. அந்த 500₹ என்னோட மொபைல் விலை.   இதுதான் அந்த மொபைல் கம்பெனி பெயர்.சாம்சங். அனைவரின் பார்வைக்கும் ஒரே அர்த்தம் என்ன என்பது உங்களுக்கே புரியும். என்னுடைய ஒரே பதில் சரியாக ஒரு நிமிடத்தில் என்னோட சாம்சங் கெலாக்ஸ்  மொபைல் எடுத்து ஒரு நம்பர் பார்த்து போனில் பேசிக்கொண்டவரிடம் சொன்னேன் அப்போது தான் எல்லோரும் நார்மல் ஆனாங்க.

இதில் இருந்து என்ன தெரிகிறது இருக்கும் இடத்தை பொருத்து ஒருவர் செயல்பட்டால் தான் உலகம் மதிக்கும். இந்த ஒரு விஷயம் தான் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் நிதி பிரச்சினை வர வைக்கிறது. ஆனால் அது நிதி பிரச்சினை அல்ல கவுரவ பிரச்சினை.

ஒரு லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் மிகவும் லோக்கலான இடங்களில் இருந்தால் மற்றவர் மதிக்க மாட்டார்கள் என்பதால் 15–30ஆயிரம் வாடகையில் இருப்பான்.

அப்புறம் கார் அதற்கான மாத தவணை சர்வீஸ் செலவுகள்

வீட்டு வாடகை மளிகை அது எங்க மூன்று வேளை ஸ்விக்கி அல்லது ஹோட்டல்

குழந்தையை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைப்பதாக நினைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைப்பான் குழந்தை 1+1 டூ மாமா சொல்லும்.

இப்படி எப்போதும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து ‌கவுரமாக வாழ நினைப்பவனுக்கு தான் நிதி பிரச்சினை வரும். ஆனால் கவுரவமாக வாழ நினைக்கிறார்களோ இல்லையோ அப்படித்தான் வாழவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.


ஆனால் சிக்கனம் சேமிப்பு போன்று எல்லா விஷயத்தையும் திட்டமிட்டு செய்தால் இந்த நிதி‌ பிரச்சினை வராது.

வியாழன், 9 ஜனவரி, 2020

திருமணத்திற்கு முன்பான வாழ்க்கைக்கும், பின்பான வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசங்களைக் கூறுக?

திருமணத்திற்கு முன் உலகத்தையே மாற்றலாம் என்று நினைத்தவர்கள் ,கல்யாணம் முடிந்த பின்பு நினைத்த சேனலை பார்க்க டிவியின் ரிமோட்டை கூட மாத்த முடியாது என்பது தான் உண்மை.😀😀😁😀😁

ஆம்லெட் போடுவதை வைத்து திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையை விளக்க போகிறேன்

ஆறுமாதத்திற்கு பின்:

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

ஒரு வருடம் பின்:

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

ஒன்றரை வருடம் பின்:

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இரண்டு வருடம் பின்:

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

மூன்று வருடம் பின்:

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்னசெய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

நான்கு-ஐந்து வருடம் பின்:

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

ஏழு வருடம் பின்:

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

பத்து வருடத்துக்கு பின்:

கணவன்: இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இவ்ளோதாங்க திருமண வாழ்க்கை… புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்.

எதுக்கோ தற்காப்புக்கு ஒரு குறிப்பை போடுவோம்


குறிப்பு : சிரிப்பு பதிவு மட்டுமே யாரும் அடிக்க வரவேண்டாம். சீரியஸ் ஆக பதில் எழுத வரமாட்டிக்கிது ஏன் என்று தெரியவில்லை



உத்தியோகம் புருஷலட்சணம் எனில் மனைவிக்கான இலக்கணம் எது ?

உத்யோகத்திற்கு சென்று வீட்டுக்கு வரும் புருஷனை மனம் நோகாமல் வரவேற்று நல்லுணவு பரிமாறி முடிந்தால் களைப்பு நீங்க சிறிது நேரம் கை கால்களை பிடித்துவிட்டு அவரை கவனித்துக் கொள்வதே மனைவிக்குரிய லட்சணம்.

