புதன், 12 ஆகஸ்ட், 2020

 கேள்வி :  மிகவும் நம்பியது கையை விட்டுப் போய்விடுகிறது. இப்படியே நடப்பதால் சலிப்பு ஏற்படுகிறது. இந்த மனநிலையில் இருந்து எவ்வாறு வெளிவருவது?


என் பதில் :..

எப்பொழுது நாம் நம்பும் ஒன்று நம்மை விட்டு விலகுகிறதோ, அப்பொழுது அதன் மீது ஒரு தவறான பிம்பம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால்மனிதர்கள் தாங்கள் விரும்பும் ஒன்று எப்போதும் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதன் காரணமாகவே நாம் அதனை இழக்கும் பொழுது நமக்குள் சலிப்பு என்ற மனப்பாங்கு ஒட்டிக்கொள்கிறது.


அதனால், எதிர்காலத்தில் வரும் மற்ற விடயங்கள் மீதும் நமக்கு சரியான நாட்டம் ஏற்படுவதில்லை. இதுவும் அதே போன்ற மனநிலையை நமக்கு தந்து விடுமோ என்ற பயத்தை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்கிறோம். இவை அனைத்துமே நமது எண்ணங்கள் சார்ந்த ஒன்று. இந்த அழகான எண்ணங்கள் சலிப்பாக மாறும் பொழுது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


இதிலிருந்து வெளிவர, நீங்கள் யார் மனதிலும்/ எதற்காகவும் தவறான எண்ணமாக மாறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்..


நீங்கள் இதுவரையில் எத்தனை பேரைக் காயப்படுத்தி இருப்பீர்கள்?


எத்தனை பேரை மதிக்காமல் சென்றிருப்பீர்கள்?


எத்தனை பேர் மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருப்பீர்கள்?


எத்தனை பேர் மீது அதி பயங்கர கோபத்தில் இருந்திருப்பீர்கள்?


நிச்சயமாக நாம் அனைவருமே ஏதோ ஒரு தருணத்தில், யார்மீதேனும் தவறான கருத்துக்களை வைத்துக்கொண்டு, அவர்களைப் பற்றிய எண்ணங்களை தவறாக நமக்குள் சித்தரித்துக்கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்போம். உண்மையிலேயே அவர்கள் தான் நாம் அன்பு செலுத்த வேண்டியவர்கள்.


ஒரு காலத்தில் அவர்களுடன் நல்ல உறவில் சிறப்பான நினைவுகளுடன் இருந்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு காரணமாக அது தவறான நினைவுகளாக மாறி இருக்கும் அல்லது மாற்றி இருப்பீர்கள். தற்பொழுது கிடைத்த அந்த தவறான எண்ணங்களைக் கொண்டு, இதற்கு முன்னர் அவர்களால் நீங்கள் பெற்று மகிழ்ச்சியான நினைவுகளை முடக்க முயற்சிக்காதீர்கள்.


அந்தப் பழைய அன்பான நினைவுகளை மனதில் கொண்டு, தற்போதுள்ள கசப்பான நினைவுகளை மூழ்கடிக்கச் செய்யலாமே.


இங்கு நாம் யாரும் யாருடைய வாழ்விலும் அதிபயங்கர மாற்றங்களை கொண்டு வரப் போவதில்லை. நமக்கான ஒன்றை நிச்சயமாக நாம் தான் செய்து கொள்ளப் போகிறோம். எனவே தேவையில்லாமல் பிறரின் மீது எதிர்பார்ப்புகளை வைத்து, ஏமாற்ற உணர்வினை மனதிற்கொண்டு காயப்படுவதை விட்டுவிடுவோம்.


உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்திய அந்த கசப்பான நினைவுகளை, இனிமையாக மாற்ற நிச்சயமாக ஏதேனும் வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


இதை நான் அந்த சலிப்பு ஏற்படுத்திய விடயத்தின் நன்மைக்காக கூறுகிறேன் என்பதை விட, நீங்கள் உங்களுடைய நினைவுகளை இனிமையாக மாற்றிக் கொள்ளும் பொருட்டு, அது உங்களுக்கான சிறப்பான பாதைகளை கண்டு கொள்ள உதவி புரியும்…


யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும், நான் எனக்கு நல்லவனாக இருக்கிறேன் என்பதற்கும், நான் யார் மனதிலும் கசப்பான நினைவுகளாக இல்லை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.


நான் யாருடைய வாழ்விலும் கசப்பான நினைவுகளாக இருக்க விரும்பவில்ல.


I don't want to become your bad memory 😊😊.


(எதுவும் நிரந்தரமற்றது என்பதை கருத்தில் கொண்டு, எதிர்பார்ப்புகளை சற்று குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். நீங்களும் பிறருடைய மனதில் இனிமையான எண்ணங்களாக மாறலாம்)


நன்றி ..



கேள்வி : படிக்கும் பிள்ளைகளின் 2020 வருடத்தின் நிலை என்ன?

என் பதில் :..

படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருடம் ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்துள்ளது..

தனக்கு யார் வகுப்பாசிரியர் என தெரியாமல் வாட்ஸ் ஆப் குட்மார்னிங் தினம் போடும் தனியார் பள்ளி மாணவர்கள்

.தான் எப்படி தேர்ச்சி பெற்றேன் என்ற குழப்பத்தில் பல அரசு பள்ளி மாணவர்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வில் பரிச்சை இல்லாததால் மாணவிகளை விட முதன்முறையாக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி!.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு வைத்து ,முதல் காலாண்டை முடித்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழியாக கல்வி அரசு பள்ளிகளில் பாடம் என தொடங்கி உள்ளது.இதில் எத்தனை மாணாக்கர்கள் பார்த்தனர் என்பது தெரியாது.

தினம் புத்தகப்பை, சாப்பாடு டப்பா, தண்ணீர் குடுவையென நொந்த குழந்தைகள், தற்போது எப்படா பள்ளிக்கு செல்ல முடியும் என ஏக்கத்துடன் தெருவை வெறித்து பார்த்து கொண்டுள்ளார்கள், காரணம் அம்மாக்களின் தொல்லை அதிகம் என போராடும் நிலையில் குழந்தைகள்.

Pre KG,LKG,UKG குழந்தைகள் நேரடியாக ஒன்றாம் வகுப்பில் கையை வளைத்து மற்றோரு காதை தொட்டால் சேர்க்கை என்ற நிலை.

இவ்வளவு விடுமுறை இருந்தும் வெளியே சென்று விளையாட முடியாமல் தவிக்கும் குழந்தைகள்.