நான் சொல்வது பெண்ணியவாதிகளுக்கு முரண்பாடாக தெரியலாம். ஆனால் மனைவி வேலைக்கு எதுவும் போகாமல் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இப்படி நடந்து கொண்டால் இல்லறம் இனிக்கும்.

பொருளாதார தேவைகளுக்காக வேறு வழியின்றி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இது நடைமுறையில் சற்று சிரமம் தான் என்றாலும் மாதத்தில் ஒன்றிரண்டு நாட்களாவது நான் சொன்னவற்றை பின்பற்றி பாருங்களேன்.

நான் என் திருமண வாழ்க்கையில் செய்து கொண்டிருப்பதை தான் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

”ஆணுக்கு தான் சேவைகள் செய்ய வேண்டுமா..? பெண் மட்டும் உயிரில்லையா…? அவளுக்கும் வலிகளில்லையா…?” என்றெல்லாம் கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது. இரு மனங்களும் ஒன்றி ஒத்திசைப்பதே திருமண பந்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் self esteem இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கட்டிய கணவனிடம் பெண்ணியவாதியாக நடந்து கொள்ளாதீர்கள். அது குடும்பத்திற்கு நல்லதல்ல.

பெண்ணுக்கான இலக்கணங்களை வகுத்த நமது தர்ம சாஸ்திரங்கள் ஆணுக்கான இலக்கணங்களையும் வகுக்காமல் இல்லை. ஆனால் காலப்போக்கில் ஆணாதிக்க சமுதாயத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது.

இதோ அதற்கான ஆதாரம்:

கார்யேஷு தாஸி

கரனேஷு மந்த்ரி

போஜேஷு மாதா

சயனேஷு ரம்பா

ரூபேஷு லக்ஷ்மி

க்க்ஷமயேஷு தரித்ரி

ஷத் தர்மயுக்தா

குலதர்ம பத்னி

சேவை செய்வதில் வேலைக்காரியாகவும்

ஆலோசனை சொல்வதில் மந்திரியாகவும்

பசியறிந்து உணவு அளிப்பதில் தாயாகவும்

படுக்கையில் ரம்பையாகவும்

அழகில் லக்ஷ்மியாகவும்

மன்னிப்பதில் பூமித்தாயாகவும்

இந்த ஆறு தர்மங்களைக் கடைப்பிடிப்பவள் குலதர்ம பத்தினி ஆவாள்.

பெண்ணுக்கு எத்தனை நெறிமுறைகளை சொல்லிய நமது சனாதன தர்மம் ஆணுக்கு எந்த ஒரு நெறிமுறையும் விதிக்கவில்லையா ..? விதித்திருக்கிறது.

அவை இதோ

கார்யேஷு யோகி

கரனேஷு தக்க்ஷா

ரூபேச க்ருஷ்ணா

க்க்ஷமயேது ராமா

போஜ்யேஷு த்ருப்தா

சுக துக்க மித்ரா

ஷத் கர்மயுக்தா

கலு தர்மான்தா

காரியமாற்றுவதில் யோகியைப் போல நிலையானவனாகவும்

குடும்பத்தை பிள்ளைகளை காப்பதில் தக்க்ஷ பிரஜாபதியை போலவும்

அழகில் கிருஷ்ணனைப் போலவும்

ஒழுக்கத்தில் பொறுமையில் இராமனைப் போலவும்

மனைவி சமைத்த உணவை குறை காணாமல் உண்பதில் திருப்தி உடையவனாகவும்

மனைவியின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு ஆதரவளிப்பதில் நண்பனாகவும்

இந்த ஆறு தர்மங்களை கடைப்பிடிப்பவன் சிறந்த கணவன் ஆவான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நம் தர்மம் சம நீதியே வகுத்திருக்கிறது . ஆனால் ஆணுக்கு சாதகமாக பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் முதலில் கொடுப்பவளாக இருங்கள். பிறகு நீங்கள் கேட்காமலே எல்லாம் கிடைக்கும்.

புதன், 8 ஜனவரி, 2020

கிராமத்தில் அழுத்தமாக ஒலிக்கும் உறுமி சத்தம். ஆட்டக்காரர்களின் அசைவில் அத்தனை ரம்மியமாக வெளிப்படும் சலங்கை ஒலிச் சத்தம். இசையும், நடனமும் ஒருங்கே சேர்ந்த அழகிய நாட்டுப்புறக்கலை. கிராமங்களில், மார்கழி மாதம் முழுவதும் ஆடி தமிழர் திருநாளான தைத்திருநாளை கொண்டாடுகின்றனர். பாரம்பரியம் மாறாத இந்த தேவராட்டக் கலை உடுமலைப்பகுதியின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம்.
தை மாதம் துவங்கும் பொங்கல் விழாவிற்கு உடுமலை பகுதி கிராமங்கள் மார்கழி மாதத்திலேயே தயாராகின்றன. அடர்ந்த பனியை அகற்றி அனலாக உருமிஇசை ஒலிக்கிறது. கொட்டும் பனியில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தேவராட்டம் எனப்படும் உருமி ஆட்டம், சலங்கை மாடு மறித்தல் (சளகெருது ஆட்டம்), கும்மி ஆட்டங்களை பார்ப்பது மிகவும் அலாதியான அனுபவங்களில் ஒன்று.
தேவராட்டத்திற்காக இரவு நேரங்களில் இசைக்கும் உருமி கிராமம் தோறும் மார்கழி மாதம் முழுவதும் கிராமங்களில் எதிரொலிக்கும். தேவராட்டம் என்பது தேவர்களால் (கடவுளால்) ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இறைவனை வழிபடவும், வேட்டைக்குச் செல்லும்போது பாவனை ஆட்டமாகவும், மழை, திருமணம் போன்ற விசேஷச காலங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.
தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. ஒவ்வொரு அடவுகளும் மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், ஒவ்வொரு மனிதனுக்குத் தேவையான உடற்பயிற்சிகளின் வெளிப்பாடாகவும் உள்ளது.
தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் மினு மினுப்பான தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப சுதி ஏற்றப்படுகிறது.
தேவராட்டம் ஆடப்படும்போது, ஊதப்படும் ஒவ்வொரு விசில் சத்தத்திற்கும் இடையே அடவுகள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்களுக்கு விருந்து.
ஆட்டத்தின் துவக்கத்தில் மெதுவாக துவங்கும் அடவு மாற, மாற வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்சநிலைக்குச் செல்கிறது. ஆட்டம் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லும் அடவுக்கு வரும்போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது. ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது.
இதன் அசைவுகள் மனிதனின் அனைத்துப் பாகங்களையும் அசைத்துப் பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது. மார்கழி மாத பனி இரவில் முன் பனி காலத்தில் ஆடப்படுகிறது.
தை பிறந்ததும் ஆட்டக்காரர்கள் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயிலுக்கு சலங்கை மாடு புடைசூழச் சென்று தேவராட்டம் ஆடி தங்களது மார்கழி மாத ஆட்ட விரதத்தை முடிக்கின்றனர். இது இப்பகுதி மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள நிகழ்வாக இருக்கிறது.
இந்த கலை அழியாமல் இருக்க உடுமலைப்பேட்டையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜல்லிப்பட்டி, தளி, பெரிய கோட்டை, கம்பாளப்பட்டி போன்ற கிராமங்களில் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தற்போது தேவராட்ட பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.🥰🥰📚📚✒✒
தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தந்தையாக மாறுவதற்கான டிப்ஸ்...

இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.

* புதிய காட்ஜெட்ஸ் மற்றும் கிஸ்மொஸ் பற்றிய விவரங்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை இணையதளத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.

* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.

தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர்.

இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.

SHYAM SUDHIR SIVAKUMAR.......
கல்யாணத்தேன்நிலா காய்ச்சாதபால்நிலா என்ற பாடலில் ஏன் "காய்ச்சாத" பால் நிலா என்கின்றார் கவிஞர்? காய்ச்சிய பாலை விட காய்ச்சாத பால் எவ்விதத்தில் நிலவோடு பொருந்துகின்றது?