நீட் தேவையா, இல்லையா என்பது மாறி இந்தாண்டு அது நடக்குமா,நடக்காதா என்ற குழப்பம்.

தனிக்குடித்தனம் நடத்தும் வேலைக்கு போகும் பெற்றோரில் யார் விடுப்பெடுத்து குழந்தைகளை கவனிப்பது என தினம் சண்டை.
இறுக்கமான மனநிலையில் பதின்ம வயது பள்ளி மாணவர்கள்.

வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க நினைத்த மாணவர்கள் இந்த வருடம் போகலாமா,வேண்டாமா என்ற குழப்பம்.

அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியேதும் இன்றி இருந்தாலும், சம்பளம் கிடைத்தாலும் இந்த விடுப்பு பயணற்றதாகி விட்டதே என வருத்தம்.மேலும் இந்த கல்வி ஆண்டு 2021 ஜுன் வரை தொடர வாய்ப்பு அதிகம்.ஆசியர்களுக்கு ஐயோ வடை (ஆண்டு விடுமுறை )போச்சே என்ற நிலை.

கைபேசியை பார்த்து பார்த்து கண்கள் பூத்துப்போச்சு என மாணவர்கள் புலம்ப தொடங்கி விட்டனர்.

கல்லூரி , பள்ளி பஸ்கள் ஓடாமலே பாதி கல்வி ஆண்டு சென்ற நிலையில் பள்ளி,கல்லூரி வாழ்க்கை கைபேசியில் ஒருசாராருக்கும், ஒரு வேலை சாப்பாடு பள்ளியில் உறுதி என்பது மாறி கிராமத்தில் சரியான உணவின்றி சுற்றும் மாணவர்கள்.


கலைக்கல்லூரியில் அடிக்கடி நடைபெறும் தேதி குறிப்பிடாமல் மூடுவது IDC (Indefinitely Closed) பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பிரபலமாகி போச்சு.


விடியலை நோக்கி மாணவர்கள்!.


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

 ஆவலப்பன் பட்டி ஜமீன்..

முல்லை ஆதவன் நாட்குறிப்பு : 2020-08-10

================================

1976 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆவலப்பன் பட்டி ஜமீன் பற்றி நான் கேள்விப்பட்டேன்

அந்த ஜமீனின் அரசியாக இருந்த தமயந்தி அம்மா வாழ்ந்த வீடு அது – அங்கே நான் சென்றிருந்த போது தான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன் – அங்கே செல்லும் போது அது அப்படியான ஒரு வீடு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை

.

அது ஆறு தொட்டிக்கட்டு கொண்டிருந்த பெரிய வீடு -பெரிய பெரிய கலை வேலைப்பாடு கொண்ட தூண்கள் – பெரிய சுற்றுச் சுவர்கள் என்றெல்லாம் இருந்தன ஆனால் சில ஆண்டுகளிலேயே வாரிசுகளின் பாகப் பிரிவினைகளால் சுருங்கிப்போய் விட்டது- சில பகுதிகள் வேறு கைகள் மாறி அழிக்கப்பட்டும் போய் விட்டன . அவ்வப்போது தமயந்தி இராணி பற்றிய சில வழக்காற்றுச் செய்திகள் – சில பாடல்கள் – சில நிகழ்ச்சிகள் என்று கேள்விப்பட்டதை அவ்வப்போது தொகுத்து வைத்திருக்கிறேன். வரலாற்று ஆதாரங்களாக பெரிய அளவில் ஏதுமில்லை

ஆனாலும் ஆவலப்பன் பட்டி ஜமீன் பற்றிய வரலாறு தெரிந்துகொள்ள தேடிக்கொண்டிருந்தேன் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1982 வாக்கில் மெக்கன்சி ஆவணங்களில் சில செய்திகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது. தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு செய்த ஆவணத்தொகுப்பில் இருந்து வம்சாவளி செய்திகள் அறிய முடிந்தது. அவற்றின் வழியான வரலாற்று உண்மைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு பின்னணி நிழலை வடிவமைத்துக் கொள்ளலாம்

==========================

மெக்கன்சி ஆவணப்படுத்திய கைபியத்துகளின் அடைப்படையில் ஆவலப்பம்பட்டி ஜமீன் அரசர்கள் 1318 ஆம் ஆண்டு தொடங்கி 1745 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 15 அரசர்கள் 397 ஆண்டுகள் பட்டத்தில் இருந்திருக்கிறார்கள் -

=============================================

என்னுடைய தொடர் ஆய்வின் செல்வழியில் 1745 முதல் 1835 வரை ஏறத்தாழ நான்கு அரசர்கள் பட்டம் தரித்திருக்கிறார்கள் , பெரிய வல்லகொண்டம நாயக்கர், சொதேய வல்லகொண்டமநாயக்கர், சின்ன வல்லகொண்டம நாயக்கர், என்பவை அவர்கள் பெயர்கள் என்று தெரிகிறது -1835 ஆம் ஆண்டில் முத்துவல்லமகொண்டநாய்க்கர் பட்டம் ஏற்கிறார் அவருடைய மனைவி வெள்ளையம்மா - முத்துவல்லமகொண்டம நாய்க்கர் இளமையில் இறந்துபோகிறார்- அதனால் வெள்ளையம்மாவே தன் மகன் வல்லகொண்டம நாய்க்கர் வயதுக்கு வரும் வரை அதிகாரத்தில் இருக்கிறார் - பிறகு வல்லமகொண்டமநாயக்கர் ஆட்சிக்கு வருகிறார் - அவருடைய மனைவி இராஜம்மா - இவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை - ஒரே மகள் அவர் பெயர் தமயந்தி

அவரை மரிகந்தை ஊரைச் சேர்ந்த நாராயணசாமி என்பவ்ருக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார்கள் - வல்லகொண்டாபுரம் என்னும் ஊரையும் உருவாக்கித் தருகிறார் வல்லகொண்டம நாயக்கர் = அந்த ஊரில் இருந்தகொண்டு ( தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆவலப்பம்பட்டி ஜமீனை நிர்வாகம் செய்கிறார் தமயந்தி-

தமயந்தியின் தொடர் வாரிசுகள் பற்றிய தகவல்களும் ஓரளவு சேகரித்திருக்கிறேன் -----------------

...................................