இந்த பாடல் இடம்பெற்ற படம் " மௌனம் சம்மதம்"! இதில் ஹீரோ மம்முட்டி ஒரு சட்டம் படித்த வழக்கறிஞர்! சட்டம் என்றால் ஆங்கிலத்தில் "LAW" என்று அர்த்தம்!

தமிழில் " லா" என்று சொல்லி பாடலை முடிக்க வேண்டும்! முழுக்க முழுக்க இந்த கதை கோர்ட்டில் நடக்கும்! சட்டத்தைப் பற்றி " லா" பேசும் ஒரு லாயர் என்பவர் தன் காதலியை பார்த்து பாடும் போது லா லா என்று பாடுவது மூலம் தன் வழக்கை பற்றிய சட்டத்தைப் பற்றிய நினைப்பில் இருக்கிறேன் என்று மறைமுகமாக காதலி புரிந்துகொள்ள அப்படி பாடுகிறார்!

கல்யாண தேன் நி"லா"

காய்ச்சாத பால் நி"லா" எல்லா வரிகளும் லா லா என்று முடியும்!

மம்முட்டி நல்ல வக்கீலா என்று அமலாவுக்கு அந்த படத்தில் சந்தேகம் வரும்! தன்னை ஒரு மிகச்சிறந்த வக்கீல் என்று காட்டிக் கொள்வதற்காக மம்முட்டி டூயட் பாடல் பாடும்போது கூட காதலியிடம் தொழில் நினைவாகவே இருப்பதாக காட்டிக் கொள்கிறார்! தூங்கும் போது குறட்டை விடும் போது கூட லா லா என்று ஒருவர் குறட்டை விட்டால் அவர்தான் சிறந்த வக்கீல்!

மம்முட்டி ஒரு பொறியாளராக இருந்து அமலா மம்முட்டி இடம் ஒரு கட்டடம் கட்டும் காண்ட்ராக்ட் கொடுத்து இருந்தார் என்றால் அப்பொழுது பொறியாளர் மம்மூட்டி தாண் ஒரு நல்ல பொறியாளர் என்று தன் காதலிக்கு காட்டும் விதமாக

கல்யாண தேன் பொறி

காய்ச்சாத பால் பூரி

நீதானே கடலை பொரி

நான்தானே கார்த்திகைப் பொரி

என்று கவிஞர் பாட்டு எழுதி இருப்பார்!

கவிஞர் எல்லா வரிகளிலும் லா என்ற சட்டத்தை கொண்டு வந்தது பாராட்டவேண்டும்! சட்டம் ஏற்றப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் ஆகும் வரை அது ஒரு ஆர்டினன்ஸ் என்றுதான் சொல்லுவார்கள்!

அதுதான் காய்ச்சாத சட்டம்! இப்போது குடியுரிமைச் சட்டம் என்பது காய்ச்சி கொண்டிருக்கிறார்கள்! 370வது சட்டம் காய்ச்சப்பட்டு விட்டது!

மம்முட்டி பாடல் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை! அதனால் அதை காய்ச்சாத பால் நிலா என்று மறைமுகமாக கவிஞர் குறிப்பிடுகிறார்!

காய்ச்சாத சீம்பால் போல் சுவையான ட்ரிவியா செய்தி : மம்முட்டி சினிமாவில் நடிப்பதற்கு முன் உண்மையிலேயே ஒரு லாயர் ஆக தொழில் செய்தவர்!

அவரை கௌரவிக்கும் விதமாக கவிஞர் ஒருவேளை அப்படி எழுதி இருக்கலாம்!

அதுவும் தவிர பாலை ரொம்ப காய்ச்சினால் பால்கோவா ஆகிவிடும்! ஒருவேளை மம்முட்டிக்கு கதைப்படி சர்க்கரைவியாதி இருந்து அதன் காரணமாகவும் காய்ச்சாத பால் நிலா என்று பாடி இருக்கலாம்! யார் கண்டது!