தமயந்தி இராணி பற்றிய செய்திகளைப் பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்

ஆவலப்பன் பட்டி ஜமீன் வம்சாவளி


01 சொதேய நாய்க்கர்

= 49 -ஆண்டுகள் ஆட்சி

02 மேற்படியார் மகன் -குமார சொதேய நாயக்கர்

= 38 - ஆண்டுகள் ஆட்சி

03 மேற்படியார் மகன் – பெரிய சோதேய நாயக்கர்

= 36 - ஆண்டுகள் ஆட்சி

04 மேற்படியார் மகன் – ஆவல சோதேய நாயக்கர்

= 29 - ஆண்டுகள் ஆட்சி

05 மேற்படியார் மகன் – பங்காரு சோதேய நாயக்கர்

= 24 - ஆண்டுகள் ஆட்சி

06 மேற்படியார் மகன் – ஆவலப்ப நாயக்கர்

= 30 - ஆண்டுகள் ஆட்சி

07 மேற்படியார் மகன் – சோதேய நாயக்கர்

= 19 - ஆண்டுகள் ஆட்சி

08 மேற்படியார் தம்பி – குமார சோதேய நாயக்கர்

= 23 - ஆண்டுகள் ஆட்சி

09 மேற்படியார் மகன் – ராம சோதேய நாயக்கர்

= 35 - ஆண்டுகள் ஆட்சி

10 மேற்படியார் மகன் – நாகைய சோதேய நாயக்கர்

= 32 - ஆண்டுகள் ஆட்சி

11 மேற்படியார் மகன் – சின்ன சோதேய நாயக்கர்

= 27- ஆண்டுகள் ஆட்சி

12 மேற்படியார் மகன் – வேலாயுத சோதேய

நாயக்கர் = 18 - ஆண்டுகள் ஆட்சி

13 மேற்படியார் மகன் – குமாரபட்ட சோதேய

நாயக்கர் = 15 - ஆண்டுகள் ஆட்சி

14 மேற்படியார் மகன் – ராம சோதேய நாயக்கர்

= 22 - ஆண்டுகள் ஆட்சி

15 .மேற்படியார் தம்பி – ஆவலப்ப நாயக்கர்

மெகன்சி ஆவணங்கள் கைபியத்து மற்றும் அடைப்படையில் தமிழ்நாடு தொல்பொருளியல் ஆய்வுத்துறை வெளியிட்ட தகவல்கள் இருந்து பெறப்பட்ட விவரம்

=======================================


ஆவலம்பட்டி ஜமீன்தாரருக்கு அளிக்கப்பட்ட விருதுகள்

======================================

பல்லக்கு உபசாமரம் சுறுட்டி, சூரியபாண அனுமந்த டால், மகர டால், கெருட டால், பஞ்சவர்ண டால், சிவசங்கர டால், சந்திரகாவி டால், பச்சகுடை, ரணமகணம், ரணபாஷிக்கம், நிகளம், சாமதுரோகர வெண்டையம், வீரகட்டாமணி, வீர வெண்டையம், கொத்து சறப்பணி, முத்தொட்டி, பச்சோசொட்டி, கலிகுதுறாயி, ஆனைமேலம்பாரி, ஒட்டகை மேல் பேரிகை, குதிரைமேல் டப்பா, யெருதுமேல் தம்மட்டம் இவை முதலான விருதுகள் ( பிரிதுகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது )

================================

மெக்கன்சி பற்றிய ஒரு குறிப்பு

காலின் மெக்கன்சி ( 1754-1821 ) ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றியவர் = இந்தியாவிற்கு வந்து 1777 முதல் பதினைந்து ஆண்டுகள் இராணுவப் பணியில் இருந்தார். கோயமுத்தூர், திண்டுக்கல் பகுதிகளில் திப்பு சுல்தானுக்கு எதிரான போர்களில் ஈடுபட்டிருந்தார் அந்தக் காலகட்டத்தில் இந்த நிலபப்குதிகளின் வரைபடங்களையும் மக்கள் வாழ்வுச்சுழல்களையும் பதிவு செய்ய முயன்றார் பின்னர் அதுவே அவருடைய தனி ஆர்வமிக்க செயற்பணியாக அமைந்துவிட்டது 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.

தொடக்கத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயங்கள், நம்பிக்கைகள் செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை ஆயிரக்கணக்கான தகவலாளிகளின் செவி வழிச் செய்திகள் மூலமும் உள்ளூர்களில் கிடைக்கும் ஆவணங்கள் மூலமும் தொகுத்தார் அந்தக் கால கட்டத்தில் உணரப்பட்டதை விடவும் அவருடைய பணியின் சிறப்பு பிற்காலத்தில் வெகுவாக உணரப்பட்டது

அவர் தொகுத்த பல்லாயிரக்கணக்கான் ஆவணங்கள். செவிவழிக் குறிப்புகள், கல்வெட்டுக்கள் . சுவடிகள் ஆகியவை அவர் மறைவுக்குப் பிறகு அரசாஙகத்தால் கையகப்படுத்தப்பட்டன

------------------------------------------------------------------

மெக்கன்சி ஆவணங்கள் சென்னை கீழ்த்திசைச்சுவடிகள் நிலையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் டி வி மகாலிங்கம் அவற்றின் சில பகுதிகளை ஆய்வு செய்து வெளியிட்டார் – தொல்பொருளியல் துறை சார்பில் அறிஞர் நாகசாமி சில நூல்களை வெளியிட்டார் தொடர்ந்து பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்

அவருடைய ஆவணங்களுள் பாளையப்பட்டு நிர்வாக அமைப்பு வரலாறு பற்றிய பல செய்திகள் மிக முக்கியமானவை

பாளையங்களின் வரலாறு பற்றி போதுமான எழுத்துவடிவ ஆவணங்கள் இல்லாத நிலையில் பாளையக்காரரகளின் குடும்ப வரலாறு என்று அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், பாளையக்காரர்களிடம் வாய்வழித் தகவல்களை அவர் பதிவு செய்திருந்தார் 

 கேள்வி : வாழ்க்கையில் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

என் பதில் :.


இது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு…இதை பொது படுத்துவதை நான் விரும்பவில்லை.


நியாமாகவும் நேர்மையாக இருப்பவர்கள் விளம்பர படுத்தி கொள்வதில்லை, எவன் ஒருத்தன் அதை அடிக்கடி நான் அப்படி பட்டவன் என்று சொல்கிறானோ அவன் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.

பொதுவாக திருட்டுத்தனம், ஏமாற்று தனம் செய்பவன், நம்மிடம் அவ்வாறு செய்ய மாட்டான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

உங்களிடம் மற்றவர்களை பற்றி புறணி பேசுறவன் உங்களை பற்றியும் பேசுவான்.

நண்பர்களுக்கு உதவி செய்யும் போது, அதை நட்புக்காக மட்டும் செய்ய வேண்டும். அதில் லாபம் வைத்தால் அவ்வளவு தான். அவன் தான் உங்கள் அடுத்த எதிரி.

உங்களுக்காக மட்டும் உதவி செய்பவன், வெளியில் சொல்ல மாட்டான், அப்படி சொல்பவன் பொய் சொல்கிறான்.

எவ்வளவு இயல்பாக நடித்தாலும், எதோ ஒரு இடத்தில் போலி தனம் வெளிப்படும், அதை கண்டுபிடித்த பிறகு விலகி இருப்பது நமக்கு நல்லது.

யாரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கூடி இருந்தாலும் கொஞ்சம் விலகி இருக்க கற்று கொள்ள வேண்டும்….

காட்டில் மான் கூட்டமாக இருந்தாலும் எப்பொழுதும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருக்கும், ஒரு அசைவிற்கும் கூட ஓட தயாரா இருக்கும்.

ஒரு ரௌடி யாரையும் நம்ப மாட்டான், எப்போது யாரால் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரியாது.

ஆனால், நாம் கொஞ்சம் அசட்டையாக இருப்போம்…நம் நண்பன் தானே, நம் சொந்தக்காரன் தானே, நம் தம்பி தானே என்று…

எப்போதும் Survival Instinct அவசியம்…

Detached attachment is perhaps the highest form of diplomacy...

பாசமாக இருப்பதையும், அன்பாக இருப்பதையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். பாசத்தில் ஒரு பயமும், சார்ந்து இருக்கும் மன நிலையும் ஏற்படும். அன்பில் அப்படி எதுவமே இல்லை.

நன்றி ...
தளி எத்தலப்ப மன்னர்  1750 முதல்  1800 வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த  பாளையக்காரர். ஆங்கிலேயரை எதிர்த்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்று இவரும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர். 1801 ஏப்ரல் 23 இல் ஆண்ட்ரே கேதீசு எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட  இந்த பாளையத்துக்காரப் போர் வீரனின் நினைவு கூறும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  கடந்த 2017 ல் மே 19 அன்று உடுமலையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் நமது மண்ணின் மைந்தரும் கால்நடை துறை அமைச்சரும் கலந்து கொண்ட நிகழ்வில்  தளி எத்தலப்ப மன்னர் குறித்து விரிவான விளக்கமான  சமூகப்போராட்ட நூல்  வெளியிடப்பெற்றது.  அன்று   அமைச்சர் பெருமக்களும், பாராளுமன்ற உறுப்பினரும்  தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வாக்குறுதியும் வழங்கினர். ஆனால் இன்றுவரை எந்தவிதமான செயல்பாடுகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆகவே விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவு கூறும் இந்நன்நாளில்  அவருக்காக  உத்தரவிட்ட மணி மண்டப அறிவிப்பை வெறும் அறிவிப்பாக இல்லாமல் இந்த பகுதி நடைமுறைப்படுத்த ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

 

சற்றென்று மாறுது வானிலை ....

மழை ......

எதைப் பேச வேண்டுமோ? அதைப் பற்றி மட்டும் நாம் என்றைக்கும் பேசவே மாட்டோம். எளிய தமிழ்ப் பிள்ளைகளின் தலைவராகத் தமிழக முதல்வராக தமிழர்களின் அண்ணன் விவசாயி பதவியேற்று சீரும் சிறப்புமும் ஆக ஆட்சி நடத்தத் தொடங்கினாரோ அன்று முதல் "நீர் ராசி" தமிழகத்தை சூழ்ந்து திக்குமுக்காட வைத்துக் கொண்டே இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் மழை இருக்காது.

அப்படியே பெய்தாலும் தூவானம் போலப் பெய்து வீட்டில் வடையும் காரச் சட்னியும் செய்து சாப்பிட வைக்கும். அதே சமயத்தில் பக்கத்து மாநிலத்தில் அணைகள் கொள்ளளவு நிரம்பி உபரி நீர் திறக்கப்படும். அப்படியே இங்கு வந்து சேர மனசெல்லாம் மத்தாப்பு. வயலெல்லாம் பூந்தோப்பு என்று கவிதை பாடத் தோன்றும். நமது மானமிகு அமைச்சர்கள் அணைக்கட்டில் மேலேறி நின்று பூத்தூவி வரவேற்ற போஸ்களை தமிழ்ப் பத்திரிக்கைகள் அழகாக நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.


கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையின் காரணமாக ஒரு பக்கம் ஆந்திரா மறுபக்கம் கர்நாடகா என்று இரட்டை போனஸ் எளிய தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளது. காரணம் நம் விவசாயி ஆட்சியில் இருப்பதால் தானே?

கர்நாடகா பக்கம் இருந்து இதே போல அடிக்கடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தமிழகப் பொதுப்பணித்துறை சுட்ட பணமெல்லாம் பெரிதாக வெளியே தெரியவில்லை.

காரணம் வரும் தண்ணீரே பாதையை அமைத்துக் கொண்டு பயணித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்து விடுகின்றது. ஆனால் இப்போது ஆந்திராவிலிருந்து வந்து கொண்டிருக்கும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தட்டுத்தடுமாறி புல் பூண்டு செடி கொடி மரம் தடுப்பு மணல் பள்ளம் மேடு என்று தூர்வாரப்படாமல் அதாவது பல பத்து வருடங்கள் கண்டு கொள்ளாமல் இருந்த காரணத்தால் "ஏன்டா எங்களைப் போட்டு இப்படி இம்சிக்கிறீர்கள்?" என்று சொல்லாமல் தண்ணீர் அரசி பயணித்து வர இரண்டு நாட்கள் ஆகியுள்ளது.

அதாவது எட்டு மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய நீர் பாடுபட்டு கண்ணீர் விட்டு வருவதை எளிய தமிழ்ப்பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

https://youtu.be/WYussZgQjGg

சனி, 8 ஆகஸ்ட், 2020

 கோவை ...திருப்பூர் மாவட்டம் இராஜகம்பள சொந்தங்கள்...

நமது அருமைச் சொந்தங்கள் வசிக்கும் ஊர்களின் விவரங்கள்:

1.உடுமலைபேட்டை 

2.பெரிய கோட்டை

3.ராஜாவூர்

4.ஆவல் குட்டை

5.மடத்துக்குளம்

6.கோழிக்கோடு அம்மாபட்டி

7.கண்ணாடிப் புத்தூர்

8.துங்காவி

9.ராமேகவுண்டன்புதூர்

10.பொன்னேரி

11.காங்கேயம் பாளையம்

12.வெனசபட்டி

13.பொட்டையம்பாளையம்

14.லிங்கம்மாவூர்

15.S.அம்மாபட்டி

16.பெதப்பம்பட்டி

17.சனுப்பட்டி

18.ஆலாமரத்தூர்

19.கொங்கல்நகரம்

20.அடிவள்ளி

21.வல்லக்குண்டாபுரம்

22.மரிக்கந்தை

23.ஏ.நாகூர்

24.கரப்பாடி

25.ஜோத்தம்பட்டி

26.மெட்ராத்திசி. 