குறிப்பு :..நம் சொந்தங்கள் வக்கீல்கள் குழுவில் இருப்பதால்...அழகான பதிவு ..அப்புறம் வீட்டுக்காரம்மா வக்கீலுக்கு இந்த பதிவு dedicated ... 
வீடு கட்டுமானம் பற்றி அறிய வேண்டியவை என்ன?

நீங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு எடுத்துத்திருந்தால் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயன்தரும் .

முதலில் உங்களிடம் எவ்வளவு கை இருப்பு இருக்கிறது எவ்வளவு வரை நீங்கள் செலவு செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் பட்ஜெட்டில் உங்களுடைய வீட்டை கட்ட முடியும்.

குறைந்தது 3 பில்டர்களிடம் Quotation பெற்றுக்கொள்வது நல்லது. அந்த Quotation என்னென்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிந்த கட்டிட பொறியாளர்களை கொண்டோ அல்லது அதை நீங்களோ தெளிவாக படித்து பாருங்கள்.

வெறும் பணம் மட்டுமே குறைவாக இருக்கும் என்பதற்காக யாரையும் தேர்தெடுத்து விடாதீர்கள்.

அவர்கள் இதற்கு முன் வீடுகள் கட்டி உள்ளார்களா என்பதை பற்றி விசாரியுங்கள். முடிந்தால் அவர்கள் சமீபத்தில் கட்டி முடித்த வீட்டை ஒருமுறை சென்று பாருங்கள்.

வீட்டுக்காரரிடம் அவருடைய வேலை மற்றும் வீடு கட்டி முடிக்க எடுத்துக்கொண்ட காலம். என பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சிவில் துறையை பொறுத்த வரை இரண்டு வகையான அமைப்புகளில் வீடுகள் கட்ட படுகின்றன.

1 . Load Bearing

இது நமது பழங்கால முறை, அதாவது பெரிய வகை கற்களை கொண்டு அஸ்திவாரம் அமைத்து பின்பு

அதன் மேல் சுவர் எழுப்பி இறுதியில் கூரையில் Concrete அமைப்பது.

இவை இப்பொழுது பெரும்பாலும் கட்ட படுவதில்லை. ஆனால் இது தரமானது அல்ல என பலரும் கூறுவது உண்மையல்ல. நீங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி 3 அடுக்கு மாடி வரை கட்டலாம்.

இது மாதிரியான கட்டிடத்திற்கு பெரிய வகையில் பொறியாளர்கள் தேவை இல்லை. உங்களுக்கு தெரிந்த கொத்தனாரை கொண்டே இது போன்ற வீட்டை கட்டி முடிக்கலாம்.

Framed Structure :

மிக பெரிய வணிக வளாகங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் அனைத்தும் இந்த அமைப்பை பயன்படுத்தி கட்ட படுகின்றன.

இந்த அமைப்பை பயன்படுத்தி நீங்கள் வீடு கட்ட செலவு கொஞ்சம் அதிகம் ஆனாலும் இதன் பளு தாங்கு திறன் மிகவும் அதிகம்.

இந்த அமைப்பை பயன்படுத்தி வீடு கட்ட கண்டிப்பாக பொறியாளர்கள் தேவை. ஏனெனில் இதனை கொஞ்சம் திறன் பட செய்ய வேண்டும்.

வீடு கட்டும் முன்பு உங்களுடைய பகுதியின் தட்ப வெட்ப சூழ்நிலை மண்ணின் தாங்கு திறன் இவை பற்றி நான்கு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் கட்டும் கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு தேவையான Concrete Reinforcement சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

இதனை துல்லியமாக கணக்கிட்டு கொடுக்க பொறியாளர்கள் தேவை படுவார்கள். ஏனெனில் இந்த Concrete Reinforcement என்பது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், இது கூடினாலும் சரி குறைந்தாலும் சரி அது கட்டிடத்தை பாதிக்கும். நீங்கள் பொறியாளர்கள் இல்லாத நபர்களை கொண்டு கட்டினால் 50 வருடம் இருக்க வேண்டிய கட்டிடம் 30 வருடத்திலேயே பழுதாக ஆரம்பித்து விடும்.