27.நாகூர்,

28.தீபாலபட்டி, 

29.ஜிலேப்பநாய்க்கன் பாளையம்,

 30.கணியூர், 

31.துங்காவி மலையாண்டிபட்டிணம்

32.சின்னபாப்பனூத்து

33.பெரியபாப்பனூத்து

34.சாளையூர்

35.கொடிங்கியம்

36.எரிசனம்பட்டி

37.பில்லவா நாயக்கன் சாலையூர்

38.புங்கமுத்தூர்

39.வல்லக்குண்டாபுரம்

40.பொன்னாலம்மன்சோலை

41.தளி

42.ஜல்லிபட்டி

43.போடிபட்டி

44.சிஞ்சுவாடி

45.குண்டலபட்டி

46.கூழநாயக்கன்பட்டி

47.திருமூர்த்தி நகர்

48.உடுக்கம்பாளையம்

49.சின்னபொம்மன்சாளை

50.விளாமரத்துப்பட்டி

51.மூலனூர்

52பூவலபருத்தி,

53.கோட்டூர்

54.கம்பாலபட்டி

55.மஞ்சநாமக்கனூர்

56.கரியாஞ்செட்டிபாளையம்

57.ஆனைமலை

58.தென்சங்கம்பாளையம்

59.கோவில் பாளையம்

60.ஒத்தக்கால் மண்டபம்

61.கள்ளப்பாளையம்

62.கலங்கல்

63.பள்ளபாளையம்

64.நரசிம்ம நாயக்கன்பாளையம்

65.தாமரைக் குளம்

66.ஈச்சனாரி

67.வெள்ளலூர்

68.சூலூர்

69.கலங்கல்

70.வங்கபாளையம்

71.அம்பராம்பாளையம்(சுங்கம்)

72.ஆவல் குட்டை,

73.வெஞ்சமடை, 

74.S.V.புரம், 

75.போடிபட்டி, 

76.விருகல்பட்டி. 

77.சோமவாரபட்டி, 

78.பாப்பா குளம், 

79.பாப்பம்பட்டி, 

80.கொழுமம், 

81.மைவாடி, 

82.பாலப்பம்பட்டி,

 83.மடத்துக்குளம்,

84. S. மூலப்பட்டி 

85.சுண்டக்காம்பாளையம்,

86.நரிச்சனம்பட்டி,

87.கள்ளமடை (வெள்ளகோவில் அருகில் )

ஊரின் பெயர்கள் இரண்டு முறை வந்தால் பின்னர் சரிபார்த்து எடுத்துக்கொள்ளலாம் ...\



வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

 கேள்வி : வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்று ரசித்த தருணம் எது?


என் பதில் :...

சமீபத்தில் ஒரு நபருடன் பேசும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பேசுகிறோம் என்று நினைக்கிறேன்.


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் எங்களுடைய உரையாடல் தொடர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் ஏதோ ஒரு நிறைவு ஏற்பட்டது. ஒரு கன உணர்விலேயே இருந்த என்னுடைய மனம், இந்த உரையாடலுக்கு பிறகு இலகுவானது.


மனிதர்களை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எப்படியெல்லாம் மாற்றுகிறது.

மனிதனுடைய மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இடம் பொருள் ஏவலுக்கு தகுந்தார் போல, நிச்சயம் அது மாறவே செய்கிறது.

இன்று எனக்கு உயிராய் இருப்பது, நாளை வேண்டாததாய் மாறலாம். நான் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கியது, சில காலம் கழித்து தேவைப்படலாம்.

இன்று என் மனதை ஆட்கொண்டிருப்பவர் மனதை, வேறு யாரேனு எதிர்காலத்தில் கவரலாம். அவர் நம்மை விட முக்கியத்துவம் வாய்ந்தவராக மாறலாம்.

சூழ்நிலைகள்.


தேவைகள்.


சூழ்நிலைகளுக்கேற்ற தேவைகள்.


சூழ்நிலைகளுக்கேற்ற, தேவைகளுக்கேற்று முடிவுகள்.


முடிவுகளின் விளைவுகள்.


விளைவுகளின் பாதிப்புகள்.


பாதிப்புகளின் உணர்வுகள்.


இவை அனைத்தும் தான், ஒரு மனிதனின் இன்ப துன்பங்களை நிர்ணயம் செய்கிறது.


சூழ்நிலைகளைக் காரணம் காட்டி பிரிவு, முறிவு, கோபம், வெறுத்தல் என அனைத்தையும் ஒரு மனிதன் நமக்கு பரிசாக அளித்தாலும், அந்த உண்மையான உணர்வுகளுக்குத் தெரியும், நம் நினைவுகள் என்றும் கவிதைகள் தான் என்று😊😊😊…


ஒரு விடயம் வேண்டாம் என்பதற்கு தான் காரணம் தேவையேயன்றி, வேண்டும் என்பதற்கு காரணம் தேவையில்லை.


அது சூழ்நிலைகள், தேவைகள், முடிவுகள், விளைவுகள், பாதிப்புகள், உணர்வுகள் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருக்குமாயின், நிச்சயம் அதை நாம் அடைய முற்படுவோம்…

ஆனால் இவ்வுலகில் யாரும், இந்நிலைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

இந்த பதிவின் ஆழம் உங்களுக்கு புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதை நான் உணர பல அனுபவங்களைக் கடந்து வந்துள்ளேன்.

(நானும் என்றேனும் உங்கள் நினைவுகளாய் மாறலாம். அன்று எழுதுங்கள் எனக்கு கவிதைகள்)

இப்படிக்கு

#####நினைவுகளின் கவிதைகள்😊..

இந்த புரிதல் எனக்கு ஏற்பட்டதை எண்ணி, இத்தருணம் வாழ்க்கையை ரசிக்கிறேன்.. 




கொங்கல் நகரம் ....

உடுமலை பகுதியில் சேதமாகும் வரலாற்று சின்னங்கள் : அகழ்வாய்வு செய்து பாதுகாக்க எதிர்பார்ப்பு...