கட்டிடத்தின் பாதிப்பு என்பது உடனே நமக்கு தெரிய வராது. குறைந்தது 5 முதல் 10 வருடங்களில் இருந்து நீங்கள் பாதிப்பை உணர முடியும். ஆகவே இந்த மாதிரியான கட்டிடம் கட்டுவதில் சரியான பொறியாளர்களை தேர்தெடுத்து வீடு கட்டுங்கள்.

இதற்கு இரண்டு வகையான வரை படங்கள் தேவை படும்.

1 . Architectural Drawings

வீடு கட்டும் முன்பு architect ஒருவரை அழைத்து வீடு கட்ட போகும் இடம் மேலும் உங்களிடம் அதற்காக உள்ள பட்ஜெட் மேலும் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கூறினால் அவர் அதற்கு தகுந்தாற் போல் உங்களுக்கு வரைபடம் உருவாக்கி தருவார். ஒரு சில பொறியாளர்கள் அவர்களாகவே இந்த வரைபடத்தை வரைந்து கொடுப்பார்கள்.

2. Structral Drawings.

இது உங்களுடைய வீடு எவ்வளவு பளுவை தாங்கும் அதற்கு எவ்வளவு கம்பி எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்ல கூடிய வரைபடம். இதை நீங்கள் ஒரு Structural Consultant மூலமாக பெற்று கொள்ளுங்கள்.


இந்த இரு வகையான வரைபடம் இல்லாமல் வரும் எந்த பொறியாளரையும் நீங்கள் உங்களுடைய வீட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். இந்த இரு வரைபடமும் மிகவும் முக்கியம்...

செவ்வாய், 7 ஜனவரி, 2020

உங்களுக்கு பிடித்த வருமான ஆதாரம் எது?

நீங்கள் கடினமாக உடல் ரீதியாக உழைத்து ஒரு நாள் முழுவதும் 500 ரூபாய் சம்பாதிக்க விரும்புவீர்களா அல்லது ஒரு நாளில் நாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்து எளிமையாக 500 ரூபாய் சம்பாதிக்க விரும்புவீர்களா..

பெரும்பாலும் அனைவரும் எளிமையாகவே சம்பாதிக்க விரும்புவீர்கள். நானும் அப்படித்தான். எளிமையாக எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்து, பல கட்டுரைகளை படித்து தெரிந்துகொண்டேன்.

எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் ஆனால் அதிலேயும் கடினமாகத் தான் உழைக்க வேண்டும் எனவும் அனுபவபட்டு தெரிந்து கொண்டேன்.

சரி..அப்படிப்பட்ட வேலைதான் என்ன என்று உங்களுக்கு தோன்றும். ஆமாம் பிளாக் எழுதுவது, யுடியூபில் வீடியோ பதிவிடுவது, மின்புத்தகம் எழுதுவது, அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வது என ஒரு சில வழிமுறைகள் தான். ஆனால் வீடியோ பார்த்தால் காசு வரும், பிரௌசிங் பண்ணினால் காசு வரும் என எதுக்கும் பயனில்லாத பல வழிகளை தவிர்ப்பது மிக நல்லது.

எனக்கு பிடித்த வருமானம் எதுவென்றால் பிளாக் எழுதுவது, யுடியூப் வீடியோ செய்வது, அப்ளியேட் மார்கெட்டிங் செய்வது, பேஸ்புக்கில் வீடியோ பதிவிடுவது தான். இவற்றைப் பற்றி நான் எனது தளத்தின் எழுதியுள்ளேன்.படித்து அறிந்துகொள்ளுங்கள்
ஒரே ஒருமுறை மட்டும் கடுமையாக உழைத்துவிட்டு (6 மாதங்கள் அல்லது ஓராண்டு) பின்னர் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருப்பதற்காக நேர்மையான வழியில் செய்யக்கூடிய தொழில்கள் எவை?

இருக்கு!

ஆனால், இல்ல!

இந்த வினாவை கேட்கும் பொழுது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. இந்த கதையை யார் எனக்கு சொன்னார்கள் என்பதை கடைசியில் தெரிவிக்கிறேன்.

இத்தாலி நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் பப்லோ மற்றும் ப்ருனோ என இருவர்கள்.