உடுமலை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்கள் விழிப்புணர்வு இல்லாமல், மக்களால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தொல்பொருள் துறையினர் அகழ்வாய்வு செய்து, பெருங்கற்கால சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை மற்றும் தொல்பொருள் துறையினர் நடத்திய அகழாய்வில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்திட்டைகள், பானை ஓடுகள், முதுமக்கள் தாழி ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால வரலாற்றை கண்டறிவதில், இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற சின்னங்கள் அரிதாகவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், உடுமலை அருகே கொங்கல் நகரம் பகுதியில், பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்கள் விழிப்புணர்வு இல்லாமல் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராம மக்களால் மசராயப் பெருமாள் என அழைக்கப்படும் கோவில் அருகில் நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.இவ்வாறு, நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் பெரியளவில் நடந்த போரில் இறந்தவர்களுக்காக ஒரே இடத்தில் அமைக்கப்படுவதுண்டு. கல்திட்டைகளின் வரலாறு தெரியாமல் படிப்படியாக சிதைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நான்கு பகுதிகளிலும் இருக்கும் பெரியளவிலான கற்கள் உடைக்கப்பட்டு, மசராயன் கோவில் சுற்றுச்சுவருக்கும், இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களால் "பாண்டி வீடு' என அழைக்கப்படும் இந்த கல் திட்டைகள், அதன் முக்கியத்துவம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. கல்திட்டைகளில் புதைக்கப்படும் பழங்கால மண் பானைகள் ஏராளமாக இப்பகுதியில் கிடைத்துள்ளன. அவற்றை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பல முதுமக்கள் தாழிக்கள் இப்பகுதியில் உடைக்கப்பட்டுள்ளன. தற்போதும், ஒரு சில பணிகளுக்காக இப்பகுதியில் மண் எடுக்கும் போது, முதுமக்கள் தாழிக்கள் கிடைக்கின்றன. கறுப்பு, சிவப்பு நிறத்துடன் அழகிய வரிகளுடன் காணப்படும் இந்த பானைகள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும். நூற்றுக்கணக்கான கல் திட்டைகள் உடைக்கப்பட்ட நிலையில், தற்போது கொங்கல் நகரம் பகுதியில் 10க்கும் குறைவானவையே உள்ளன.முதுமக்கள் தாழிக்களும் உடைக்கப்பட்டு, சிறிய ஓடுகள் மட்டும் காணப்படுகின்றன. மசராயன் கோவிலின் பின்பக்கத்தில் காணப்பட்ட சுரங்கம் போன்ற சிறிய அமைப்பும் மண் மேடாக மாறியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் பெருங்கற்காலம் குறித்த வரலாற்று சின்னங்கள் குறைந்தளவு கிடைத்துள்ள நிலையில், இப்பகுதியில் மன்னர்கள் காலத்தில் பெரியளவிலான போர் நடந்ததற்கான வரலாற்று சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் ஒரே இடத்தில் இருந்த கொங்கல் நகரத்தில் தொல்பொருள் துறையினர் அகழ்வாய்வு நடத்தி தகவல்களை சேகரித்தால் கொங்கு மண்டலத்தின் வரலாறு குறித்த தெளிவு கிடைக்கும். மசராயன் கோவில் ஆய்வு தேவை: கல்திட்டைகள் அருகிலுள்ள மசராயன் எனப்படும் கோவிலும் வரலாற்று சின்னமாகவே உள்ளது. போரில் இறந்த மன்னன் அல்லது வீரன் நினைவாக அவனது பெயரை வெளிக்காட்டும் வகையில் "மாசு மருவில்லா வீரன்' என்ற பெயரில், இந்த கோவில் கட்டப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் அது மசராயன் என மருவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கோவிலிலும் சுற்றுப்பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

புதிராக உள்ள கல்திட்டை, முதுமக்கள் தாழி: கொங்கல் நகரம் கிராமத்தில் கல்திட்டைகள், முதுமக்கள் தாழி போன பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மிகச்சிறந்த வரலாற்று சின்னம் எந்த தகவலையும் அளிக்காமல் புதிராக காணப்படுகிறது. மசராயன் கோவிலுக்கு சேர்ந்ததாக கூறப்படும் நிலத்தில், 20 அடி உயரத்தில் மிகப்பெரிய கல் கம்பீரமாக காணப்படுகிறது. பாதி உயரம் மண்ணில் புதைந்து காணப்படும் இந்த கல், இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்களின் நடுகல் அல்லது அதற்கு முந்தைய மன்னர்கள் காலத்தின் நடுகல்லாகவும் இருக்கலாம். உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கொங்கல் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் எந்த மலை தொடரும் இல்லை. இந்நிலையில், இதுபோன்ற உயரமான கல் பிற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்டிருக்கலாம். கல்திட்டைகள் அமைந்துள்ள பகுதியில் இந்த கல் காணப்படுவதால், இப்பகுதியை ஆண்ட மன்னரின் நடுகல்லாகவும், இதன் அருகில் முதுமக்கள் தாழி, ஈமத்தொட்டி ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் மக்களிடையே இந்த கல் குறித்து பல்வேறு கதைகள் உலவி வருகிறது. இந்த கல் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வாய்வு மேற்கொண்டால், பல்வேறு வரலாற்று சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள்: கடந்த சில ஆண்டுகளுக்குள் உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், பல்வேறு வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. குடிமங்கலம் நால்ரோட்டில் காணப்படும் கல்வெட்டு, பல்வேறு மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் நடுகல் சிற்பங்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. கொங்கல் நகரம், சோமவாரப்பட்டி ஆகிய பழமையான கிராமங்களில் உள்ள கோவில்களிலும் பல்வேறு ஆதாரங்கள் பராமரிக்கப்படுவதில்லை. வரலாற்று சின்னங்களை பாதுகாத்து, பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கொங்கல் நகரத்தில் ஆய்வு தேவை: இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், கற்களால் உருவாக்கப்பட்ட வீடுகள், ஆயுதங்கள், பாறை ஓவியங்கள், குகைகள் மற்றும் இறந்தவருக்கு கற்களால் கல்லறைகள் அமைத்தது மற்றும் மண்ணாலான பானைகள் பயன்படுத்தப்பட்ட காலமே பெருங்கற்காலம் எனப்படுகிறது. மன்னராட்சிக்கு முந்தைய காலங்கள் மற்றும் வனத்தை சார்ந்து மட்டும் மக்கள் வாழ்ந்தது பெருங்கற்கால நாகரிகம் எனப்படுகிறது. உடுமலை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை அருகே மூணாறில் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக பாறை ஓவியங்கள், முதுமக்கள் தாழி, பழங்கால கல் வீடுகள், கல்திட்டைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் என, வரலாற்று சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொங்கல் நகரம் பகுதி கி.மு., 1,800 ஆண்டுகளில் இப்பகுதியில் முதுமக்கள் வாழ்ந்ததும், பல்பொருள் வணிகத்தில் இப்பகுதி சிறந்து விளங்கியதற்கான சான்றுகளும் காணப்படுகிறது. கொங்கல் நகரம் கிராமம் உப்பாறு படுகையிலும், கேரள மாநிலத்திற்கான ராஜபாட்டை எனப்படும் பெருவழித் தடத்திலும், சோமவாரப்பட்டி என மருவியுள்ள சோமவாரப்பட்டணம் எனப்படும் வணிக தலத்தின் அருகிலும் அமைந்துள்ளது. பெருங்கற்காலம் மற்றும் அதன் தொடர்ச்சியான மன்னர்கள் ஆட்சி, பாளையக்காரர்கள் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், நடுகற்கள் கொங்கல் நகரம் பகுதியில் உள்ளது. வரலாற்று சின்னங்களை முழுமையாக அகழ்வாய்வு செய்வதால், இப்பகுதியின் தொன்மை தெரிய வரும்' என்றார்.