அவர்கள் இருவருக்கும் கடினமாக வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

ஒரு நாள் அந்த கிராமத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது என்னவென்றால், அந்த கிராமத்தில் இருந்து 40 மைல் தொலைவில் ஒரு அருவி உள்ளது. அங்கிருந்து தண்ணீரை கிராமத்திற்கு கொண்டு வந்தால் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து மீளலாம் என முடிவு எடுக்கிறார்கள்.

இந்த வேலையை பப்லோ மற்றும் ப்ருனோ விடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் கொண்டுவரும் தண்ணீருக்கு காசு தருகிறோம் என்று சொல்லி ஒப்படைக்கிறார்கள். அவர்கள் இருவரும் இதற்கு ஒப்பு கொள்கிறார்கள்.

பப்லோ வும் ப்ருனோ வும் ஆளுக்கு இரு வாளிகளை எடுத்து தினமும் 40 மைல் தொலைவிற்கு நடந்து சென்று வந்து கிராமத்திற்கு தண்ணீர் கொடுத்து சம்பாதித்தனர்.

நாட்கள் ஓடின!..

ஒரு நாள் பாப்லோவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையை ப்ருனோவிடம் சொல்கிறான். நாம் இருவரும் சேர்ந்து அருவியில் இருந்து தண்ணீரை கொண்டு வர ஒரு நீண்ட குழாய்களை இணைத்து கிராமத்திற்கு தண்ணீரை கொண்டு வருவோம் என்று ப்ருனோவிடம் சொல்கிறான். இது முட்டாள் தனமான வேலை அப்படி செய்தால் நமக்கு இன்றைய நாள் காசு எதுவும் கிடைக்காது என்று ப்ருனோ பப்லோவிடம் சொல்கிறான். ஆனால், பப்லோ இந்த யோசனையை ப்ருனோவின் உதவி இல்லாமல் செயல்படுத்துகிறான்.

நாட்கள் ஓடின!

ப்ருனோ தினமும் அருவியில் இருந்து தண்ணீரை வாளியில் எடுத்து கொண்டு வரும் வேலை செய்து தினமும் சம்பாதித்தான்.

பப்லோ, அவனது குழாய்களை இணைக்கும் பணியை தொடர்ந்து கொண்டே இருந்தான்.

சில மாதங்களுக்கு பிறகு!

ப்ருனோவின் தண்ணீரை சுமந்து சுமந்து உடல் தொய்வுற்றது. ப்ருனோவால் அந்நாளில் தண்ணீர் எடுத்துவர உடல் ஒத்துழைக்கவில்லை. நடந்து நடந்து கால்களும் பலவீனம் அடைய தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து ப்ருனோவால் தண்ணீரை கிராமத்திற்கு கொண்டுவர முடியவில்லை.

அதே சமயம் பப்லோ தன்னுடைய குழாய் இணைப்பை முடித்து கிராமத்திற்கு தண்ணீரை திறந்து உட்கார்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தான்.

இந்த கதையில் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், இதற்கும் ஐன்ஸ்டீன்-க்கும் என்ன தொடர்பு?

தொடர்பு இருக்கு! ஆனா இல்ல!

இது சிலருக்கு புரியாது. இது புரிந்தால் நீங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.
நான் ஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஏகபோகம்(Monopoly)

போட்டியாளர்களே இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள்

சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும்.

கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.

எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் ஆரம்பிக்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம்.

நீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள் .
சிறியதாக தொடங்குங்கள்

ஆரம்பத்தில் சிறிதாக தொடங்குங்கள்.

சிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள்.

எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.

ஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.

புதிய சிந்தனை

அடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.
அடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.
நாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

இது வரை யாரும் செய்திராத ஒரு விடயத்தை செய்யுங்கள்.
ஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது(You cannot step into the same river twice).

கடைசியாக இருங்கள்

ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது.

கூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது.

எனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு தொடங்குங்கள்...
புதிதாகத் தொழில் தொடங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?