நன்றி ..தினமலர் ...

 கேள்வி : வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?


என் பதில் :..இதற்கு பதில் .என் நண்பரின் தம்பியிடம் பேசிய போது கிடைத்த 

போட்டி தேர்வுகள்...நம்பிக்கையூட்டும் பதிவு...💯

நன்றி: பிரசன்னா ச... அவர்களே!!!வங்கி துணை மேலாளர்


March 31 2018... IBPS PO result நாளை என அறிவித்தது.... அன்று இரவு முழுக்க அண்ணனிடம் இருந்து "டேய் Exam நல்லா தான பண்ணிருக்க? interview ல சொதப்பலயே?" என phone callகள்...இந்த சமூகம் ஜெய்கிறவன தான் நியாபகம் வச்சிக்கும் னு நல்லா தெரியும் அவனுக்கு..அந்த பயத்தின் வெளிப்பாடே இந்த அழைப்புகள்.. என்ன விட அவனுக்கு பதட்டம் அதிகமா இருந்தது....அன்று இரவு

கீழ்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.... ஆனாலும் மனசு முழுக்க result பத்தின யோசனை தான்...

"உன்னால முடியாது டா இதெல்லாம்..."

"பேசாம IT லயே இரு இப்பல்லாம் வேலை கிடைக்கிறதே கஷ்டம் ..."

"Bank exam க்கு அவனவன் 3,4 வருஷம் படிச்சிட்டி இருக்கான்... அவங்களே இன்னும் செலக்ட் ஆகல"... என என்னை சுற்றி எல்லாரும் பேசியது repeat mode இல் ஓடிக்கொண்டிருக்கிறது... எல்லாரும் சொல்ற மாறி இவன்ஆயுடுவானோ னு அம்மாக்கு கவலை.. ஆனால் அந்த நேரத்திலும் ஒரு மனுஷன் "தம்பி நீ கண்டிப்பா select ஆவ...நிம்மதியா தூங்கு"னு சொன்னாரு... அவரு தான் என் அப்பா😘


அடுத்தநாள் April 1... காலை 11.30 மணிக்கு result என link update ஆனது... நேற்று வரை நிதானமாக இருந்த மனசு ஒருகணம் தடுமாறியது... மச்சா இங்க உப்புமா டா வா சாப்டலாம் என கூப்பிட... அப்போது மணி 9.45... அடுத்த அரை மணி நேரம் நண்பர்களுடன் கல்லூரி நாட்களை பற்றி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம்...

திடீரென whatsapp group இல் அழைப்பு

Result came என்று ஆனால் அப்போது மணி 10.30 ..அடுத்த 5 நிமிடத்தில்

" மச்சா Bank of India ல selected டா..."

நா Allahabad bank நா corporation bank என message கள் பறந்தன...எல்லாரும் 4 to 5 வருடம் bank exam try பண்ணியவர்கள்...

என்னுடைய batch mates யாருடைய msg ம் அதில் இல்லை ... சற்றே நம்பிக்கை இழந்து போனேன்... ரூமில் ஒரு cot இல் ஓரமாக 5 நிமிஷம் யாரிடமும் சொல்லாமல் பொறுமையா website page இல் reg number ஐ பயத்துடன் type செய்தேன்..

கீழே Submit பட்டனை நோக்கி விரல் போக... ஒரு வருடம் சரியான தூக்கம் இல்லாம...நேரத்துக்கு சாப்பிடாம உக்காந்து கஷ்டப்பட்டது எல்லாம் கண் முன் rewind ஆகிறது... Rural bank interview யில் சொதப்பி merit list இல் என் பெயரை தவறவிட்ட நொடிகள் என் முன் நகர்கிறது..

7 முறை final list இல் பெயர் இடம் பெறாத வலி banking படித்தவனுக்கு மட்டும்தான் தெரியும்... அது 8வது முறை... கனத்த இதயத்துடன் விரல்கள் பட்டனை அழுத்தியது... Page ஓபன் ஆனது...

மூன்று வினாடிகள் "உனக்கு எதுக்குடா இந்த risk லாம் " "இதெல்லாம் கஷ்டம் டா பேசாம IT லயே இரு" என திரும்ப திரும்ப ஓட ஒருகட்டத்தில் இதுக்கு மேல எப்டி தான் டா படிக்கிறது என கண்கள் கலங்கியது... இன்னமும் result என்னவென பாக்க மனசு வரல... ஒரு கட்டத்தில் கண்களை திறந்து பார்க்க....🎉🎉🎉 CANARA BANK 🎉🎉🎉

என்பது மட்டும் தெரிந்தது... அவ்வளவு தான்.. பக்கத்தில் இருந்த செவுற்றில் ஓங்கி அடிக்க ஆரமித்தேன்...ஒவ்வொரு அடிக்கும் "இனிமேல் என்னால முடியாதுன்னு சொல்லுவீங்களா டா ..எனக்கு maths வராதுன்னு சொல்லுவீங்களடா" னு மனதில் ஓடிக்கொண்டிருந்தது... சத்தத்தைகேட்டு எல்லாரும் டேய் என்னடா ஆச்சி என சற்று பயந்தே போனார்கள்...

முதலில் அம்மாக்கு phone செய்தேன்.. ம்மா Canara bank மா என்றேன்..." டேய் result 11.30 க்கு தான் னு அண்ணா சொல்லிட்டான் april fool பண்ற நேரமாடா இது... நானே result என்ன ஆகுமோ னு பயந்துட்டு இருக்கேன் என்றவளிடம் நா என்னத்த சொல்ல😋😋...ஒரு கட்டத்தில் result தெரிந்ததும் அம்மக்களுக்கே உரிதான ஆனந்த கண்ணீர் தான்... சிறிது நேரத்தில் அப்பா விடம் இருந்து கால்...

அப்பா....

அவர் தம்பி என்றதும் தேம்பி தேம்பி அழ ஆரமித்தேன்...எப்போதும் உனக்கு merit list ல தான் கிடைக்கும் னு சொல்லிட்டே இருப்பாரு... இப்ப அவருக்கு ரொம்ப சந்தோஷம்...


" வாழ்க்கைல ஜெய்கனும்'னா கொஞ்ச காலம் செவுடனா இருக்கனும்"


நன்றி ...

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!

பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:

ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:

இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.

வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:

வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:

ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்

இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:

ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.

வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:

வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்

குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:

நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.

சிவக்குமார்..V.K..
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681..
.WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)

Coimbatore,Pollachi, Udamalpet
 — in Udumalaippettai.

புதன், 5 ஆகஸ்ட், 2020

கேள்வி : ஒரு வீட்டை சொந்தமா வாங்குவதற்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?

என் பதில் :

சரியான இடத்தில் சரியான இடத்தில் வீட்டை தேர்வு செய்யுங்கள். அதை வாங்குவதற்கு குறைந்தது 60 லிருந்து 70 சதவிகிதம் பண வசதியை ஏற்படுத்திக் கொண்டு 30 சதவீதத்திற்கு கடன் வாங்குங்கள் .

முடிந்தவரை நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அல்லது உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகாமையில் அல்லது உங்கள் துணைவியார் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் அமைவது நல்ல பலனைத் தரும் .

 வாழ்க்கை துணை மற்றும் இரு குழந்தைகள் கொண்ட நான்கு பேருக்கு ஆயிரம் சதுரடி இருந்தால் போதுமானது. நல்ல காற்றோட்டம் தண்ணீர் மற்றும் உடன் குடியிருக்கும் குடியிருப்போர் நல்லவராக இருப்பின் 10 சதவீதம் வரை வீட்டின் விலை உயர்த்தி வாங்கலாம்.

சிவக்குமார்.V.K.
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681..
.WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கேள்வி : பெனிட்டிரேஷன் டெஸ்டிங் (penetration testing) என்றால் என்ன?

சற்று விரிவாகக் கூறுங்கள்.

என் பதில் :..

பெனிட்ரேசன் டெஸ்டிங்கிற்கு முன்னாடி நாம தெரிஞ்சுக்க வேன்டிய விஷயம் சில இருக்கு.

வழக்கமா உங்களுக்கு முக்கியமான பொருட்களை எங்க வைப்பீங்க? அது பாதுகாப்பான இடத்துல இருக்குதான்னு எப்படி உறுதி செய்வீங்க?

டிவி, பிரிட்ஜனா வீட்டுல வைப்போம். காசு, பணம்னா பேங்க்ல வைப்போம். ஒரு வேளை தங்க நகையா இருந்தா இரும்புப் பெட்டியில வைப்போம். முக்கியமா எல்லாத்தையும் பூட்டி வைப்போம்.

உறுதி தானே, பூட்ட ஒரு தடவை இழுத்துப் பார்ப்போம். கதவா இருந்தா, அதை ஒரு தடவை தள்ளியோ இழுத்தோ பார்ப்போம்.

அதெல்லாம் சரி தான். ஆனால் இந்த பேங்க் அக்கவுண்ட்ல இருக்கற பணம் பத்திரமா இருக்கானு எப்படி தெரிஞ்சுக்கறது?

அவங்களும் பெரிய பூட்டா போட்டு பூட்டி வெச்சிருப்பாங்க. லாக்கர் வசதிகள் இருக்கும்.

தொழில்னுட்பம் வளர வளர நம்முடைய விரல் அசைவில் எல்லாப் பணத்தையும் வேற ஒரு அக்கவுண்டுக்கு மாற்ற முடியும்.

என்ன தம்பி ரொம்ப லென்த்தா போறீங்க, இதுக்கும் பென் டெஸ்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்?

உங்கள் கடவுச்சொல் தெரியாமலும், உங்கள் வங்கிக் கணக்கைப் பார்க்கவும், பணப் பரிமாற்றம் செய்யவும் முடியும். வங்கி மட்டுமில்லை, நீங்கள் இணையத்தில் செய்யும் அத்தனையையும் கவனிக்க முடியும். ஹிஸ்டரியில் போய் கிலியர் செய்தால் எல்லாம் போய்விடும் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு இணையதளம் அல்லது ஒரு செயலி இருக்கிறதென்றால், அதனுடைய பாதுகாப்பு அம்சங்களை சோதனை செய்யும் ஒருமுறை தான் பென் டெஸ்டிங்க்.

இந்த சோதனையின் முடிவில், உங்கள் இணையதளம், அல்லது செயலியில் எங்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பதனை கண்டறியலாம்.

உதாரணமாக, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாத கருவிகள், தேவையில்லாமல் திறந்து இருக்கு போர்ட்டுகள், எந்த அணுக்கமும்‌ கேட்காமல் இயங்கும் சார்வீஸ்கள் போன்ற பெரிய லிஸ்ட் வரும்.

அதன் பிறகு அங்கு என்ன வகையான தரவு உள்ளது, அதன் மதிப்பு என்ன, அதை மாற்ற முடியுமா என்று ஆராய்வது.

இந்தியாவின் முக்கிய தரவான ஆதார் தகவல்கள் திருடப்பட்டது இந்த பென் டெஸ்டிங்க் செய்யாமல் விட்டதால் அல்லது சரியாக செய்யாமல் விட்டது தான்.

"எதிரியை எப்போதும் குறைத்து எடைபோடாதே, உன்னுடைய பலவீனம் என்பதையும் தெரிந்து கொள்" என்ற தத்துவமே பென் டெஸ்டிங்க்.

எடுத்துக்காட்டாக, Nessus (Nessus Product Family) என்ற இக்கருவியை நம் வலைத்தளத்தின் மீது ஏவினால், நம் வலைப்பக்கம்  தளத்தின் அத்தனை பலவீனத்தையும் பட்டியலிட்டு விடும்.

இதையெல்லாம் சரி செய்துவிட்டால், நாம் பாதுகாப்பாக இருப்போமா? நிச்சயமா சொல்ல முடியாது, ஆனால் இரண்டாவது பூட்டு போட்டது போல தான்.


வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு.இது தொழில்நுட்பம் உலகம் ...

நன்றி ...