காலத்திற்கேற்ற தொழிலாகவும், நல்ல எதிர்காலமும் உள்ள தொழிலையும் தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

20 சதவீதத்திற்கும் குறைவான இலாபம் உள்ள தொழிலை தவிர்ப்பது நல்லது.

தினமும் 16 மணி நேரம் வரை தொழிலில் ஈடுபடுங்கள்.

லாபம் வந்தால் தான் தொழிலில் தொடரமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொரு முடிவிலும் இருக்கட்டும்.

தொழில் சம்பந்த பட்ட விஷயங்களை ஒரு அனுபவமிக்க mentor உடன் பகிர பழகவும்.

தொழில் சம்பந்த பட்ட ஞானத்தை update செய்து கொண்டே இருப்பது அவசியம்.

முதல் மூன்று வருடங்கள் லாபத்தை எடுப்பதை தவிர்த்தால் working capital தேவை மற்றும் அதற்கான
வட்டி செலவு குறைந்தால் தொழிலின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.

கடும் உழைப்பு, நேர்மை, வாக்கு தவறாமை, புத்திசாலித்தனம் போன்றவை உங்கள் தொழிலை மிக சிறப்பாக்கும்.

திங்கள், 6 ஜனவரி, 2020

அன்பா - பணமா ?
-----------------------------------
பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே, அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும் .

அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அப்படிச் சொன்னார்.

நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றை தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கிற மோதிரம், செயின் போன்றவற்றை கழட்டிக் கொள்கிறோமே எதனால் ?

பணமதிப்பை கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால் - படுக்க , உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் , தலையணையும்தான்.

தங்கத்தால் என்ன பயன்?

ஆனால், தங்கத்திற்கு இருக்கும்  பண மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் இந்த அன்பு அல்லோகலப் படுவதைக் கவனிக்கலாம்.

கல்யாண வீட்டுக்காரர்கள், கல்யாணத்திற்கு வந்திருக்கிற வசதி குறைந்த உறவினரை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே, தூரத்தில் வருகிற வசதியானவர் முகம் Close-up பில் தெரிவதும், அருகில் இருக்கிறவரின் முகம் Fade Out ஆகி மறைவதையும் எது தீர்மானிக்கிறது  ?


அன்பா ?   இல்லை  பணமா ? நடைமுறையில் பணம்தான்  அதைத்  தீர்மானிக்கின்றது. சமுக மாற்றத்தில் பணத்திற்குக் கிடைக்கும் மதிப்பு  பல நேரங்களில் நல் மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது வருத்தமான உண்மை.

பணத்தை வைத்து எடை போடும் மனிதர்களுக்கு எங்கே தெரிய போகிறது

உறவுகளின் அருமை ....


ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இன்று பிறந்த நாள் கொண்டாடிய அருமை தம்பி .வழக்கறிஞர் கோவை கார்த்திக் ,அருமை தங்கை பேராசிரியர் நீலவேணி ரமேஷ்  ,என் அருமை மாப்பிள்ளை செந்தில்குமார் கண்ணுசாமி  ..மார்கழி பனியானாலும் வாழ்த்து அடைமழையில்  நனைந்துவிட்டார்கள் ..என்றும் வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

புதன், 1 ஜனவரி, 2020

உடுமலைபேட்டை சுற்றி இருக்கும் தொல்லியல் சார்ந்த ..வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்
1.கொங்கல்நகரம்
2.குடிமங்கலம்
3. கொங்கல்நகரம்
 4. குடிமங்கலம்
5.கோட்டமங்கலம்
 6.கடத்தூர்
 7.வஞ்சி புரம்
 8.நாட்டுக்கல்பாளையம்
 9.காரத்தொழுவு
 10.கண்ணாடி ப்புத்தூர்
 11.குமணலிங்கம்
 12.ஐவர்மலை
 13.மதகடிபுதூர்
14.கல்லாபுரம்
 15.துவரமலை
16.ஐம்புக்கல்மலை
17.தளிஞ்சி
 18.தளி
 19.திருமூர்த்தி மலை
 20.ஜிலேபநாயக்கன்பாளையம்
21.மஞ்சநாயக்கனூர்
22.துங்காவி ..